Jump to content

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு – செரீனா வில்லியமஸ் மேலாடையின்றி பாடினார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு – செரீனா வில்லியமஸ் மேலாடையின்றி பாடினார்…

October 1, 2018

1 Min Read

 

 

 

 

மார்புக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மேலாடையின்றி பாட்டு பாடும் காணொளி தற்போது இணையத்தில் வெளிவந்திருக்கிறது.

ஒக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாதமாக கருதப்படுகிறது. இதனையொட்டி அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரம் செரீனா வில்லியமஸ், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பாடல் ஒன்றை பாடி அதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.”ஐ றச் மை செல்ப்’” (I Touch Myself ) பாடலை பாடி பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

“ஐ டச் மைசெல்ப்” ( I Touch Myself )பாடலை எழுதியது ஆஸ்திரேலியாவின் டிவின்ல்ஸ் என்பவர். அவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மார்கப்புற்றுநோயால் 53 வயதில் இறந்து போனார். இப்போது இந்த பாடலையே செரீனா தனது இரு கரங்களையும் தனது மார்பில் பதித்து பாடியுள்ளார்.  “பெண்கள் தங்கள் மார்பகங்களை கையால் அவ்வப்போது சோதனை செய்து சோதனை செய்தாலே ஏராளமானவர்களின் உயிரை காக்க முடியும்” என குறிப்பிட்டுள்ள செரீனா வில்லியமஸ், மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இப்படி செய்தேன். வரும்முன் காப்பதே நல்லது என தெரிவித்துள்ளார்.

செரீனாவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள், அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து செய்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த காணொளியை செரீனா வில்லியம்ஸ் பதிவிட்ட 10 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

இந்த காணொளியை செரீனா வில்லியம்ஸ் பதிவிட்ட 10 மணி நேரத்தில் 13 லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தக் காணொளியை... யாழ். களத்திலும், டக்கென்று....  நான்கு பேர் பார்த்து விட்டார்கள்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை... யாழ். களத்திலும், டக்கென்று....  நான்கு பேர் பார்த்து விட்டார்கள்.:grin:

உள்ளேன் ஐயா...:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தக் காணொளியை... யாழ். களத்திலும், டக்கென்று....  நான்கு பேர் பார்த்து விட்டார்கள்.:grin:

இதில் என்ன தவறு இருக்கு.....ஒரு நல்ல சேவையின் நிமித்தம் இந்த சேவையினை செய்கிறார். அதுவும் எவ்வளவு தன்னடக்கத்துடன் கைகளைக் கட்டிக்கொண்டு....!   tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்.... பாராட்டப் பட வேண்டிய முன்மாதிரி!

பாலியல் சமபந்தமான நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நாள் எப்போது வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புங்கையூரன் said:

ம்ம்ம்.... பாராட்டப் பட வேண்டிய முன்மாதிரி!

பாலியல் சமபந்தமான நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நாள் எப்போது வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

புங்கையூரானுக்கு  ஆசையை... பாருங்கள்.  அப்பவும்... பொத்திக்  கொண்டுதான் பாடுவார்கள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரதிஷ்ட்டவசமாக  இதன்  பின்னாலும் பாரிய வியாபாரம்தான் இருக்கிறது 
பெண்களை ஏய்த்து பிழைக்கும் ஒரு கும்பல்தான் இதை பின் இருந்து 
நடத்துகிறது ...

மார்பக புற்றுநோக்கு யாரும் மருந்து கண்டு பிடித்தால் 
இவர்கள் காசை கொடுத்து அதை தடுப்பார்கள் அல்லது அவர்களை 
கொன்று விடுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Maruthankerny said:

மார்பக புற்றுநோக்கு யாரும் மருந்து கண்டு பிடித்தால் 
இவர்கள் காசை கொடுத்து அதை தடுப்பார்கள் அல்லது அவர்களை 
கொன்று விடுவார்கள். 

புதிய மருந்துகள் கண்டு பிடிப்பவர்களை... ஏன் தடுக்கின்றார்கள், அல்லது கொல்கின்றார்கள்?
இப்படியானவர்கள் உலகித்திற்கே அச்சுறுத்தலான செயலை செய்ப்பவர்கள் என்பதால்....
அந்த நாட்டு அரசோ... உலக சுகாதார நிறுவனமோ  நடவடிக்கை எடுக்க மாட்டாதா?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செரீனா மேலாடை இல்லாமல் பாடியதால் பல யாழ் கள வாசகர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் சம்பந்தமாக “விழிப்புணர்வு” வந்திருக்கும்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

செரீனா மேலாடை இல்லாமல் பாடியதால் பல யாழ் கள வாசகர்களுக்கும் மார்பகப் புற்றுநோய்ம்பந்தமாக “விழிப்புணர்வு” வந்திருக்கும்.?

விழி அகண்டிருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

புதிய மருந்துகள் கண்டு பிடிப்பவர்களை... ஏன் தடுக்கின்றார்கள், அல்லது கொல்கின்றார்கள்?
இப்படியானவர்கள் உலகித்திற்கே அச்சுறுத்தலான செயலை செய்ப்பவர்கள் என்பதால்....
அந்த நாட்டு அரசோ... உலக சுகாதார நிறுவனமோ  நடவடிக்கை எடுக்க மாட்டாதா?   

Sgk-logo.png

உலகு எங்கும் மார்பு புற்றுநோய் தடுப்புக்காக என்று 
நன்கொடையாக பல பில்லியன் டொலர்களை சேகரிக்கும் 
இந்த நிறுவனத்தின் ... தலைவர் ....செயலாளர் .... பொருளாளர் 
என்று மேல் மட்டம் எல்லாமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் 

இவர்களுக்கு சம்பளம் பல மில்லியன் டொலர்கள் ஒரு மாதத்துக்கு 
இவர்களுக்கு தனியார் விமானம் .... யஃஹ்ட் கப்பல்கள் கூட உண்டு 

அமெரிக்காவை பொறுத்தவரை மார்பு புற்றுநோயால் ஒரு உறவினர் 
இறந்து இருப்பார் அல்லது பாதிக்க பட்டு இருப்பார் ... அதை நேரில் பார்த்த 
உறவினர்கள் இப்படி வேறு யாருக்கும் நடக்க கூடத்து என்று ..... நன்கொடையாக 
இவர்களுக்கு பணம் கொடுப்பார்கள் இங்கு கொடுக்காதவர்கள் மிக மிக குறைவு 

வியாபார யுத்தியை பாவித்து.... இப்படி செரீனாவை ஆடை களைவது 
மாரத்தான் ஓட்டம் .... அது இது என்று இவர்கள் பணத்தை சேகரித்துக்கொண்டே 
இருப்பர்கள் .....
ஆய்வுக்காக என்று பல கோடிகளை செலவளித்தாக கணக்கு காட்டும்  இவர்கள் 
எங்கே என்ன ஆய்வு செய்தார்கள் என்று கூறுவதில்லை.
மிகவும் சிறிய மருத்துவ நிறுவனங்களே இப்போதைய பல கான்செர் 
மருந்துகளை கண்டுபிடிக்கிறார்கள் முற்றாக மாற்ற முடியாது போனாலும் 
இப்போது பாவனையில் இருக்கும் பல  மருந்துகள் சிறிய நிறுவனங்களால் 
கண்டுபிடிக்க பட்டதுதான்.

இவர்கள் அரசியல் வாதிகளையும் காசுக்கு வழித்து வைத்திருக்கிறார்கள் 
மற்றது சனத்துக்கு லூசு .... கொடுப்பது சரி அவர்கள் என்ன செய்கிறார்கள் 
என்றாவது ஒரு கேள்வியை கேட்கலாமே? எமது சனம் கோவிலில் உண்டியலை 
நிரப்புவதுபோல.

மார்பு புற்றுநோயால் லட்ஷம் பேர் இறந்து இருக்கலாம் 
கோடியை புரட்டி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இவர்கள்தான் 
யாரவது மருந்து கண்டு பிடித்தால் விடுவார்களா ??  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மருதர்,

பத்து ருபா தானம் கொடுத்தால் ஏமு ருபா அட்மின் செலவுக்கு என கணக்கு காடடுகினம் தர்மஸ்தாபனங்கள்.

மீதி மூன்று ருபாவும், ‘அங்கே பொசியுமாம்’ என்பதாக தானமளிக்கப்பட்ட நோக்கத்திற்கு நொந்து நூடுல்ஸ் ஆகி செல்லும்.

On 10/2/2018 at 8:52 AM, புங்கையூரன் said:

ம்ம்ம்.... பாராட்டப் பட வேண்டிய முன்மாதிரி!

பாலியல் சமபந்தமான நோய்கள் பற்றிய விழிப்புணர்வு நாள் எப்போது வரும் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்!

அங்கின ஏதும் பிரச்சணையோ, புங்கையர்? ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/2/2018 at 8:07 AM, suvy said:

இதில் என்ன தவறு இருக்கு.....ஒரு நல்ல சேவையின் நிமித்தம் இந்த சேவையினை செய்கிறார். அதுவும் எவ்வளவு தன்னடக்கத்துடன் கைகளைக் கட்டிக்கொண்டு....!   tw_blush:

பெண்களை... ஆ....... எண்டு நிணைக்கும் ஆக்கள் யாழில் இருக்கினம் எண்டு, தாரும் வராமல் இருக்கோணும்...?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.