Jump to content

இன்ஸ்டாகிராமில் நாவல் வாசிப்பு; ஒரு நூலகத்தின் புதுமை முயற்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்ஸ்டாகிராமில் நாவல் வாசிப்பு; ஒரு நூலகத்தின் புதுமை முயற்சி

oov7c5ocjfqpk69ev9uz

புத்தகம் வாசிக்கும் ஆர்வம் இருந்தால், மின்னூல் வடிவில் ஸ்மார்ட்போனிலேயே படித்துக்கொள்ளலாம். அல்லது மின்னூல் வாசிப்பான்களான இபுக் ரீடரில் வாசிக்கலாம். எல்லாம் சரி, இன்ஸ்டாகிராமில் புத்தகம் படிக்க முடிந்தால் எப்படி இருக்கும்?

இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் பார்க்கலாம், வீடியோக்களும் பார்க்கலாம். கார்ட்டூன்கள், அனிமேஷன்களும் கூட பார்க்கலாம். ஆனால் புத்தகம் படிக்கலாம் என்பது புதிதாக இருக்கிறதா? இந்த வசதியை தான் அமெரிக்காவின் நியூயார்க் பொது நூலகம் (NYPL)  ’இன்ஸ்டா நாவலஸ்’ (#InstaNovels) எனும் புதுமையான சேவையாக அறிமுகம் செய்திருக்கிறது. இந்த சேவை மூலம் முழு நாவல்களை இன்ஸ்டாகிராமிலேயே படித்துவிடலாம்.

வீடியோ வடிவில் கதை சொல்ல உதவும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் வசதியை பயன்படுத்தி நியூயார்க் பொது நூலகம் இந்த இன்ஸ்டா நாவல்களை உருவாக்கியுள்ளது. இதற்காக ’மதர் இன் நியூயார்க்’ எனும் விளம்பர நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்நிறுவனம் தான், இன்ஸ்டா நாவல்களை வடிவமைத்துக்கொடுத்துள்ளது.

சிறுவர் இலக்கியத்தில் அழியா புகழ் பெற்ற லூயிஸ் கரோல் எழுதிய ‘அலைஸ் இன் தி வொண்டர்லாண்ட்’ நாவல், இந்த வரிசையில் முதல் புத்தகமாக அறிமுகமாகி இருக்கிறது. அடுத்ததாக சார்லட்டே பெர்கின்சின், ’தி யெல்லோ வால்பேப்பர்’ மற்றும் பிரான்ஸ் காப்காவின் ’மெட்டமார்பாசிஸ்’ ஆகிய நாவல்கள் இன்ஸ்டா நாவல்களாக வெளியாக உள்ளன.

இன்ஸ்டாகிராமில் எப்படி படங்களையும், வீடியோக்களையும் பார்ப்போமோ அதே போல, இன்ஸ்டா நாவல்களையும் வாசிக்கலாம். இதற்காக இன்ஸ்டாகிராமில் நியூயார்க் பொது நூலகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள பக்கத்தை  (https://www.instagram.com/nypl/) பின் தொடர்வதன் மூலம் நாவல்களை வாசிக்கலாம். அலைஸ் இன் தி வொண்டர்லாண்ட் நாவல் இரு பகுதிகளாக வெளியாகியுள்ளது. முதல் பகுதியில் 80 பக்கங்கள் உள்ளன.

நாவலுக்கான பக்கத்தில் கீழே கைவிரலை அழுத்தினால் அதில் உள்ள பக்கங்களை படிக்கலாம். கைவிரலை எடுத்துவிட்டால் அடுத்த பக்கம் திருப்ப படும். இப்படி ஒவ்வொரு பக்கமாக படிக்கலாம். பின்னோக்கி செல்ல இடதுபுறமாக கைவிரலால் செய்கை செய்ய வேண்டும். புத்தகத்தின் பக்கங்களை வாசிப்பதோடு, அதற்கான விளக்க சித்திரங்கள் மற்றும் அன்மேஷன் படங்களையும் இடையில் காணலாம்.

டிஜிட்டல் யுகத்தில் வாசிப்பு பழக்கம் குறைந்து இளம் தலைமுறை கேட்ஜெட் திரைகளில் மூழ்கி இருப்பதாக கருதப்படுகிறது. இன்னொரு பக்கம் நூலகங்கள் மியூசியங்களாக மாறும் நிலை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்த இரட்டை சவாலுக்கு நடுவே நூலகங்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ளும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வரிசையில் சபாஷ் போட வைக்கும் செயலாக இன்ஸ்டா நாவல்கள் அமைகிறது.

நெட்டிசன்கள் அதிக நேரம் செலவிடும் ஸ்மார்ட்போன் சாதனம் மற்றும் அதில் பிரபலமாக இருக்கும் சேவைகளில் ஒன்றான புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராம் இரண்டையும் இணைத்து, நியூயார்க் பொது நூலகம் இன்ஸ்டா நாவல்களை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து புதிய நாவல்கள் இந்த வடிவில் வெளியாகும் போது, இந்த பக்கமே ஒரு டிஜிட்டல் புத்தக அலமாரியாக மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது.

’நூலகம் என்பது புத்தகங்கள் புழுதி படிந்து கிடக்கும் கட்டிடம் மட்டும் அல்ல என மக்கள் புரிந்து கொள்ள விரும்புகிறோம்” என்று நியூயார்க் பொது நூலக தலைமை நூலகர் கிறிஸ்டோபர் பிலாட் பார்ட்யூன் இதழிடம் தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் யுகத்தில் வாசகர்களை, தேடிச்செல்வதே சரியாக இருக்கும் என்பதோடு, அவர்கள் விரும்பும் நவீன வடிவிலேயே புத்தகங்களை வழங்குவது சரியாக இருக்கும் எனும் எண்ணத்தில் அமெரிக்க நூலகம் புதுமையான முயற்சியில் இறங்கியுள்ளது. மற்ற நூலகங்களும் இதே போல யோசிக்கத்துவங்கி நவீன் டிஜிட்டல் சேவைகளை பொருத்தமான முறையில் பயன்படுத்திக்கொள்ள முற்பட்டால், இது போன்ற மேலும் பல முன்னோடி முயற்சிகளை எதிர்பார்க்கலாம்.

நியூயார்க் பொது நூலகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கம்: https://www.instagram.com/nypl/

 

http://cybersimman.com/2018/09/18/instagram-16/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.