Jump to content

``காதல் கல்யாணம், 7 பேரப் புள்ளைங்கன்னு சந்தோஷமா இருக்கேன்!" மூத்த திருநங்கை மோகனா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

``என் 57 வயசு வரை பெண்ணாகத்தான் வாழ்ந்தேன்'' என வியக்கவைக்கிறார் திருச்சியைச் சேர்ந்த மூத்த திருநங்கை மோகனா அம்மா. தற்போது 75 வயது. திருநங்கைகள் தங்களுடைய உரிமைகளைப் பெறுவதற்கு எவ்வளவு போராடவேண்டியிருக்கிறது என்பது நாம் அறிந்ததே. இப்போதே இப்படி என்றால், அந்தக் காலத்தில் எப்படி இருந்திருக்கும்?

மூத்த திருநங்கை மோகனா

``என் சொந்த ஊர் ஆர்.எஸ்.மாத்தூர். அப்பா, அம்மா கூலிக்காரங்க. எனக்கு 4 அண்ணன், 3 அக்கா. 8 வது மகனாப் பிறந்தேன். 5 வயசுலேயே அப்பா இறந்துட்டாங்க. என் அம்மாதான் எல்லாமுமா இருந்தாங்க. சின்ன வயசிலிருந்தே பொம்பளை புள்ளைக விளையாட்டுன்னா ஆர்வம் அதிகம். பொம்பளை புள்ளை மாதிரிதான் நடந்துப்பேன். அதுக்குப் பெயர் `திருநங்கை'ன் எல்லாம் தெரியாது. 10 வயசுல வீட்டைவிட்டு வெளியேறினேன். லோக்கல் வண்டியைப் பிடிச்சு திருச்சிக்கு ஓடினேன். அங்கே ஒரு ரிக்‌ஷாகாரர்கிட்ட, `அலிங்க எங்க வாழுவாங்க'னு கேட்டேன். அப்போவெல்லாம் திருநங்கைன்னு சொல்ல மாட்டாங்கம்மா. அவர்தான் என் ஞானகுருவான (பாட்டி) சாந்திகிட்ட என்னைச் சேர்த்தார். அவர்கிட்ட நடனம் கத்துக்கிட்டேன். அவங்களோடு சேர்ந்து கலை நிகழ்ச்சிகளில் ஆடப் போனேன். அவங்கதான் எனக்கு மோகனா என்கிற பெயரை வெச்சாங்க. அதுக்கு முனாடி என் பெயர் ஏகாந்தம். 15 வயசுல பாம்பேக்குப் போனேன். அங்கேயும் கலை நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தினேன். 17 வயசுல அறுவை சிகிச்சை செய்துக்கிட்டு முழு பொம்பளையா மாறினேன். 19 வயசுல திரும்ப திருச்சிக்கு வந்தேன்'' என்கிற மோகனா அம்மா அந்நாட்களின் நினைவுகளை கண்களுக்குள்கொண்டுவருகிறார்.

 

 

``என் அத்தை மகன் பெயர், பெரியசாமி. சின்ன வயசிலிருந்தே அவனை எனக்குப் பிடிக்கும். அவனும் என்னை மாதிரி சின்ன வயசுலேயே ஊரைவிட்டு ஓடிப்போய், ஹோட்டலில் வேலை செஞ்சான். அவனை திருச்சியில் பார்த்தேன். ரெண்டு பேரும் நிறைய பேசினோம்; காதலிச்சோம். அப்புறம் எங்க வீட்டுக்கு என்னைக் கூட்டிட்டுப் போனார். நான் பார்க்கிறதுக்கு அசல் பொம்பளை மாதிரியே இருப்பேன். எங்க வீட்டுல உள்ளவங்களுக்கே என்னை அடையாளம் தெரியலை. அவருக்கு மட்டும்தான் நான் யாருங்கிற உண்மை தெரியும். வீட்டுல உள்ளவங்க எல்லோரும் சேர்ந்து என் 19 வயசுல அவருக்குக் கட்டிக்கொடுத்தாங்க. 5 வருஷம் சந்தோஷமா வாழ்ந்தோம். என்னால் அவருக்குக் குழந்தையைப் பெத்துக் கொடுக்க முடியலையே என்கிற குறை மனசுல உறுத்திட்டே இருந்துச்சு. கணவருக்குச் சொந்தத்தில் ஒரு பொண்ணைப் பார்த்து ரெண்டாவது கல்யாணம் கட்டிவெச்சேன்.

அவங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன் பிறந்துச்சு. எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்துட்டிருந்தோம். எனக்குன்னு ஒரு குழந்தை வேணும்னு தோணுச்சு. மும்பையில் மலர்கொடின்னு ஒரு பொண்ணைத் தத்து எடுத்து வளர்த்து கட்டிக் கொடுத்தேன். அந்தப் புள்ளைக்கு ரெண்டு பசங்க. என் பேரனுக்கும் கல்யாணம் முடிச்சாச்சு. என் கணவருக்குப் பொறந்த புள்ளைகளுக்கும் கல்யாணமாகி பேர பசங்க இருக்காங்க. என் 57 வயசு வரைக்கும் பொண்ணாகத்தான் இருந்தேன். 2001-ம் வருஷம், இப்படிக் குடும்பத்துக்குள்ளே 4 பேருக்கு மட்டுமே வாழ்ந்தா போதுமா ஒரு கேள்வி தோணுச்சு. திருநங்கைகளுக்கு உதவி செய்யணும்னு குடும்பத்தைவிட்டு வெளியில் வந்தேன். அதுக்கு அப்புறம்தான் நானும் ஒரு திருநங்கைன்னு உலகத்துக்குத் தெரிய ஆரம்பிச்சது. திருநங்கைகளுக்கு ஓட்டுரிமை வேணும்னு முதன்முதலா போராடினவங்களில் நானும் ஒருத்தி. கொஞ்சம் கொஞ்ச எம் மக்களுக்காகப் போராட ஆரம்பிச்சேன். போராடிப் போராடி ஒவ்வொரு உரிமையையும் வாங்கிக்கொடுக்கிறேன். திருநங்கைகளுக்கான அமைப்புகளில் தலைவியாகவும் இருந்திருக்கேன். 

இப்போ, என் குடும்பத்தில் எல்லோருமே என்னை ஏத்துக்கிட்டாங்க. திருநங்கைகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க தொடர்ந்து பயணிச்சுட்டிருக்கேன். 5 வருஷத்துக்கு முன்னாடி கணவர் இறந்துட்டார். எங்க காதலைச் சொல்ல வார்த்தைகள் போதாதும்மா. அவர் என் மனசு முழுக்க காதலை விதைச்சுட்டுப் போயிருக்கார். இப்பவும் அவரை நான் ரொம்ப லவ் பண்றேன்'' என வெட்கப் புன்னகை சிந்துகிறார் மோகனா அம்மா.

 

https://www.vikatan.com/news/tamilnadu/138670-mine-is-a-love-marriage-now-happy-with-seven-grandchildren-transgender-mohana.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
    • முற்றிலும் உண்மை ஆனால் மீசாலையில் வ‌சிக்கும் என‌து அத்தை வ‌ய‌தான‌ கால‌த்திலும் சிங்க‌ள‌வ‌னின் அட‌க்கு முறைய‌ தாண்டி த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்புக்கு தொட‌ர்ந்து ஓட்டு போடுகிறா அதோட‌ அத்தைய‌ ஏதோ ஒரு ச‌ம்ப‌வ‌த்தில் சாலையில் வைச்சு மிர‌ட்டினார்க‌ள் அத்தை அவேன்ட‌ கைய‌ த‌ள்ளி விட்டு வீட்டுக்கு ந‌ட‌ந்து வ‌ந்த‌வா 2009க‌ட‌சியில் ட‌க்கிள‌ஸ்சின் ஆட்க‌ள் வீடு புகுந்து நெஞ்சில் துப்பாக்கிய‌ வைச்சு மிர‌ட்டின‌வை ஆனால் அவ‌ன் ப‌ய‌ப்பிட‌ வில்லை பிற‌க்கு உற‌வுக‌ள் சொல்ல‌ அர‌சிய‌லில் இருந்து முற்றிலுமாய் வில‌கி விட்டான் என‌து ம‌ச்சான் ..............................
    • "ஊசிப் போன வடை" என்று, யாரோ... உருட்டிக் கொண்டு திரிந்தார்கள். 😂 எல்லாம், பொய்யா... கோப்பால். 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.