Jump to content

சமூகநல அரசாங்கங்களின் முடிவு: ஸ்கன்டினேவிய அனுபங்கள்


Recommended Posts

சமூகநல அரசாங்கங்களின் முடிவு: ஸ்கன்டினேவிய அனுபங்கள்
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 
 

மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு, தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருகிறது.   

மக்களின் நலன்களைக் காக்கும் அரசாங்கம், ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால், போராட்டங்களும் புரட்சிகளும் அரசாங்கத்தை, மக்கள் நலன் பேணும் ஒன்றாக மாற்றின. இப்போது நிலைமை மாறுகிறது.   

அரசாங்கங்கள் சமூக நலன்களைத் தவிர்ப்பனவாக உருமாறியுள்ளன. இம்மாற்றம், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது.   

பல ஐரோப்பிய நாடுகள், மக்கள் நலன்களை இல்லாமல் செய்கின்ற நிலையிலும் சுவீடன், நோர்வே ஆகிய ஸ்கன்டினேவிய நாடுகள், சமூக நலத்திட்டங்களைத் தொடர்ந்து பேணி வந்தன. ஆனால், இன்று நிலைமை மாறுகின்றது.   

உலகின் பல்வேறு பகுதிகளுடன் ஒப்பிடும்போது, ஸ்கன்டினேவிய நாடுகளுக்கு தனித்துவமான பண்பு உண்டு. தொழிலாளர் போராட்டங்களின் நீண்ட வரலாறு, வலிமையான தொழிற்சங்கங்கள், தொடர்ச்சியான தொழிற்கட்சிகளின் ஆட்சி, சமூகநல அரசாங்கத்தின் உருவாக்கமும் அதன் நிலைபேறு தன்மையும் என்பன, அவற்றின்  தனித்துவமான பண்புகள் ஆகும்.   

கடந்த பத்தாண்டுகளில், இந்நாடுகளில் வலதுசாரிச் சிந்தனையும் வலதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கும் அதிகரித்து வந்துள்ளன. 

இவை, பல்வேறான தாக்கங்களை, அந்நாடுகளின் அரசியலிலும் சமூகத்திலும் பண்பாட்டு நடைமுறைகளிலும் ஏற்படுத்தியுள்ளன. உலகின் இறுதிச் சமூகநல நாடுகள் என்றழைக்கப்படும் இந்நாடுகளில், சமூகநல அரசாங்கத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.   

சமூகநல அரசாங்கங்களின் கதை: சொல்லாமல் விட்டது  

சமூகநல அரசாங்கம் என்ற கருத்தாக்கம், இரண்டாம் உலகப் போரின் முடிவில் மேற்குலக நாடுகளில் தோற்றம் பெற்றது. ரஷ்யப் புரட்சியின் விளைவால், விளைந்த மக்கள் நலத் திட்டங்களை, மய்யப்படுத்திய சோவியத் அரசாங்கம், இதற்கு முன்மாதிரியாக இருந்தது.   

இரண்டாம் உலகப்போரின் விளைவால், ஏற்பட்ட பின்னடைவை ஈடுகட்டவும் சமூகத்தை முன்னோக்கி நகர்த்தவும் சோவியத் ஒன்றியமும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மறுகட்டுமானப் பணிகளில் இறங்கின. இது மக்கள் மய்ய சமூகப் பொருளாதார நலன்களை, முன்னிறுத்துவனவாக இருந்தன.   

image_b491b5f22d.jpg

சோவியத் ஒன்றியத்திலும் அதன் நட்பு நாடுகளிலும் ஏற்பட்ட மாற்றமும் அங்கு தொழிலாளர் வாழ்வில் ஏற்பட்ட முன்மாதிரியான மாற்றங்களும் மேற்குலக நாடுகளில் உள்ள தொழிலாளர்களைச் சிந்திக்க வைத்தன.   

அவர்கள், தமது அரசாங்கங்கள், சமூக நலன்களை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினார்கள். தொடக்கத்தில், இக்கோரிக்கைகளைப் புறக்கணித்த அரசாங்கங்கள், காலப்போக்கில் தொழிற்சங்கங்களின் வலிமையான செயற்பாடுகளின் விளைவால், கலக்கமடைந்தன.   

கொம்யூனிசத்தின் செல்வாக்கு, அதிகரிக்கும் அபாயத்தை இனங்கண்டு கொண்ட மேற்குலக முதலாளித்துவ நாடுகள், சமூகநலத் திட்டங்கள், சலுகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், சமூக ஜனநாயகக் கட்சிகள், தொழிற்சங்கங்களின் விசுவாசத்தைப் பெற்றுக் கொள்ளத் திட்டமிட்டன.   

அதேவேளை, தத்தம் நாட்டில் உள்ள கொம்யூனிஸ்டுகள், தீவிர இடதுசாரிகளை ஒடுக்கினார்கள். அதற்கு ‘கொம்யூனிச அபாயம்’ எனப் பெயர் சூட்டினர்.   

சமூக நலத்திட்டங்களைப் பெறுவதற்காக, அந்நாட்டுத் தொழிற்சங்கங்கள் இதற்கு உடன்பட்டதோடு, அரசாங்கங்களுக்கு கொம்யூனிஸ்ட் அபாயத்தை ஒடுக்க உதவியும் வழங்கினர்.   

அனைவருக்கும் வேலைவாய்ப்பு, வேலையில் உத்தரவாதம், அனைவருக்கும் இலவச மருத்துவம், இலவச உயர்கல்வி, முழுச் சம்பள ஓய்வூதியம், தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச ஓய்வு விடுதிகள், பெண்களுக்கு நீண்ட பேறு கால விடுமுறை எனப் பலவகைப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் சோவியத் முகாமில் இருந்த அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டன. இதன் பகுதிகள் சமூக நலன்களாக, மேற்குலக நாடுகளுக்கு வந்து சேர்ந்தன.   

பல்வேறு வடிவங்களில், நாம் காணுகின்ற சமூக நலன் பேணும் முதலாளித்துவ அரசாங்கமானது, ஆளும் வர்க்கத்தின் நல்லெண்ணத்தின் விளைவானதல்ல.  முதலாளித்துவ சமூகத்தில் எடுக்கப்படும் சமூக நல நடவடிக்கை ஒவ்வொன்றும், ஒடுக்கப்பட்ட வர்க்கங்களது, தொடர்ச்சியான போராட்டங்களின், நேரடியான அல்லது மறைமுகமான விளைவேயாகும்.  

முதலாளித்துவம், ஏகாதிபத்தியமாக மாறியதும், நிதி மூலதனத்தின் எழுச்சியும் ஆதிக்கமும் உலக மயமாதலும் மூலதனத்தின் அசைவாற்றலும் 1980களிலிருந்து, ஓர் அரசியல் சக்தியாக நவதாராளவாதம் கண்ட எழுச்சியுடன் சேர்ந்து கொண்டன. அவை, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், சமூகப் பாதுகாப்பினதும் சமூக நலனினதும் பிரதான ஆதாரமான அரசாங்கம், ஆற்றிய பங்குக்குக் குழி பறித்துள்ளன.   

நிதிமூலதனத்தின் வளர்ச்சியும் ஏகபோகமும் அரசாங்கங்களின் மீது ஏற்படுத்தியுள்ள அழுத்தங்களின் காரணமாக, அரசாங்கங்கள் தமது சமூகப் பொறுப்பைக் கைவிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன.   

இதன் விளைவாக, அரசாங்கங்கள் வழங்கி வந்த சொற்ப சமூகப் பாதுகாப்பு நிவாரணங்கள் மட்டுமன்றி, அரசாங்கங்கள் பொறுப்பெடுத்து இருந்த கல்வி, உடல் நலன், பொதுசனப் போக்குவரத்து, நீர் வழங்கல் ஆகிய அத்தியாவசிய சேவைகள், மெல்ல மெல்லச் சிதைய விடப்பட்டுள்ளன. சில சமயங்களில் அவை ஒரே வீச்சில், வெட்டிக் குறுக்கப்பட்டோ, கைவிடப் பட்டோ உள்ளன.  

இதில் கவனிக்க வேண்டியது யாதெனில், சமூக நலத்தில் கல்வியும் பொதுச் சுகாதாரமும் பெற்ற முக்கியத்துவம், பொருளியல் வளங்களின் மீதும், உடல் வலிமையும் போதியளவு எழுத்தறிவும் கொண்ட ஓர் உழைப்பாளர் படையினது தேவை உணரப்பட்டிருப்பதன் மீதும் தங்கி இருந்தது.  

அந்நிய அரசாங்கங்களிடமிருந்தும் கடன் வழங்கும் முகவர்களிடமிருந்தும் சர்வதேச வங்கிகளிடம் இருந்தும் கடன் வாங்கியதால், கடன்பட்ட நாட்டின் பொருளாதாரம், வெளியிலிருந்து வந்த அழுத்தங்களால் வழிநடத்தப்பட்டதுடன், வட்டியுடன் கடனை மீளச் செலுத்துவது, பொருளாதார நிகழ்ச்சி நிரலில் ஒரு பிரதான அம்சமாகியது.   

அரசாங்க நிறுவனங்களை ‘மீள்கட்டமைக்குமாறும்’ ‘சீர்திருத்தங்களை’ மேற்கொள்ளும் படியும், கடன் வழங்கியோர் வற்புறுத்தியதால், சமூக சேவைகளுக்கும் பிற அரசாங்கத்தின் பொறுப்புகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டிய நிதி, வரிக் குறைப்பு முதலான பிற கடப்பாடுகளால் பறிக்கப்பட்டது.  

மூன்றாம் உலக நாடுகளின் அரசாங்கங்கள், பெருவாரியான தருணங்களில், சமூகப் பாதுகாப்பினது காவலனும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவோனும் என்ற தமது வகிபாகத்தில் இருந்து தவறி விட்டன.   

மூன்றாம் உலக நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தாங்கள் பரிந்துரைத்த பொருளியல் தாராளமயம், தனியார்மயம், பொருளாதாரச் சீர்திருத்தங்கள், மீள் கட்டமைத்தல் என்பனவற்றை முற்று முழுதாக, நிறைவேற்றத் தவறியதாலேயே ஏற்படுகின்றன என்று, நவ தாராளவாதிகளும் உலக மயமாக்கலின் பிற ஆதரவாளர்களும் வற்புறுத்திக் கூறுகின்றனர்.  இன்று இலங்கையில் நடைபெறும் வாதப்பிரதிவாதங்களை, இதன் பின்னணியில் பொருத்திப் பார்க்கவியலும்.   

சுவீடனின் தேர்தல் முடிவுகள்: மாறுங்காலங்கள்  

சுவீடன் மிக நீண்டகாலமாக, சமூகநலன்பேணும் அரசா‍கவும் தொழிற்கட்சியின் ஆதிக்கத்துடன் கூடிய அரசாங்கமாகவுமே, தொடர்ச்சியாக இருந்து வந்திருக்கிறது.   

ஆனால், இம்மாதம் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள், சுவீடனும் வலது தீவிரத் தேசியவாதத்தின் பக்கம் திரும்புவதைக் குறிகாட்டியது. முழுமையான முதலாளித்துவ நவதாரளவாதத்தை ஆதரிக்கும் வலதுசாரிக் கட்சியின் வளர்ச்சி, புறக்கணிக்கக்கூடியதல்ல. அரசாங்கத்தில், செல்வாக்குச் செலுத்தும் நிலைக்கு அக்கட்சி வளர்ந்துள்ளது.   

நவ-நாஜி, வெள்ளை மேலாதிக்கவாத இயக்கத்தில் இருந்து தோன்றி வந்ததான, சுவீடன் ஜனநாயகக் கட்சி, 17.6 சதவீத வாக்குகளுடன் 349 தொகுதிகள் கொண்ட நாடாளுமன்றத்தில், 63 தொகுதிகளில் வென்று, மிதவாதிகளுக்குப் பிந்தைய மூன்றாவது பெரும் தனிக்கட்சியாக ஆகியிருக்கிறது.   

கடந்த நூறு ஆண்டுகளின் பெரும்பகுதியில், சுவீடனை ஆட்சி செய்து வந்திருக்கும் சமூக ஜனநாயகக் கட்சி, ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தில், அதன் மிகக்குறைந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறது. பாரம்பரியமாக இரண்டாவது பெரிய கட்சியாக இருந்து வந்திருக்கக் கூடிய மிதவாதிகளின் கட்சியும் தனக்கான ஆதரவில் ஒரு கூர்மையான வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது.  

சுவீடனில் நடந்து கொண்டிருப்பவை, முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நெருக்கடியின் கீழ், ஐரோப்பா முழுமையிலும், உலகின் பெரும்பகுதியிலும் காணக்கூடியதாக இருக்கின்ற, பொதுவான அரசியல் பாதை வழியையே பின்பற்றிச் செல்கிறது என்பதைப் பறைசாற்றுகின்றன.  

 அதேவேளை, சமூகநல அரசாங்கமாகச் சொல்லிக்கொண்டாலும், நவதாராளவாதத்துடன் சமூகநலன்களைச் சமன்செய்து, முதலாளித்துவ நாடாகத் திகழ முனைந்த, ஒரு நாட்டின் கதையாக இதைச் சொல்லவியலும்.   

image_578f02ef88.jpg

பொருளாதார ஒத்துழைப்பு, அபிவிருத்திக்கான அமைப்பின் (Organisation for Economic Co-operation and Development - OECD) 2015 ஆம் ஆண்டு அறிக்கையில், 1985க்கும் 2010க்கும் இடையிலான காலத்தில், அமைப்பில் அங்கம் வகிக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளில், வேறெந்த நாட்டை விடவும், சுவீடனில் சமத்துவமின்மை, வேகமாய் வளர்ந்திருந்ததாக குறிப்பிடப்பட்டள்ளது.  

2014இல், மொத்த செல்வத்தில் 68 சதவீதத்துக்கும் அதிகமானவை, 10சதவீதம் பேரிடம் இருந்ததாக, ‘கிரெடிட் சுவிஸ் உலகளாவிய சொத்து அறிக்கை’ (Credit Suisse’s Global Wealth Report) கூறுகிறது.   

இந்த மட்டத்திலான செல்வக் குவிப்பு, சுவிஸ்லாந்தைத் தவிர்த்து, ஐரோப்பாவிலுள்ள வேறெந்த நாட்டை விடவும் அதிகம். இதன் பின்னணியில், தொடர்ச்சியாகச் சமூகநல வெட்டுகள், கடந்த பத்தாண்டுகளில் நடைபெற்று வந்துள்ளன. 

இவ்வெட்டுகளின் கேடுகளை, சுவீடன் மக்கள் அனுபவித்து வந்த நிலையில், அனைத்துக்கும் காரணம் அகதிகளாகவும் குடியேற்றவாசிகளாகவும் வந்திருக்கின்றவர்களே என்று, வலதுதீவிர தேசியவாதிகள் குற்றஞ்சாட்டி, ஆதரவைப் பெற்றுள்ளார்கள்.   

இது, ஏனைய ஸ்கன்டினேவிய நாடுகளிலும் நடக்கிறது. இதன் மூலம் இரண்டை இவர்கள் சாதிக்கிறார்கள்.   

முதலாவது, அகதிகளுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் எதிரான மனோநிலையையும் அதைக் கொள்கை வகுப்பிலும் நடைமுறைப்படுத்த, அரசாங்கத்தைக் கட்டாயப்படுத்துகிறார்கள்.   

இரண்டாவது, மக்கள் கட்டும் வரிப்பணம், சமூகநலத்திட்டங்களின் விளைவால் மக்களுக்குப் பயன்படாமல், அகதிகளுக்குப் பயன்படுகிறது என்ற பொய்யை, மக்கள் மத்தியில் வளர்க்கிறார்கள். இதன்மூலம், சமூகநலத்திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆதரவைப் பெறுகிறார்கள்.   

நோர்வே: சந்தையைக் கட்டியணைத்தல்  

சுவீடன் மக்களிடம் இருக்கும் மனோநிலையே, நோர்வேஜியர்களிடமும் உருவாக்கப்பட்டுள்ளது. அதேவேளை, சந்தைப் பொருளாதாரமே அனைத்துக்கும் தீர்வு என்று அவர்கள் நம்பவைக்கப்படுகிறார்கள்.  

திறந்த சந்தையும் போட்டியுமே நல்லது என்றும், மக்கள் தங்கள் வாழ்வைத் தாங்களே பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கியுள்ளன.   

எண்ணெய் வளத்தின் விளைவால், மிக உயர்வான சமூகப் பொருளாதாரக் குறிகாட்டிகளை அடைந்த சமூகம் என்ற நிலையில், தனியன்களாக வாழ்வது என்பதைப் பிரதானப்படுத்தி, சமூகவாழ்வை அவர்கள் மெதுமெதுவாகத் தொலைக்கிறார்கள்.   

அண்மைய கணக்கெடுப்பின்படி, ஒரு நோர்வேஜிய வீட்டில், சராசரியாக 1.21 மனிதர்களே வசிக்கிறார்கள். இது சொல்லுகிற செய்தி மிக வலியது.   

சந்தைகளின் கூடாரமாக, நுகர்வின் உச்சபட்ச மய்யங்களில் ஒன்றாக, நோர்வே இருக்கிறது. உயர்வான வாழ்க்கைத் தரத்தை உறுதிசெய்தது, சமூகநலத் திட்டங்களேயாகும்.   

ஆனால் இன்று, சந்தைதான் அதைத் தக்கவைக்கும் என நம்பப்படுகிறது. கட்டற்ற சந்தைகளை, மெதுமெதுவாக அனுமதித்த தொழிற்சங்கங்கள், இன்று வெறுமையை எதிர்நோக்குகின்றன. இப்போது, அரசாங்கங்கள் தனியார் மயமாக்கலை அதிகரிக்கின்றன. சந்தைப் பொருளாதாரம், அனைத்தையும் தீர்மானிக்க அனுமதிக்கிறது.   

சமூகநலன்களின் விளைவால் உருவான உயர் வாழ்க்கைத்தரம், இவர்களுக்கு உயர் நுகர்வுக்கான வாய்ப்பை வழங்கியது. நுகர்வின் பேரால், நவதாரளவாதம், சந்தை விதிகள் என அனைத்தையும் நோர்வேஜியர்கள் அனுமதித்தார்கள்.   

எந்தச் சமூக நலக் கொள்கைகள், உயர்வான சம்பளம், நியாயமான வேலைநேரம், விடுமுறை, வேலைப்பாதுகாப்பு என்பவற்றை உறுதிசெய்ததோ, அவற்றை இந்தச் சந்தைவிதிகள், குழிதோண்டிப் புதைத்துள்ளன.   

நிறைவாக,  

இன்று, ஸ்கன்டினேவிய அனுபங்கள் மூன்றாமுலக நாடுகளுக்கு நல்ல பாடங்களைத் தருகின்றன. குறிப்பாக, இலங்கை போன்ற நாடுகள் எஞ்சியிருக்கின்ற மிச்ச சொச்ச, சமூகநலன்களைத் தக்கவைத்தாக வேண்டும். அதில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் என்பன பிரதானமானவை.   

அனைத்தையும் தனியார்மயமாக்குவதன் மூலம் வினைத்திறனான சேவையைப் பெறமுடியும் என்பவர்கள் தனியார்மயம் எவ்வாறு இலாபவெறியையும் பொறுப்பின்மையையும் தூண்டியுள்ளது என்பதையும் நோக்க வேண்டும்.   

இப்போது தேசியவாத வெறியும் அரசியல்ரீதியாக வலது நோக்கிய திருப்பமுமே சமூகநல வெட்டுகளையும் தனியார் மயத்தையும் முழுவீச்சில் நடைமுறைப்படுத்துகிறது.   

பெருந்தேசியவாத அகங்காரம் அடிமடியிலேயே கைவைக்கிறது. இதைப் பலர் உணர்வதில்லை. தேசியவாதம் விடுதலையைப் பெற்றுத்தராது. அது இன்னோர் அடிமைத்தனத்தில் எங்களை ஆழ்த்திவிடும் வேலையையே செய்கிறது.   

சந்தையும் நிதிமூலதனமும் வேண்டுவதைத் தேசியவாதிகள் உணர்ச்சிகர உச்சாடனங்களோடு நடத்தி முடிக்கிறார்கள்.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சமூகநல-அரசாங்கங்களின்-முடிவு-ஸ்கன்டினேவிய-அனுபங்கள்/91-222668

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.