Jump to content

வாபஸான 'ரெட் அலர்ட்': என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதிப்பளிக்கும் வகையில் தமிழகத்திற்கு நாளை மழை பொழிவதற்கான வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 4ஆம் தேதி அனுப்பிய எச்சரிக்கைக் குறிப்பில் அக்டோபர் 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகத்தில் கன மழை பெய்யுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

மாநிலத்தின் பல இடங்களில் 25 செ.மீட்டருக்கும் மேலான மழைப்பொழிவு இருக்கும் என்பதால், 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு இப்போது திரும்பப்பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை என்ன நடக்கும் என்பது குறித்து மக்களிடையே அச்சம் நிலவி வரும் நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் என்று ஃபேஸ்புக்கில் அறியப்படும் தனியார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜானை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டது.

'மக்கள் அச்சமடைய வேண்டியதில்லை"

"முதலில் ரெட் அலர்ட் என்பது மாநில அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் தமிழகம் முழுவதும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைளை முடிக்கிவிடுவதற்காக தேசிய வானிலை ஆய்வு மையம் விடுத்த நிர்வாக ரீதியிலான எச்சரிக்கை என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ரெட் அலர்ட்டிற்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பு கிடையாது" என்று பிரதீப் ஜான் கூறுகிறார்.

சிவப்பு, ஆம்பர், மஞ்சள், பச்சை போன்ற நிறத்தின் அடிப்படையிலான எச்சரிக்கையை விடுப்பது குறித்து பிரதீப் ஜானிடம் கேட்டபோது, "இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழையின் தீவிரத்தை பொறுத்து தேசிய வானிலை ஆய்வு மையம் விடுக்கும் எச்சரிக்கைகளுக்கு நிறம் பயன்படுத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். சமீபத்திய கேரள வெள்ளத்தின்போது கூட, அம்மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது" என்று அவர் கூறினார்.

நாளை என்ன நடக்கும்?

தமிழகத்தை பொறுத்தவரை நாளை மாநிலம் முழுவதும் பரவலாக மழை பொழிவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் போன்ற வட மாவட்டங்களைவிட தென் தமிழகத்திலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நல்ல மழைப்பொழிவை எதிர்பார்க்கலாம்.

ஒவ்வொரு வருடமும் பொழியும் சாதாரண பருவ மழைதான் இது. மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய வகையிலான மழைப்பொழிவு அடுத்த சில நாட்களுக்கு ஏற்படுவதற்குரிய வாய்ப்பில்லை.

சமூக வலைத்தளங்களில் பரவும் அதிகாரப்பூர்வமற்ற கற்பனை செய்திகளை மக்கள் நம்பக்கூடாது என்று வெதர்மேன் மேலும் கூறினார்.

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?

கடந்த 25 வருட சராசரியை பார்க்கும்போது வடகிழக்கு பருவமழை பொதுவாக அக்டோபர் மாதம் 15 - 22ஆம் தேதிக்குள் தொடங்கும். தற்போதுள்ள சூழ்நிலை, வடகிழக்கு பருவமழை தொடங்கியதற்கான அறிகுறிகளை காண்பித்தாலும், இன்னும் ஒருசில நாட்களில் வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று நினைக்கிறேன்.

  படத்தின் காப்புரிமை Onnes

தற்போது தெற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, நாளையோ அல்லது நாளை மறுநாளோ புயலாக மாறி ஓமனை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல்கள் மூலமே தமிழகத்திற்கு இந்த பருவத்திற்கான பெரும்பாலான மழைப்பொழிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

45 நாட்கள் தொடர் மழையா?

தமிழகத்தில் அடுத்த 45 நாட்களுக்கு தொடர் மழை பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக நேற்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரவின.

இதுகுறித்து, வெதர்மேனிடம் கேட்டபோது, "45 நாட்கள், அதாவது ஒன்றரை மாதம் தொடர்ந்து மழைப்பொழியும் என்று முன்னரே கணித்து கூற முடியாது.

வானிலை கணிப்பு என்பது 2-7 நாட்கள் வரையிலான காலத்திற்கு துல்லியமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் நல்ல நிலையில் உள்ளதால், விட்டுவிட்டு அடுத்த மூன்று மாதங்களுக்கு வழக்கம்போல் மழைப்பொழியும்.

சென்ற ஆண்டைவிட இந்தாண்டு நல்ல மழைப்பொழிவு இருக்குமென்று கருதுகிறேன்" என்று கூறினார்.

எல்-நினோவால் அதிக மழைப்பொழிவு இருக்குமா?

புவி வெப்பமயமாதலின் காரணமாக கிழக்கு மற்றும் மத்திய பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலையில் ஏற்படும் ஒழுங்கற்ற காலநிலையே எல்-நினோ என்றழைக்கப்படுகிறது.

இதன் காரணமாக பல நாடுகளில் அதிகளவிலான மழை பெய்து பேரழிவுகள் நிகழந்து வருகின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பிற்கும் இந்த எல்-நினோவே காரணமென்று கருதப்படுகிறது.

2 முதல் 4 வருடத்திற்கு ஒருமுறை ஏற்படும் எல்-நினோ, இந்த வருடம் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளதா என்று வெதர்மேனிடம் கேட்டதற்கு, "பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை வேறுபாட்டை பொறுத்தே இதுகுறித்து சொல்ல முடியும்.

தற்போதைக்கு எல்-நினோவால் தமிழகத்தில் மழைப்பொழிவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், இம்மாதத்தின் இறுதியிலிருந்து டிசம்பர் மாதத்திற்குள் எல்-நினோவால் மழைப்பொழிவதற்கான வாய்ப்புள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

'ரெட் அலர்ட்' என்றால் என்ன? மற்ற நிற எச்சரிக்கைகள் என்ன கூறுகிறது?

ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திலோ அல்லது மாநிலம் முழுவதுமோ அடுத்த ஐந்து நாட்களில் நிலவவுள்ள வானிலையை முன்னரே கணித்து அதுகுறித்த எச்சரிக்கையை இந்திய வானிலை ஆராய்ச்சி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் கேரளாவை புரட்டிப்போட்ட மழையின்போது 'ரெட் அலர்ட்' என்னும் சொல் பரவலாக பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை விடுத்திருந்தது.

சிவப்பு எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் பிறப்பிக்கும் மிகவும் அதிகபட்ச எச்சரிக்கையே சிவப்பு எச்சரிக்கை எனப்படும்.

அதாவது, மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கும், சாலைகள், கட்டடங்கள், போக்குவரத்து போன்றவற்றிற்கு சேதத்தையும் விளைவிக்கும் வகையிலான மோசமான வானிலையை முன்கூட்டியே தெரிவிப்பதற்காகவே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

இச்சூழ்நிலையின்போது, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுவதற்கான சூழ்நிலை உள்ளதால் மக்கள் தங்களது உயிரையும், உடைமைகளையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ஆம்பர் எச்சரிக்கை - சிவப்பு எச்சரிக்கையை விட சற்றே குறைந்த வீரியமுடைய எச்சரிக்கை ஆம்பர் எச்சரிக்கை என்றழைக்கப்படுகிறது.

இந்த நிலையிலும் உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருந்தாலும், போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகும். மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

மஞ்சள் எச்சரிக்கை - மோசமான வானிலையை குறிப்பதற்கே மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும் நாளிலிருந்து அடுத்த 2-3 தினங்களுக்கு நிலவும் வானிலையை மக்கள் கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது.

பச்சை எச்சரிக்கை - சாதாரண மழைப்பொழிவை தெரிவிப்பதற்காகவே பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதுகுறித்து மக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை.

https://www.bbc.com/tamil/india-45769626

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வங்கக்  கடலில், இரண்டு புதிய புயல்கள் உருவாகியதால்... 
தமிழ் நாட்டுக்கு வர இருந்த  அதிக மழை தடுக்கப் பட்டு விட்டதாகவும்,
அந்த இரண்டு புயல்களும்.. வருகின்ற நாட்களில்  ஒன்று ஆந்திராவையும், மற்றையது  ஒரிசாவை  நோக்கி செல்லும் என்றும் கூறப்  படுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.