Jump to content

மலேஷிய இந்தியர்கள் ஏன் கிரிமினல்கள் ஆயினர்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
மலேஷிய இந்தியர்கள் ஏன் கிரிமினல்கள் ஆயினர்?
 

 

மலேசிய மக்களில் வெறும், 7 சதவீதம் தான், இந்தியர்கள். ஆனால், அங்கு செயல்படும் கேங்ஸ்டர் அல்லது தாதாக்களில் பெரும்பான்மையானவர்கள் இவர்கள் தான். 
குறிப்பாக சொல்வதென்றால், தமிழ் வம்சாவளியினர். எஸ்டேட் தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள், கேங்ஸ்டராக மாறியதற்கு பின்னணியில் உள்ள வரலாறு என்ன? பொருளாதாரத் தட்டின் கீழ்நிலையிலேயே இந்தியர்கள் இன்னும் இருக்க, மலேசிய அரசின் பாரபட்ச கொள்கை ஒரு காரணமா?மலேசிய போலீசின், நிழலுலக குழுக்கள் கண்காணிப்பு பிரிவின் கணக்குப்படி, மலேசியாவில் மொத்தம், 106 ரகசிய குழுக்கள் இயங்குகின்றன. இவற்றுக்கு, 576 கிளைகளும், அதில், 9,042 பேரும் உறுப்பினர்களாக உள்ளனர். 

அவற்றில், மக்கள் தொகையில், 23.2 சதவீதம் - ஏறக்குறைய 70 லட்சம் - உள்ள சீன இனத்தவர்களால், 65 நிழலுலக குழுக்கள் நடத்தப்படுகின்றன. அதற்கு, 167 கிளைகளும், 3,113 பேர் உறுப்பினர்களும் உள்ளனர். 
ஆனால், மக்கள் தொகையில் வெறும், 7 சதவீதமே, அதாவது, 20லட்சம் பேர் உள்ள இந்தியர்களால், 18 நிழலுலக தாதாக் குழுக்கள் இயக்கப்படுகின்றன. அதற்கு, 267 கிளைகளும், 4,143 உறுப்பினர்களும் உள்ளனர். மற்ற சீன, மலேசிய குழுக்களை விட, இந்திய தாதா குழுக்கள் பயங்கரமானவை.பெரும்பாலான தமிழ் குழுக்கள், மலேசிய குழுக்களைப் போல் உட்பகைக் கொண்டு இரண்டு படுவதில்லை. விசுவாசமும், நீண்ட பாரம்பரியமும் கொண்டவை என்பதால் தமிழ் குழுக்களே மலேசியாவில் வலுவாக உள்ளன. 
தோட்டத் தொழிலாளர்களின் வம்சாவளியினர், கொடூரக் குற்றவாளிகளாக உருமாறக் காரணம் என்ன?அதன் வரலாறு:தென்னிந்திய தோட்ட தொழிலாளிகள்கடந்த, 1786இல் சர் பிரான்சிஸ் லைட் எனும் ஆங்கிலேயர் மலேசியாவில் பினாங்கை உருவாக்கியதிலிருந்து, தென்னிந்தியர்களின் குடியேற்றம் தொடங்குகிறது. ஒவ்வொரு வருடமும், 2000 தென்னிந்திய தொழிலாளர்கள், மலேசிய ரப்பர் தோட்ட வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 
குடியேற்றவாசிகளில் பெரும்பாலானோர், ஆந்திரா மற்றும் தமிழகத்திலிருந்து வந்த ஆதிதிராவிடர்கள்.தமிழகத்தைப் பொறுத்தவரை, தஞ்சாவூர், சேலம், செங்கல்பட்டு, திருச்சி மற்றும் சென்னையிலிருந்து சென்றவர்கள். வடஇந்தியர்களும் பிரிட்டிஷாரால் பணியமர்த்தப்பட்டனர். 
ஆனால், அவர்களுக்கு போலீசிலும், பாதுகாப்புப் பணியிலும் வேலைகள் தரப்பட்டன. அரசு பணியிலும், எழுத்தர் பணியிலும் மலையாளிகளும், யாழ்ப்பாண தமிழர்களும் அமர்த்தப்பட்டனர். செட்டியார்கள் தன்னிச்சையாக, வர்த்தக மற்றும் வியாபாரத்துக்காக மலேசியாவுக்கு குடியேறினர்.
மலேசிய இந்தியர்களில் பெரும்பான்மையானவர்கள் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள். இவர்கள், ஏழைகளாகவும், படிப்பறிவற்றோருமாக இருந்தனர். முறையான கல்வியோ, இன்னபிற தொழிலோ கற்றுக் கொள்ளும் சூழலின்றி , எஸ்டேட்டுகளிலேயே நீண்டகாலம் தனிமைப்பட்டு கிடந்தனர். இந்த தனிமையே, அவர்களின் வம்சாவளியினர் குற்றச்செயல்களில் ஈடுபட முக்கிய காரணிகளில் ஒன்றாக மாறியது.
ஐரோப்பிய தோட்ட முதலாளிகள், தென்னிந்திய தொழிலாளர்களையே பெருமளவில் பயன்படுத்தினர். சீனத் தொழிலாளர்களைவிட, இந்திய தொழிலாளர்கள் குறைவான சம்பளம் பெற்றனர். சீனத் தொழிலாளர்களுடன் ஒப்பிடும்போது, தோட்ட வேலையில் 2க்கு 10 என்ற அளவில் இந்திய தொழிலாளர்கள் இருந்தனர். 
சீனத் தொழிலாளர்கள், சொந்த குடியிருப்புகளில் வசிக்க, இந்தியத் தொழிலாளர்களோ முதலாளிகள் அமைத்துக்கொடுத்த குடியிருப்பில் தங்கிக்கொண்டனர். வீடு உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்பட்டு, இந்தியத் தொழிலாளர் சமூகம் முழுக்கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது.தொழிலாளர்களின் நலனைக் காட்டிலும், மேற்கத்திய கம்பெனிகள் தங்கள் நலனையே முன்னிறுத்தின. 
மிகவும் நலிவடைந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த இந்தியத் தொழிலாளர்கள், தோட்ட வேலையை விட்டு வெளியேறி செல்ல அனுமதிக்கப்படவில்லை. குறைவான செலவில், சாதுவாக வேலைப்பார்க்க, சீன, வடஇந்தியர்களைவிட, தென்னிந்திய தொழிலாளர்களே பிரிட்டிஷாருக்கு தோதாக இருந்தனர். இதனால், அவர்களுக்கு வேலையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது. 
ஆங்கிலமோ, மலாய் மொழியோ தெரியாததால் இந்தியத் தொழிலாளர்கள் இன்னும் தனிமைக்குள்ளாயினர். முழுக்க தோட்டம் சார்ந்து, வறுமைப்பிடியில் அகப்பட்டு வாழும் நிலையில் இந்தியத் தொழிலாளர்கள் இருந்தனர்.கைவிடப்பட்ட இந்தியர்கள்கடந்த, 1980களில் தொடங்கி, இந்தியத் தொழிலாளர்கள் எஸ்டேட்டுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். எஸ்டேட்டுகள் தனியார்மயப்படுத்தப்பட்டு உரிமையாளர்கள் மாறியதும், புதிய நகரங்கள் உருவாக்கப்பட்டதும் இதற்கு காரணம். 

அதேநேரம், வங்கதேச, பாகிஸ்தான், இந்தோனேஷியா மற்றும் மியான்மர் தொழிலாளர்களுடன் இந்தியர்கள் வேலைக்காக போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மறுபுறம், பாமாயில் தொழிலுக்கு, ரப்பர் தோட்டங்கள் பெருமளவில் மாறின.இதனால், இந்தியத் தொழிலாளர்கள் பெற்றிருந்த ரப்பர் தோட்ட வேலை அனுபவம், அவர்கள் பயனளிக்காமல் போனது. இரண்டு பெரும் பாதிப்புகளுக்கு இந்தியத் தொழிலாளர்கள் உள்ளாயினர். 
ஒன்று, குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டது; அடுத்து புதிய நகர சூழலில் பிழைப்பதற்கு உரிய திறமையின்றி காணப்பட்டது. மேலும் எஸ்டேட்டுகளில் இருந்தவர்களிடம் அடையாள அட்டையோ, நிரந்தரக் குடியிருப்பு சான்றோ இல்லை. புதிய குடியேற்ற சட்டம், அவர்களை மலேசியாவில் உள்நாட்டு அகதிகள் என்ற நிலைக்கு மாற்றியது. 
மலேசிய இந்தியர்கள் சரியான கல்வி பெற முடியாதது, அவர்களுக்கான பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது.இன்றைய நிலையில், மலேசியாவில், மூன்று லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை ஆவணம் இன்றி, கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் மறுக்கப்படும் நிலையில் உள்ளதாக கூறுகிறார் பி.வேதமூர்த்தி. 
அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான இவர், 'ஹிண்ட்ராப்' என்ற இந்துக்களுக்கான உரிமை நடவடிக்கை அமைப்பை நடத்தி வருபவர். கட்டாய மதமாற்றம், கல்வி, வேலைவாய்ப்பில் பாரபட்சம், இந்துக் கோயில்களைப் இடிப்பது உள்ளிட்டவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். 'லண்டனின் ராயல் கோர்ட் ஆப் ஜஸ்டிஸ்' நீதிமன்றத்தில், இங்கிலாந்துக்கு எதிராக 4 டிரில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
பலகாலம் எஸ்டேட்டில் அடிமைப்படுத்தி வைத்திருந்த இந்தியத் தொழிலாளர்களை, மலேசியாவுக்கு சுதந்திரம் கொடுத்துச் சென்றபோது, இங்கிலாந்து எந்த பாதுகாப்புமின்றி விட்டுச் சென்தாக, வேதமூர்த்தி குற்றஞ்சாட்டுகின்றார். இதனால், பெரும்பான்மை இனமான மலாய் அரசின் தயவில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கிறார். 
2007இல், கோலாலம்பூரில் உள்ள பாரம்பரியமான இந்துக்கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியை நடத்தி கவனத்தை ஈர்த்தார். கடந்த மே மாதம் நடந்த மலேசிய தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியுற்றதற்கு ஹிண்ட்ராப் அமைப்பின் பிரச்சாரமும், ஒரு முக்கியக் காரணம்.நிஜத்திலிருந்து நிழல் உலகுக்கு... தாங்களாகவே தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு, இந்தியர்கள் தள்ளப்பட்ட சூழலில், இந்திய இளைஞர்களுக்கு நிழல் உலக குழுக்கள் மீது இயல்பாய் கவனம் திரும்பியது. 
சீனர்களால் ஆரம்பிக்க இந்த ரகசியக் குழுக்கள், ஆரம்பத்தில், சமூக பாதுகாப்பு நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டவை. ஆனால், 20ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், மலேசியாவின் சட்ட ஒழுங்குக்கு பெரும் அச்சுறுத்தலாய் மாறின. போதைப்பொருள் கடத்தல், பணத்துக்காக கொலை செய்தல், சூதாட்ட சங்கங்கள், ஆயுதமுனையில் கொள்ளை, அடாவடி கடன் வசூல், ஆட் கடத்தல், விபச்சாரம் என்று கொடுங்குற்றங்கள் செய்யும் குழுவாக அவை மாற்றமடைந்தன. 
வேலையில்லாமல் இருந்த இந்தியர்களுக்கு, இந்த ஆபத்தான தொழில்கள் பெரும் வாய்ப்பாய், 
ஈர்ப்பாய் அமைந்தன. 80களில், இந்த தொழிலில் இந்தியர்கள் கோலோச்ச ஆரம்பித்தனர்.கடந்த, 2013இல், சி.ஐ.டி. இயக்குனரான ஹாதி அப்துல்லாவின் கூற்றுப்படி, 40 ஆயிரம் ரவுடிகளில், 70 சதவீதம் பேர் இந்தியர்கள். இந்த நிலைக்கு, ரவுடிகளை கதாநாயகர்களாக சித்தரிக்கும் சீரியல்களும், சினிமாக்களும் பெரும் பங்கு வகிப்பதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கினறனர். 
' மலேசிய தமிழ் சீரியல்கள், கேங்ஸ்டர்கள் வாழ்க்கை முறையை மிகவும் கவர்ச்சியாக காட்டின. பெற்றோரும், பிள்ளைகளும் குடும்பமாய் இந்த சீரியல்களை கண்டுகளித்தனர். பிள்ளைகளின் மனதில், கேங்ஸ்டர் வாழ்க்கை அழகானதாய் பதிந்தது. நிஜவாழ்க்கையிலும் அப்படி ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைத்தால், உடனேயே அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் தான் அவர்கள் இருந்தனர். 
சீரியல்களை மட்டும் நான் குறை சொல்ல மாட்டேன். தினமும் தந்தை வீட்டுக்கு போதையுடன் வந்தால், பிள்ளைகளும் அதைத்தானே செய்வர். தாய் சீரியலைப் பார்த்தபடி, பிள்ளைகளை, 'படி' என்றால் அவர்கள் எப்படி படிப்பர்? 'இந்தியர்களிடையே, தற்கொலை எண்ணம், தாதாயிசம், மிகை உணர்ச்சி போன்றவை பரவியவதற்கு இக்காட்சி ஊடகங்கள் முக்கியப் பங்குண்டு' என்கிறார் திரைப்பட இயக்குனரான சஞ்சய் குமார் பெருமாள்.
மலேசிய நிழலுலக தாதாக்களின் வரலாற்றில், துணிகர கொள்ளைகள், போலீஸ் சேஸிங், கவர்ச்சி போன்றவற்றுக்கு பெயர் பெற்றவர் பென்டாங் காலி என்கிற காளிமுத்து. 1990களில், பெரிய திருட்டு சம்பவங்களுடனான தொடர்பில் தலைப்பு செய்திகளில் வந்தவர். 14 வயதில் தெருசண்டைகளில் வாழ்க்கையை ஆரம்பித்து, சீன நிழலுலக கும்பல் ஒன்றோடு தன்னை இணைத்துக் கொண்டார். பின், கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் என்று அடுத்தடுத்த நிலைக்குப் சென்றார். 
ஒருகட்டத்தில், கோலாலம்பூரில், 'கேங்க் 04' என்று சொந்தமாக குழுவைத் தொடங்கும் அளவுக்கு வளர்ந்தார். கடைசியாக, சொகுசு பங்களா ஒன்றில் தலைமறைவாக இருந்தபோது, காளியை போலீசார் சுட்டுக் கொன்றனர். இன்றும் இந்தக் குழுவைச் சார்ந்தவர்கள் கூலிக்காக கொலை செய்யும் தொழிலில் ஈடுபடுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஒருநபரைக் கொல்ல, இவர்களுக்கு இந்திய மதிப்பில், 80 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமானது. 

 

அரசியல்வாதிகளின் ஆசிர்வாதம்



பென்டாங் காளியின், 'கேங்க் 04' ஐ விட, மோசமான இந்திய தாதாக்கும்பல் என்றால் அது, '36' தான். பழங்கால சீன நிழலுலக கும்பலான, 'ஹாங் மென்'லிருந்து பிரிந்த குழு, '36' தான். நவீன பயங்கரவாத குழுவைப் போன்று, ஆன்லைன் வழியாக உறுப்பினர்களை சேர்த்து வருகிறது '36!' இவர்களுக்கு இந்திய சமூகத்தில் செல்வாக்கு இருக்கிறதா என்றால், 'மலேசியன் இந்தியன் காங்கிரஸ்' கட்சியினரே கேங்ஸ்டர்கள் தான் என்கின்றனர் பொதுமக்கள். 
அவர்களுக்கும் நிழலுலக கும்பலுக்கான தொடர்பு, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் ரீதியானதாக உள்ளது. கேங்ஸ்டர்களை மலேசிய இந்திய அரசியல்வாதிகள் பெருமளவு ஆதரித்து வளர்க்கின்றனர். ஒவ்வொரு ரவுடி, நிழலுக தாதா கும்பல்களின் பின்னணியிலும், சமூகத்தின் முக்கியப் பிரமுகர்களும், அரசியல்வாதிகளுமே தலைமை வகிக்கின்றனர். 
அரசியல்வாதிகள் உடனடித் தீர்வுகளை முன்வைத்து மக்களை ஏமாற்றுகின்றனர். கல்வி, பழக்கவழக்க மற்றும் பண்பாட்டு மேம்பாடு, திறன்வளர்ச்சி போன்றவற்றுக்கு, நீண்டகால உழைப்பு தேவை. அதற்கு மக்களின் கூட்டுமுயற்சி மற்றும் உழைப்பு தேவை. ஆனால், பெரும்பான்மையான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், இத்தகைய தன்மையில் இல்லை.
மலேசிய இந்தியர்களின் வறுமை நிலைக்கு இன்னொரு முக்கியக் காரணமாக, அந்நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் கடைபிடிக்கப்படும் பாராபட்சமும் சுட்டிக்காட்டப்படுகிறது. 1969ல் சீன- மலாயர் இனக்கலவரத்தின் பின்னணியில், மலேசிய புதிய பொருளாதாரக் கொள்கை கொண்டு வரப்பட்டது. 'எல்லா இனத்தினரிடமும் வறுமையை ஒழிப்பதே' இதன் அதிகாரப்பூர்வ நோக்கமெனினும், இந்திய சிறுபான்மையினர் இத்திட்டத்தினால் புறக்கணிக்கப்படுவதாக கருதுகின்றார்கள். 
சீன சிறுபான்மையினருக்கும் மலாய் பெரும்பான்மையினருக்கும் இடையேயான பொருளாதார வித்தியாசத்தைக் குறைப்பதற்கான இத்திட்டம், எதார்த்தத்தில் வேறுவிதமாக செயல்படுகிறது; மலாய் அல்லாத மலேசிய இந்தியர்கள், மலேசிய சீனர்கள் போன்ற சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

 

மாற்றத்துக்கான ஏக்கம்



மலேசிய இந்தியர்களின் பொருளாதார பங்கு நிலை தற்போது, 1 .3 சதவீதம் மட்டுமே உள்ளது. வருமான பேதம் இந்தியர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. 2014 க்கும், 2015 க்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியர்கள் வெறும் நான்கு சதவீதம் மட்டுமே பல்கலைக்கழக நுழைவுகளை பெற்றுள்ளனர். மலேசிய இந்தியர்களில், 40 சதவீதத்தினரின் குடும்ப வருமானம் மாதமொன்றுக்கு, 2,000 ரிங்கிட்டுக்கும் குறைவாகவே உள்ளது. வறுமை என்பது தேசிய பிரச்சனையாக இருந்தாலும், இந்தியர்களின் பிரச்சினை திறமையுடன் கையாளப்பட வேண்டியது. 
கடந்த 25 ஏப்ரல் 2017 ஆம் தேதி மலேசிய இந்தியர்களுக்கான புளுபிரிண்ட் எனப்படும் வியூகச் செயல் வரைவுத் திட்டத்தை அரசு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.இந்தியர்கள் மற்றும் பிற மலேசிய சமுதாயங்களுக்கு இடையில் பொருளாதார இடைவெளியை குறைக்க,இதை அரசாங்கம் அறிமுகப் படுத்தியது. 
இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்களுக்கு அரசாங்க கொள்முதல் ஒப்பந்தங்களை வழங்கும் வாய்ப்பினை அதிகரித்தல், மத்திய அரசாங்கம் , மாநில அரசாங்கம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்தல், கடன்கள் மற்றும் மானியங்கள் வழங்குவதை அதிகரித்தல், இளம் இந்திய தொழிலதிபர்களை ஊக்குவித்தல், இந்தியர்களுக்கு மலிவு வீடுகள் கிடைக்கச் செய்தல் போன்ற திட்டங்களை மலேசிய இந்தியர்களுக்கான புளுபிரிண்ட் அறிக்கை முன்மொழிகிறது.
மலேசிய இந்தியர்களுக்கான புளூபிரின்ட் போன்றவை தேர்தலுக்காக வெளியிடப்பட்ட திட்டம் என்று கருதப்பட்டாலும், மலேசிய இந்தியர்கள் வாழ்வில், மாற்றங்களை கொண்டு வருவது, மலேசிய அரசின் மீதுள்ள கடமையாகும். மலேசிய இந்தியர்கள் குறைந்த வருவாய் பிரிவில் இருந்து வெளியே வர, குறைந்தபட்சம் இரண்டு தலைமுறையாவது தேவைப்படும். மலேசிய அரசு மிகவும் அக்கறையுடன் செயல்பட்டு, மாற்றங்களை கொண்டு வந்தால் தான், இது சாத்தியமாகும். இந்தியர்களும் தாதா உலகத்திலிருந்து வெளியே வருவர்!
நன்றி: - பவுன்டெய்ன் இங்க்கட்டுரையாளர்: - எஸ்.கே. ஸ்ரீதேவி, மலேசிய எழுத்தாளர் 

மொழியாக்கம்: - ஆரூர் சலீம்

http://www.dinamalar.com/news_detail.asp?id=2118043&Print=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கட்டுரையோ தெரியவில்லை. தாதாக்கள் எல்லா நாட்டிலும்/இனத்திலும் இருக்கின்றார்கள்.

இனிமேல் ‍  

மொறிஸியஸ் தமிழர்கள் ஏன் தீவிரவாதியாகவில்லை? 
ரியூனியன் தமிழர்கள் எப்போ ரிவால்வார் தூக்கப்போகின்றார்கள்?
தென் ஆப்பிரிக்க தமிழர்கள் என்னைக்கு காப்பிலியுடன் அடிபடுவார்கள்? 
கனடா தமிழர்கள் ஏன் கத்தியுடன் அலைகின்றார்கள் ?

 

என்றேல்லாம் கட்டுரை வரும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய பூர்வீக தமிழர்கள் ஏன் இந்தியர்கள் என்று அடையாளப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. மலேசிய பூர்வீக தமிழர்கள் இதை தாமாகவே அறுத்தெறிந்து, தமிழர்கள் என்பதே சரியான அரசியல் தெரிவு.

சீனாவின் பொருளாதார எழுச்சியின் பின்பே, கிந்தியா தான் தலையிடுவதற்கு ஏதுவாக, இந்த மக்களை இந்தியர்கள் என்று மார்தட்ட தொடங்கியது.

இது இலங்கை பூர்வீக மலையக  தமிழர்களுக்கும் பொருந்தும்.

இலங்கைத் தீவில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்து, இலங்கை பூர்வீக மலையக தமிழர்கள்  சிங்களர்வர்க்கலாகா மாற்றப்படுவது.

வரலாற்றில் இப்படி நடந்தே சிங்கள சனத்திகை பூர்வீக சிங்கள சனத்திகை ஏறத்தாழ 100% அதிகரித்தது.

சிங்கத்தில் இருக்கும் சாதிக்கட்டபைமைப்பான (இது வரலாற்றுக்கு மாத்திரமே இங்கு பாவிக்கப்படுகிறது), கரவா, சலகம, துவார,  பண்டா, டேமேல கட்டற போன்றவற்றின் தோற்றம் தற்போதைய தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா ஆகும்.  

ற்போதைய தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா இல் இருந்து, கட்டமைக்கப்பட்ட குடி பெயரால் சிங்களதுடன் நடந்திருக்காவிட்டால், பூர்வேக தமிழ், மற்றும் சிங்களவர்களின் சனத்தொகை வேறுபாடு ஏறத்தாழ 10 - 15% ஆக இருந்திருக்கும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.