Jump to content

சிவில் சமூகம் என்ற பெயரில் ஒளிந்திருந்து NGO க்கள் செய்யும் கழுத்தறுப்புகளை உணராவிட்டால் விடுதலைக்கான புரட்சிகர அமைப்பு உருவாக வாய்ப்பேயில்லை -சேதுராசா


Recommended Posts

http://www.kaakam.com/?p=1355

NGO-adv.jpg

தமிழீழ மண்ணின் அரசியல் தலைமை ஆங்கிலப் புலமைவாய்ந்த மேட்டுக்குடிக் கனவான் கும்பல்களிடம் மீண்டும் போய்ச் சேர வேண்டுமென்பதில் மேற்கு மற்றும் இந்தியத் தூதரங்கள் உறுதியாகவுள்ளன. உழைக்கும் மக்களிடமிருந்து போராட்ட ஆற்றல் தலைதூக்கிவிட ஏதுவான அத்தனை வாய்ப்புகளையும் இல்லாதாக்கியும் மடைமாற்றியும் இந்தக் கனவான் கும்பலிடம் கொண்டு சென்று தமிழர்களின் அரசியல் தலைமையை அடகுவைப்பதில் இந்த மேற்குலக இந்தியச் சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல் வேலை செய்கின்றது. இந்த நுண்ணரசியற் கேடுகளை உணர்ந்துகொள்ளத் தடையாக உள்ள பல தடைகளில் தமிழ்ச் சமூகம் NGO க்களுடன் பின்னிப்பிணைந்திருப்பது ஒரு பெருந்தடையாக இருக்கிறது. இது குறித்த விழிப்பூட்டல்களை மக்களிடத்தில் மேற்கொள்ள ஒரு புரட்சிகர மக்கள் இயக்கத்தால் மட்டுமே இயலுமே தவிர மக்கள் இயக்கங்கள் என்ற போர்வையில் இயங்கும் NGO க்களால் இயலாதென்பதைச் சுட்டி மேற்கொண்டு விடயப் பரப்பிற்குள் செல்லலாம்.

இதுகாலவரையிலும் அரசியலை ஏடுகளிலும் நடைமுறையிலும் கற்றோர் NGO க்கள் பற்றிப் பெரும்பாலும் அறிந்திருப்பனவற்றை இக்கால சூழலில் அரசியல் தளத்தில் காலடி வைத்துள்ள புதுமுக இளவல்களுக்காக கீழ்வருமாறு சுருங்கத் தொகுக்கலாம்.

மேற்குலக ஏகாதிபத்தியமானது மூன்றாம் உலகநாடுகளைக் கடனாளியாக்குவதற்காக அந்த நாடுகளின் தற்சார்பு நுகர்வை இயலுமான வரையில் சீரழித்தவாறு கடன்களை உலக வங்கி, பன்னாட்டு நாணய நிதியம் போன்ற தங்களின் முகவர் அமைப்புகள் மூலம் வழங்கி மேலும் மேலும் கடன் சுமைக்குள்ளாக்கி பொருண்மியத்தில் நலிவுறச் செய்து கடன் வாங்காமல் எதையும் சரிக்கட்ட இயலாத சூழலை அந்த நாடுகளில் உருவாக்கி மீளக் கடன் வழங்குவதானால் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படைத் துறைகளில் ஒரு பகுதியைத் தானும் தனியார்மயமாக்க வேண்டுமென நிபந்தனைகள் விதித்துத் தமது மேற்குலக வணிக நலனிற்காக சந்தைவிரிப்பிற்கு மூன்றாம் உலக நாடுகளின் அரசுகளை உடன்படவைக்கும் போது மக்களிடத்தில் தாம் அதுவரை தமது வரிப்பணத்தில் அனுபவித்த அடிப்படை வசதிகள் தனியார்மயப்பட்டு அவர்களின் வாழ்வு இறுக்கத்திற்குள்ளாகுகையில் அந்த அரசாங்கட்திற்கு எதிராக மக்கள் வீதியிலிறங்கிப் போராடுவர். அப்படியான சூழலைத் தவிர்ப்பதற்காக NGO க்கள் களமிறங்கி மக்களிற்கு உதவும் போர்வையில் வேலை செய்து மக்கள் புரட்சிக்கான சூழலை இல்லாதாக்கி ஏகாதிபத்திய உலகையும் அதற்கு அடிமையாகிப் போன மூன்றாமுலக நாடுகளின் அரசுகளையும் காப்பாற்றும்.

NGO க்கள் கருத்திட்டங்களை முன்வைக்கும் போது இயலுமானவரை பெண்கள், கைம்பெண்கள், நலிவுற்றோர் எனப் பலவாறு சமூகத்தைக் குழுப்படுத்தியே தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும். இவ்வாறாக மக்கள் ஒரு தேசமாக ஒன்றுபடுதலை இல்லாமலாக்க மக்களை குழுக்களாக அணுகும் போக்கைக் கடைப்பிடிக்கும். அப்படி அணியமாதலை மக்களிடத்தில் பழக்கப்படுத்தித் தேசமாக ஒன்றாகும் வாய்ப்புகளை இயன்றவரை குறைப்பதில் NGO க்கள் வேலை செய்யும்.

viber-image-490x315.jpg

இயற்கையாகவோ செயற்கையாகவோ பேரிடர்கள் நேருகையில் அந்தப் பாதிப்புகளிலிருந்து மீண்டுகொள்ள மக்கள் தம்முள் அணியமாகி ஒரு சமூகமாகத் தமது சிக்கல்களைத் தமது ஆளுமையின் மூலமும் தமது வரிப்பணத்தை நிருவகிக்கும் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தினுடனும் சேர்ந்து தீர்த்துக்கொள்ள முனைகையில் அந்த சமூகம் தனது ஆற்றலில் தான் நம்பிக்கை வைத்து ஒரு சமூகமாகத் தனது சிக்கல்களைத் தானே தீர்க்கும் ஆளுமையை வளர்த்து வெளியாருக்காகவும் வெளியாரின் ஏய்ப்புகளுக்காகவும் காத்திருக்காது. எனவே இந்த நிலை உருவாகாமல் தடுக்க இப்படியான பேரிடர்கள் நேர்ந்த மறுகணமே NGO க்கள் வந்து மக்களிடத்தில் வேலை செய்து மக்களைத் தமது ஆளுமையையும் ஆற்றலையும் உணரவிடாது செய்வதோடு சமூகமாக அணிதிரண்டு தமது சிக்கல்களைத் தீர்த்துக்கொள்ளும் பழக்கம் ஏற்படுவதை இல்லாமல் செய்யும்.

ஏகாதிபத்திய நலனுக்கு உகந்த அல்லது கேடாகாத ஒடுக்குமுறை அரசுகளை ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகளிலிருந்து காப்பாற்றுவதில் NGO க்கள் முன்னின்று உழைக்கும்.

தமது மண்ணிழந்து, உறவுகளை இழந்து, உடல் அவயங்களை இழந்து, வாழ்வாதாரமிழந்து எமது மக்கள் சொந்த மண்ணில் ஏதிலிகளாக இருக்கும் போது, அவர்களின் நிலங்கள் இராணுவத்தால் வல்வளைப்புக்குள்ளாகி, உறவுகள் சிங்கள இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருக்கும் போது அவர்கள் எதை இழந்தார்களோ அவற்றிற்கான மூல காரணத்தை அகற்றிச் சிக்கல்களைத் தீர்க்க முனையாது, மாறாக அதனை மழுங்கடித்து மறைப்பதற்காக ஏதோ எமது மக்கள் இழந்தது இவையொன்றுமில்லை உளவியல் சமநிலையை மட்டும் என்றாற் போல காட்டி, எமது மக்களிடத்தில் எழும் நியாயமான வெஞ்சினத்தையும்  ஒடுக்குமுறையாளனிற்கு எதிராக வஞ்சினமாக நெஞ்சிலிருக்கும் தமிழ்த் தேசிய மெய்யுணர்வையும் உளநோயாகக் காட்டி அவற்றினை இல்லாதொழித்து அடக்குமுறையாளனின் எதிர்காலத்திற்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு எமது மக்களின் அடக்குமுறைக்குள்ளாகி அவதியுறும் உண்மை நிலை மடைமாற்றம் செய்யப்பட்டு மக்களின் நியாயமான தேசிய உணர்வுகளை மழுங்கடிக்க பெரும்பாலான NGO க்கள் உளவியல் சமூக திட்டங்கள் (Psycho Social Projects) என்ற கருப்பொருளில் பல திட்டங்களை முன்னெடுக்கும். முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் தமிழீழ மண்ணில் காலடி வைத்துள்ள NGO க்கள் முன்னெடுத்த வேலைத் திட்டங்களை உற்று நோக்கின் இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

மேலே விளக்கப்பட்டதன் அடிப்படையில் பொதுவாக எவ்வாறு எதற்காக NGO க்கள் உலகெங்கும் இறக்கிவிடப்பட்டுள்ளன எனப் பார்த்தோம். குறிப்பாக, முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழீழ மண்ணில் புதுப்புது வடிவங்களுடன் எப்படிக் களமிறங்கித் தமிழர்களின் அரசியல்வெளியைச் சீரழித்துக்கொண்டு வெளியாரின் குழிபறிப்புகளிற்கான அரசியலை NGO க்கள் முன்னெடுத்துச் செல்கின்றன என்பதனை நாம் தெளிவாக உணர வேண்டும். NGO க்கள் “சிவில் சமூகம்” என்ற பெயருக்குள் ஒளிந்திருந்து கழுத்தறுக்கும் நுண்ணரசியலை முழு உடற்கூற்றாய்வுக்கு உட்படுத்துவதன் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

CPF.jpgஇதில் பாக்கியசோதி சரவணமுத்து எனும் மேட்டுக்குடிக் கொழும்புவாழ் தமிழர் நிறைவேற்றுப் பணிப்பாளாராக இருக்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான அமையம் என்ற பெயருடன் தம்மை சிவில் சமூகமாக அடையாளப்படுத்தி வரும் NGO வானது 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்குகி வருகின்றது. வாசிங்டனின் கொழும்புக்கிளையாகச் செயற்பட்டு வரும் இத்தகைய அமைப்புகள் நல்லிணக்கம், மாந்த உரிமைகள், புனர்வாழ்வு எனப் பலவாறு பேசி மேட்டுக்குடிக் கனவான்களை ஆபத்பாண்டவர்களாகப் பார்க்கும் காலனியடிமைப் பொதுப்புத்தியைக் கொண்ட மக்களை எளிதில் ஏமாற்றிவிடுகின்றனர்.

சரி. பாக்கியசோதிக்கு தமிழ்மொழியே தெரியாததால் அவர் ஊரோடிருந்து (கொழும்பு) வாசிங்டன் வேலைகளைச் செய்துவருவதால் அவரால் புரட்சிச் சாயத்துடன் தமிழீழ மக்களிடத்தில் வர முடியவில்லை. ஆனால் தமிழீழ மண்ணின் “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற பெயரில் வலம் வரும் அமைப்பானது புரட்சிச் சாயத்தை அள்ளிப் பூசிக்கொண்டு வந்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.

11209652_10155557901450254_3064338604316ஒரு இனவழிப்புப் போரின் பின்பு இனவழிப்பிற்குள்ளாக்கப்பட்ட மக்களிடத்தில் ஏகாதிபத்தியத்தின் துணைப்படைப் பிரிவுகளில் ஒன்றான NGO க்கள் எப்படிச் செயாலாற்றும் என்ற நுண்ணரசியலை விளங்கிக்கொள்ள தமிழ் சிவில் சமூக அமையம் என்ற பெயரில் தமிழீழத்தில் இயங்கிவரும் NGO இனைப் பார்த்துப் புரிந்துகொள்ளலாம். ஐந்தாண்டுகளாக தமிழ் சிவில் சமூக வலையமைப்பு என்ற பெயரில் அறிக்கையிட்டு வந்தவர்கள் 2014 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற பெயரில் அமைப்பு வடிவம் பெற்றனர். சிவில் சமூகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அந்த அமைப்பின் தலைமைகளாகவும், இணைப்பாளர்களாகவும் அந்த அமைப்பிலிருப்போர் யாரென்று சற்றுநோக்கித் தான் ஆக வேண்டும். சிவில் சமூகம் என்றதும் தமிழீழ விடுதலைக்குப் போராடி இனக்கொலைக்குள்ளாகியுள்ள மக்களில் காணாமல் போனோரைத் தேடுவோரும், சிறைபட்டிருக்கும் எமது அரசியல் கைதிகளின் உறவினரும், விடுதலைக்காகப் போராடிய ஆளுமைகளும் மண்சார்ந்து மக்களுடன் நின்று பணியாற்றியவர்களும் இருப்பார்கள் எனவே பெயரை வைத்துப் பலரை நினைக்கத் தூண்டும். ஆனால், இந்த அமைப்பில் இருப்பவர்கள் யாரெனில் மருத்துவர்கள், பொறியியளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மக்களை நம்பாமல் கர்த்தரை நம்பும் பாதிரியார்கள் என ஆங்கிலத்தை முன்னிலைப்படுத்தி வாழும் மேட்டுக்குடிக் கனவான்களே இருக்கிறார்கள். இவர்களில் பலர் போர்க் காலங்களில் மாணவர்களாக இருந்த போது அவர்களிலும் திறமையான மாணவர்கள் தேச விடுதலைக்காகப் புறப்பட்ட போது வீட்டுக்குள் ஒளிந்திருந்து பாடங்களை மனனம் செய்துகொண்டு பக்கத்தில் அழுகுரல் கேட்டாலும் படிப்புப் போய்விடும் என்று எட்டிக் கூடப் பார்க்காத உள்ளங்காலில் ஒரு துளி மண்படாத மலர்ப்படுக்கை வாழ்விலிருந்து வந்த ஆளுமை குறைந்தோராகவே இருந்தனர். இவர்களில் பலர்தான் இன்று தமிழ் சிவில் சமூக அமையம் என்ற பெயரைப் பயன்படுத்தி NGO ஆக இயங்குகின்றனர்.

இவர்களில் விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரைத் தவித்து ஏனையோர் மக்களைக் காணாதோரே. பள்ளிக்கூடமும் தனியார் வகுப்புகளுமென இருந்தவர்கள் பின்பு பல்கலைக்கழமும் பட்டமுமென இருந்து இப்போது வேலையும் வீடும் சம்பாதிப்புமென இருந்தவர்களாக உடலில் ஒரு வியர்வைத்துளியை அறியாதவர்களாக மக்களைக் காணாதவர்களாக இருந்தவர்களை இழுத்துப் போட்டு “சிவில் சமூகம்” என்ற போர்வையில் இந்த NGO தேரினை இழுப்பவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? எத்தகைய நுண்ணரசியல் ஆட்டம் இவர்கள் மூலமாக ஆடப்படுகிறது எனப் பார்க்க வேண்டும்.

இனப்படுகொலைக்குள்ளாகித் தமக்கான தக்க தலைமையையும் தாம் வாழ்ந்த நிழலரசின் அத்தனை கட்டமைப்புகளையும் இழந்து நட்டாற்றில் இருக்கும் ஒரு ஒடுக்குண்ட தேசத்தில் எங்கெங்கெல்லாம் வெற்றிடம் இருக்குமோ அங்கங்கெல்லாம் NGO க்கள் வந்து அமர்ந்துகொள்ளும். மக்களுக்கான ஊடகங்கள் இல்லையென்றால் ஒரு ஊடகம் அங்கே வந்து விடும். இப்படியாக வல்ல தலைமையை இழந்துவிட்ட தமிழ்மக்களின் அரசியல் தலைமை கெடுவாய்ப்பாக மீண்டும் வாக்குப் பொறுக்கும் மிதவாதத் தமிழ்த் தலைமையிடம் சென்றது. வாக்குப் பொறுக்கிய பின்னர் செய்யும் பாராளுமன்ற அரசியலினால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பில் இழந்துவரும் சூழலைத் தாமதப்படுத்தத்தன்னும் இயலாது என்று மக்களுணர்ந்து தமக்கான தலைமையை ஒரு புரட்சிகர மக்கள் இயக்கமாக பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே தேடுவார்கள். தேடினார்கள். தேடுகிறார்கள். எல்லா வெற்றிடத்தையும் உரியவர்கள் நிரப்ப முன்னரே நிரப்பிவிடும் NGO க்கள் ஒரு புரட்சிகர மக்கள் இயக்கத்தின் தேவை மக்களிடத்தில் எழும் என்பதால் அதுவாகவும் அல்லது அதனைத் தீர்மானிக்குமிடத்திலும் இருப்பதற்காக உருவாக்கிவிடப்பட்ட NGO தான் “தமிழ் சிவில் சமூக அமையம்” என்ற பெயரில் வலம் வருகிறது. மக்களால் நிராகரிக்கப்பட்டோரும் மக்களைக் காணாத மேட்டுக்குடிக் கல்வியாளர்களும் இந்த NGO உடன் நிற்க இடம் தேடிக் கூட்டிற்கு நிற்க அது ஒரு வெகு மக்கள் அரசியல் செய்வது போன்ற ஒரு போலித்தோற்றம் தெரியும்.

guru-3.jpg

இந்த அமைப்பில் இன்று பேச்சாளர்களில் ஒருவராகப் பதவிநிலையில் அடையாளப்படுத்தப்பட்டாலும் அந்த அமைப்பின் சார்பில் இயங்கியும் பேசியும் வருபவர்களில் இன்று யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறைத் தலைவராக இருக்கும் கு. குருபரன் முதன்மையானவர். அவர் சட்டத்துறையில் இளமானிப்பட்டத்தைப் பெற்ற சில நாட்களிலேயே அவரை அமெரிக்காவின் உதவி இராசாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் சந்தித்துப் பேசியுள்ளார் என்றளவில் இந்தக் குருபரன் முன்னரே அமெரிக்கத் தூதரகத்தால் இனங்காணப்பட்டவராக இருந்துள்ளார். இளமானிப்பட்டம் பெற்ற அடுத்த சில மாதங்களில் இந்த சிவில் சமூக அமையத்திற்குப் பேச்சாளாராக குருபரன் நியமிக்கப்பட்டிருக்கிறார் எனில் அவர் மீது ஏதோவொரு பாரிய நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியாயின் அது எவரால் என ஊகிப்பது இலகுவானதுதான். பொதுவாக ஒரு அமைப்பின் பேச்சாளராக முதிர்ச்சியுள்ள அனுபவமுள்ள ஒருவரையே நியமிப்பார்கள். ஆனால் சிவில் சமூக அமையம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட NGO க்கு பேச்சாளராக இருப்பதற்கு இளமானிப்பட்டம் பெற்று சில காலமேயான குருபரன் தகுதியானவர் என அடையாளங்காணப்பட்டமை விபரமறிந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்காது. இந்தக் குருபரன் “அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம்” என இன்னொரு NGO வினை நிறுவி நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்து அதனை இயக்கி வருகிறார். மாதமொருமுறை அல்லது சில மாதங்களுக்கொருமுறை அமெரிக்க ஐரோப்பியப் பல்கலைக்கழகத்திலிருந்து விரிவுரையாளர்களை அழைத்து வந்து கூட்டம் போடுவது தான் இந்த அடையாளம் என்ற NGO வின் முதற்பணி. உலக வங்கி மற்றும் USAID போன்றவற்றிலிருந்தும் நிதிபெற்று இயங்கும் இந்த அமைப்புக்கு மேற்கு நிதிகள் கிடைக்க குறிப்பிட்ட சில தூதரகங்கள் பெருமுதவிகள் செய்கின்றன. மேற்கின் நிதியில் NGO நடத்தும் குருபரன் ஏகாதிபத்திய எதிர்ப்பும் பேச அனுமதியுண்டு. ஏனெனில், அதனைக் கூட இப்படியான NGO க்கள் தான் பேச வேண்டுமென்பது மேற்குச் செய்யும் நுண்ணரசியலாகும்.  இதனால் இந்தக் குருபரன் கருத்து வெளியிடும் போது மேற்கின் நிதியை வெளிப்படையாகப் பெற்று இயங்கும் அடையாளம் எனும் NGO வின் கருத்தா அல்லது மேற்கின் நிதியை மறைமுகமாகப் பெறும் தமிழ் சிவில் சமூக அமையம் என்ற NGO வின் கருத்தா என்று குழப்பமாக இருப்பதாக ஒரு ஊடக நண்பர் அப்பாவித்தனமாக இந்தப் பத்தி எழுதுபவருக்குச் சொன்னார்.   

adaiyalam.jpg

அத்துடன் எமது இனவிடுதலைக்காகப் போராடிச் சிறைப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளான உறவுகள் தமது விடுதலை குறித்தும் வழக்குகள் தொடர்பாகவும் சிறைகளில் இருந்து தொடர்புகொண்டு சட்டவாளர்களுடனும் அரசியல் தலைவர்களுடனும் பேசுவது ஒரு இயல்பான வழக்கம். அவர்களது வழக்குக் குறித்து அவர்களை விட எவருக்கும் சட்ட அறிவோ அது குறித்த முன்னெடுப்பறிவோ இருக்காதென்றளவில் விடயங்களை விளங்கி வைத்திருக்கும் எமது அரசியல் கைதிகள் வெளியே தம்மால் இயங்க முடியாத ஒரே காரணத்தால் சிறைப்பட்ட வலியுடன் வாய்க்கும் அருமையான நேரத்தில் எவ்வளவோ துன்பங்களிளுக்கும் இறுக்கங்களுக்கும் நடுவிலும் தொலைபேசிக்கு அழைக்கும் போது அரசியல்வாதிகளோ அல்லது பெரும்பாலான தொழில்முறைச் சட்டவாளர்களோ (சிங்களச் சட்டவாளர்கள் அடங்கலாக) கூடிய முதன்மை கொடுத்து அவர்களின் சூழலறிந்து பேசுவார்கள். ஆனால் குருபரன் என்பவர் ஒரு அனுபவமற்ற அப்போது தான் ஓரிரண்டு வழக்குகளில் ஈடுபட்டுப் பயிலும் ஒரு சட்டவாளர் என அறியாமல் இவருக்கு ஊடகங்களும் இன்னும் யார் யாரோ கட்டிவிட்ட மணியை நம்பி இவர் பேசும் அரசியலை நம்பி இவருக்கு சிறையிலிருந்து அழைத்து தமது வழக்குக் குறித்துப் பேச முற்பட்டபோது, “சிறையிலிருப்பவர்கள் தொலைபேசி வைத்திருப்பதும் பேசுவதும் சட்டத்திற்கு முரணானது. என்னை நீங்கள் அழைக்க வேண்டாம்” என தனது மேட்டுக்குடி மலர்ப்படுக்கைவாழ் பண்புநிலையின் மெய்நிலையைக் குருபரன் காட்டி விட்டார். இவரின் பேச்சுகளின் போலித்தன்மையையும் நடைமுறையின் மெய்நிலையையும் அறிந்த எமது இனவிடுதலைக்காகப் போராடிச் சிறைப்பட்டிருப்பவர்களின் மனநிலையில் தான் இந்தக் குருபரன் வகையறாக்கள் சரியான முறையில் பதிவாகியிருப்பார்கள்.

இதே குருபரன் தமிழ்ச் சமூகத்தில் இருகட்சி அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட கட்சிகள் இருப்பது தேவையாம் என்று பரப்புரை செய்து வருகிறார். இனப்படுகொலைக்குள்ளாகி நிற்கும் தமிழினம் எண்ணிக்கையில் தனது சொந்த நிலத்திலே கூட சிறுபான்மை ஆக்கப்பட்டு வரும் வேளையில் தனது பிரதிநிதித்துவ அரசியலைத் தான் எழுந்து விடுதலைக்காகப் போராடும் காலம் வரையிலாவது தக்கவைக்க வேண்டுமென்ற நிலையில், இப்படியாகத் தமிழர்களின் வாக்குகள் சிதறுவது யாருக்கு நன்மை பயக்கும் எனத் தெரியாமல் இந்த NGO நபர் இதைச் சொல்லியிருக்க மாட்டார். அதுவும் இப்படியான பரப்புரைகளை தென் தமிழீழத்தில் செய்தால் அதன் விளைவு என்னவாகும் என இந்த மண்ணில் ஊர்வனவுக்குக் கூடத் தெரியும். இந்த NGO நபருக்குத் தெரியாமலா இருக்கும்?

fb-490x267.jpg

“யாழ்ப்பாணத்திலிருந்து முசுலிம்களை வெளியேற்றியமையானது ஒரு இனச் சுத்திகரிப்பு” என ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனின், பன்னாட்டுச் சமூகம் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தீர்மானத்தை ஒரு விடயமாகக்கொள்ளாது” என இதே குருபரன் கூறியுள்ளார். இந்த மோசமான கருத்தைச் சுமந்திரன் கூறிய போது எதிர்த்தெழுந்து கொதிப்புடன் கண்டித்த பலருக்கு குருபரன் சொன்ன இந்தக் கூற்றுக் கண்ணிற்குத் தெரியவில்லை. ஏனெனில் தமது கட்சிசார் நிலைகளுக்கு இப்போது பயன்படுகிறார் எனக் கணித்து இப்படியானவர்கள் கொள்ளும் பராமுகத்தில் நேர்மையான விடுதலை அரசியல் இல்லை.

எனவே இத்தகைய NGO க்கள் இன்று எவ்வாறு செயற்படுகின்றன என கீழ்வருமாறு சுருங்க அடுக்கலாம்.

புரட்சிகர ஆற்றலாக ஒரு மக்கள் இயக்கத்தின் பின்னே மக்கள் செல்வதைத் தடுத்துத் தம்மை மாற்றாகக் காட்ட சிவில் சமூகத்தின் பெயரால் இயங்கும் NGO க்கள் வேலை செய்வதுடன் சிவில் சமூகத்தின் சார்பில் பேசவல்லவர்களாக தாமே அடையாளங் கொள்கின்றனர். இவர்களின் கருத்தே சிவில் சமூகத்தின் கருத்தாக ஊடகங்களின் மூலம் பதிவாகும்.

அதற்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் எழுப்புவார்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பும் பேசுவார்கள், இனப்படுகொலையில் மேற்கின் பங்கையும் பேசுவார்கள். ஆனால் அங்கிருந்து நிதிபெற்றுத் தான் இயங்குகிறார்கள் எனில் இவர்கள் புரட்சிகரச் சாயத்துடன் மக்களிடம் வந்து சிக்கல்களைக் கையிலெடுத்து அப்படியே அதை மடைமாற்றிவிட்டு அறிக்கையுடன் போய் விடுவார்கள். இதன் தொடர்நிலையை உற்றுநோக்கி மக்கள் இவர்களிடம் கேள்வி கேட்கத் தொடங்கினால் அவர்களுக்கு எல்லாம் புரியும்.

இப்படியாக சமூகத்தில் மக்கள் சார்பாகப் பேசுபவர்கள் என்ற வேடந்தாங்கி இந்த நபர்களை அறிவார்ந்த தலைமைகளாக NGO முன்னிறுத்துகின்றது. உண்மையில் இவர்கள் தமிழ்ச் சமூகத்தில் வளர்த்துவிடப்பட்ட மேற்குலகின் புல்லுருவிகளே.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் துன்பங்களைத் தாங்கிய மக்களின் அழுகைகளையும் குரல்களையும் பதிவு செய்து மேற்கிற்கு அனுப்பி மேற்கிடமிருந்து நிதிபெற்றுக்கொள்ளும் அடையாளம் வகையறா அமைப்புகள் ஏதோ மக்களுடன் நின்று செயற்படுவதாகத் தோற்றம் தரும். இதற்கு எதற்காக மேற்குலகு நிதியளிக்கிறது என வினா எழுப்பிப் பாருங்கள். அவர்கள் பேயறைந்தவர்கள் போல முற்போக்குத் திரையகன்று அகன்று விடுவார்கள். ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் முன்பு, போராட்டத்தின் போது, அந்த மக்கள் இனப்படுகொலைக்குள்ளான பின்பு அந்த மக்களின் மனநிலை, ஆளுமை, எதிர்பார்ப்பு என்பன குறித்து ஆய்வு செய்து, அதற்குள் வேலை செய்யத் தான் எப்படி உள்ளிறங்கலாம் என மேற்கு முடிவெடுக்கவே இத்தகைய ஆவணபடுத்தல்களை இவர்கள் மூலம் செய்ய இவர்களுக்கு மேற்கு நிதியளிக்கிறது. இதை ஏனைய தேசிய இனங்களிற்கு நடந்தவற்றோடு ஒப்பாய்வு செய்து சில ஒடுக்கல் விதிகளை மேற்குப் புதிதாகத் தனது உட்சுற்றுக் கையேடுகளில் எழுதி வைக்கும்.

கலை, இலக்கிய, படைப்புத் தளங்களிலும் இருந்து இயல்பாகவெழும் விடுதலைக் குரல்களை வெளிச் சொல்ல அவர்கட்கு நிதியொரு தடையாக இருக்கும் வேளை அப்போதும் புரவலர்களாக உள்நுழைந்து படைப்புவெளிகளையும் இத்தகைய NGO க்கள் தமதாக்குவர்.

இளவல்களிடத்தில் ஆளுமை விருத்தி செய்யப்போவதாகப் பயிற்சிப் பட்டறைகளை நடத்தித் தமக்கானவர்களை அடையாளங்கண்டு அவர்களை NGO சமூகமாக வளர்த்தெடுத்து தூதரகங்களினதும் மேற்குமைய நிறுவக அமைப்பாளர்களினதும் கோப்புகளில் இப்போதே இடம்பிடிக்க வைப்பர். நாளை இவர்களையே தலைவர்களாக உருவாக்கும் வேலைகளிலும் ஈடுபடுவர். (ஒரு மாபெரும் இனவிடுதலைப் போராட்டத்தைத் தனது சொந்தக் காலில் நின்று எதிர்கொண்டு போராடிப் பெற்ற ஆளுமையை விடுத்து மூடிய அறையில் வெண்திரையில் படங்காட்டி ஆளுமை விருத்தி வகுப்பெடுப்பதை நினைத்து யாரும் சிரித்துச் சாகாதீர்கள்)

உறைக்கச் சொல்வதானால், மேற்குலக ஏகாதிபத்திய உலகு புரட்சி மீதான தனது வன்மத்தை இப்படியான NGO க்களையும் NGO நபர்களையும் புரட்சி பேசவைத்துத் தீர்த்துக்கொள்கிறது.

தமிழீழ மண்ணின் அரசியல் தலைமை ஆங்கிலப் புலமைவாய்ந்த மேட்டுக்குடிக் கனவான் கும்பல்களிடம் மீண்டும் போய்ச் சேர வேண்டுமென்பதில் மேற்கு மற்றும் இந்தியத் தூதரங்கள் உறுதியாகச் சில நுண்ணரசியல்களை “சிவில் சமூகம்” போன்ற பெயர்களிற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் NGO க்கள் மூலம் செய்கின்றன. இதனால் சிவில் சமூகம் என்ற பெயர்களில் ஒளிந்திருந்து NGO க்கள் செய்யும் கழுத்தறுப்புகளை உணராவிட்டால் விடுதலைக்கான புரட்சிகர அமைப்பு உருவாக வாய்ப்பேயில்லை.

இதனை உணருவோமா? புரட்சிகர ஆற்றல்களாக ஒரு மக்கள் இயக்கம் தமிழீழ மண்ணில் இருந்து மீண்டெழ வேண்டாமா?

-சேதுராசா-

2018-10-05

http://www.kaakam.com/?p=1355

Link to comment
Share on other sites

17 hours ago, தம்பியன் said:

தமிழீழ மண்ணின் அரசியல் தலைமை ஆங்கிலப் புலமைவாய்ந்த மேட்டுக்குடிக் கனவான் கும்பல்களிடம் மீண்டும் போய்ச் சேர வேண்டுமென்பதில் 

பிரபாகரன் கூட ஆங்கிலம் பேசும் அடேல் பாலசிங்கம் போன்ற மேற்குலக மேட்டுக்குடியை தலைமைத்துவத்தில் வைத்து இருந்தார். ஆங்கில புலமை இல்லாத கீழ்குடி கூலிகளிடம் தமிழீழ அரசியல் தலைமையை கொடுத்து பார்க்கலாமே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Jude said:

பிரபாகரன் கூட ஆங்கிலம் பேசும் அடேல் பாலசிங்கம் போன்ற மேற்குலக மேட்டுக்குடியை தலைமைத்துவத்தில் வைத்து இருந்தார். ஆங்கில புலமை இல்லாத கீழ்குடி கூலிகளிடம் தமிழீழ அரசியல் தலைமையை கொடுத்து பார்க்கலாமே? 

 

கட்டுரையை நான் இன்னும் வாசிக்கவில்லை...ஜூட்டிடம் ஒரு கேள்வி...ஆங்கிலம் பேசினால் மேட்டுக் குடியா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தி எழுத்தாளர் சேதுராசாக்கு ஒரு NGO மூலம் வருமானம் கிடைக்க குருபரன் தடையாக இருந்தார் என்ற சந்தேகமாக இருக்கின்றது. ஆங்கிலம் சரளமாக எழுதவும் கதைக்கவும் பழகி NGO வேலை எடுத்தால் இப்படி தமிழில் எழுதி மினக்கெடவேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

 

கட்டுரையை நான் இன்னும் வாசிக்கவில்லை...ஜூட்டிடம் ஒரு கேள்வி...ஆங்கிலம் பேசினால் மேட்டுக் குடியா?

 

அப்படித்தான் சேதுராசா மேட்டுக்குடியை விபரிக்கிறார்.

Link to comment
Share on other sites

On 10/6/2018 at 9:05 AM, தம்பியன் said:

தமிழீழ மண்ணின் அரசியல் தலைமை ஆங்கிலப் புலமைவாய்ந்த மேட்டுக்குடிக் கனவான் கும்பல்களிடம் மீண்டும் போய்ச் சேர வேண்டுமென்பதில் மேற்கு மற்றும் இந்தியத் தூதரங்கள் உறுதியாகச் சில நுண்ணரசியல்களை “சிவில் சமூகம்” போன்ற பெயர்களிற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் NGO க்கள் மூலம் செய்கின்றன.

 

அதைத்தான் நோர்வே தலமையில் எரிக் சொல்கைம் வழிநடத்தலில் சமாதான தூதுவர்களாக வந்து போராட்த்தையும் மக்களையும் அழித்து எப்போதோ மேட்டுக்குடியிடம் கொடுத்தாகிவிட்டதே ! இப்போது என்ன புதிதாக ? பேரினவாத சிங்கள அரச எந்திரத்தின் ஒரு அங்கமான நீதிபதி விக்கி ஒரு கோயிலில் தர்மகத்தாவாகவோ இல்லை பிரசங்கம் செய்பவராகவே இல்லாமல்  எப்படி வடக்கிற்கு முதல்வரானார் ? 

போரிற்கு நிதி ஆயுத உதவியை யார் சொய்தார்களோ அவர்களே அகதிகளுக்கான உதவியையும் ஐக்கிய நாடுகள் சபை என்ற போர்வையில் செய்வார்கள். போருக்கு துணையாய் நின்று தமிழர்களையும் அவர்கள் வாழ்விடங்களையும் அழித்த இந்தியா போர் முடிந்தபின் வீடுகட்டிக்கொடுக்கும் சீனா ரோட்டுபோட்டுகொடுக்கும்.   எந்த லாபமும் திட்டமும் நோக்கமும் இல்லாமல் எந்த நிறுவனமும் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவப்போவதில்லை.. புரியும் போது நாம் வேறு நிலைக்கு சென்றிருப்போம். சமாதானக் குழுவின் சதித்திட்டத்தை புரியுமுன் போராட்டம் முடிவுக்கு வந்ததைப்போல் எல்லாம் முடிந்து விடும். நாம் எப்ப டி மேற்கு நாடுகளுக்கு வந்தோம் என்பதை நூறு இருநூறு வருடத்தின் பின் ஒருவன் ஆராய்சியாக எழுதுவான், எம்மைப்பொறுத்தவரை ஏஜென்சிக்கு கசுகட்டி வந்தோம் அகதியாய் வந்தோம் என்ற காரணங்களோடு மண்டைய போடவேண்டியதுதான்.. 

20 hours ago, Jude said:

பிரபாகரன் கூட ஆங்கிலம் பேசும் அடேல் பாலசிங்கம் போன்ற மேற்குலக மேட்டுக்குடியை தலைமைத்துவத்தில் வைத்து இருந்தார். ஆங்கில புலமை இல்லாத கீழ்குடி கூலிகளிடம் தமிழீழ அரசியல் தலைமையை கொடுத்து பார்க்கலாமே? 

 

பிரபாகரன் தனது இயக்கத்திற்கு தேவை என்ற அடிப்படையில் இவர்கள் மட்டுமின்றி ஏராளமான ஆங்கிலப்; புலமை உள்ளவர்களை பயன்படுத்திக்கொண்டார் புத்தகங்கள் பத்திரிகைகள் மொழிபெயர்பதில் தொடங்கி பல வேலைகளுக்கு பயன்படுத்திக்கொண்டார். மக்கள் சக்தி எங்கிருக்கின்றதோ அங்குதான் அரசியல் தலமை இயங்கும். தமிழீழ மண்ணையும் கடலலையும் ஆதராமாக வைத்து தனது பொருளாதராத்தையும் வாழ்வாதராத்தையும் அடிப்படையாகக் கொண்டவர்களுக்கு அரசியலின் தலமைத் தகுதி உள்ளது தவிர கல்விகற்று சிங்கள அரச எந்திரத்தை அண்டிப்பிழைப்பவர்களுக்கு அல்ல. இந்த நிலை மாறியதால் தான் இன்று காணாமல் போனவர்களுக்காகவோ இல்லை அரசியல் கைதிகளுக்காகவே சிங்களக் குடியேற்றங்களுக்காகவே ஒரு சிறு அடயாளபோரட்டத்தை உண்ணாவிரதத்தைக் கூட தமிழ் அரசியல் தலமைகளால் முன்னெடுக்க முடியவில்லை. மக்கள் தான் அஙகாங்கே போராடுகின்றார்கள் அரசியல் தலமைகள் இலலை. அவர்கள் ஆங்கிலத்தில் பேசி தமிழர்களுக்கு விமோசனம் வாங்கிவிடலம் என்ற நினைப்பிலேயே தலமுறை தலமுறையாக இருப்பார்கள்.அதே எகத்தாளம் தான் உங்கள் கருத்தில் ஆங்கிலப் புலமை இல்லாத கீழு;குடி கூலிகள் என்ற விழிப்பு வருகின்றது. இதே சிந்தனைதான் இன்றய விக்கி சுமந்திரனிடமும் உள்ளது. தமிழர்களின் முதல் எதிரி சிங்களம் இல்லை. போரினவாதத்துக்கு எதிரான போராட்டம் செத்தவீட்டில் இருந்துதான் ஆரம்பிக்க முடியும் என்பது விதி. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.