Jump to content

தமிழ்நாட்டில் 7-ம் தேதி கனமழை: 'சிவப்பு' எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அக்டோபர் 7ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கன மழையோ, மிக கனமழையோ பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழக பேரிடர் மேலாண்மை மையம் இதனை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. சென்னையில் புதன்கிழமை இரவிலிருந்து விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. தொடர்ச்சியாக மழை பெய்துவரும் திருவாரூர், சேலம், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அனுப்பிய எச்சரிக்கைக் குறிப்பில் அக்டோபர் 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகத்தில் கன மழை பெய்யுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் தமிழகத்தின் பல இடங்களில் 25 செ.மீ.க்கும் அதிகமான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை வந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இயக்குனர் சத்ய கோபால், இது பொதுமக்களுக்கான எச்சரிக்கையில்லையென்றும் அரசு தயார் நிலையில் இருப்பதற்காக விடப்பட்ட எச்சரிக்கையென்றும் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் ஏற்படக்கூடிய எந்த ஒரு பேரிடரையும் எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

எளிதில் பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் எத்தனை?

"தமிழ்நாட்டில் உள்ள எளிதில் பாதிப்படையக்கூடிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. புயல், நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படக்கூடிய இடங்கள் என 4,399 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்கள் அவை எதிர்கொள்ளக்கூடிய பாதிப்பின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், எந்த இடத்தில் எம்மாதிரி பாதிப்பு ஏற்படும் என்பதை முன்கூட்டியே யூகிக்க முடியும்" என சத்யகோபால் பிபிசியிடம் கூறினார்.

மீட்புப் பணிக்கு தன்னார்வலர்கள்

பேரிடர் மீட்புப் படையின் வீரர்கள் தவிர, எல்லா ஊர்களிலும் நீச்சல் அறிந்தவர்கள், மலையேறத் தெரிந்தவர்கள் என சுமார் 30,500 தன்னார்வலர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் பேரிடர் தருணங்களில் இவர்கள் உடனடியாக களத்தில் இறங்குவார்கள் என்றும் சத்யகோபால் கூறினார்.

பேரிடர் ஏற்படும் பட்சத்தில் உயிர்களைக் காப்பாற்றிய பிறகு, போக்குவரத்தை சீர்செய்ய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மேலடுக்குச் சுழற்சி தொடர்ந்து நிலவுவதாகவும் இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலிலும் திருச்சி மாவட்டம் குள்ளம்பாடியிலும் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகும்

இதுதவிர, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் அக்டோபர் 5ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அடுத்த 36 மணி நேரத்தில் அந்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

"இது புயலாக மாறி ஓமன் நாட்டு கடற்கரையை நோக்கி நகரக்கூடும். எனவே மீனவர்கள் குமரிக் கடல் பகுதி, தெற்கு கேரளப் பகுதி, லட்சத் தீவுகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அக்டோபர் ஐந்து முதல் எட்டாம் தேதிவரை செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்." என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-45746442

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனமழை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

October 6, 2018

1 Min Read

rain.jpg?resize=800%2C522

கனமழை காரணமாக தமிழகத்தி;ன் தென் மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடித்து வரும் குமரி மாவட்ட மீனவர்கள் கரைதிரும்பி வருகின்ற போதிலும் , கேரளா, லட்சத்தீவில் தங்கி மீன்பிடிக்கும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இதுவரை கரை திரும்பவில்லை எனவும் இவர்களுக்கு இந்திய கடற்படை மூலம் புயல் எச்சரிக்கை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தமிழகம் மற்றும் புதுவையில் நாளை ஞாயிற்றுக்கிழமை சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து நான்கைந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடல் காற்று பலமாக வீசும் எனவும இதனால் மீனவர்கள் குமரி, அரபிக்கடல் பகுதியில் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

 

http://globaltamilnews.net/2018/98477/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.