Jump to content

ராஸ்பெர்ரி பையில் இயங்குதளம் நிறுவி நிரல் எழுதுவது எப்படி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஸ்பெர்ரி பையில் இயங்குதளம் நிறுவி நிரல் எழுதுவது எப்படி

நினைவக அட்டை மற்றும் துணைக்கருவிகளும் தேவை

ராஸ்பெர்ரி பை பல மாதிரிகளில் கிடைக்கிறது, பை 3 B மாதிரி அதிக அம்சங்கள் கொண்டது சுமார் ரூ 3200 க்கு கிடைக்கிறது. புதிதாக பை 3 B+ என்ற மாதிரி சுமார் ரூ 3700 விலையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தவிர திட்டத்துக்குத் தேவையான துணைக்கருவிகளைத் தனியாக வாங்க வேண்டும். நீங்கள் என்ன வேலைக்குப் பயன்படுத்தப் போகிறீர்களோ அதற்குத் தேவையான துணைக்கருவிகளையும், மின்னேற்றி (charger), தேவைப்பட்டால் உறைபெட்டி (case), குறைந்தபட்சம் 8GB நினைவக அட்டை (SD Card) ஆகியவற்றையும் சேர்த்து வாங்கிவிடவும். 

மின்னணுவியல் திட்டங்களும் செய்யலாம் 

பொதுநோக்க உள்ளீடு / வெளியீடு (General Purpose Input / Output – GPIO) மின்செருகிகள் 40 உள்ளன. இவற்றின் வழியாக மின்விளக்கு போன்ற வெளிப்புற சாதனங்களைக் கட்டுப்படுத்த முடியும் மற்றும் உணர்கருவிகளையும் இணைக்க முடியும். ஒரு ஈரப்பத உணரியை மின்செருகிகளில் இணைத்து ஒரு மின் நீர்க்குழாய்வாயிலையும் வேறு மின்செருகிகளில் இணைத்து அதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உங்கள் வீட்டில் பூந்தொட்டிகள் காய்ந்தால் உடன் தண்ணீர் திறந்துவிட தானியங்கி நீர்ப்பாசன அமைப்பு உருவாக்கலாம். தேவையான மென்பொருட்களை நிறுவி நிரல் எழுதியபின் இம்மாதிரி தானியங்கியாக வேலை செய்யும்போது விசைப்பலகை, சுட்டி, கணினித்திரை எதுவும் தேவைப்படாது.

ராஸ்பெர்ரி பை நினைவக அட்டையில் இயங்குதளம் நிறுவுதல்

வாங்கியவுடன் உங்கள் பை தானாகவே எந்த வேலையையும் செய்யாது. முதல் வேலையாக அதில் இயங்குதளம் நிறுவ வேண்டும். இதற்கு நினைவக அட்டை (SD Card) செருகி அதில் எழுதக்கூடிய வேறொரு கணினி தேவை. தமிழில் ராஸ்பெர்ரி பை நினைவக அட்டையில் இயங்குதளம் நிறுவுதல் பற்றிய அறிமுக காணொலி ஒன்று இங்கே.

  1. ராஸ்பெர்ரி பையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்துக்குச் செல்லுங்கள்.
  2. பதிவிறக்கம் பக்கத்துக்குச் சென்று ராஸ்பியன் (Raspbian) இயங்குதளத்தைத் (Operating System – OS) தேர்ந்தெடுக்கவும்.
  3. மேசைத்தளம் சேர்த்து (with desktop) உள்ள இயங்குதளத்துக்கான குறுக்கக் கோப்பைப் (zip file) பதிவிறக்கவும். இதன் அளவு 1.8 GB. விரித்த (unzip) பிறகு, இது 4.8 GB ஆகும். 
  4. இந்த குறுக்கப்பட்ட கோப்பை விரிப்பதற்கு லினக்ஸ் கணினி என்றால் அன்ஜிப் (Unzip) பயன்படுத்தலாம். விண்டோஸ் கணினி என்றால் 7-ஜிப் (7-Zip) மென்பொருள் தேவை. இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தி கோப்பை விரிக்கவும் (unzip).
  5. பதிவிறக்கம் செய்யப்பட்ட ராஸ்பியன் இயங்குதளத்தை நினைவகத்தில் எழுத ஒரு வடிவ எழுதி தேவை. லினக்ஸ் என்றால் எட்சர் (Etcher) பயன்படுத்தலாம். விண்டோஸ் என்றால் Win32 Disk Imager பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
  6. எழுதும்போது எவ்வளவு விழுக்காடு வேலை முடிந்திருக்கிறது என்று காட்டும். இது முழுவதும் முடிந்து செய்திப் பெட்டி வந்தபின் நினைவகத்தை வெளியில் எடுக்கலாம்.
  7. ராஸ்பெர்ரி பையில் விசைப்பலகை, சுட்டி, கணினித் திரை ஆகியவற்றை இணைத்துக் கொள்ளவும். இப்பொழுது மின்னேற்றியை (charger) இணைத்தால் ஒரு சிவப்பு காட்டி விளக்கு எரியும். துவங்குவதற்கு இயங்கு தளம் இல்லை என்று இது காட்டுகிறது.
  8. அடுத்து மின்னேற்றியைக் கழட்டி விட்டு நினைவகத்தைச் செருகவும். திரும்பவும் மின்னேற்றியை இணைத்தால் ஒரு பச்சை காட்டி விளக்கு விட்டுவிட்டு எரியத் தொடங்கும். இது இயங்கு தளம் ஏற்றலைக் குறிக்கிறது. பச்சை காட்டி விளக்கு எரியத் தொடங்காவிட்டால் நினைவகத்தில் இயங்குதளம் சரியாக நிறுவவில்லை என்று தெரியவரும். அதைச் சரிபார்க்கவும்.
  9. இயங்கு தளம் முழுவதும் ஏற்றியபின் கணினித் திரையில் ஒரு முனையச் சாளரம் (terminal window) தோன்றி அதன் தூண்டி (prompt) நீங்கள் பயனர் பெயர் உள்ளிடக் காத்திருக்கும். பயனர் பெயரை “pi” என்று உள்ளிடவும்.
  10. அடுத்து கடவுச்சொல்லை “raspberry” என்று உள்ளிடவும். (இவற்றைப் பின்னர் மாற்றிக் கொள்ளலாம்).
  11. அடுத்து “sudo startx” உள்ளிட்டால் வரைபட பயனர் இடைமுக மேசைத்தளம் (GUI Desktop) தோன்றும். இனி நீங்கள் வேறு எந்தக் கணினியையும் போலப் பயன்படுத்தலாம், மைன் கிராஃப்ட் (Minecraft) நிகழ்பட ஆட்டம் விளையாடலாம்.
ராஸ்ப்பெரி பை வரைபட பயனர் இடைமுக மேசைத்தளம்

ராஸ்ப்பெரி பை வரைபட பயனர் இடைமுக மேசைத்தளம்

ஸ்க்ராட்ச் மற்றும் பைதான் மொழிகளில் Hello world

எந்தவொரு கணினி மொழியையும் பயிலுவதற்கு முயலும் புதியவர்களின் அல்லது துவக்க நிரலாளர்களின் முதன்முதல் நிரல்தொடரானது Hello world என்பதாகவே இருக்கும். இந்த Hello world எனும் நம்முடைய முதன் முதல் நிரல்தொடரை இரண்டு கணினி மொழிகளில் எவ்வாறு எழுதுவது என இப்போது காண்போம்.

ஸ்க்ராட்ச் (Scratch) என்பது ஒரு வரைகலை தொகுப்பின் அடிப்படையிலான கணினி மொழியாகும். இது கணினி மொழியின் அடிப்படை இலக்கணங்களை ஆழ்ந்து கற்காத தட்டச்சு செய்யத்தெரியாத சிறுவர்கள் கூட மிக எளியதாக நிரல்தொடரை எழுதுவதற்கு உதவுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த கணினி மொழியாகும். முதலில் இந்த ராஸ்பெர்ரி பை திரையிலுள்ள முதன்மை பட்டியலில் Scratch 2 என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் துணைப்பட்டியலில் Looks என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் தோன்றிடும் திரையின் say Hello! என்ற தொகுப்பினை பிடித்து இழுத்துவந்து வலதுபுறமுள்ள காலிபணியகத்தில் விட்டிடுக. அதன் பின்னர் உரையை Hello world என்றவாறு மாற்றியமைத்திடுக. பின்னர் இத்தொகுப்பினைத் தெரிவுசெய்து சொடுக்கி அதனுடைய நிரல்தொடரை செயல்படச் செய்திடுக. உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்.

ஸ்க்ராட்ச் மொழியில் முதல் நிரல்தொடர்

ஸ்க்ராட்ச் மொழியில் முதல் நிரல்தொடர்

பைதான் (Python) என்பது மிகவும் திறன்மிகுந்த தொழில்முறையாளர்கள் மட்டுமல்லாது புதியவர்களும் விளையாட்டாக கற்றுக்கொள்ள முடிந்த ஒரு சிறந்த கணினி மொழியாகும். எளிய ஆங்கிலச் சொற்களைக் கொண்டு பாமரனும் கணினி மொழியை விரைவாகக் கற்கவேண்டும் என்பதே இந்தக் கணினிமொழி உருவாக்கியதன் அடிப்படை நோக்கமாகும். முதலில் இந்த ராஸ்பெர்ரி பை திரையிலுள்ள முதன்மை பட்டியலில் Thonny Python IDE என்பதை தெரிவுசெய்து சொடுக்குக. பின்னர் விரியும் திரையில் print(“Hello world”) என்ற கட்டளைவரியை உள்ளீடு செய்திடுக. அதன் பின்னர் hello3.py எனும் கோப்பாக இந்த நிரல்தொடரை சேமித்திடுக. பின்னர் Run எனும் பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக. உடன் நம்முடைய முதன்முதல் நிரல்தொடரின் விளைவு பின்வருமாறு திரையில் தோன்றிடும்.

பைதான் மொழியில் முதல் நிரல்தொடர்

பைதான் மொழியில் முதல் நிரல்தொடர்

– முனைவர் ச. குப்பன் / இரா. அசோகன்

 

http://www.kaniyam.com/how-to-install-an-operating-system-in-the-raspberry-pi-and-write-code/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.