Jump to content

சிவாஜியின் நிறைவேறாத ‘தமிழ்த் தேசிய அரசியல்'


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜியின் நிறைவேறாத ‘தமிழ்த் தேசிய அரசியல்'

96.jpg

தமிழ் திரை உலகின் அடையாளமாக கொண்டாடப்படுகிற நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91ஆவது பிறந்த நாள் இன்று. திரை உலகின் உச்சி வானைத் தொட்ட அந்த நடிப்பு சிகரம் அரசியலில் ‘வனவாசம்’தான் அனுபவிக்க நேர்ந்தது என்பது வரலாற்றின் விசித்திரம்தான்.

”இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது”... இது சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தியில் கலைஞர் எழுதிய வசனம். ஆம், தமிழக அரசியலும் கூட பல விசித்திரம் நிறைந்த நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறது... இந்த விசித்திரங்களில் அதிகம் பந்தாடப்பட்டவர்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் ஒருவர்.

திரை உலகில் சிவாஜி கணேசன் கோலோச்சிய காலங்களில் கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி என்கிற ஜாம்பவான்கள் பேரறிஞர் அண்ணா எனும் பெருந்தகைக்கு உற்ற துணையாக திராவிடர் பேரியக்கத்தின் கருத்துகளை பட்டி தொட்டி எங்கும் பரவச் செய்யும் சூரியக் கதிர்களாக சுடர் விட்டு பிரகாசித்தனர்.

ஆனால் இந்த மும்மூர்த்திகள் இணைந்து நெடுந்தூரம் பயணிக்கவில்லை. நாத்திக கட்சியான திமுகவில் இருந்த சிவாஜி கணேசன் திருப்பதிக்கு சென்று திரும்ப ‘திருப்பதி கணேசா! திரும்பிப் போ கணேசா’ என சுவரொட்டிகள் முளைத்தன. உட்கட்சி பூசலால் மனம் வெதும்பிப் போன சிவாஜி கணேசன் பெருந்தலைவர் காமராசரை கரம் பிடித்தார்.

1970களுக்குப் பின்னர் அண்ணன் தம்பிகளாய் வலம் வந்த கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் எதிரெதிராகவும் கை கோர்த்தும் அரசியல் பயணங்களை மேற்கொண்டனர். காமராஜர் மறைவுக்குப் பின்னர் இந்திரா காந்தியின் தலைமை ஏற்றார் சிவாஜி கணேசன்.

96b.jpg

எம்ஜிஆரின் மறைவின் போது இந்திராவின் புதல்வர் ராஜீவ் காந்தியுடன் சிவாஜி கணேசனுக்கு கருத்து வேறுபாடு உருவானது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணியுடன் கூட்டணி அமைத்தாக வேண்டும் என ராஜீவ் காந்தி அடம் பிடிக்க அதை எதிர்த்து கலகக் குரல் எழுப்பிய சிவாஜி கணேசன் உருவாக்கியதுதான் தமிழக முன்னேற்ற முன்னணி எனும் அரசியல் கட்சி.

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கை அளவில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்திருந்தன. ஆனாலும் ம.பொ.சி.யின் தமிழரசு கழகம், ஈ.வெ.கி.சம்பத்தின் தமிழ்த் தேசிய கட்சி, சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழகத்தில் உருவான தமிழ்த் தேசிய கட்சி சிவாஜி கணேசனின் ‘தமிழக முன்னேற்ற முன்னணி’.

சிவாஜி கணேசன் 1988இல் தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கினார். அதே ஆண்டில் அவரது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி பிலிம்ஸ் (பி) லிமிடெட்-ன் கடைசி படமான என் தமிழ் என் மக்கள் படமும் வெளியானது. இப்படம் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணியின் பிரசார படமாக இருந்தது. அதேநேரத்தில் அதில் இடம்பெற்ற பாடல்கள் ‘தமிழ்த் தேசிய’ அரசியலைத் தீவிரமாக பாடின.

“வாங்கிய சுதந்திரம் ஏழைகள் எங்களுக்கா.....?

பொய்த் தேசியம் பேசிடும் கோழைகள் உங்களுக்கா?

பொறுத்திருந்த சிங்கம் இது

புரட்சியில் இறங்குதடா”

என்கிற பாடல் அன்று சிவாஜி கணேசனின் ரசிகர்களாலும் ஆதரவாளர்களாலும் கிராமங்கள் தோறும் ஒலிக்கவிடப்பட்டன. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு ஏற்பட்ட கதி சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணிக்கும் ஏற்பட்டது. 1989ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிவாஜி கணேசன் திருவையாறு தொகுதியில் தோற்றுப் போனார். தமிழக முன்னேற்ற முன்னணி ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. இதனால் கட்சியையே கலைத்துவிட்டு பின்னாளில் வி.பி.சிங் தலைமையிலான ஜனதா தளம் கட்சியின் தமிழக தலைவராக சிறிது காலம் பணியாற்றினார்.

96a.jpg

தீவிர தேசிய அரசியல் பேசிய சிவாஜி கணேசன் ஒருகட்டத்தில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க முயன்று பார்த்து தோற்றுப் போனார். ஆனால் இன்றைய தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் மருந்துக்குக் கூட சிவாஜி கணேசனின் தமிழ்த் தேசியம் தொடர்பான நூலிழை நகர்வைக் கூட வரலாற்றில் பதிவு செய்யாமல் கடந்து சென்று கொண்டே இருப்பதும் விசித்திரமே!

மதிவாணன்

 

https://minnambalam.com/k/2018/10/01/96

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.