Jump to content

கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…!


Recommended Posts

கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…!

கனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு! கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு! குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான்! ஆயினும் அல்லலுறும் மக்கள், துன்பத்தால் துடிக்கும் மக்கள், உள்நாட்டுப் போரினால் அவதியுறும் மக்கள் கனடாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரும் போது அண்மைக் காலங்களாக விரும்பத்தகாதவர்களாக நோக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இனத்தால், மதத்தால், நிறத்தால் வெள்ளையினத்தவர்களாக அல்லாத வேளைகளில் இதன் உக்கிரம் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்த தமிழர்களாகிய நாங்களும் இவ்வாறு மற்றவர்களை வெறுக்கும் மனோநிலை கொண்டவர்களாக மாறி வருகின்றோமா ?

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கனடாவில் அகதிகளின் தஞ்சக் கோரிக்கைக்கான காத்திருப்பு நேரம் அதிகரித்துள்ளது. கடந்த பத்தொன்பது மாதங்களுக்குள் முப்பதினாயிரத்துக்கும் அதிகமான புகலிடம் கோருவோர் அமெரிக்க கனடிய எல்லை வழியாகக் கனடாவுக்குள் நுழைந்துள்ளமை கனடிய ஊடகங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பழமைவாதிகளின் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.

குடிவரவு மற்றும் அகதிகளுக்கான திணைக்களத்தால் (IRB) கியூபெக்கிற்குள் நுழைந்த 27,674 புகலிடக் கோரிக்கையாளர்களில் பதினைந்து சதவிகிதத்தையே இதுவரை கையாள முடிந்துள்ளது. இதில் பெரும்பான்மையான அகதிக் கோரிக்கையாளர்கள் St. Bernard-de-Lacolle என்ற இடத்தில் உள்ள எல்லை வழியாக 2017 ம் ஆண்டு பெப்ரவரிக்கும் யூனுக்கும் இடையில் வந்தவர்களாவார்கள். கனடிய உச்சநீதி மன்றத்தில் 1985ம் ஆண்டில் நடைபெற்ற பிரபலமான ‘’ சிங்’’ வழக்கு குறித்த தீர்ப்பின் கீழ் கனடிய நாட்டில் தஞ்சம் கோரும் அகதிகள் அனைவரும் வாய் வழி மூல விசாரணைக்குத் தகமை உடையவர்கள்..

அமெரிக்க-கனடிய எல்லை வழியாக நுழையும் புகலிடம் கோருவோர் பிற அகதிக் கோரிக்கையாளர்கள் போலவே பல்வேறு கேள்விகளை எதிர்கொள்கிறார்கள்: அவர்கள் மெய்யான அகதிகள் தானா ... தங்களது நாடுகளில் துன்புறுத்தலை எதிர்கொண்டு அச்சுறுத்தலுக்கு உள்ளானவர்களா என்ற கேள்விகளே அவற்றில் அதிமுக்கியமானவை.! அகதிகள் திணைக்களத்திடம் இருந்து கிடைக்கும் தகவல்களின்படி இவ்வாறு நுழைந்தவர்களில் 1,885 அகதிகளே கியூபெக்கில் முறையான அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்கள். இது கனடாவில் நடைபெற்ற முழு அகதிகள் வழக்குகளோடும் ஒப்பிடும் பொழுது கணிசமான அளவு குறைவாக உள்ளது.

ஆனால் Canada Border Services Agency இன் தரவு, அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள் பலர் நாடு கடத்தப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எல்லைகளைக் கடந்து கியூபெக்கில் நுழைந்த 157 பேரை CBSA நாடு கடத்தியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

2017 ஏப்ரல் மாதம் முதல் கனடாவுக்கு வந்த 32,173 அகதிகளில் 398 பேர்கள் வரை வெளியேற்றியுள்ளதாக சிபிஎஸ்ஏ தெரிவித்துள்ளது. இவர்களில் 146 பேர் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டனர். மீதமானவர்கள் ஹெய்ட்டி உட்பட கொலம்பியா துருக்கி மற்றும் ஈராக் என 53 நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரபல சட்டத்தரணி லோரன் வால்ட்மேன் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகடத்தல்கள் அகதிகள் திணைக்கள அமைப்பின் தற்போதைய நடைமுறையினை விளங்கிக்கொள்ளவல்ல ஒரு சுட்டி என்று கூறுகிறார். புகலிடம் கோருவோர் தங்களது தஞ்சக்கோரிக்கை முடிவுக்காகப் பதினாறு மாதங்கள் வரை காத்திருப்பதாகப் புள்ளி விபரங்கள் சுட்டுகிறது..

2010ம் ஆண்டில் ஹெய்ட்டியில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்திற்குப் பின்னர் அமெரிக்காவினால் ஹெய்ட்டியர்களுக்குத் தற்காலிக பாதுகாப்பு வதிவிட அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியின் கீழ் அமெரிக்காவில் வசித்து வந்த ஹெய்டியர்களே எல்லை கடந்து வந்தவர்கள். டிரம்ப் நிர்வாகம் ஹெய்ட்டியர்களுக்கான வதிவிட உரிமையை முடிவுக்கு கொண்டு வந்ததை அறிவித்தபோது, கனடாவில் அகதி அந்தஸ்தைக் கோருவதற்காக அவர்கள் அமெரிக்க கனடிய எல்லை வழியாக கனடாவுக்குள் உள் நுழைந்தார்கள்.

ஆனால் எல்லையோரத்தில் புகலிடம் கோருவது அவ்வளவு எளிதானது அல்ல. இரு நாடுகளும் அகதிகளுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படுவதால், கனடா மற்றும் அமெரிக்கா இடையே உள்ள இருநாட்டு உடன்படிக்கையின்படி இரு நாடுகளும் உத்தியோகபூர்வ எல்லைகளை அடைந்த தஞ்சம் கோருவோருக்கு மறுப்புத் தெரிவிக்க வேண்டும். எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமான நுழைவுரிமைக்கு வருகை தரும் நபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால், புகலிடம் கோருவோர் உத்தியோகபூர்வ எல்லைக் கடப்புகளுக்கு இடையில் நுழைவதன் மூலம் திருப்பித் தள்ளப்படுவதைத் தவிர்க்கலாம். இதனால் ஆயிரக்கணக்கான அகதி நுழைவாளர்கள் பயனடைந்துள்ளனர்.

நைஜீரியர்கள் கனடாவிற்குப் பதிலாக அமெரிக்க விசாக்களைப் பயணிக்கத் தேர்வு செய்வது ஏன் ? சட்டத்தரணி வால்ட்மேன் அமெரிக்க விசா வழங்கல் முறைமை கனடாவின் விசா வழங்கல் முறைமையை விட மிகவும் தாராளமானதாகக் காணப்படுவதாகச் சொல்லுகிறார். தஞ்சம் கோரும் நைஜீரியர்கள் பலர் பயணிகளுக்கான அமெரிக்க விசாக்களைப் பெறுகின்றனர். அதனை அவர்கள் அமெரிக்கா வருவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதன் பின்னர் அவர்கள் கியூபெக் எல்லை வழியாகக் கனடாவிற்குள் நுழைந்து புகலிடம் கோரி வருகிறார்கள்.

இந்த வருடம், குடிவரவு அமைச்சர் அஹமது ஹுஸென் மற்றும் மூத்த அரசாங்க அதிகாரிகள் நைஜீரியாவுக்குப் பயணம் செய்தனர். நேரடியாக நைஜீரிய அமெரிக்கத் தூதரக அதிகாரிகளிடம் விசா தொடர்பாக எழும் அகதி நுழைவுப் பிரச்சினைகளைப் பேசியிருந்தார்கள். கனடிய எல்லைக்குள் நுழைந்து நைஜீரியர்கள் புகலிடக் கோரிக்கை கேட்பதை நைஜீரிய அரசாங்கம் தடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் என்பதும் கனடிய அமைச்சரின் நைஜீரிய அரசினை நோக்கிய எதிர்பார்ப்பாக இருந்தது.

2018ம் ஆண்டுக்கான கனடிய மத்திய அரச வரவுசெலவுத்திட்டதின் ஒரு பகுதியாக அகதிகள் திணைக்களத்துக்கு 72 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, இது அகதிகளின் தஞ்சக் கோரிக்கை குறித்த முடிவெடுக்கும் முறைகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒருவர் மேன் முறையீட்டுக்குச் செல்வதன் மூலமோ அல்லது சட்டவாக்க வரைமுறைகளைப் பயன்படுத்துவதன் ஊடாகவோ தான் கனடாவில் வாழும் காலத்தை நீடித்துக்கொண்டு செல்வார். அவ்வாறு போராடிக் கொண்டிருக்கும் வதிவிட உரிமையற்ற அகதிகளை விரைவாக நாட்டை விட்டு அப்புறப்படுத்த வேண்டும் என்று கொதிக்கிறது பழமைவாதக் கட்சி! தற்போதைய நிர்வாக அமைப்பு முறைமைகள் அதற்கு எற்றதாக அமையவில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டு!

ரொறொன்ரோவிற்கு வரும் அகதிகளுக்கான செலவீனங்கள் அதிகமாக இருப்பதால் நகர நிர்வாகம் ஒன்ராரியோ மாகாண அரசிடம் மேலதிக உதவியைக் கோருகிறது. ஒன்ராரியோ மாகாண அரசு கனடிய மத்திய அரசுக்கு கூடுதல் நிதியுதவி செய்யுமாறு அழுத்தம் கொடுக்கிறது. வரி கொடுக்கும் வசதி படைத்தோர் தங்கள் வரிப்பணத்தை அகதிகளுக்காகச் செலவிடுவதை விரும்புவதில்லை. அகதிக் கோரிக்கையாளர்களது வழக்குகளை மற்றும் அவர்கள் குறித்த பிரச்சினைகளை விரைவாகக் கையாள நிதி ஒதுக்கப்படுவதைப் பழமைவாதிகள் வெறுக்கிறார்கள். ஹார்ப்பரது ஆட்சிக் காலத்தில் இது அனைத்துலக உடன்படிக்கைகளைப் புறந்தள்ளும் வகையில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களின் துணையோடு உள்நாட்டுக் கலவரங்கள், போர், இயற்கை அனர்த்தம், அரச அடக்குமுறை போன்றவற்றால் சொல்லொணாத் துன்பங்களைச் சுமக்கும் மக்கள் கனடாவில் தஞ்சம் கோரும் வேளைகளில் கனடிய அரசு அவர்களை நிராகரிக்காது ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பதே மனிதநேயவாதிகளின் பெரு விருப்பாகும்.

(இம் மாத 'தேசியம்' சஞ்சிகையில் 

இருந்து..........

எழுதியவர் நடராஜா முரளிதரன்

எழுதியது)

Image may contain: 4 people, people standing, wedding and outdoor
Image may contain: ocean, water and outdoor
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பாலனவர்கள் பொருளாதர அகதிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

பெரும்பாலனவர்கள் பொருளாதர அகதிகள்

அவர்களை பொருளாதார அகதியாக்கியது யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அவர்களை பொருளாதார அகதியாக்கியது யார்?

சிங்களவன் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.