Jump to content

இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது.

விஜயகாந்த்

அந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை இலங்கையின் மேற்கு, தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர்.

இந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீரர் ஒருவர் 19 வயதிற்குட்பட்ட இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கிரிக்கெட்டில் விஜயகாந்த்

17 வயதான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற இளைஞரே தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வாரியம் தற்போதுதான் அறிவிப்பாக வெளியிட்டிருந்தாலும் கடந்த சில மாதங்களில் இவர் சில சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடிவிட்டார்.

19 வயதிற்குட்பட்ட அணியில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இவர் விளையாடியுள்ளார். ஒருநாள் சர்வதேச அணியில் மேலதிக வீரராக சேர்க்கப்பட்டுள்ள விஜயகாந்த், 19 வயதிற்குட்பட்ட முதலாவது ஆசிய உலகக் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை அணியிலும் இடம்பிடித்திருந்தார்.

GETTY IMAGES

''15 வயதிற்குட்பட்ட அணியில் இருந்தே நான் பந்து வீசி வருகிறேன். சிறந்த பயிற்சியாளர்கள் கிடைத்ததால் பள்ளி அணியில் திறமைகளை வெளிப்படுத்த முடிந்தது. 15 வயதிற்குட்பட்ட அணியில் இடம்பிடித்த பின்னர் பள்ளிகளுக்கிடையிலான 19 வயதிற்குட்பட்ட மாகாண அணிகளுக்கிடையிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாட முடிந்தது'' என்று பிபிசி தமிழிடம் கூறினார் விஜயகாந்த்.

மேலும் அவர், ''இந்த திறமைகளுடன் எனக்கு கொழும்பிற்கு வர முடிந்தது. தற்போது கொழும்பில் பயிற்சி பெற்று வருகிறேன். இங்குள்ள பயிற்சியாளர்கள் மிகச்சிறப்பாக பயிற்சி வழங்குகின்றனர். யாழ்ப்பாணத்தை விட இங்கு கிரிக்கெட்டில் வித்தியாசம் இருக்கிறது. எனது திறமைகள் மேலும் வளர்ந்துள்ளதாக உணர்கிறேன்'' என்றார்.

முன்னணி வீரர்களிடமிருந்து

19 வயதிற்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலகரத்ன உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி வீரர்களிடம் விஜயகாந்த் பயிற்சி பெற்று வருகிறார்.

''சிறு வயது முதலே எனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவற்கு முன்பு கல்வியில் கவனம் செலுத்துமாறு தொடக்கத்தில் அம்மா, அப்பா உள்ளிட்ட அனைவரும் அறிவுரை கூறினார்கள். ஆனால் படித்துக் கொண்டே விளையாடுகிறேன் என்று அம்மாவிற்கு கூறினேன். இதைக் கூறியே கிரிக்கெட் விளையாட அனுமதி பெற்றேன்.'' என்று தனது கடந்த காலத்தை சிரித்த முகத்துடன் நினைவுகூர்ந்தார்.

19 வயதிற்குட்பட்ட அணியில் திறமைகளை வெளிப்படுத்தி இலங்கை தேசிய அணியில் இடம்பிடிப்பதே தனது எதிர்பார்ப்பு என அவர் தெரிவித்தார்.

''யாழ்ப்பாணத்தில் இருந்து இன்னும் சிலர் தேசிய அணியில் இடம்பிடிக்க வேண்டும்" என்று தனது விருப்பத்தை பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

'பந்துவீச்சாளராக இலங்கை தேசிய அணியில் இடம்பிடிக்க எதிர்பார்த்துள்ளேன். துடுப்பாட்டத்திலும் என்னை வலுப்படுத்திக் கொண்டால் அது உதவியாக இருக்கும்.'' என்றார் அவர்.

மொழிப் பிரச்சனை

கொழும்பிற்கு வந்து தான் மொழிப் பிரச்சனையை எதிர்கொண்டதாகக் கூறிய விஜயகாந்த், ''கொழும்பு வந்த பின்னர் சக வீரர்கள் எனக்கு சிங்களம் சொல்லித் தந்தனர். என்னிடம் தமிழ் கற்றுக்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நான் மட்டுமே வந்திருப்பதாகக் கூறி, என்னை தைரியப்படுத்தி, ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.'' என்று கூறினார்.

''எமக்கு மொழிப் பிரச்சனை இருந்தாலும், தெரிந்த ஆங்கிலத்தில் பேசி நாம் பயிற்சிகளில் ஈடுபடுவோம். நான் தமிழ் என்ற எந்தவொரு பாகுபாடும் இன்றி, நாம் ஒரே அணியாக விளையாடுகிறோம் என்று நான் எனது யாழ்ப்பாண நண்பர்களுக்கு கூறியிருக்கிறேன்.''

''இதைக் கேட்ட எனது பாடசாலை நண்பர்கள், பெற்றோர் உள்ளிட்ட அனைவரும் சந்தோசப்பட்டனர். நாம் ஒற்றுமையாக விளையாடுவதைப் பார்க்க வருமாறு அவர்களுக்குக் கூறினேன்.'' என்று விஜயகாந்த் தனது கொழும்பு கிரிக்கெட் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

நாடு முழுவதிலும் உள்ள திறமையான வீரர்களை அடையாளம் காண்பதற்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனம், மாகாண மட்டத்தில் போட்டிகளை நடத்துவதாக 19 வயதிற்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலகரத்ன தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக அனைத்து இளைஞர்களுக்கும் சம உரிமை வழங்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் செயலாற்றுவதாக அவர் தெரிவித்தார்.

''தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதமின்றி, திறமை இருப்பவர்களுக்கு வாய்ப்பளித்து, அந்த திறமையை வளர்த்தெடுக்கும் திட்டம் இருக்கிறது.'' என்று ஹஷான் திலகரத்ன மேலும் கூறினார்.

https://www.bbc.com/tamil/sport-45729068

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
    • தெரியும் ஆனால் இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................
    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.