Jump to content

அமெரிக்கா – கனடாவிற்கு இடையில் புதிய ஒப்பந்தம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா – கனடாவிற்கு இடையில் புதிய ஒப்பந்தம்!

UN-AND-CANADA-1-720x450.jpg

நஃப்டா எனப்படும் வடக்கு அமெரிக்க சுதந்திர உடன்படிக்கைக்கு பதிலாக, அதனை விட மேம்படுத்தப்பட்ட புதிய ஒப்பந்தமொன்றை அமெரிக்காவும் கனடாவும் எட்டியுள்ளன.

‘ஐக்கிய அமெரிக்க – மெக்சிக்கோ – கனடா ஒப்பந்தம்’ என குறித்த ஒப்பந்தம் பெயரிடப்பட்டுள்ளது.

நஃப்டாவில் கனடா நீடிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் யாவும் தோல்வியடைந்த நிலையில், அதிலிருந்து வெளியேறும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக பெரிதும் நம்பப்பட்டது. நஃப்டா தொடர்பில் அமெரிக்காவுடன் மெக்சிகோ ஏற்கனவே உடன்பாட்டை எட்டியுள்ளது.

இந்நிலையில், குறித்த ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் புதிய ஒப்பந்தமொன்றை எட்டியுள்ளன. இந்த உடன்பாட்டின் அடிப்படையில் கனடாவின் பாற்பொருள் சந்தையில் அமெரிக்காவின் செல்வாக்கை அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அமெரிக்க பாலுற்பத்தியாளர்களில் 3.5 வீதமானோர் கனடாவின் பாற்சந்தையை அணுகலாம்.

அத்தோடு, அமெரிக்காவிற்கான கனடாவின் வாகன ஏற்றுமதி தொடர்பில் வினைத்திறனுடன் செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கனடாவின் வாகன ஏற்றுமதியில் அமெரிக்காவின் நியாயமான வரிவிதிப்பிற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இப்புதிய ஒப்பந்தமானது, நடுத்தர வருமானம் பெறுவோரின் வருமானத்தை அதிகரிப்பதோடு, புதிய தொழில்வாய்ப்புகளையும் ஏற்படுத்துமென அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ரொபர்ட் லைட்ஸெர் மற்றும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலான்ட் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, புதிய ஒப்பந்தத்தின் ஊடாக பொருளாதார உறவை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

நஃப்டா ஊடாக அமெரிக்காவின் வர்த்தக சலுகைகளை கனடா பெற்றுவருகின்ற நிலையில், அதனை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராடியது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான இறுதிக்கட்ட தீர்மானத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று காலக்கெடு விதித்திருந்தார். அதன் பிரகாரம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், இறுதித் தருவாயில் இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

UN-AND-CANADA-2.jpg

UN-AND-CANADA-3.jpg

 

http://athavannews.com/அமெரிக்கா-கனடாவிற்கு-இ/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.