Jump to content

364 என்ற வலுவான ஓட்டத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது


Recommended Posts

364 என்ற வலுவான ஓட்டத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது

 

 
 
Share
 

மேற்கிந்தயத் தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் தொடரின் முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது இந்திய அணி 4 விக்கெட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

kholi1.jpg

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட், ஐந்து ஒருநாள், மூன்று இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

west1.jpg

இதில் முதலாவதாக ராஜ்கோட்டில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி பிரித்வி ஷா மற்றும் கே.எல்.ராகுல் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர். பிரித்வி ஷாவை பொறுத்தவரையில் இது அவரின் முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் இணைந்து துடுப்பெடுத்தாட ஆரம்பிக்கும்போதே ஷேனோன் கேப்ரியல் வீசிய முதல் ஓவரின் இறுதிப் பந்தில் ராகுல் எதுவித ஓட்டங்களுமின்றி எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

rahul.jpg

இவரின் ஆட்டமிழப்பையடுத்து பிரத்வி ஷாவுடன், புஜாரா கைகோர்த்தாட மேற்கிந்தியத் தீவின் பந்து வீச்சாளர்களுக்கு இவர்களின் ஆட்டத்தை கட்டுப் படுத்த முடியவில்லை.

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பிரத்வீ ஷா 17.4 ஆவது ஓவரில் 56 பந்துகளை எதிர்கொண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்தும் இவர்கள் இருவரும் துடுப்பெடுத்தாடி வர இந்திய அணி 19.5 ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை கடந்தது.

pujara1.jpg

பிரித்வி ஷா 61 ஓட்டத்துடனும், புஜாரா 40 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இதையடுத்து புஜாரா 22 ஆவது ஓவரின் நிறைவில் 67 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் கடந்தார். இதனால் மதியநேர உணவு இடைவெளிக்கு முன்னர் இந்திய அணி  25 ஓவர்களை எதிர்கொண்டு ஒரு விக்கெட்டினை இழந்து 133 ஓட்டத்தை குவித்தது.

மதியநேர உணவு இடைவெளியின் பின்னர் 133 ஓட்டத்துடன் ஆட்டத்தை மீண்டும் ஆரம்பித்த பிரித்திவ் ஷா 98 பந்துகளை எதிர்கொண்டு 15 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அதிரடியாக தனது கன்னி சதத்தை பூர்த்தி செய்தார்.

prithiv1.jpg

எனனும் அணியின் ஓட்ட எண்ணிக்கை 209 ஆக இருந்தபோது பிரித்திவ் ஷாவுக்கு தோள் கொடுத்தாடி வந்த புஜாரா 86 ஓட்டத்துடன் ஷேர்மன் லூயிஸுன் பந்து வீச்சில் டவுரிச்சிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

pujara.jpg

இவரின் ஆட்டமிழப்பையடுத்து 50.2 ஆவது ஓவரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிரடியாக ஆட்டம் காட்டி வந்த பிரித்திவ் ஷா 134 ஓட்டத்துடன் பிஷோவுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

sha.jpg

இதனையடுத்து அணித் தலைவர் விராட் கோலி மற்றும் ரஹானே ஜோடி சேர்ந்தாடி வர இந்திய அணி 55.4 ஓவர்களில் மூன்று விக்கெட்டினை இழந்து 250 ஓட்டங்களை குவித்தது. விராட் கோலி 18 ஓட்டத்துடனும், ரஹானே 4 ஓட்டத்துடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

நிதானமாக ஆடி வந்த விராட் கோலி, ரஹானே ஜோடியினால் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை மேலும் நல்லதொரு வலுவான நிலைக்கு சென்றது. ஒரு கட்டத்தில் இந்திய அணி 72.4 ஓவர்களுக்கு 3 விக்கெட்டினை மாத்திரம் இழந்து 300 ஓட்டங்களை கடக்க இவர்களின் இணைப்பாட்டம் 136 பந்துகளுக்கு 70 ஆக இருந்தது.

அதன் பின்னர் அணித் தலைவர் விராட் கோலி 100 பந்துகளை எதிர்கொண்டு 2 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

koli1.jpg

எனினும் 337 ஓட்டத்தை இந்திய அணி பெற்றுக் கொண்டபோது ரஹானே 41 ஓட்டத்துடன் ரோஸ்டன் சேஸுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இறுதியாக இந்திய அணி ஆட்டநேர முடிவின்போது 89 ஓவர்களுக்கு 4 விக்கெட்டினை இழந்து 364 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது. ஆடுகளத்தில் விராட் கோலி 72 ஒட்டத்துடனும், ரிஷாப் பந்த் 17 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்திய அணி சார்பில் ஷோனோன் கேப்ரியல், ஷேர்மன் லூயிஸ், தேவேந்திர பிஷோ மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.

http://www.virakesari.lk/article/41750

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூரில் மட்டும் செத்த பாம்பை இந்த அடி அடிக்கினம் .. எதை வேண்டுமானலும் பொறுக்கலாம் .  ஜடெஜா வெல்லாம் சதமா ? ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.