Jump to content

2018 நொபெல் பரிசுகள்: காலம் கடந்த வாழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2018 நொபெல் பரிசுகள்: காலம் கடந்த வாழ்வு

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 ஒக்டோபர் 04 வியாழக்கிழமை,

பரிசுகளுக்கு ஒரு மரியாதை உண்டு. ஆனால், அது என்னென்றைக்குமானதல்ல. அது சாகித்திய விருது முதல் நொபெல் பரிசு வரை அனைத்துக்கும் பொருந்தும்.   

நம்பகத்தன்மையைத் தக்கவைக்கும் விருதுகள், காலங்கடந்தும் நிலைக்கின்றன. நம்பகத்தன்மையை இழந்த விருதுகள், காலங்கடந்தும் வாழும் போதும், அதன் நிலை அவலமானது. நாடகத் தன்மையுடனும் சடங்காசாரங்களுடனும் அது தன்னைத் தக்க வைக்க முனைகிறது. காலங்கடந்த வாழ்வு, மனிதர்களுக்கு மட்டுமல்ல, பரிசுகளுக்கும் துன்பமானது.   

இக்கட்டுரையை, நீங்கள் வாசிக்கும்போது, சமாதானத்துக்கான பரிசும் இலக்கியத்துக்கான பரிசும் தவிர்த்து, ஏனைய துறைசார் நொபெல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கும்.   

நொபல் பரிசுகள், ஆண்டு தோறும் வழங்கப்பட்டாலும், இப்போது அப்பரிசுகள் குறித்த எதிர்பார்ப்புகள், கடந்த சில ஆண்டுகளாகக் குறைவடைந்து வந்துள்ளன. 

பரிசுகள் நியாயத்தினதும் திறமையினதும் அடிப்படையில் அன்றி, விருப்பத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன என்ற உண்மை, பெரும்பாலான மக்களைச் சென்று சேர்ந்திருக்கின்றது. இதை ஊடகங்களும் ஓரளவு உணர்ந்துள்ளன.   

சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்படும் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில், கடந்த ஆண்டுகள் போல், யாருக்கு இம்முறை விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் இல்லை. நோர்வேஜிய ஊடகங்களும் அடக்கி வாசிக்கின்றன.   

சமாதானத்துக்கான நொபெல் பரிசுக்குழு, நோர்வேஜிய நாடாளுமன்றின் பிரதிநிதிகளின், கட்சிவாரியான பிரதிநிதித்துவத்தைக் கொண்டு அமைய வேண்டும். எனவே, அதன்படி வலதுசாரிய நிலைப்பாடே, பரிசுக்குழுவின் நிலைப்பாடுமாகும்.   

கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன், இன்னொரு வகைப்பட்ட அரசியல் நிலைப்பாடுடைய பரிசுக்குழு, எவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமாவுக்கு நொபெல் பரிசைக் கொடுத்து விருதையே கேலிக்குரியதாக்கியதோ, அதேபோல, இம்முறையும் நடந்து விடுமோ என்ற அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது.   

வட, தென் கொரிய இணைப்புக்குப் பாடுபட்டவர் என்று சொல்லி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு, இம்முறை விருதைக் கொடுத்து விடுவார்களோ என்ற கவலை, பலருக்கு இருக்கிறது.   

1901ஆம் ஆண்டு முதல், நொபெல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், முன்னெப்போதுமில்லாத அளவுக்கு, அப்பரிசின் மீதான விமர்சனங்களும் நம்பிக்கையீனங்களும் அதிகரித்திருக்கின்றன.   

இலக்கியப் பரிசு: அவப்பெயரா, அவமானமா?  

இம்முறை, இலக்கியத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட மாட்டாது என, இவ்விருதைத் தெரிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட, ‘சுவீடிஸ் அக்கடமி’யின் இலக்கிய அமைப்புத் தெரிவித்துள்ளது.   

பாலியல் குற்றச்சாட்டுகள், அவ்வமைப்பின் உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், நம்பிக்கையிழந்த அமைப்பாக, இவ்வமைப்பு மாறியுள்ளது. இது, அவ்வமைப்பையே நெருக்கடியில் தள்ளியுள்ளது.   

இதனால், இவ்வாண்டு விருதை வழங்கவியலாது எனவும் அடுத்த ஆண்டு, இருவருக்கு அவ்விருது வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

‘ஸ்வீடிஷ் அகடமி’யில், இலக்கியத் துறையைச் சேர்ந்த, 18 நிரந்தர உறுப்பினர்களே, நொபல் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுப்பர். இந்தக் குழுவின் உறுப்பினரான, கதரினா புரோஸ்டென்சனின் கணவரான, 72 வயதாகும், ஜீன் கிளாட் அர்னால்ட், பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் எழுந்தது.   

அவருக்கெதிராகப் பல பெண்கள், ஆர்னல்டால் பாலியல் துன்புறுத்தலுக்கு, தாங்கள் உள்ளானதாக, வெளிப்படையாகப் புகார் கூறினர். இது சுவீடனில் பாரிய பிரச்சினையாகியது.   

இதேவேளை, மொத்தமுள்ள 18 நிரந்தர உறுப்பினர்களில், ஆறு பேருக்கு வயதாகி விட்டதால், அவர்கள் பணிகளில் பங்கேற்பதில்லை. இதேவேளை, நொபெல் பரிசை வழங்கும் அகடமிக்கு எதிராக, பல்வேறு புகார்களைக் கூறி, இரண்டு பேர் சமீபத்தில், தம் பதவிகளில் இருந்து விலகியுள்ளார்கள். இதனால், இப்போது பணியாற்றக் கூடிய நிலையில், 10 பேர் மட்டுமே உள்ளனர்.   

அமைப்பின் எந்தவொரு முடிவும் 2/3 பெரும்பான்மையால் எடுக்கப்படவேண்டியுள்ளதால், குறைந்தது 12 பேர் இருத்தல் அவசியமாகிறது. எனவே, இதுவும் விருது வழங்குவதைச் சாத்தியமற்றதாக்கி இருக்கிறது.   

இவ்விருது, 1901ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு முன், 1949இல், வழங்க வேண்டிய விருது, 1950இல் அறிவிக்கப்பட்டது. அதற்கு, 68 ஆண்டுகளுக்குப் பின், தற்போது, விருது வழங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது.   

ஸ்டீபன் ஹவாக்கிங்: விஞ்ஞானத்தின் அரசியல்  

இவ்வாண்டு காலமான இயற்பியலாளரான ஸ்டீபன் ஹவாக்கிங்ன்ஸுக்கு பௌதீகவியலுக்கான நொபெல் பரிசு வழங்கப்படவில்லை. அல்பர்ட் ஐயன்ஸ்டீனுக்கு அடுத்தபடியாக, உலகின் தலைசிறந்த விஞ்ஞான சிந்தனையாளர் என அறியப்பட்ட ஸ்டீபன் ஹவாக்கிங், தன் வாழ்நாளில் நொபெல் பரிசைப் பெறவில்லை. 

இது அவருக்குக் கிடைக்காத அங்கிகாரம் என்பதை விட, அவ்விருதை ஸ்டீபன் ஹவாக்கிங்ஸுக்கு வழங்கி, விருது பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை என்பதே உண்மை. கடந்த ஒரு தசாப்த காலமாக, பௌதீகவியல் விருதுகள் மிகுந்த சிக்கல்களை உடையனவாக உள்ளன.   

விஞ்ஞானத் துறையில் விருது கிடைக்காதவர்களின் பட்டியல் பெரிது. அதில் மிக முக்கியமானவர் ரஷ்ய இரசாயனவியலாளரான டெமித்ரி மென்டலீவ். 

இன்று எல்லோராலும் பயன்படுத்தப்படும் ஆவர்த்தன அட்டவணையைக் கண்டுபிடித்தவர் டெமித்ரி மென்டலீவ்தான். இவ்வட்டவணையின் சிறப்பு யாதென்றால், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட மூலகங்களுக்கு மட்டுமன்றி, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படவுள்ள மூலகங்களுக்குமான இடத்தை மென்டலீவ், அவரது அட்டவணையில் குறிப்பிட்டிருந்தார்.   

இவருக்கு, 1906ஆம் ஆண்டு, இரசாயனவியலுக்கான நொபெல் பரிசை வழங்குவதற்கு, ‘ஸ்வீடிஸ் நொபெல் குழு’ தீர்மானித்தது. இருந்தபோதும், 1903ஆம் ஆண்டு, இப்பரிசை வென்ற சுவீடன் நாட்டு இரசாயனவியலாளரான ஸ்வான்தே ஆர்கெனியஸ், பரிசுக்குழுவில் உள்ளவர்களுடான நட்பைப் பயன்படுத்தி, மென்டலீவ்வுக்கு இவ்விருது கிடைக்காமல் பார்த்துக் கொண்டார். சுவீடிஸ் நாட்டுக்காரர் என்பதே, ஆர்கெனியஸ் விருது வெல்வதற்குப் பிரதான காரணமானது.   

இன்று ஆர்கெனியஸை யாருக்கும் தெரியாது. ஆனால், எல்லா இரசாயன ஆய்வுகூடங்களிலும் ஆவர்த்தன அட்டவணை தொங்குகிறது. எல்லா இரசாயன மாணவர்களும் மென்டலீவ்வைக் கற்கிறார்கள்.   

இதில் முரண்நகை என்னவென்றால், 1906ஆம் ஆண்டுக்கான இரசாயன நொபெல் பரிசு, புளோரினைக் கண்டுபிடித்தமைக்காக, பிரெஞ்சு இரசாயனவியலாளருக்கான ஹென்றி மொயஸனுக்கு வழங்கப்பட்டது. ஆனால், கண்டுபிடிக்காத மூலகமாகவிருந்த புளோரினுக்கு, 1869ஆம் ஆண்டே, தனது ஆவர்த்தன அட்டவணையில் இடம் வைத்தார் மென்டலீவ்.   

இதேபோல, மருத்துவத்துறையில் காந்த அதிர்வுப் படவுருக்கான நுட்பத்தையும் அதற்கான அறிவியலையும் கண்டுபிடித்த ரேய்மண்ட் டமாடியனுக்கு மருத்துவத்துக்கான விருது கிடைக்கவில்லை. ஆனால், இக்கோட்பாட்டைப் பயன்படுத்தி விரிவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு 2003ஆம் ஆண்டு, மருத்துவத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டது.   

இதேபோல விஞ்ஞானத் துறைகளில் நொபெல் பரிசு கிடைக்காத மிக முக்கியமான, அதேவேளை உலகெங்கும் நன்கறியப்பட்டவர்களில் முதன்மையானவர் தோமஸ் அல்வா எடிசன். அடுத்தவர், தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகம் பெல். மூன்றாமவர், நாம் இன்று பயன்படுத்தும், ஆடலோட்ட மின்னோட்டத்தைக் கண்டுபிடித்த நிக்கோலா டெஸ்லா.   

2018 சமாதானத்துக்கான நொபெல் பரிசு  

இவ்வாண்டுக்கான சமாதானத்துக்கான நொபெல் பரிசு, யாருக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு, ஒவ்வோர் ஆண்டைப்போலவே இவ்வாண்டும் உண்டு. இவ்வாண்டும், ஏதோ ஓர் அமைப்புக்குக் கொடுப்பதன் மூலம், சர்ச்சைகளிலிருந்தும் விமர்சனங்களில் இருந்தும் தப்பிக்க நோர்வேஜிய நோபெல் குழு முனையுமா, இல்லையா என்பதே எம்முன்னுள்ள வினா.   

இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், அல்பிரட் நொபெலின் உயிலில், ‘விருதுகள் தனிமனிதர்களுக்கே வழங்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது, ‘ஒன்று தொடக்கம் மூன்று வரையான மனிதர்களுக்கு வழங்கப்படலாம்’ என்று சொல்லப்பட்டுள்ளதே தவிர, அங்கு அமைப்புகளுக்கு வழங்க இடமில்லை.  

 நோர்வேஜிய நொபெல் குழுவே அமைப்புகளுக்கும் வழங்கவியலும் என்ற வியாக்கியானத்தை முன்வைத்து, பல அமைப்புகளுக்கு, சமாதானத்துக்கான நொபெல் பரிசை வழங்கி வருகிறது.   

இரண்டு நிகழ்வுகள், சமாதானத்துக்கான நொபெல் பரிசை வழங்கும் குழுவை, ஆட்டங்காண வைத்திருக்கின்றன. 

முதலாவது, மியான்மாரில் றோகிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான அரசாங்கத்தின் திட்டமிட்ட வன்முறைகள் நடந்தேறுகின்ற நிலையில், அவ்வாட்சியின் தலைமைப்பீடத்தில் சமாதானத்துக்கான நொபெல் பரிசை வென்ற ஆங் சான் சூ கி அமர்ந்திருக்கிறார்.   

அவர், அங்கு நடக்கின்ற கொலைகளை ஒருபுறம் மூடிமறைக்கிறார். மறுபுறம், அக்கொலைகளை நியாயப்படுத்துகிறார். ஆங் சான் சூ கிக்கு வழங்கப்பட்ட நொபல் பரிசைத் திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றிருப்பது, நொபெல் பரிசுக் குழுவுக்குச் சங்கடத்தை உருவாக்கியிருக்கிறது.   

இரண்டாவது, 2010ஆம் ஆண்டு சீனாவின் லியு ஜியாபோவுக்குப் பரிசை வழங்கியதற்கான கொடுந்தண்டனையைப் பல ஆண்டுகளாக, நோர்வே அனுபவித்தது.   

சீனாவின் மனித உரிமைப் போராளி என்றும் சீன அரசின் மனித உரிமைமீறல்களை வெளிக்கொணர்ந்தவர் என்றும் காரணம் காட்டப்பட்டு, லியு ஜியாபோவுக்குப் பரிசு வழங்கப்பட்டது. குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த லியு ஜியாபோவுக்கு, இவ்விருதை வழங்குவதன் மூலம் அவரை விடுதலை செய்யவியலும் என்ற நம்பிக்கையில், இவ்விருதை பரிசுத் தெரிவுக்குழு அறிவித்தது.   

இச்செயலை, வன்மையாகக் கண்டித்த சீனா, பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு வலுச்சேர்க்கும் செயலை, பரிசுக்குழு செய்துள்ளது என்றுகூறி, நோர்வேயுடனான இராஜதந்திர உறவுகளைத் துண்டித்தது. இது உலக அரசியல் அரங்கிலும் பொருளாதார ரீதியிலும் பாதிப்புகளையும் நோர்வேக்கு ஏற்படுத்தியது.  

 மிக நீண்டகால இராஜதந்திர நகர்வுகளின் பின்னர், 2017ஆம் ஆண்டே,மீண்டும் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், முழுமையாக ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதோடு, நோர்வே தூதுவராலயம், சீனத் தலைநகரில் திறக்கப்பட்டது.   

நோர்வேயின் தேசிய அரசியலுடனும் அதன் வெளியுறவுக் கொள்கையுடனும் நொபெல் பரிசுக்கு நெருங்கிய தொடர்புண்டு. பெண்கல்வி முக்கியப்படுத்தப்பட்ட 2014ஆம் ஆண்டு, மலாலாவுக்கு விருது கிடைத்தது. 

நோர்வேயில் பெண்களின் பங்களிப்பு முக்கிய பேசுபொருளான வேளை (2011), வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு விருது கிடைத்தது.   

நோர்வே முன்னெடுத்த மத்தியஸ்த முயற்சிகள், சமாதான உடன்படிக்கையைச் சாத்தியமாக்க, கொலம்பிய ஜனாதிபதிக்கு விருது வழங்கப்பட்டது. 

அதேவேளை, மறுபுறத்தே சமாதானத்துக்கு உடன்பட்ட பார்க் அமைப்பின் தலைவருக்கு, அவ்விருது அளிக்கப்படவில்லை. இம்முறை விருதையும் அதன்வழியே நோக்க வேண்டும்.   

இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னது போல, இம்முறை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கிவிடுவார்களோ என்றவொரு கவலை, பலரிடத்தில் உண்டு. இருந்தபோதும், மூன்று விடயப் பரப்புகள் நோர்வேஜிய அரசியற்பரப்பின் வெளிவிவகாரக் கொள்கை வகுப்பில், முக்கிய இடம் வகிக்கின்றன. அவைசார்ந்தவர்களுக்கு, விருதுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.   

முதலாவது, நோர்வேயிலும் ஏனைய மேற்குலக நாடுகளிலும் ‘MeToo’ இயக்கம் உருவாக்கிய தாக்கம் பெரியது. 2017ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில், பாலியல் ரீதியான தாக்குதலுக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளான பெண்கள், தாமாகவே முன்வந்து, தாம் துன்புறுத்தப்பட்டதை, சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, அதை ஓர் இயக்கமாக மாற்றினர்.   

இதில் புகழ்பெற்ற நடிகைகள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் எனப் பல பெண்கள், தாங்கள் பாதிக்கப்பட்ட கதையைச் சொன்னார்கள். இது, பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள், துன்புறுத்தல்கள் எவ்வளவு பாரதூரமானவையென்றும் சர்வவியாபகமானவை என்றும் தெரிய வந்தது.   

‘MeToo’ நோர்வேஜிய அரசியலில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரிது. இவ்வியக்கத்தின் வழி வைக்கப்பட்ட, குற்றச்சாட்டுகளின் விளைவால், முன்னாள் அமைச்சரவை அமைச்சரும் தொழிற்கட்சியின் உபதலைவருமாகிய Trond Giske தனது பதவிகளைத் துறக்க நேர்ந்தது. 

பழைமைவாதக் கட்சியின் இளையோர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான Kristian Tonning Riise தனது பதவிகளை இழக்க நேர்ந்தது. 

அதேபோல, அதிவலதுசாரி முற்போக்குக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Ulf Leirstein விடுப்பில் போக நிர்ப்பந்திக்கப்பட்டார். 

பொதுவெளியில், குறிப்பாக வேலைத்தளத்தில் பெண்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை வெளிக்கொணர்ந்த பெருமை, ‘MeToo’க்கு உண்டு. ஆனால், இதற்கு விருது வழங்குவதில் மூன்று சிக்கல்கள் உண்டு.   

ஒன்று: நோர்வேஜிய அரசியலையே ஒரு கலக்குக் கலக்கிய ஒன்றுக்கு, விருது வழங்கத்தக்க அளவுக்கான பக்குவம் நொபெல் குழுவிடம் கிடையாது. எனவே, அதைத் தவிர்ப்பதற்கான சாட்டுகளைத் தேட அது நிர்ப்பந்திக்கப்படும்.   

இரண்டு: ‘MeToo’ ஒரு மக்களின் சமூக வலைத்தள இயக்கமான உருவாகிய ஒன்று. எனவே, அதற்கான விருதை யாருக்கு வழங்குவது என்பது, அது, தேடிய ஒரு சிக்கலான சாட்டாகும்.    

மூன்று: இலக்கியத்துக்கான நொபல் பரிசையே பிற்போட்டிருக்கின்ற பாலியல் குற்றச்சாட்டுகள், ‘MeToo’வின் விளைவால் வெளிக்கொணரப்பட்டவையே. எனவே, உள்ளமைப்பையே நெருக்கடிக்குள் தள்ளிய ஒன்றுக்கு, விருதை அளிப்பதானது, சுவீடிஸ் நொபல் குழுக்கு, நோர்வேஜியக் குழு கொடுத்த அடியாகக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்கவே நொர்வேஜியக் குழு விரும்பும் என நம்பலாம்.  

இம்முறை, பரிசை வெல்லக்கூடிய இரண்டாவது விடயப்பரப்பு, போர் ஏற்படுத்திய வன்முறையும் பெண்களுக்கெதிரான வன்முறையும் என்பதுமாகும். 

இவ்விடயம், இன்று நோர்வேயில் மிகுந்த கவனம் பெறுகிறது. எனவே, நீண்டகாலமாக விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட கொங்கோ நாட்டு வைத்தியர் டெனிஸ் முக்வேகேயுக்கு (Denis Mukwege) விருது கிடைக்கலாம்.   

அதேவேளை, அவருக்குத் தனியே வழங்காமல் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் சிறைப்பிடிக்கப்பட்டு, மீண்ட நாடியா முராட்டுக்கும் (Nadia Murad) சேர்த்து வழங்கப்படலாம். 

நாடியா, வடக்கு ஈராக்கின் குர்திஷ் இனக்குழுமத்தின் யட்சி சிறுபான்மையைச் சேர்ந்தவர். தனது 19ஆவது வயதில், மாணவியாக இருந்த போது, ஐ.எஸ்.ஐ.எஸ்ஸால் சிறைப்பிடிக்கப்பட்டு அடிமையாக ஓராண்டுகாலம் சிறைவைக்கப்பட்டிருந்தார். பின்னர், அங்கிருந்து தப்பிய அவர், போரில் பெண்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கான சாட்சியமாக இருக்கிறார்.   

பரிசு கிடைக்கக்கூடிய மூன்றாவது விடயப்பரப்பு, அகதிகள் இடப்பெயர்வு ஆகும். அகதி வாழ்வில் உணவு நெருக்கடி, மனிதாபிமான நெருக்கடி ஆகியவற்றை எதிர்கொள்ளல் போன்ற பிரச்சினைகள் ஆகும்.   

இவ்விடயப்பரப்பில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவை எல்லாம் அமைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், உலக உணவு ஸ்தாபனம் (World Food Programme), எல்லைகளற்ற வைத்தியர்கள் (Doctors without Borders), சர்வதேச மீட்புக் குழு (International Rescue Committee) ஆகியன முன்னிலை வகிக்கின்றன.   

கடந்த சில காலமாகப் பாதுகாப்பான தெரிவாக, அமைப்புகளைத் தெரிவதைப் பரிசுக்குழு வழக்கமாகக் கொண்டுள்ளது. 2013,2015,2017 ஆகிய வருடங்களில் அமைப்புகளே தெரியப்பட்டன. அவ்வகையில், 2018இல் அமைப்புக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்புக் குறைவு என்று கருதுவோரும் உண்டு. ஆனால், 2012, 2013 ஆகிய இரண்டு அடுத்தடுத்த ஆண்டுகளில், அமைப்புகளே விருது பெற்றன.   

மேற்சொன்னவற்றை விட, வேறொரு தெரிவை நொபெல் பரிசுக் குழு தெரிவதற்கான வாய்ப்புகளும் உண்டு. எதுவாக இருப்பினும், இத்தெரிவு நொபெல் பரிசின் நம்பிக்கையை, மீட்கப் போதுமானதல்ல.  
 ஒருவேளை, இம்முறையும் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள எட்வேட் ஸ்னோடனுக்கு விருதை வழங்கினால், விருதின் மீது மக்கள் நம்பிக்கை கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. 

அமெரிக்காவால் தேடப்படுகின்ற ஒருவருக்கு, விருதை வழங்குவதற்கு நோர்வே இன்னமும் தயார் இல்லை.  

 எனவே, அதற்கான வாய்ப்புகளும் இல்லை. அதேவேளை, எழுச்சியடையும் ரஷ்யாவைக் கண்டு, நோர்வேயும் அஞ்சுகிறது. 

ஆதனால், ரஷ்யாவின் எதிர்ப்புக் குரல்களில் ஒன்றுக்கு, விருதை வழங்கவியலும். அவ்வாறு வழங்கினால், சீனா செய்ததை, ரஷ்யா செய்யுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.   

எவ்வகையிலும் காலங்கடந்த வாழ்வு, துயரமானது என்பதை, நொபெல் பரிசு மீண்டுமொருமுறை உணர்த்துகின்றது.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/2018-நொபெல்-பரிசுகள்-காலம்-கடந்த-வாழ்வு/91-223059

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.