Jump to content

பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்! இந்தக் காலத்தில் இப்படியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய இலங்கை தமிழ் குடும்பம்! இந்தக் காலத்தில் இப்படியுமா?

Report us Vethu 9 hours ago

பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தின் செயற்பாடு, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் வளர்ந்து பிரித்தானியாவில் வாழைப்பழம் செய்கையில் ஈடுபட்டு வரும் தமிழ் குடும்பம் ஒன்று பிரபல்யம் அடைந்துள்ளது.

பிரித்தானியா கொவன்றி பிரதேசத்தில் Radford பகுதியில் வாழும் நபர் ஒருவர் பாரிய வாழைப்பழ செய்கையில் ஈடுபட்டுள்ளார்.

Radford சாலையில் வசிக்கும் சின்னையா செந்தில்செல்வன் தனது வீட்டின் பின்னாலுள்ள தோட்டத்தில் 300 வாழைக் கன்றுகளை பயிரிட்டுள்ளார்.

முதன்முதலாக ஜேர்மனியில் வாழ்ந்த சின்னையா, பச்சைவீட்டு வேளாண்மைக்காக தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டுள்ளார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் Coventry பகுதிக்கு சென்ற பிறகு, அவர் தனது பயிர்ச்செய்கை திறன்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். வெப்பமண்டல தாவரங்களில் அவர் அக்கறை செலுத்தியுள்ளார்.

அதற்கமைய வாழை மரங்கள் மற்றும் பிற வெப்பமண்டல மலர்களை வளர்ப்பதில் அதிக நேரத்தை செலவிட்டுள்ளார். அதற்கமைய கோடை காலமான ஒக்டோபரில் வாழை மரங்கள் வளர ஆரம்பித்துள்ளன.

 

சின்னையா செந்தில்செல்வனின் வாழை மரங்கள் தற்போது 3 மீற்றர் உயரமாக வளர்ந்துள்ளன. அந்த வாழைமரங்கள் நன்கு வளர்ந்த போதிலும், இன்னமும் வாழைப்பொத்தி வெளிவர ஆரம்பிக்கவில்லை. எதிர்வரும் வருடம் பாரிய அறுவடை ஒன்று காத்திருப்பதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

குளிர்கால நெருங்குகையில் அதனை சூடாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சின்னையா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் எனது பெற்றோர்களின் தோட்டத்தில் மூன்று அல்லது நான்கு ஆயிரம் வாழை மரங்கள் இருந்தன, அதனை நாங்கள் விற்பனை செய்தோம்.

சிலர் இங்குள்ள எனது வீட்டிற்கு வருகிறார்கள், அவர்கள் இலங்கையில் தாம் இருப்பதனை போன்று உணர்வதாக குறிப்பிட்டுள்ளனர். பெரிய வாழையிலைகளை நான் கோவிலுக்கு வழங்குவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வாழைப்பழ செய்கையின் ஊடாக குறித்த பகுதியில் தான் மிகவும் பிரபல்யமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/usa/01/194963?ref=imp-news

 

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில், வாழை  மரங்களை... குளிரிலிருந்து பாதுகாப்பது சிரமமான விடயம் என்றாலும்,
அவரின் புதிய முயற்சி வெற்றியளிக்க வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா,சின்னையா,

கையோட கருவேற்பிலை வையுங்கோ... பணம் கொட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த செய்தியை இணைக்கமுடியவில்லை காரணம் அமெரிக்காவில் இப்படி என்று போட்டு பின்பு கொவேன்ரி லண்டன் என்றெல்லாம் போட்டு  இடக்குழப்பம் பண்ணி இருந்தார்கள் .

இங்கு வளரும் வாழையினம் பொத்தி தள்ளும்மட்டும் தான் அதன் பின் குலை வந்து பழம் வருவதுல்லாம் அதிசயம் ஆனால் ஒளி நாடாவில் பழம் சாப்பிட்டும் காட்டுகிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, பெருமாள் said:

முதலில் இந்த செய்தியை இணைக்கமுடியவில்லை காரணம் அமெரிக்காவில் இப்படி என்று போட்டு பின்பு கொவேன்ரி லண்டன் என்றெல்லாம் போட்டு  இடக்குழப்பம் பண்ணி இருந்தார்கள் .

இங்கு வளரும் வாழையினம் பொத்தி தள்ளும்மட்டும் தான் அதன் பின் குலை வந்து பழம் வருவதுல்லாம் அதிசயம் ஆனால் ஒளி நாடாவில் பழம் சாப்பிட்டும் காட்டுகிறார் .

பார்த்தால்....குயின்ஸ்லாந்துப் பழம் போல கிடக்குது!

5adcfdf0a42b5d07b33f2f6936fa08124975f996 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்வின்னை வியப்பில் ஆழ்த்தி இருக்கலாம். பிரித்தானியாவில் பலரை அல்ல.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் இருக்கலாம் ஆனால் பலரும் பார்க்க பழம் பறித்து உண்டவர் நம்ம சின்னையாதானே.....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

உந்த லண்டன் வாழைத்தோட்டத்தை பார்த்தால் எங்கடை பெரியம்மாவுக்கு இருப்புக்கொள்ளாதே!!!!!!

பியர்க்கள்ளன்  சங்கிலிக்கள்ளன்  வரிசையிலை வாழைப்பழக்கள்ளனும் வீடுதேடி வந்துடுவான் எண்ட பயத்திலை வேண்டாம் சோலி எண்டு  நினைச்சிட்டாங்க போலை....:grin:

à®à®³à¯à®³à®©à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

பலர் இருக்கலாம் ஆனால் பலரும் பார்க்க பழம் பறித்து உண்டவர் நம்ம சின்னையாதானே.....!  ?

அந்த கானொளியில் அடுத்த வருடம் இப்படி பழம் சாப்பிட என்னால் முடியும் என்று சொல்கிறாரே தவிர தன்னுடைய தோட்டத்தில் விளைந்தது அல்ல எனும் உண்மையை சொல்ல மறந்து விட்டார் போல் உள்ளது அல்லது செய்தி எடுத்த செய்தி காரர் வெட்டி போட்டுனமாக்கும் .ஆனாலும் அவரின் முயற்ச்சி பாராட்டுக்குரியது .நாதமுனி சொல்வது போல் கறிவேப்பிலை வளர்த்தால் அவர் பல ஆயிரம் பவு ன்ஸ்க்கு சொந்தகாரர் ஆகியிருக்கலாம் இப்பவெல்லாம் ஊர் போய் வருகிறவர்கள் கையோடு 20 அல்லது 30கிலோ கொண்டு வருகிறார்கள் ரிக்கெட் காசை கவர் பண்ணுது என்கிறார்கள் . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2018 at 7:57 AM, புங்கையூரன் said:

பார்த்தால்....குயின்ஸ்லாந்துப் பழம் போல கிடக்குது!

5adcfdf0a42b5d07b33f2f6936fa08124975f996 

புங்கையூர் கதலிப் பழம் மாதியெல்லா இருக்குது...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2018 at 11:28 AM, Nathamuni said:

ஜயா,சின்னையா,

கையோட கருவேற்பிலை வையுங்கோ... பணம் கொட்டும்.

லண்டனில் நடலாமோ கறி வேப்பிலை பிரான்சுப்பக்கம் தடையென்றார்கள் கொஞ்சம் தகவல்கள் தாங்கோ

 

மரத்திலிருந்து பூ வரும் காய் வருமோ அங்க உள்ள காலநிலைக்கு சுமேரியர் நட்டு வெறும் பூ மட்டும் இருக்க கண்டேன் காய்கள் வரவில்லை அந்த நாட்டின் காலநிலைக்கு  சரிவருமோ என்ன இருந்தாலும் பொத்தி வந்து காய் வரும் வரைக்கும் செந்தில் அம்மாச்சியை கண்ணுக்குள்ள வச்சிருக்கணும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

உந்த லண்டன் வாழைத்தோட்டத்தை பார்த்தால் எங்கடை பெரியம்மாவுக்கு இருப்புக்கொள்ளாதே!!!!!!

அநேகமா இதுவரைக்கும்  ஸ்ரீ முருகனில் வேண்டி இருப்பா என்று நினைக்கிறன் .

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

லண்டனில் நடலாமோ கறி வேப்பிலை பிரான்சுப்பக்கம் தடையென்றார்கள் கொஞ்சம் தகவல்கள் தாங்கோ

ஐரோ முழுக்கவே தடைதான் 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மரத்திலிருந்து பூ வரும் காய் வருமோ அங்க உள்ள காலநிலைக்கு சுமேரியர் நட்டு வெறும் பூ மட்டும் இருக்க கண்டேன் காய்கள் வரவில்லை அந்த நாட்டின் காலநிலைக்கு  சரிவருமோ என்ன இருந்தாலும் பொத்தி வந்து காய் வரும் வரைக்கும் செந்தில் அம்மாச்சியை கண்ணுக்குள்ள வச்சிருக்கணும் 

கண்ணாடி கூட்டுக்குள் வளர்த்தாலும் வளரமாட்டன் என்று அடம்பிடிக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் சொன்னால் அதை கண் மூடிக்கொண்டு நம்புவதும் ஒன்றை பொய்யாக்கப் பரப்புவதும் தமிழர் வேலையாகிவிட்ட்து. கொவென்றி லண்டனிலும் குளிர் கூடிய இடம். ஐந்து ஆண்டுகளாக நானும் வாழைகளும் குட்டிகளுக்கு வளர்த்தவள் தான். இங்கு மேயில் இருந்து நவம்பர் வரைதான் வாழை வளரும். அதன்பின் நாம் மேலே மூடி சாக்கினால் கட்டிவிட் டாலும் மூள் அழுகிப் பின் அடுத்த சித்திரைக்குத்தான் வெளியே வரும். ஒரு வாழைக் கன்று குலை போட கட்டாயம் மூன்று ஆண்டுகளாகும். ஆனால் நாம் பொத்தியை மட்டும் தான் வறுக்கலாம். வாழைக்காய் ஒன்றரை அங்குலத்துக்கு மேல் பெருக்காது. பின் தறுக்கணித்து உதிர்ந்த்துவிடும். அல்லது நல்ல வெப்பமூட்டி கண்ணாடிக்கு கூண்டில் வளர்த்தால்த்தான் பெருக்கும். என்வீட்டு வாழை பரவி இப்ப அயலட் டைகளில் எல்லாம் நிறைய வாழை மரங்கள் உள்ளன.ஆனால் என் வீட்டில் வந்ததுபோல் பெரிய வாழைப்பொத்தி  கூட வரவில்லை. காரணம் என்ன என்று இலங்கையில் வாளைத் தோட்டம் வைத்திருந்தவர்கள் வந்து எழுதுங்கள்.

படங்களை போட முடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி பின் வளவுக்கு மணிக்கூடு பூட்டி இருகிறீர்கள் வேலை செய்கிறதா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2018 at 8:00 AM, பெருமாள் said:

 

நல்லாத்தான் மனிசன் எல்லாரையும் விசாரராக்குது.வாழைக் காயைக் கூட உவர் கடித்தும் இருக்கேலாது. கள்ளப் பயல்

 

 

2 minutes ago, பெருமாள் said:

அதெல்லாம் சரி பின் வளவுக்கு மணிக்கூடு பூட்டி இருகிறீர்கள் வேலை செய்கிறதா ?

வேலை செய்யாமலே பூட்டி இருக்கிறம்.அதுக்கிடையில பார்த்தாச்சோ. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

19423989_10208013395006282_3171334304811

என் வீட்டு வாழை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

புங்கையூர் கதலிப் பழம் மாதியெல்லா இருக்குது...?

கதலி வகை தான்!

ஆனால் பெரிதாக இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வேலை செய்யாமலே பூட்டி இருக்கிறம்.அதுக்கிடையில பார்த்தாச்சோ. 

ஊரிலை வேட்டைத்திருவிழா எப்படி நடக்கிறது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

எல்லாரையும்... மட்டி, மடையனாக்கி விட்டது,  "தமிழ்வின்" இணையத்தளம்.
இவர் கையில்.... வைத்திருக்கும் வாழைப்பழத்தை பார்க்க.... 
தென் அமெரிக்காவில், விளைந்த   Chiquita எனப்படும் நிறுவனத்தால், 
உலகெங்கும் விற்பனையாகும் வாழைப்பழம், என்ற சந்தேகம் வந்த போதும்.... 
ஒரு தமிழனின், முயற்சியை...   கொச்சைப்  படுத்தக்  கூடாது என்பதற்காக.. பாராட்டி விட்டேன்.
இப்போ... அதனை, வாபஸ்  வாங்கி, 
இனி... இப்படி, எங்களை ஏமாத்த வேண்டாம் என்று, தமிழ்வின் இணையத் தளத்தை  கேட்டுக் கொள்கின்றேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

லண்டனில் நடலாமோ கறி வேப்பிலை பிரான்சுப்பக்கம் தடையென்றார்கள் கொஞ்சம் தகவல்கள் தாங்கோ

 

மரத்திலிருந்து பூ வரும் காய் வருமோ அங்க உள்ள காலநிலைக்கு சுமேரியர் நட்டு வெறும் பூ மட்டும் இருக்க கண்டேன் காய்கள் வரவில்லை அந்த நாட்டின் காலநிலைக்கு  சரிவருமோ என்ன இருந்தாலும் பொத்தி வந்து காய் வரும் வரைக்கும் செந்தில் அம்மாச்சியை கண்ணுக்குள்ள வச்சிருக்கணும் :)

இஞ்சை பாரும் ராசன்!

என்னதான் உவையள் குத்தி முறிஞ்சாலும் அந்தந்த தாவரங்கள்  அங்கத்தையான் காலநிலைக்கு வளர்ந்தால் தான் அதின்ரை மணம் குணம் சுவை எல்லாம் இருக்கும் கண்டியளோ. ஐ மீன் வெய்யில் பட்டு வளருற மரங்களுக்கு வெக்கை 30பாகைக்கு மேலை  இருக்கவேணும்......இல்லையெண்டால் அது வடிவுக்கு வளருற மரம். இறைச்சி எண்டாலும் வெய்யில் பட்டு வளருற மிருகத்தின்ரை இறைச்சி வித்தியாசமான ரேஸ்ற் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

அநேகமா இதுவரைக்கும்  ஸ்ரீ முருகனில் வேண்டி இருப்பா என்று நினைக்கிறன் .

ஐரோ முழுக்கவே தடைதான் 

கண்ணாடி கூட்டுக்குள் வளர்த்தாலும் வளரமாட்டன் என்று அடம்பிடிக்குது .

நன்றி தகவலுக்கு பெருமாள் அண்ண

 

9 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒருவர் சொன்னால் அதை கண் மூடிக்கொண்டு நம்புவதும் ஒன்றை பொய்யாக்கப் பரப்புவதும் தமிழர் வேலையாகிவிட்ட்து. கொவென்றி லண்டனிலும் குளிர் கூடிய இடம். ஐந்து ஆண்டுகளாக நானும் வாழைகளும் குட்டிகளுக்கு வளர்த்தவள் தான். இங்கு மேயில் இருந்து நவம்பர் வரைதான் வாழை வளரும். அதன்பின் நாம் மேலே மூடி சாக்கினால் கட்டிவிட் டாலும் மூள் அழுகிப் பின் அடுத்த சித்திரைக்குத்தான் வெளியே வரும். ஒரு வாழைக் கன்று குலை போட கட்டாயம் மூன்று ஆண்டுகளாகும். ஆனால் நாம் பொத்தியை மட்டும் தான் வறுக்கலாம். வாழைக்காய் ஒன்றரை அங்குலத்துக்கு மேல் பெருக்காது. பின் தறுக்கணித்து உதிர்ந்த்துவிடும். அல்லது நல்ல வெப்பமூட்டி கண்ணாடிக்கு கூண்டில் வளர்த்தால்த்தான் பெருக்கும். என்வீட்டு வாழை பரவி இப்ப அயலட் டைகளில் எல்லாம் நிறைய வாழை மரங்கள் உள்ளன.ஆனால் என் வீட்டில் வந்ததுபோல் பெரிய வாழைப்பொத்தி  கூட வரவில்லை. காரணம் என்ன என்று இலங்கையில் வாளைத் தோட்டம் வைத்திருந்தவர்கள் வந்து எழுதுங்கள்.

படங்களை போட முடியவில்லை

நான் உங்களின் வாழை மரத்தை நினைவில் வைத்தே மேல் உள்ள பதிவை எழுதினன் நட்டு கனகாலம் பொத்தி மட்டுள் தள்ளியிருந்தது காய்கள் வரவில்லை என்று சொன்ன ஞாபகம் பாருங்கள் 

 

7 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பாரும் ராசன்!

என்னதான் உவையள் குத்தி முறிஞ்சாலும் அந்தந்த தாவரங்கள்  அங்கத்தையான் காலநிலைக்கு வளர்ந்தால் தான் அதின்ரை மணம் குணம் சுவை எல்லாம் இருக்கும் கண்டியளோ. ஐ மீன் வெய்யில் பட்டு வளருற மரங்களுக்கு வெக்கை 30பாகைக்கு மேலை  இருக்கவேணும்......இல்லையெண்டால் அது வடிவுக்கு வளருற மரம். இறைச்சி எண்டாலும் வெய்யில் பட்டு வளருற மிருகத்தின்ரை இறைச்சி வித்தியாசமான ரேஸ்ற் :cool:

ஊருக்கு வந்து விவசாயம் பாருங்கள் என்று சொன்னால் யாரும் கேட்கிறாங்கள் இல்லை சாமி ஊராவது செழிப்பா இருக்கும் காடு பிடிச்ச நிலம் கூட  வெட்டி வெளிசாக்கப்படும் 

ஓம் வெயில் பட்டு வளரும் காட்டுப்பன்றிகள் ,மான் , மரைகள் இறைச்சி செம ருசி  தான்  , அதுபோக இங்க ஊரில் இருக்கும் கறிவேப்பிலை மணம் என்பது ஐஞ்சு வீட்டுக்கு அங்கால மணக்கும் பாருங்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவேற்பிலை தடைக்கு காரணம், நீண்டநாள், பிரஸ்ஸாக இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இருந்து அனுப்பி வைத்தவர்கள், அடித்த ஸ்பிரேயில் காணப்பட்ட ஆபததான இரசாயணம்.

பின்னர் இலங்கையில் இருந்து கீரைக்கு இடையே மறைந்ததாக ஒளிந்து வந்து, சப்பிளை குறைவாக இருந்து டிமாண்ட் அதிகமாக இருந்ததால் விலை கூடியது.

20 பவுணுக்கு மளிகைப் பொருட்கள் வாங்கினால், இலவசமாக தரப்பட்ட கறிவேற்பிலை இன்று 30 - 50 கிராம், £1 முதல் £1.50 இலண்டன் தமிழ் கடைகள் விலை. சில இந்திய கடைகள், frozen  பக்கட்டில் வித்தாலும், மணம், குணம் இல்லாத காரணத்தால வேலைக்காகாது.

இப்போது, இரசாயணம் இல்லாத காரணத்தால் தடை இல்லை. ஆனால், விலையை குறைக்க விரும்பாத வியாபார முதலைகள் ‘தடையிருப்பதாகவே’ கதை விடுகின்றனர். 

தடை இருந்தால், உடலுக்கு ஆபத்தான இரசாயணம் உள்ள , அரசால் தடைக்குள்ளான பொருளை வாங்கக் கூடாதே என்ற அறிவார்த்தம் நம்மிடையே இல்லை என்பது உண்மை .

அதேவேளை, எப்படி விற்க முடியும் என்று கேட்பதுடன், Food safety agency க்கு அடிச்சு சொல்லப் போகிறேன் என்று சொல்லிப்,  பாருங்கள், கடைக்காரர் முகம் போற கோக்கை.

பெருமாள், கருவேற்பிலை வளர்க்க, சரியான முறையினை, தமிழக அரச வேளாண் பல்கலைக்கழகங்களில் கேட்டறியலாம்.

Link to comment
Share on other sites

17 hours ago, தமிழ் சிறி said:

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

எல்லாரையும்... மட்டி, மடையனாக்கி விட்டது,  "தமிழ்வின்" இணையத்தளம்.
இவர் கையில்.... வைத்திருக்கும் வாழைப்பழத்தை பார்க்க.... 
தென் அமெரிக்காவில், விளைந்த   Chiquita எனப்படும் நிறுவனத்தால், 
உலகெங்கும் விற்பனையாகும் வாழைப்பழம், என்ற சந்தேகம் வந்த போதும்.... 
ஒரு தமிழனின், முயற்சியை...   கொச்சைப்  படுத்தக்  கூடாது என்பதற்காக.. பாராட்டி விட்டேன்.
இப்போ... அதனை, வாபஸ்  வாங்கி, 
இனி... இப்படி, எங்களை ஏமாத்த வேண்டாம் என்று, தமிழ்வின் இணையத் தளத்தை  கேட்டுக் கொள்கின்றேன். 

 

வீடியோவில் வாழை குலையை காட்டாமல் விட்டதால் சமூக வலைத்தளங்களில் கழுவி ஊத்துகின்றார்கள். கடையில் வாங்கிய வாழைப்பழத்தை காட்டி ஊரை உலகை ஏமாற்றப் பார்த்து இருக்கின்றார்.

3 hours ago, Nathamuni said:

கருவேற்பிலை தடைக்கு காரணம், நீண்டநாள், பிரஸ்ஸாக இருக்க வேண்டும் என்று இந்தியாவில் இருந்து அனுப்பி வைத்தவர்கள், அடித்த ஸ்பிரேயில் காணப்பட்ட ஆபததான இரசாயணம்.

பின்னர் இலங்கையில் இருந்து கீரைக்கு இடையே மறைந்ததாக ஒளிந்து வந்து, சப்பிளை குறைவாக இருந்து டிமாண்ட் அதிகமாக இருந்ததால் விலை கூடியது.

20 பவுணுக்கு மளிகைப் பொருட்கள் வாங்கினால், இலவசமாக தரப்பட்ட கறிவேற்பிலை இன்று 30 - 50 கிராம், £1 முதல் £1.50 இலண்டன் தமிழ் கடைகள் விலை. சில இந்திய கடைகள், frozen  பக்கட்டில் வித்தாலும், மணம், குணம் இல்லாத காரணத்தால வேலைக்காகாது.

இப்போது, இரசாயணம் இல்லாத காரணத்தால் தடை இல்லை. ஆனால், விலையை குறைக்க விரும்பாத வியாபார முதலைகள் ‘தடையிருப்பதாகவே’ கதை விடுகின்றனர். 

தடை இருந்தால், உடலுக்கு ஆபத்தான இரசாயணம் உள்ள , அரசால் தடைக்குள்ளான பொருளை வாங்கக் கூடாதே என்ற அறிவார்த்தம் நம்மிடையே இல்லை என்பது உண்மை .

அதேவேளை, எப்படி விற்க முடியும் என்று கேட்பதுடன், Food safety agency க்கு அடிச்சு சொல்லப் போகிறேன் என்று சொல்லிப்,  பாருங்கள், கடைக்காரர் முகம் போற கோக்கை.

பெருமாள், கருவேற்பிலை வளர்க்க, சரியான முறையினை, தமிழக அரச வேளாண் பல்கலைக்கழகங்களில் கேட்டறியலாம்.

இங்கு கனடாவில் எல்லா தமிழ் கடைகளிலும் ஒரு டொலர் ஐம்பது சதத்துக்கு விற்கின்றார்கள். நான் நினைக்கின்றேன், கரீபியன் தீவில் இருந்து கொண்டு வருகின்றார்கள் என்று. அடுத்த முறை விசாரித்து பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

வீடியோவில் வாழை குலையை காட்டாமல் விட்டதால் சமூக வலைத்தளங்களில் கழுவி ஊத்துகின்றார்கள். கடையில் வாங்கிய வாழைப்பழத்தை காட்டி ஊரை உலகை ஏமாற்றப் பார்த்து இருக்கின்றார்.

இங்கு கனடாவில் எல்லா தமிழ் கடைகளிலும் ஒரு டொலர் ஐம்பது சதத்துக்கு விற்கின்றார்கள். நான் நினைக்கின்றேன், கரீபியன் தீவில் இருந்து கொண்டு வருகின்றார்கள் என்று. அடுத்த முறை விசாரித்து பார்க்க வேண்டும்.

ஆம் உங்களுக்கு வருவது டொமினிக்கன் குடியரசுவில் இருந்து நல்ல கூலர் கப்பலில் 10 நாளில் அங்கு வந்து விடும் கொழும்பு கத்தரிக்காய் என்று நம்ம கடைக்காரர் சொல்வது டொமினிக்கன் கத்தரிக்காய் ,கறிவேப்பிலை போன்றவை .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.