Jump to content

அமெரிக்காவின் செயலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் செயலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பாரிய நெருக்கடி

Report us Steephen 10 hours ago

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை அமுல்படுத்தப்படும் தினம் நெருங்கி வரும் வேளையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பாரியளவில் அதிகரித்து வருவதாக வர்த்தக கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச எரிபொருள் சந்தையின் பிரதான தரகு நிறுவனமான பிரேண்ட் நிறுவனத்தின் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை கடந்த புதன் கிழமை பாரியளவில் அதிகரித்தது.

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 86.74 அமெரிக்க டொலராக உயர்வடைந்தது. இந்த விலை இன்று 86.9 டொலராக அதிகரித்துள்ளது.

கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை 1.7 வீதமாக அதிகரித்து வருகிறது.

ஈரானின் எரிபொருள் சர்வதேச சந்தைக்கு வருவது நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தட்டுப்பாட்டை போக்க சவூதி அரேபியாவும் ரஷ்யாவும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சவூதி அரேபியா தினமும் 10.7 மில்லியன் பீப்பாய் கச்சாய் எண்ணெயை உற்பத்தி செய்கிறது. இதனை 12 மில்லியனாக அதிகரிக்க அந்நாடு திட்டமிட்டுள்ளதாக சவூதியின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, ஈரானுக்கு எதிராக விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உட்பட பல ஆசிய நாடுகள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

ஈரானுக்கு தேயிலையை பிரதானமாக ஏற்றுமதி செய்யும் இலங்கை, அதற்கு பதிலாக ஈரானிடம் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்து வந்துள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக இந்த வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனை தவிர அமெரிக்கா தனது நாட்டில் வட்டி வீதங்களை அதிகரித்துள்ளதால், உலக நாடுகளின் நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆசிய, ஐரோப்பிய, ஆபிரிக்கா உட்பட உலகின் பல நாடுகளின் நாணயங்களின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

பங்கு சந்தைகள் உட்பட உலக நாடுகளில் டொலர்களில் செய்யப்பட்டிருந்த நிதி முதலீடுகள் நேரடியாக அமெரிக்காவுக்கு சென்றுள்ளமை இந்த நிலைமைக்கு காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

https://www.tamilwin.com/economy/01/195224?ref=home-feed

Link to comment
Share on other sites

தற்போது  அதிக எண்ணை தயாரிக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. எண்ணை விலை அதிகரிப்பை தனக்கு மிக சாதகமாக பயன்படுத்தி கொள்ளும்.
ரம்பை ஆரக்கட்டி தளுவிய மோதி அரசுக்கு விரைவில் பொருளாதார தடை வரும் என கூறி உள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.