Jump to content

அப்படியென்ன அவசரம் , சித்தி ? - சுப.சோமசுந்தரம்  


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

                                      அப்படியென்ன அவசரம் , சித்தி ?

                                                                                      -சுப.சோமசுந்தரம்

 

          சென்ற சனிக்கிழமை காலை அப்படி மோசமாக விடிந்தது. அம்மா எழுப்பினாள். "ஒங்க மீனா சித்திக்கு (அம்மாவின் தங்கை) நெஞ்சு வலிக்குன்னு சித்தியும் சித்தப்பாவும் ஆஸ்பத்திரிக்குப் போறாங்களாம். வாரியா, போவோம் ?"

 

          எங்கள் வீட்டிற்கும் சித்தி வீட்டிற்கும் ஏறக்குறைய நடுவில்தான் அந்த மருத்துவமனை. நானும் அம்மாவும் அங்கு சென்றடைந்த போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சித்திக்கு முதலுதவி ஆரம்பித்திருந்தார்கள். இதய நோய் மருத்துவர் சொன்னார், "இது massive attack. கொடுத்துள்ள மருந்திலும் ஊசியிலும் stable ஆகிறதா என்று பார்ப்போம்". சித்தியைப் பார்க்க உள்ளே சென்றேன். பேசக்கூடிய நிலையில் இருந்தாள் என்றாலும் தேவையான விடயங்களை மட்டும் பேசுமாறு நாங்களும் மருத்துவர்களும் அறிவுறுத்தினோம். "லேசான வலிதானே ? அதற்குள் விழுந்தடித்து ஓடி வந்துட்டீங்களே ! " என்றாள். "நான்தானே உனக்குத் தலைமகன் ! மேலும் அருகில் வசிப்பவன் நான்தானே !" என்றேன். வழக்கம் போல் வாஞ்சையுடன் சிரித்தாள்.

 

          சுமார் இரண்டு மணி நேரத்தில் தம்பி (சித்தியின் மகன்) தன் மனைவி, குழந்தைகளோடு விருதுநகரிலிருந்து நெல்லை வந்துவிட்டான். மாலையில் இதைவிடப் பெரிய மருத்துவமனைக்கு மருத்துவர் ஆலோசனைப்படி மாற்றினோம். பெரிய மருத்துவமனை என்றால் பெரிதாக நினைக்க வேண்டாம். தேவைப்பட்டால் 'ஸ்டென்ட்' பொருத்தலாம். மற்றபடி நோயுற்றவர்களை வேறு பெருநகரங்களுக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் பைபாஸ் அறுவை சிகிச்சை என்றால் திருவனந்தபுரத்திலிருந்தோ மதுரையிலிருந்தோ மருத்துவர் வர வேண்டும். இதுதான் இன்றைக்கும் நெல்லை மாநகரின் நிலை. ஆஞ்சியோகிராம் பார்த்து விட்டு மருத்துவர் சொன்னது "முக்கியமான மூன்று தமனிகளில் ஒன்று கையே வைக்க முடியாத அளவிற்குப் பழுதாகி விட்டது. மற்ற இரண்டிலும் அநேகமாக 100 சதவீத அடைப்பு உள்ளது. இரண்டு நாட்களில் condition stable ஆனால் ஸ்டென்ட் வைக்கலாம். ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து சென்னையிலோ பெங்களூருவிலோ மருத்துவம் பார்க்கலாம்."

 

          முன்பே ஒன்றிரண்டு முறை எச்சரிக்கை மணி அடித்திருக்க வேண்டும். ஏதோ வாய்வுப்பிடி என்று சித்தி அலட்சியப்படுத்தியிருப்பாள். இப்போதும் அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தாள் என நினைக்கிறேன். மறுநாள் காலை பெங்களூருவிலிருந்து தங்கை (சித்தியின் மகள்) வந்த பின்பு அவளிடம் வீட்டில் புதிதாக அமைத்த குழாயில் வால்வை எப்படி மாற்றி நல்ல தண்ணிரோ உப்புத் தண்ணிரோ ஒரே குழாயில் வரவைப்பது  என விளக்கியதிலிருந்தே தெரிந்தது - இவளது இதய வால்வோடு இவள் வாழ்வுக்காக நாங்கள் போராடுகிறோம் என்பதை இவள் அறியவில்லை என்று.

 

          இதுவரை படர்க்கையிலிருந்த என் சித்தி இனி முன்னிலையில். செவ்வாய்க்கிழமை காலையில் கூட தங்கையிடம், "தாலிச் சங்கிலியைப் போட்டு விடு. மூளிக் கழுத்தோடு எப்படித்தான் இருப்பது ?" எனக் கேட்டாயே ! அவசர சிகிச்சைப் பிரிவில் அவ்வப்போது பரிசோதனைகள் செய்ய வசதியாக நகைகள் அணிந்து கொள்ள அவர்கள் அனுமதிப்பதில்லை. அப்போதும் கூட தெரிந்தது - நெருங்கிவிடும் காலனின் நிழல் கூட உன்மீது படவில்லை என்று. அன்று மதியமே மீண்டும் மாரடைப்பு. மருத்துவர்கள் போராடினார்கள். "நான்கு நாட்கள் நீங்கள் பார்க்க, பேச அவளை விட்டு வைத்தேன். போதுமடா" என்று காலன் வாயிற்படியில் வந்து நின்றான். அவ்வுலகில் கால் வைத்துவிட்ட உன்னை இவ்வுலகிற்கு இழுத்து வர பாசம் எனும் கயிற்றின் ஒரு முனையில் நாங்கள் இழுக்க மறுமுனையில் இழுத்த அந்தப் படுபாவி காலன் வென்று தொலைத்தான். நாங்கள் தோற்று விழுந்தோம்.

 

          உன்னை வீட்டிற்கு வாகனத்தில் ஏற்றி விட்டு நான் வந்த காரை நோக்கி நடந்தேன். சத்தமில்லாமல் என்னால் அழ முடியும் என்பதே அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. பீறிட்டு வரும் அழுகையை அடக்க முற்பட்டபோது முகம் அஷ்ட கோணலாகியிருக்க வேண்டும். எதிரே வந்த ஒன்றிரண்டு செவிலியர் பச்சாதாபத்துடன் என்னைப் பார்த்துச் சென்றார்களோ ? வெளியே காரை எடுக்க எனக்கு உதவிய காவலாளி என் முகத்தைப் பார்த்து ஊகித்து விட்டார். உறவினை இழந்த குமுறல் என்று. "சார், தனியாப் போறீங்க. காரை கவனமா ஓட்டிருவீங்களா?" என்றார். "பரவாயில்லை, ஓட்டிருவேன்" என்றேன். காலனைத்தான் ஓட்ட முடியவில்லை. காரையுமா ஓட்ட முடியாது? என் சித்தி மங்கையர் திலகம். அதனால் வானமும் அழுதது. கார் கண்ணாடியில் வழிந்தோடிய நீரைத் துடைக்க 'வைப்பர்' இருந்தது. கார் ஓட்டும்போது கண்களில் வழியும் நீரைத் துடைக்க 'வைப்பர்' இல்லையே, சித்தி !

 

          தனிமையில் வரும் அழுகை மற்றவர்கள் முன் வரவில்லை. ஆண் அழக்கூடாது என இச்சமூகம் வரையறுத்த திமிரோ? உறவுகளை இழந்திருக்கிறேன். ஆனால் உன்னை இழந்தது என்னை ஏன் இவ்வளவு உலுக்குகிறது? என் மனதை அலசினேன். எல்லோராலும் விரும்பப்படும் ஆளுமை சிலரிடம் உண்டு. உன்னிடம் உண்டு ; என்னிடம் இல்லை. நான் வார்த்தையால், மனதால் கூட தீங்கிழைக்காத சிலர் என்னிடம் வெறுப்பினை உமிழ்வதை உணார்ந்திருக்கிறேன். அதைச் சரிசெய்ய மெனக்கிடுவதில்லை. எனக்கான அடையாளத்தை நான் ஏன் தொலைக்க வேண்டும்? நான் நானாக இயங்க, நான் உள்ளவாறு அப்படியே என்னை ஏற்றுக்கொள்ளும் உன்னைப் போன்ற பலர் இவ்வுலகில் எனக்கான வலிமை. உன் மறைவு அந்த வலிமை சிறிது குறைந்ததற்கான குறியீடு. உன் இழப்பு என்னை உலுக்குவது அதனால்தான் என என் மனம் சொல்கிறது. என் இயல்புக்கு அவ்வளவாக ஒத்து வராத உறவுகளுக்கும் நீ நல்லவள்தான். நீ புறம் பேசுவதில்லை. மற்றவர்கள் புறம் பேசுவதையும் ஊக்குவிப்பதில்லை. இப்படி எல்லோருக்கும் நல்லவளாக இருந்த நீதானே எனக்குச் சிறந்த உறவாக அமைய முடியும் ! நீ இவ்வுலகிலேயே கடிந்து பேசுவது சித்தப்பாவிடம் மட்டும்தான் என்று உன்னைப் பற்றிய நெருடல் ஆரம்பத்தில் என்னிடம் இருந்தது. அது கணவன்-மனைவி உறவின் புரிதல் எனப் பின்னர் விளங்கியது. பொதுவாக கணவன்-மனைவிக்கிடையில் ஏற்படும் எரிச்சல் அவரவர் மனதோடு ஏற்படும் எரிச்சல் எனும் பக்குவம் வர நாளானது. அப்பக்குவம் ஏற்பட நீயும் காரணம் எனக் கொள்ளலாம். எல்லோரையும் விட உன் இழப்பினால் சுக்குநூறாய் உடைந்தவர் சித்தப்பாதான். அதுதான் இயற்கையும் கூட. மற்றவர்களிடம் இயல்பாகப் பேசி இத்துயரம் எனும் நிதர்சனத்திலிருந்து தப்பியோட மெனக்கிடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. வேறு வழி ? சக்கரம் சுழலத்தானே வேண்டும் !

 

          மஞ்சள், பூ, குங்குமத்தோடு  தீர்க்க சுமங்கலியாக உன்னை அனுப்பினோம். அன்பு, பரிவு, பாசம் எல்லாம் தந்த உனக்கு நாங்கள் செய்த கைம்மாறு உன்னைச் சுட்டுச் சாம்பலாக்கியதுதான். அந்தச் சிதையில் உன்னைச் சாம்பலாகப் பார்த்தபோது உன் முகம் மட்டுமா நினைவில் நிழலாடியது ? நான் அலுவலகத்திலிருந்து வர நேரமானால், உன் பேத்தியை (என் குழந்தையை), பள்ளிக்கூடத்திற்கு அருகில் வசித்த நீ, உன் வீட்டில் அழைத்து வந்து பாசத்துடன் கவனித்துக் கொள்வாயே ! இப்படி தனிப்பட்ட முறையிலும் நான் உன்னிடம் பட்ட கடன் கணக்கெல்லாம் நினைவில் வந்து போனது. திருமூலர் சொன்ன "நீரினில் மூழ்கி நினைப்பொழிதல்" உன் விடயத்தில் பொய்தான் சித்தி ! இத்துயரிலிருந்து வெளியே வருவது என்ற ஒன்றில்லை. உன் நினைவலைகளுடன் வாழ்ந்துதான் இத்துயரைத் தொலைக்க வேண்டும்.

 

          "அப்படியென்ன அவசரம், சித்தி ?" என்று நான் கேட்பது உன்னிடமல்ல. நீ அவசரப்படவில்லை என்பது மருத்துவமனையில் நீ அன்றாட விடயங்களைச் சாதாரணமாகப் பேசியதிலிருந்து தெரிகிறது. உண்டு என நீ நம்பிய உன் இறைவனிடமோ அல்லது நான் நம்புகிற இயற்கை விதியிடமோ கேட்பதாய் வைத்துக் கொள்ளேன். அந்தப் பாழாய்ப் போன கடவுளை நம்பித் தொலைத்திருக்கலாமோ என நினைக்கிறேன். அப்படி நம்பியிருந்தால், 'உன்னை இறைவன் அழைத்துக் கொண்டான், என்னை அவன் அழைக்கும் போது உன்னை வந்து பார்ப்பேன்' எனும் நம்பிக்கையோடு ஆறுதல் அடைந்து வாழ்ந்து தொலைக்கலாம். ஆனால் எனக்கு அப்படியில்லையே ! என்னைப் பொறுத்தமட்டில் மரணம் என்பது கால்சியம் கார்பனேட், சோடியம் பாஸ்பேட் எல்லாம் எரிந்து சாம்பலாவதுதானே ! ஆனால் கடவுளை நம்பாதவனுக்கும் மகிழ்ச்சி, துயரம், பாசம் எனும் அத்தனை மனித உணர்வுகளும் உண்டே ! உள்ளத்தின் ஆழத்தில் உள்ள துயரத்தை கால்சியம் கார்பனேட் அழித்தொழிக்காதே ! கடவுள், ஆன்மா, சொர்க்கம் என்று நீ நம்பிய விடயங்களெல்லாம் நிஜத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த சொர்க்கத்தில் நீ மகிழ்ச்சியாய் இருந்து எங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று சிறுபிள்ளையைப் போல் ஆசைப்படுகிறேன், சித்தி !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கடைசி பந்தி மட்டும் இதயத்தில் இருந்து வந்துள்ளது......!  tw_blush:

Link to comment
Share on other sites

தனி மனித அறம் என்பது மனம், மொழி, மெய் என்னும் மூன்று கருவிகளாலும், தனக்கோ பிறருக்கோ, முக்காலத்திலும் எத்தீங்கும் செய்யாது, நன்மை ஒன்றே நல்கி, இன்னுரை ஒன்றே செப்புமொழியாய் வாழ்ந்தோர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தோராவர். அத்தகைய வாழ்வாங்கு வாழ்ந்த மாதரசி "வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்பது வள்ளுவர் வாக்கு! பொய்யாமொழிப் புலவரின் வாக்கே மந்திரமாகும். ஏனென்றால், வள்ளுவன் என்னும் "நிறைமொழி மாந்தனின் ஆணையிற் கிளந்த மறைமொழி" அல்லவா அம் மந்திரக் குறள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ... சுப. சோமசுந்தரம்!

மரணம் என்பது மனிதனால்.., அவனது விஞ்ஞான அறிவால் ..இன்னமும் அவிழ்க்கப் படாத ஒரு முடிச்சு!

இயற்கையை அவதானிக்கையில்.. ஒன்று மறைதலும் .. மீண்டும் .. அது இன்னொரு வடிவில் உருவாவதும் தானே நடை பெறுகின்றது?

எல்லாவற்றையும் போலவே .. உயிரும் ஒரு வட்டத்தில் பயணிக்கின்றது என்றே நம்புவவோமே!

சித்தியும் மீண்டும் வருவாள்!

இந்தத் தடவை.... ஒரு நல்ல ஆரோக்கியமான உடலோடு...!

இதை எழுதியது... உங்கள் மகளாக இருந்தால் .... இவளை மகளாகப் பெற... இவன் என் நோற்றான் கொல்லெனும் சொல்...! பொறாமயாக இருக்கின்றது!?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உங்கள் துயரில் நாங்களும் பங்கு கொள்கிறோம். உறவுகளைக் கலங்க வைத்து  எல்லோரும் ஒரு நாள் போகும் இடம் ...கல்லறை.  .நல்லவர்கள் விரைவில் சென்றுவிடுகிறார்கள்.  
 

Link to comment
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் திரு சுப சோமசுந்தரம் அவர்களே. உங்கள் துயரில் பங்கு கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப. சோம சுந்தரம்  ஐயாவின்    துக்கத்திற்கு,    ஆழ்ந்த  அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

இதை எழுதியது... உங்கள் மகளாக இருந்தால் .... இவளை மகளாகப் பெற... இவன் என் நோற்றான் கொல்லெனும் சொல்...! பொறாமயாக இருக்கின்றது!

இதை எழுதியவன் நான்தான். மறைந்தவள் என் சித்திதான். வயது 68 என்றாலும் சுறுசுறுப்பாக இயங்கியமையால் அவளை யாரும் வயதானவர் பட்டியலில் வைக்கவில்லை. என் புலம்பலைப் பார்த்து என் மகள்தான் என்னை எழுதத் தூண்டினாள். மற்றபடி என் மகள் சோம.அழகு வேறு எங்காவது எழுதியவற்றை ' தோட்டத்து மல்லிகையில்' அவள் பெயரில் நான் பதிவிடுகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

நன்றி ... சுப. சோமசுந்தரம்!

மரணம் என்பது மனிதனால்.., அவனது விஞ்ஞான அறிவால் ..இன்னமும் அவிழ்க்கப் படாத ஒரு முடிச்சு!

இயற்கையை அவதானிக்கையில்.. ஒன்று மறைதலும் .. மீண்டும் .. அது இன்னொரு வடிவில் உருவாவதும் தானே நடை பெறுகின்றது?

எல்லாவற்றையும் போலவே .. உயிரும் ஒரு வட்டத்தில் பயணிக்கின்றது என்றே நம்புவவோமே!

சித்தியும் மீண்டும் வருவாள்!

இந்தத் தடவை.... ஒரு நல்ல ஆரோக்கியமான உடலோடு...!

இதை எழுதியது... உங்கள் மகளாக இருந்தால் .... இவளை மகளாகப் பெற... இவன் என் நோற்றான் கொல்லெனும் சொல்...! பொறாமயாக இருக்கின்றது!?

 

 

24 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

இதை எழுதியவன் நான்தான். மறைந்தவள் என் சித்திதான். வயது 68 என்றாலும் சுறுசுறுப்பாக இயங்கியமையால் அவளை யாரும் வயதானவர் பட்டியலில் வைக்கவில்லை. என் புலம்பலைப் பார்த்து என் மகள்தான் என்னை எழுதத் தூண்டினாள். மற்றபடி என் மகள் சோம.அழகு வேறு எங்காவது எழுதியவற்றை ' தோட்டத்து மல்லிகையில்' அவள் பெயரில் நான் பதிவிடுகிறேன். 

புங்கையூரான்....  நல்ல  இடத்தில்,   மாட்டிக் கொண்டார்.
உதவி   வேணுமென்றால்......   தொலைபேசி  அடிக்கவும். 

Link to comment
Share on other sites

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

சுப. சோமசுந்தரம் ஐயா அவர்கள்  அறிஞர். அன்னவர் திருமகள் படைப்பாளி;  எழுத்தாளர்.

எழுத்தாளர், அறிஞருக்கு முன்பே எழுத்துலகில் பிறந்துவிட்டதால்,  வாசகர்களுக்கு இயல்பாகத் தோன்றும் ஐயம், புவியுலகில் எழுத்தாளரின் தந்தையான அறிஞருக்குப் பெருமையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பரே, உங்களின் துயரில் நாமும் பங்கு கொள்கின்றோம்.....! 

On 10/6/2018 at 9:48 AM, suvy said:

இந்தக் கடைசி பந்தி மட்டும் இதயத்தில் இருந்து வந்துள்ளது......!  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் சுப. சோமசுந்தரம் ஐயா. அன்பானவர்களின் இழப்பை அவர்கள் நினைவுகள் மூலம்தான் ஈடுசெய்யலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தியின் ஆத்மா சாந்தியடையட்டும்...உங்கள் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு.சுப.சோமசுந்தரம் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2018 at 8:58 AM, தமிழ் சிறி said:

 

புங்கையூரான்....  நல்ல  இடத்தில்,   மாட்டிக் கொண்டார்.
உதவி   வேணுமென்றால்......   தொலைபேசி  அடிக்கவும். 

தமிழ் சிறி புங்கையூரனைக் கலாய்த்திருக்கிறார். மற்றபடி பேரா.கிருஷ்ணன் சொன்னதைப் போல புங்கையூரனின் ஐயம் நியாயமானது . தந்தை என்ற முறையில் எனக்குப் பெருமையானதும் கூட . மேலும் பேரா. கிருஷ்ணன் என் மீதுள்ள அபிமானத்தினால் சொன்ன 'அறிஞர்'  என்ற அடைமொழிக்கு என்னைத் தகுதியாக்க இன்னும் எவ்வளவோ வாசிக்க வேண்டும் ; எழுத வேண்டும். மூவர்க்கும் நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் துயரில் பங்கு கொள்கிறேன் காலங்கள்  உங்கள் துயரை தணிக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.