Jump to content

அரசியல் கைதிகளின் விவகாரமும் கூட்டமைப்பின் படுதோல்வியும் - யதீந்திரா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகளின் விவகாரமும் கூட்டமைப்பின் படுதோல்வியும்

யதீந்திரா 
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது. அதற்கு ஒரு நியாயமான தீர்வை இன்றுவரை காண முடியவில்லை. அரசியல் கைதிகள் சிலர் சாகும் வரை உணவுதவிர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது, மகசின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 43 அரசியல் கைதிகள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளதான செய்தி வெளியாகியிருக்கிறது. இது புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் கூட பல தடவைகள் இ;வ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அப்போது என்ன நடைபெற்றதோ அதுவே இப்போதும் நடைபெறுகிறது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆங்காங்கே எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து கூட்டமைப்பினரும் நித்திரையால் எழும்பியிருக்கின்றனர். ஆனால் கேள்வி – ஏன் இந்த விடயம் தொடர்ந்தும் ஒரு பேசு பொருளாகவே இருக்கிறது? ஏன் இதற்கு ஒரு நிரந்தர தீர்வை காண முடியாமல் இருக்கிறது? இத்தனைக்கும் கூட்டமைப்பு அளும் மைத்திரி – ரணில் கூட்டரசாங்கத்திற்கு முழு அளவில் ஆதரவு வழங்கிவருகிறது. அதாவது, நாட்டின் எதிர்க்கட்சி அரசியலை முழு அளவில் முடக்குவதற்கு அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு உறுதுணையாக இருக்கிறது. சம்பந்தனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி அதற்கே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்தின் போதும் கூட்டமைப்போ, எந்தவொரு கேள்வியுமின்றி அதனை ஆதரித்துவருகிறது.

ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்தின் போதும் பாதுகாப்பு செலவீனம் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. வடக்கு கிழக்கில் இராணுவம் தேவையற்ற வகையில் நிலைகொண்டிருக்கிறது, அதனை அகற்ற வேண்டுமென்று கூறி தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற கூட்டமைப்புத்தான், இவ்வாறு இராணுவத்திற்கு அதிக நிதியை ஒதுக்கும் வரவு செலவுத்திட்டங்களையும் ஆதரித்து வருகிறது. உண்மையில் கூட்டமைப்பு பாதுகாப்புச் செலவீனத்தை குறைத்து அதனை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கின் அபிவிருத்திக்கு ஓதுக்குமாறு கோரியிருக்க வேண்டும். ஆனால் சம்பந்தனோ வெறும் அரசாங்கத்தின் தலையாட்டியாக இருந்து வருகிறார். இப்படியெல்லாம் அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு முண்டு கொடுத்து வருகின்ற போதிலும் கூட, அரசாங்கமோ மிகச் சிறிய விடயங்களில் கூட, விட்டுக் கொடுப்புக்களை செய்யவில்லை. இதனை எவ்வாறு விளங்கிக் கொள்வது? இதனை அரசாங்கத்தின் எதேச்சாதிகாரப் போக்கு என்பதா அல்லது சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் இயலாமை என்பதா?

அரசியல் கைதிகளின் பிரச்சினை ஒப்பீட்டளவில் ஒரு சிறிய பிரச்சினை. இதனை எப்போதோ முடிவுக்கு கொண்டுவந்திருக்க முடியும். நீண்டகாலமாக எந்தவொரு விசாரணையுமின்றி சிறைகளில் வாடும் அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதாயின் இதனை அரசியல் ரீதியில் மட்டுமே செய்ய முடியும். சட்டரீதியில் இந்தப் பிரச்சினைய தீர்க்க முடியாது. சுமந்திரன் போன்றவர்கள் இதற்கு மீண்டும் மீண்டும் சட்டரீதியான விளங்கங்களையே வழங்கிவருகின்றனர். இப்போதும் கூட, தங்களுடைய விடுதலைக்காக உண்ணாவிரமிருக்கும் அரசியல் கைதிகளை முழுமையாக விடுதலை செய்வதற்கு மாறாக பகுதி பகுதியாக விடுவிப்பது தொடர்பிலேயே பேசச்சுவார்த்தை இடம்பெற்றிருக்கிறது. சுமந்திரனுக்கும் அரசாங்க தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அவ்வாறானதொரு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது எனினும் அதனை அரசியல் கைதிகள் நிராகரித்திருக்கின்றனர். தங்களை விடுவிப்பதாயின் அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரியிருக்கின்றனர். அதைவிடுத்து தங்களை பிரித்தாளும் வகையிலான செயற்பாடுகளுக்கு தாம் இணங்கப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

உண்மையில் அரசியல் கைதிகள் அனைவருக்கும் ஒரு பொது மன்னிப்பை வழங்குமாறு கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் கேட்க முடியும். இதற்கு இணங்குமாறு தாம் அதரவு வழங்கிவரும் அரசாங்கத்தை கோர முடியும். இதற்கு ஆதரவு வழங்க மறுத்தால் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை தவிர்ப்போம் என்று வாதிட முடியும். ஆனால் சம்பந்தனோ இவை எதுபற்றியும் கரிசனை கொள்ளவில்லை. இப்போதும் ஜனாதிபதி மைத்திரிபாலவை புகழ்ந்து கொண்டிருக்கிறார். அண்மையில் திருகோணமலைக்கு வருகை தந்திருந்த, ஜனாதிபதி மைத்திரிபாலவை காளிகோவிலில் வைத்து சந்திந்து, முடிந்தவரை புகழ்ந்திருந்தார். ஆனால் சம்பந்தன் இப்படியெல்லாம் புகழ்ந்து கொண்டிருக்கும் போதுதான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜ.நா கூட்டத்தொடரில் தன் இராணுவம் தவறு செய்யவில்லை என்றும், அதில் சர்வதேசம் தலையிட வேண்டாமென்றும், எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே பார்த்துக் கொள்கின்றோம் என்றவாறும் உரையாற்றியிருக்கின்றார்.

TPPS demo colombo

அரசியல் கைதிகளின் விவகாரத்தையே கையாள முடியாமல் தடுமாறும் கூட்டமைப்பால் எவ்வாறு அரசியல் தீர்வு விடயத்தை கையாள முடியும்? தமிழ் மக்களின் பிரச்சினைக்காக சர்வதேசத்தின் குரள்வளையை நெறிக்கப் போவதாகவும், சர்வதேசத்தின் துணையுடன் தமிழ் மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை பெறப் போவதாகவும் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் அவ்வப்போது ஊடகங்களுக்கு முன்னால் உறுமிக் கொண்டிருக்கின்றனர். தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா? தங்களுக்கு முன்னால் இருக்கின்ற அரசியல் கைதிகளின் பிரச்சினையையே கையாள முடியாமல் தடுமாறும் கூட்டமைப்பின் தலைவர்கள், சர்வதேச சமூகத்தை கையாளப் போவதாக சொல்வதை ஒரு நல்ல நகைச்சுவை என்று கூறுவதில் தவறுண்டா?

உண்மையில் கூட்டமைப்பின் அரசியல் அணுகுமுறை முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. இதனை உணர்ந்ததன் விளைவே அவ்வப்போது அரசாங்கத்தை நம்பி நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்று மாவைசேனாதி அறிக்கைவிடுவதும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோ காலக்கெடு விதிப்பதும், போன்ற நகைச்சுவைகள் அரங்கேறுகின்றன. அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கிவிட்டு, அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்தில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், காலக்கெடு விதிப்பதென்பதும் அவர்கள் எங்களை எமாற்றிவிட்டார்கள் என்பதெல்லாம், தமிழ் மக்களை மடையர்களாக்கும் செயலன்றி வேறென்ன.

ஜனாதிபதி விருப்பம் கொண்டால் அரசியல் கைதிகளின் பிரச்சினையை ஒரு இரவில் தீர்க்க முடியும். பிரமதர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு உதவ முடியும். ஆனால் அவர்களிடம் அப்படியான எண்ணம் எதுவுமில்லை. இவ்வாறான விடயங்கள் அனைத்தும் ஒரு இழுபறிநிலையில் இருப்பதைதே அவர்கள் விரும்புகின்றனர். விடுதலைப் புலிகள் விடயத்தில் தாங்கள் எந்தவொரு விட்டுக் கொடுப்பையும் செய்யவில்லை என்பதை சிங்கள மக்களுக்கு காண்பிப்பதன் ஊடாகவே, தங்களின் வாக்கு அரசியலை பலப்படுத்த முடியுமென்று அவர்கள் நம்புகின்றனர். அந்த அடிப்படையில்தான் முடிவுகளையும் எடுக்கின்றனர். மொத்தத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் தங்களின் அதிகார நலன்களை முன்னிலைப்படுத்தியே சிந்திக்கின்றனர். அவர்கள் அப்படித்தான் சிந்திப்பார்கள். அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலனை மட்டும் முன்னிறுத்தி சிந்திக்க வேண்டிய, செயல்பட வேண்டிய கூட்டமைப்போ அரசாங்கத்தின் நலன்களுக்காக தமிழ் மக்களின் நலன்களை தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் தேசிய அரசியல் நலன்களை ஓங்கிஒலிக்கக் கூடியதொரு புதிய தலைமை உருவாகாத வரையில் இந்த நிலைமை பழைய குருடி கதவை திறடி நிலையில்தான் தொடரும். அரசியல் கைதிகளின் பிரச்சினை, சிங்கள குடியேற்றம் மற்றும் காணி அபகரிப்பு என்றவாறு அவ்வப்போது சில பிரச்சினைகள் எட்டிப் பார்க்கும். பிரச்சினைகள் எட்டிப் பார்த்தவுடன் அரசியல் வாதிகளை திட்டித் தீர்க்கும் படலமும் ஆரம்பிக்கும். பின்னர் சிறிது காலத்தில் அனைத்தும் அமைதியடையும். பின்னர் ஒரு பிரச்சினை எட்டிப் பார்க்கும். மீண்டும் நம்மத்தியில் சத்தங்கள் எழும். ஆனால் தமிழர் பிரச்சினைகளை இவ்வாறு எதிர்கொள்ள முடியாது. தமிழர் விவகாரம் ஒரு இனப்பிரச்சினை. அதனை அதற்குரிய கட்டமைப்புடனும் கருத்தியல் பலத்துடன் அணுக வேண்டும். ஆனால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு தனித்தரப்பாக கையாளும் ஆற்றலை கூட்டமைப்பு எப்போதோ இழந்துவிட்டது. எனவே இன்று கூட்டமைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அனைத்தும், செத்த பாம்மை அடிப்பதற்கு சமமானதுதான். துரதிஸ்டவசமாக செத்த பாம்பை மக்கள் வழிபடுவதால் அதனை அடிக்காமலும் இருக்க முடியவில்லை. இதுவும் ஒரு துரதிஸ்டவசமான அரசியல் சூழல்தான்.

 

http://www.samakalam.com/blog/அரசியல்-கைதிகளின்-விவகார/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
    • நேற்று நம்ம ஈழத்து எம்.ஜி.ஆர் ஒர் யூ டியுப்பில் கதைக்கும் பொழுது, நீங்கள் மேற்கூறிய கருத்துப்பட கூறியிருந்தார்....தமிழ் மக்கள் பொங்கி ஏழ வேண்டும் ஆனால் அதிகமாக பொங்கி எழக்கூடாதாம் ..அதன் விளைவு பலாலிக்குள் நாங்கள் இப்ப போக முடியாமைக்கு காரணமாம்... நல்ல சகுணமாம் வெடிச்சத்தம் கேட்கின்றமையால் என கண் சிமிட்டுதிறார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.