Jump to content

திலீபன் – 2018 – திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் – 2018 – திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்…

September 30, 2018

1 Min Read

Thileeban-Film.jpg?resize=655%2C364

கடந்த சில ஆண்டுகளாக திலீபனின் நினைவு நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் உலகத் திரைப்பட விழா ஒழுங்கு செய்யப்பட்டு வந்தது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல. தற்செயலாக நிகழ்ந்த ஒன்று. அதை ஒழுங்குபடுத்தும் யாழ் பல்கலைக்கழகம் நல்லூர் பெருவிழாவை முன்னிட்டு நாட்களை தெரிவு செய்யும் போது கிட்டத்தட்ட திலீபனின் நாட்களுக்குள்ளேயே திரைப்பட நாட்களில் சில வந்துவிட்டன. இது ஒரு சில பகுதியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. திலீபனின் நினைவு நாட்களை அவமதிக்கும் ஒரு செயலாக அது பார்க்கப்பட்டது.

உலக திரைப்பட விழாவினை ஆதரித்த ஒரு சிலர் பின்வருமாறு கேட்டார்கள். ‘திலீபனின் நாட்களில் யாழ்ப்பாணத்தில் ஏனைய திரையரங்குகளில் திரைப்படங்கள் ஓடவில்லையா? அங்கெல்லாம் ரசிகர்கள் படம் பார்க்கவில்லையா?’ என்று. அதற்குத் திரைப்பட விழாவை விமர்சித்தவர்கள் பின்வருமாறு கூறினர். ‘வழமையாக திரை அரங்குகளில் படம் காட்டுவது வேறு உலகத் திரைப்பட விழா என்பது வேறு. அது ஓர் அனைத்துலக வைபவம். உலக புகழ் பெற்ற திரையுலக வல்லுனர்கள் அதில் கூடுவார்கள். அந்நாட்களில் யாழ்ப்பாணத்தை நோக்கி உலகத்தின் கவனம் குவியும். எனவே அப்படி ஒரு விழாவை திலீபனின் நாட்களில் நடத்த கூடாது’ என்று. அதே சமயம் விழாவை ஆதரிப்பவர்கள் பின்வருமாறு கேட்டார்கள் ‘நினைவு நாள் என்று பார்த்தால் வருடத்தில் யாராவது ஒரு தியாகியின் நினைவு தினம் வரும். இதில் எந்த நினைவு நாள் பெரியது? எந்த நினைவு நாள் சிறியது? இதில் எந்த நினைவு தினத்தில் விழாக்களை நடாத்தலாம்? எந்த நினைவு தினத்தில் நடத்தக் கூடாது? எனவே நினைவு நாள் என்று பார்த்தால் கொண்டாட்டங்களையோ விழாக்களையோ நடத்த முடியாது’ என்று. இக்கேள்விகளுக்கு திரைப்பட விழாவை விமர்சித்தவர்கள் பின்வருமாறு பதில் கூறினர் ‘திலீபனின் தியாகமும் ஏனையவர்களின் தியாகமும் ஒன்று தான். ஆனால் திலீபன் இறந்த விதம் கொடுமையானது. அவர் நீரின்றி உணவின்றி படிப்படியாக இறந்தார். அவரது உயிர்பசை மெல்ல மெல்ல உலர்ந்து கொண்டு போன நாட்களில் யாழ்ப்பாணத்தை ஒரு மையமாக மேலுயர்த்தும் திரைப்பட விழாவை நடத்துவது சரியா?’ என்று முடிவில் மேற்கண்டவாறான வாதப் பிரதிவாதங்களின் விளைவாக உலகத் திரைப்பட விழாவின் ஏற்பாட்டாளர்கள் இம்முறை இவ்விழாவை திலீபனின் நாட்களிற்கு பின் ஒழுங்கு செய்திருக்கிறார்கள். ஓர் அனைத்துலக அளவிலான திரைப்பட விழாவின் ஏற்பாட்டாளர்கள் ஒரு தியாகியின் நினைவு நாட்களுக்கு மதிப்பளித்து அதன் கால ஒழுங்கை மாற்றியமைத்திருக்கிறார்கள். ஆனால் உள்ளுர் அரசியல் வாதிகளோ அத்தியாகியை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டார்கள்.

இம்முறை திலீபனைச் சுற்றி எழுந்த சர்ச்சைகள் யாவும் பிரதானமாக இரண்டு விடயங்களை மையமாகக் கொண்டிருந்தன. முதலாவது நினைவு கூரும் அதிகாரம் யாருக்கு உண்டு என்பது. இரண்டாவது, நினைவுத்தூபி மீது யாருக்கு உரித்து அதிகம் என்பது. மாநகரசபை அந்த இடம் தனக்கு சொந்தம் என்று கூறியது. நீதி மன்றத்திலும் அவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நினைவுகூர்தலுக்கான ஏகபோகத்தையும் அது கோரியது.

கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு கூர்தலிலும் அவ்வாறான சர்ச்சை எழுந்தது. நினைவு கூர்தலுக்கான அதிகாரம் யாருக்கு உண்டு? அதை யார் ஒழுங்குபடுத்தலாம்? என்பதே அங்கு பிரச்சினையாக்கப்பட்டது. ஆனால் நினைவு கூர்தலென்பது ஓர் அதிகாரமில்லை. அதில் ஏகபோக உரித்துக் கேட்பவர்கள் அதை ஒர் அதிகாரமாகக் கருதக்கூடும். கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவுகூர்தலை ஒழுங்கு படுத்திய மாணவர்கள் கறுப்பு சட்டை அணிந்தபடி நினைவு தூபியின் நான்கு புறமும் விறைப்பாக ஒரு வித சிப்பாய்த் தனத்தோடு நின்ற விதம் அது அதிகாரமா? எனக் கேட்கத் தோன்றியது.

நினைவு கூர விரும்புவோரை பிடித்திழுத்து பின்னுக்கு நகர்த்தும் போது அங்கே அது ஓர் அதிகாரமாகப் பார்க்கப்பட்டது. அது மட்டுமல்ல நினைவு கூரலை தத்தெடுக்கத் துடிக்கும் அரசியல் வாதிகள் ஒரு கூட்டுத்துக்கத்தைக் கொத்துவாக்குகளாக மாற்றி அதன் இறுதி விளைவாக மக்கள் அதிகாரத்தை பெற விளைகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை நினைவு கூர்தல் ஒரு அதிகாரம்தான். நினைவிடத்திற்கு உரிமை கோரி அறிக்கை விடும் அரசியல்வாதிகளும் அதை ஓர் அதிகாரமாகவே பார்க்கிறார்கள்.

ஆனால் நினைவு கூர்தல் ஓர் அதிகாரமல்ல. அது ஒரு குறிப்பிட்ட நிகழ்வு மட்டுமல்ல. அது சில நிமிட நேர அனுஷ்டானம் அல்ல. அது ஒரு சிறு திரள் நிகழ்வுமல்ல. அது துக்கிக்கும் நிகழ்வு மட்டுமல்ல. இவை எல்லாவற்றிற்கும் அப்பால் அது ஒரு தொடர் நிகழ்வு. அது ஒரு போராட்டம், இன்னமும் முடிவுறாத ஒரு போராட்டத்தின் பிரிக்கப்படவியலாத ஒரு பகுதி. எனவே அதை நினைவிடத்தோடு மட்டும் மட்டுப்படுத்தக் கூடாது. அதை நினைவு நாளோடும், நினைவுத் தூபியோடும் நினைவு கூரும் நேரத்தோடும் மட்டுப்படுத்தக் கூடாது. ஒரு நினைவுச் சுடரோடும், ஒரு பூவோடும்; அதை மட்டுப்படுத்த கூடாது.

மாறாக அது சாராம்சத்தில் ஒரு வாழ்க்கைமுறை. ஒரு தியாகியை நினைவு கூர்வதென்பது அதன் முழுமையான பொருளில் அவரைப் போல வாழ்வதுதான். அந்தத் தியாக முன்னுதாரணத்தை பின்பற்றுவதுதான் இதற்கு நினைவிடமோ நினைவு தூபியோ ஒப்பீட்டளவில் முக்கியமில்லை. நினைவுத்தூபி என்பது ஒரு குறியீடு. ஒரு மையம் அவ்வளவுதான்.

நினைவு கூர்தலை ஒரு சம்பவமாகக் குறுக்கிப்பாக்கும் அரசியல் வாதிகள் அந்த நேரத்தில் ஒரு சுடரை ஏற்றி பூக்களைத் தூவி படங்களை எடுத்து ஊடகங்களில் போடுவதோடு தமது கடமை முடிந்து விட்டதென்று கருதக் கூடும். ஆனால் தியாகிகளின் நினைவை தமது வாழ்நாள் முழுதும் சுமந்து செல்பவர்களுக்கு அவ்வாறான படம் காட்டுதல்கள் முக்கியமில்லை.

துர்ரதிஸ்டவசமாக கடந்த 09 ஆண்டுகளாக ஈழத்தமிழ் அரசியலில் அனேகமான அரசியல் நிகழ்வுகள் படங்காட்டுபவைகளாகவே காணப்படுகின்றன. ஜெனீவாவிற்குப் போவதிலிருந்து நினைவுத் தூபிக்குப் போவது வரை எல்லாமே படம் காட்டுதல்தான். புலம்பெயர்ந்த தமிழர்களிடம் பணம் பெற்று உள்ளுரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானம் கொடுத்து அதை முகநூலில் போடுவதும் படம் காட்டுதல்தான்.

இத்தகைய படம் காட்டும் அரசியலே தமிழ் மக்களை அரசியல் நீக்கம் செய்கிறது. மக்களை செயலற்ற பார்வையாளர்களாக வைத்திருக்கிறது. படத்திற்கு சுடரேற்றி பூப் போடுவதோடு தமது தேசிய கடமை முடிந்தது என்று பலரும் கருதுகிறார்கள்.

கடந்த புதன்கிழமை திலீபனின் நாளன்று அவரது நினைவுத் தூபியில் கூடியதும் சிறிய கூட்டமே. அதைவிடப் பல மடங்கு பெரிய கூட்டம் அதற்கு சில நாட்களுக்கு முன் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் நான்கு நாட்களாகக் கூடியது. கம்பன் கழகத்தின் இசை வேள்வியே அது. திலீபனின் நினைவுத் தூபியிலி;ருந்து சில நூறு மீற்றர்கள் தூரத்தில் அப்பெருங்கூட்டம் திரண்டது.

நினைவு கூர்தல் எனப்படுவது அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் அதிகளவில் பங்குபற்றும் ஒரு சிறுதிரள் நிகழ்வு அல்ல. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை அது ஒரு பெருந்திரள் நிகழ்வாக இருக்க வேண்டும். அது ஆகக்கூடிய பட்சம் மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறுவதென்றால் ஈழத்தமிழர்கள் ஆகக்கூடிய பட்சம் பெருந்திரளாக வேண்டும். கட்டமைப்பு சார் இனப்படுகொலைக்கு எதிரான கவசமும் அதுதான். எனவே நிiவு கூர்தல்களில் எப்படி பெருந்திரள் வெகுசன நிகழ்வுகளாக ஒழுங்குபடுத்தலாம் என்று சம்பந்தப்பட்ட தரப்புக்கள் சிந்திக்க வேண்டும். சுடரேற்றுவதற்கும் பூப்போடுவதற்குமப்பால் நினைவு கூர்தலை வித்தியாசமாக திட்டமிடலாம்.

உதாரணமாக நினைவு கூர்தலை ஓர் அறிவியல் நிகழ்வாக மாற்றலாம். அதில் நினைவுப் பேருரைகளை ஒழுங்குபடுத்தலாம். தமிழ் மக்கள் மத்தியில் அறிவியல் அரங்குகளில் சனத்திரள் பெருகுவதில்லை. அதற்கென்று வரையறுக்கப்பட்ட ஒரு தொகையே வரும். பெருந்திரள் மக்களைக் கூட்ட முடியாது போனாலும் தியாகிகளின் பெயரால் சமூகத்திற்குத் தேவையான அறிவாராய்ச்சிக் கட்டுரைகளை வாசிப்பது என்பது நீண்டகால நோக்கில் உன்னதமானது. முன்னுதாரணமானது. தமிழ் மக்களின் அரசியலை அறிவியல்மயப்படுத்துவதற்கு அது மிக அவசியம். இனப்படுகொலைக்கு எதிரான அனைத்துலக நீதியைப் பெறுவதென்றால் தமிழ் மக்களின் அரசியலை ஆகக்கூடிய பட்சம் அறிவியல்மயப்படுத்த வேண்டும். 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலில் அறிவுதான் ஆயுதம், அறிவுதான் பலம், அறிவுதான் சக்தி, அறிவுதான் எல்லாமும். இது ஒரு வழி.

மற்றொரு வழி பெருந்திரள் மக்களை கவரும் விதத்தில் நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்தலாம். உதாரணமாக இசை அரங்குகளை ஒழுங்கு படுத்தலாம். இறந்தவர்களை நினைவு கூர இசையும் ஒரு மகத்தான் உபகரணமாகும். இசை மேதைகளைக் கொண்டு வந்து தியாகிகளின் நினைவாக இசையரங்குகளை ஒடுங்குபடுத்தலாம். நல்லை இசை மனிதர்களை மாண்புறச்செய்யும். தியாகிகளை கௌரவப்படுத்தும். இசை அஞ்சலி நினைவுகூர்தலைப் புனிதப்படுத்தும்.

மூன்றாவது வழி நினைவு கூர்தலை ஒரு பண்பாட்டு நிகழ்வாக மாற்றலாம் இசை நிகழ்ச்சிகளைப் போல வேறு கலை நிகழ்ச்சிகளையோ, பண்பாட்டு நிகழ்ச்சிகளையோ ஒழுங்கு படுத்தலாம். உலகம் முழுவதிலுமுள்ள கீர்த்தி மிக்க படைப்பாளிகளையும், கலை மேதைகளையும் அங்கே கூடச் செய்யலாம். இதன் மூலம் சனமும் பெருகும். நினைவு கூர்தலுக்கு ஓர் அனைத்துலகப் பரிமாணமும் கிடைக்கும்.

நாலாவது வழி நினைவுகூர்தலை ஈழத்தமிழர்களுக்கு மட்டும் உரியதாகச் சுருக்காமல் தமிழ்ப்பெரும் பரப்பிற்கு விரிக்கலாம். குறிப்பாக தமிழகம், டயஸ்பொறா, தாயகம் ஆகிய மூன்று களங்களும் சங்கமிக்கும் நிகழ்வுகளாக அவற்றைத் திட்டமிடலாம். வௌ;வேறு நாடுகளில் சிதறி வாழ்ந்தாலும் தமிழ்மக்களை இணைக்கும் ஒரு பெரும்புள்ளி அது. குறிப்பாக இனப்படுகொலையை நினைவுகூரும் போது அதனை தமிழ்ப் பெரும்பரப்பிற்குரியதாகவே திட்டமிடவேண்டும். அப்பொழுதுதான் நாடுகடந்து வாழ்;ந்தாலும் ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாகச் சிந்திப்பது எப்படி? ஒரு தேசமாக வாழ்வது எப்படி? போன்றவற்றுக்கான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிக்கலாம்.எனவே நினைவு கூர்தல்களை எப்படி பெருந்திரள் நிகழ்வுகளாக ஒழுங்குபடுத்துவது என்பதைக் குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்கள் சிந்திக்க வேண்டும்.

கடந்த திங்களிரவு நல்லூர் வீதியால் போய்க்கொண்டிருந்தேன். துர்க்கா மணி மண்டபத்தில் இசைவேள்வி நடந்து கொண்டிருந்தது. இந்திய இசை மேதைகளின் கச்சேரிகளை ரசிக்க வந்த சனத்திரளால் மண்டபம் பிதுங்கி வழிந்தது. தெரு நீளத்திற்கும் இரு கரைகளிலும் வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.

திலீபனின் நினைவு நாளில் உலகத் திரைப்பட விழாவை ஒழுங்கு படுத்தியதைக் குறித்து எதிர்க்குரல் எழுப்பிய அனேகரின் கவனத்தை இது ஈர்த்திருக்கவில்லை. கம்பன் கழகம் வழமையாக ஆண்டுதோறும் இசை வேள்விகளை நடாத்துவதுண்டு. இறந்தவர்களின் நினைவாகவும் இசை நிகழ்ச்சிகளை நடத்தலாம். கம்பன் கழகத்தின் இசை வேள்வியில் ஒவ்வொரு இசையரங்கும் இறந்து போன இசைக்கலைஞர்களின் பெயரால் அழைக்கப்பட்டதை இங்கு சுட்டிக்காட்டலாம். திலீபனின் நினைவு நாளில் இசை வேள்வியை ஒழுங்கு செய்தமை தற்செயலா இல்லையா என்று தெரியவில்லை. நிச்சயமாகத் திலீபன் இந்தியப் பண்பாட்டிற்கு எதிராகவோ அதன் மிகச் செழிப்பான இசைஞான மரபிற்கு எதிராகவோ உண்ணாவிரதமிருக்கவில்லை. திலீபனைப் போற்றி இந்தியக்கலைஞர்கள் பாடியிருக்கிhறர்கள். கம்பன் கழகத்தின் இசை வேள்வியிலும் அப்படிப்பட்ட இசை மேதைகளின் கச்சேரிகள் இடம்பெற்றன. அதை ரசிப்பதற்கு யாழ்ப்பாணத்தின் படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். அது ஒரு பெரும் கூட்டம். யாழ்ப்;பாணத்தின் படித்த நடுத்தர வர்க்கம் இசை வேள்விகளையும், பட்டிமன்றங்களையும் இவை போன்ற நிகழ்ச்சிகளையும் நாடிச் செல்கிறது. இவ்வாறான நிகழ்வுகளில் திரளும் பெருங்கூட்டத்தோடு ஒப்பிடுகையில் மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஆகிய இரண்டையும் தவிர ஏனைய பெரும்பாலான நினைவு கூர்தல்களில் மிகச் சிறிய அற்பமான தொகையே கூடுகிறது.

கடந்த திங்களிரவு இசை வேள்வியை விலத்திக்கொண்டு பருத்தித்துறை வீதியில் ஏறினேன். அப்பகுதியெங்கும் சிங்களப் பயணிகள் செறிவாகக் காணப்பட்டார்கள். அவர்களை ஏற்றி வந்த பேரூந்துகள் வரிசையாக நின்றன. திலீபனின் நினைவுத் தூபி அமைந்த தெருவளைவு றியோ கிறீம் ஹவுஸின் ஒளி வெள்ளத்தின் பின்னணியில் காட்சியளித்தது. திலீபனின் நினைவிடமும் அருகிலிருந்த தற்காலிக பந்தலும் ஒளிகுன்றி ஆளரவமின்றிக் காட்சியளித்தன. இருண்ட பந்தலில் ஒரு சிறு சுடர் அனாதையாகத் துடித்து கொண்டிருந்தது.

 

http://globaltamilnews.net/2018/97657/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
    • "பண்டைய சுமேரியரின் உணவு பழக்கங்களும் மற்றும் சமையல் பலகைகளும் அல்லது செய்முறை புத்தகமும்"    மெசொப்பொத்தேமியாவில் இருந்து ஒரு சில சமையல் செய்முறை மட்டுமே தப்பி பிழைத்துள்ளன. எனினும் இதற்கு விதிவிலக்காக  7 " X 9 .5 " அளவைக் கொண்ட, மூன்று பெரிய பாபிலோனிய களி மண் பலகையில் கியூனிபார்ம் எழுத்துக்களில், அவை ஓரத்தில் சிறிது சிதைவுண்டு இருந்தாலும் கூட, சுமார் 35 உணவு வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இப்ப யேல் பலகலைக்கழகத்தில் [Yale university] வைக்கப்பட்டுள்ளன. அவை யேல் பலகலைக்கழக பேராசிரியர்களால் கண்டு பிடிக்கப்பட்டதால், யேல் சமையல் பலகைகள் என்றே அழைக்கப்படுகின்றன. இதுவே உலகின் மிகப் பழமையான சமையல் புத்தகம் ஆகும். இந்த கியூனிபார்ம் எழுத்துக்கள் எல்லோராலும் வாசிக்கக் கூடியவை அல்ல. இவை கியூனிபார்மை பற்றி சிறப்பாக எழுத வாசிக்க ஆண்டு கணக்காக படித்த எழுத்தர்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக் கூடியவை. ஆகவே இந்த சமையல் குறிப்பு அல்லது புத்தாகம்  சாதாரண சமையல்காரர் அல்லது தலைமைச் சமையற்காரருக்கு எழுதப்பட்டவையாக அதிகமாக இருக்காது. இது அன்று, 4000 ஆண்டுகளுக்கு முன்பு, நடைபெற்ற சமையலைப் பற்றிய ஒரு ஆவணமாக இருக்கலாம். இங்கு சமையல் குறிப்பு விரிவாகவும் ஆனால், அபூர்வமான, அரிதான கூட்டுப் பொருள்களை கொண்டதாகவும் இருக்கிறது. ஆகவே இவை மெசொப்பொத்தேமியாவின் அரண்மனைக்கான சிறப்பு உணவாக, அதாவது மேல் தட்டு வர்க்கத்தினருக்கான அல்லது கோயிலின் மடைப்பள்ளியில் தயாரிக்கும் மத பிரசாதமாக, சிறப்பு [விசேஷ] கால சிறப்பு சமையல்களாக  இருக்கலாம்.  ஆகவே இன்றைய உலகின் மிகப் பழமையான சமையல் குறிப்பு, பாபிலோனிலிருந்து தொல்பொருள் ஆய்வின் மூலம் எமக்கு கிடைத்திருக்கிறது. அதன் வயது சுமார் 4,000 ஆண்டுகள். ஆனால் இதிலுள்ள சமையல் குறிப்புகளை புரிந்து கொள்வதில் மிகவும் சிரமம் உள்ளது. காரணம் இந்த களிமண் பலகை உடைந்த, சிதைந்த நிலையில் உள்ளது. இதிலுள்ள வார்த்தைகள், மொழி நமக்கு புரியாததாக உள்ளது. மேலும் அந்தக் கால மக்கள் சமையல் செய்த பொருட்கள் பற்றி நாம் முழுவதும் அறியவில்லை. அதிலுள்ள சமையல் முறையில் -  சமைக்கும் நேரம், சமையலுக்குத் தேவையான பொருட்களின் அளவு போன்றவை காணப்படவில்லை. ஆனால் அந்தக் குறிப்பைப் படிக்கும் போது, அவை கை தேர்ந்த சமையல்காரருக்காக  தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.மேலும் உயிரியல்,விஞ்ஞானம் , தொல்பொருள், இலக்கியம் சார்ந்த ஒரு ஊகத்தின் அடிப்படையில் அங்கு குறிக்கப்பட்ட கூட்டு பொருள்கள், இன்று ஓரளவு அடையாளம் காணப்பட்டுள்ளன.  அசிரியன்கள்[Assyrian] பற்றி ஆராயும்  பிரெஞ்சு நாட்டின்  ஜீன் போட்டீரோ (Jean Bottero), என்ற ஆராய்ச்சியாளர், மார்ச் 1985 ல் அருங்காட்சியக பத்திரிகை ஒன்றில் உலக மக்களுக்கு பேட்டி அளிக்கும் போது,இதிலுள்ள தகவல்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி மயக்கமடையச் செய்கின்றன. சமையல் குறிப்பில் அவர்களின் செல்வ வளம், துல்லியமாய் சமைத்தல், நெளிவு சுளிவுகள், ஆடம்பரமான நுணுக்கங்கள் போன்றவற்றைத் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன என்றும் அந்த ஆதிகாலத்திலேயே இத்தனை தகவல்கள் சொல்லப்பட்டிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளார் முதலாவது, கி மு 1750 ஆண்டை சேர்ந்தது என கருதப் படும், YBC 4644, என அழைக்கப்படும் வில்லையாகும். இது 25 சமையல் செய்முறைகளை கொண்டுள்ளது. இவை 21 புலால் துவட்டலும் [மெதுவாக வேகவைத்த சமையல் / stews] 4 காய்கறி துவட்டலும் ஆகும். இந்த சமையல் குறிப்பு கலக்கும் அல்லது சேர்க்கும் மூலப் பொருட்களின் பட்டியலையும் அது எந்த வரிசையில் சேர்க்கப்பட வேண்டும் என்பதையும் தருகிறது. ஆனால் எவ்வளவு, எவ்வளவு நேரம் போன்ற தரவுகள் இல்லை.  இரண்டாவது வில்லை YBC 8958, ஆகும்.இது 7 சமையல் குறிப்பை விரிவாக தருகிறது. வில்லை பல இடங்களில் முறிந்து காணப்படுவதுடன் இரண்டாவது சமையலின் பெயர் காணப்படவில்லை. ஆனால் இது ஒரு சின்ன பறவை ஒன்றில் சமைத்த உணவு. அதிகமாக அந்த பறவை கௌதாரியாக [partridges] இருக்கலாம்?  அதில் ஒரு சமையல் குறிப்பு இப்படி சொல்கிறது: "தலையையும் பாதத்தையும் அகற்று, உடலை விரித்து பறவையை கழுவு, பின் இரைப்பை, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவற்றை பிடுங்கி ஒதுக்கி வை,  பின் இரைப்பையை பிரித்து துப்பரவு செய், அடுத்து, அந்த பறவையின் உடலை அலசி [கழுவி] அதை தட்டையாக கிடத்து, ஒரு சட்டி எடுத்து அதற்குள் பறவையின் உடலையும் இறப்பையையும் மற்றும் இதயம், கல்லீரல், நுரையீரலையும் போட்டு பின் அடுப்பில் வைக்கவும்" ஆனால் நீர் அல்லது கொழுப்பு சேர்த்து அடுப்பில் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடவில்லை. இது ஒரு பொதுவான பழக்கப்பட்ட சமையல் என்பதால், அறிவுறுத்தல் ஒன்றும்  தேவையில்லை என அதிகமாக விட்டிருக்கலாம். சமையல் குறிப்பு மீண்டும் இப்படி தொடர்கிறது: "முதலாவது கொதித்தலின் அல்லது கொழுப்பில் பழுப்பாய் வறுத்த பின், மீண்டும் சட்டியை நெருப்பில் வை, புதிய தண்ணீரால் சட்டியை கழுவு, பாலை நன்றாய் அடிச்சு சட்டியில் விட்டு பறவையுடன் நெருப்பில் வை, பின் சட்டியை எடுத்து வடி, சாப்பிட முடியாத பறவையின் பகுதிகளை வெட்டி ஏறி, மற்றவைக்கு உப்பு சேர், அவையை சட்டியில் பாலுடனும் கொஞ்ச கொளுப்புடனும் இடு, மேலும் இதனுடன் சில ஏற்கனவே கழுவி உரித்து வைக்கப்பட்ட அரூத அல்லது அருவதா என்ற மூலிகையை சேர், அந்த கலவை கொதிக்கத் தொடங்கியதும், அதனுடன் துண்டு துண்டாக வெட்டப்பட்ட லீக்ஸ், உள்ளி, மற்றும் ரவை, மற்றும் தேவைக்கு மட்டும் அளவான வெங்காயம் சேர்த்து கொள்," "Remove the head and feet. Open the body and clean the birds, reserving the gizzards and the pluck [heart, liver, and lungs]. Split the gizzards and clean them. Next rinse the birds and flatten them. Prepare a pot and put birds, gizzards and pluck into it before placing it on the fire" It does not mention whether fat or water is added -- no doubt the method was so familiar that instructions were considered unnecessary- After the initial boiling or braising, the recipe continues  "Put the pot back on the fire. Rinse out a pot with fresh water. Place beaten milk into it and place it on the fire. Take the pot (containing the birds) and drain it. Cut off the inedible parts, then salt the rest, and add them to the vessel with the milk, to which you must add some fat. Also add some rue [aromatic woody herbs or shrubs], which has already been stripped and cleaned. When it has come to a boil, add minced leek, garlic, samidu [Semolina?] and onion (but not too much onion)" இப்படி பறவையை சமைக்கும் அதே தருவாயில், சமைத்த உணவை  பரிமாறுதலுக்கான ஆயுத்தம் செய்யவேண்டும் என்பதால், அதன் அறிவுறுத்தல் இப்ப இப்படி அதன் பின் போகிறது: "நொறுக்கப்பட்ட தானியத்தை கழுவு, பாலில் அதை மென்மையாக்கு, அதை பிசையும் போது, உப்பு, ரவை, லீக்ஸ், உள்ளியும் அத்துடன் தேவையான பாலும் எண்ணெயும் கலந்து மென்மையான கூழாக்கி - மாவு பசையாக்கி -, அதை ஒரு சில நேரம் நெருப்பில் வாட்டு. பின் இரு துண்டுகளாக வெட்டு, பின் பறவையை தாங்கக் கூடிய பெரிய தட்டை எடு, தட்டின் அடியில் முன்னமே மேற்கூறியவாறு தயாரிக்கப்பட்ட பிசைந்த மாவை வை, விளும்புக்கு வெளியே அது பெரிதாக தொங்க்காதவாறு பார்த்துக்கொள், அடுப்பிற்கு மேல் அதை வேக வை, ஏற்கனவே பக்குவபடுத்தப் பட்ட அந்த வெந்த பிசைந்த மாவிற்கு மேல் பறவையின் உடலையும் மற்றும் பிடுங்கி எடுத்த பகுதிகளையும் வை, அதை வேகவைத்த ரொட்டியின் இரண்டாவது வெட்டிய பகுதியால் மூடு, அதை பரிமாறலுக்கு அனுப்பு."  "Rinse crushed grain, then soften it in milk and add to it, as you kneed it, salt, samidu, leeks and garlic along with enough milk and oil so that a soft dough will result which you will expose to the heat of the fire for a moment. Then cut it into two pieces. Take a platter large enough to hold the birds. Place the prepared dough on the bottom of the plate. Be careful that it hangs over the rim of the platter only a little. Place it on top of the oven to cook it. On the dough which has already been seasoned, place the pieces of the birds as well as the gizzards and pluck. Cover it with the bread lid [which has meanwhile been baked] and send it" [to the table.] என்கிறது. மூன்றாவது வில்லை 3 சமையல் குறிப்பை கொண்டுள்ளது. இந்த வில்லை உடைந்து காணப்படுவதுடன் இது ஒரு பானையில் பறவை, அடையாளம் காணப்படாத ஒரு வித தானியம் [butumtu?], இறைச்சி போன்றவையை  சேர்த்து சமைக்கும் ஒரு முறையாகும். என்றாலும் நின்காசியை கௌரவிக்கும், சுமேரியர்களின் பியர் மது தயாரிக்கும் முறையைப்பற்றி, வரிசையில் பாடப்பட்ட  கி மு 1900 ஆண்டு துதி பாடல் ஒன்றே [Sumerian Hymn to Ninkasi] உலகின் முதல் முழுமையான, சமையல் புத்தாகமாக கருதப்படுகிறது. இந்தப்பாடல் அதன் என் மொழிபெயர்ப்பும் என் "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை" என்ற கட்டுரையில் இங்கு நாவூற வாயூற பகுதியில் 18  / 04 / 2024  தந்துள்ளேன்.   இறுதியாக,  இப்போது, இன்றைய நவீன உலகில், பெண்ணோ ஆணோ பொதுவாக சமையல் புத்தகம் இல்லாமல் சமைப்பதில்லை. ஏராளமான சமையல் புத்தகங்கள், சஞ்சிகைகள் பரந்த அளவில் காணப்படுகின்றன. ஆனால் எமது பாட்டியை, பாட்டனை  கேட்டால், அவர்கள் எள்ளி நகையாடு கிறார்கள்? அப்படி என்றால், உண்மையாகவே, சமையல் புத்தகம், சமையல் குறிப்பு முன்பெல்லாம் எழுதப்படுவதில்லையா? என கேட்பவர்களும் உள்ளார்கள்.  அவர்களுக்கு  அதெல்லாம் இல்லை. கிட்டத்தட்ட நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்த நாளாந்த சமையல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை பழங்கால 'யேல் சமையல் பலகைகள்' இன்று எடுத்துகாட்டு கின்றன.  இந்த சமையல் குறிப்புகளில் ஒன்று மட்டும் தெளிவாகவும், பொதுவானதாகவும் உள்ளது. என்ன தெரியுமா? அதுதான் எல்லா உணவிலும் கோழி, மரக்கறிகள், தானியம் மற்றும் தண்ணீர் என்பவை பயன்படுத்தப் பட்டன. இதற்கு முன்பு பொதுவாக,  நேரடியாய் நெருப்பில் போட்டு அல்லது சுட்டு  அல்லது எதாவது பாத்திரம் மாதிரி ஒன்றில் வதக்கி அல்லது வறுத்து அல்லது தீத் தணலில் புரட்டி புரட்டி வாட்டி தமது உணவுகளை தயாரித்தனர். அதன் வளர்ச்சியாகத் தான், இந்த  நீரில் போட்டு சமைப்பது நாளடைவில் பரிணமித்து இருக்கலாம்? அப்படி என்றால் நீராவிச் சமையல் ?? உங்கள் கேள்வி என் காதில் ஒலிக்கிறது . விரைவில் உங்களுக்கு சமர்ப்பிப்பேன்    நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • போட்டியில் இணைந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 4 மணித்தியாலங்களே உள்ளதால் தாமதிக்காமல் விரைவில் கலந்துகொள்ளுங்கள்.   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன்
    • நானும் போட்டியில் குதித்துள்ளேன்!   # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         KKR   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         CSK   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         PBKS 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         CSK 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         KKR 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         KKR 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.