Jump to content

மைத்திரி, மகிந்த, சிராந்தியைக் கொல்ல சதி – கைது செய்யப்பட்ட இந்தியர் தகவல்


Recommended Posts

மைத்திரி, மகிந்த, சிராந்தியைக் கொல்ல சதி – கைது செய்யப்பட்ட இந்தியர் தகவல்

 

mahinda-maithri-300x200.jpgசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்பது தனக்குத் தெரியும் என, கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவின்  மாவனல்ல இல்லத்துக்கு அடிக்கடி வந்து சென்றார் என்ற சந்தேகத்தில் இந்தியர் ஒருவர் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த சதித்திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுபற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,  நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

“நாமல் குமாரவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தொந்தரவு கொடுத்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, மசூரி தோமஸ் என்ற இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பாதுகாப்புச் செயலரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பயங்கரவாத தடைச்சட்ட விதிகளின் கீழ், குறித்த இந்தியர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

சந்தேகநபர்  கடந்த பெப்ரவரி மாதம் கொழும்புக்கு வந்துள்ளார். தற்போது அவர் செல்லுபடியான எந்த நுழைவிசைவும் இன்றி ராகமவில் 2500 ரூபா வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தங்கியிருக்கிறார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி சிராந்தி ராஜபக்ச ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எந்த அமைப்பு அல்லது நபர்களால் அச்சுறுத்தல் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் அவரது வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை மற்றும் அவரது வருகையின் நோக்கம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/09/26/news/33089

Link to comment
Share on other sites

மைத்­திரி,கோத்தா கொலைச் சதி – கைதா­ன­வர் வாக்குமூலம்!!

 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோ­ரைக் கொல்­வ­தற்­குத் திட்­ட­மி­டும் வகை­யில் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் நாலக சில்வா தொலை­பே­சி­யில் உரை­யா­டி­னார் என்று கூறப்­ப­டும் விட­யம் தொடர்­பில் முன்­னெ­டுக்­கும் விசா­ர­ணை­க­ளில் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் கைது செய்­யப்­பட்­டுள்ள இந்­தி­ய­ரின் வாக்கு மூலத்­தில் பல அதிர்ச்சி தரும் விட­யங்­கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச அவ­ரது மனைவி ஷிரந்தி ராஜ­பக்ச தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்­டோ­ரைக் கொலை செய்­யச் சதித் திட்­டம் தீட்­டப்­பட்­டுள்­ளது என்று அந்த இந்­தி­யர் சி.ஐ.டி.க்குத் தெரி­வித்­துள்­ளார்.

அவர் அது தொடர்­பில் மேல­திக விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தாத நிலை­யில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் கீழ் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்­ப­டு­கின்­றார் என்­றும் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­சர் இந்­திக லொக்கு ஹெட்டி மற்­றும் பிர­தான பொலிஸ் பரி­சோ­த­கர் ரஞ்­ஜித் முன­சிங்க ஆகி­யோர் கோட்டை நீதி­வான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு நேற்று அறி­வித்­த­னர்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பய ராஜ­பக்ச ஆகி­யோ­ரைக் கொலை செய்­யச் சதி செய்­யும் வித­மாக பிர­திப் பொலிஸ் மா அதி­பர் நாலக சில்­வா­வின் கலந்­து­ரை­யா­டல் பதிவு செய்­யப்­பட்ட தொலை­பேசி அரச இர­சா­ய­னப் பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது. அதில் உள்ள குரல்­களை உறுதி செய்­வ­தற்­காக முறைப்­பாட்­டா­ளர் நாமல் குமா­ரவை குரல் சோத­னைக்கு உட்­ப­டுத்­த­வும் சி.ஐ.டி. நீதி­மன்ற அனு­ம­தியை நேற்­றுப் பெற்­றுக்­கொண்­டது.

இன்று காலை 10 மணிக்கு குரல் சோத­னைக்­காக அரச இர­சா­ய­னப் பகுப்­பாய்­வா­ளர் முன்­னி­லை­யில் முன்­னி­லை­யா­கு­மாறு முறைப்­பாட்­டா­ளர் நாமல் குமா­ர­வுக்கு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

கோட்டை நீதி­வான் லங்கா ஜய­ரத்ன, இந்த விவ­கா­ரத்­தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­கள் தொடர்­பில் சி.ஐ.டியி­டம் கேள்வி எழுப்­பி­னார். அதற்கு சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர் இந்­தி­க­வும் பிர­தான பொலிஸ் பரி­சோ­த­கர் ரஞ்­ஜித் முன­சிங்­க­வும் பதி­ல­ளித்­த­னர்.

“இந்த விவ­கா­ரத்­தில் சந்­தே­கத்­தின் பேரில் இந்­தி­யர் ஒரு­வரை நாம் கைது செய்­துள்­ளோம். முறைப்­பாட்­டா­ள­ரின் வீட்­டுக்கு அவ­ரைத் தேடிச் சென்று சந்­தே­கத்­துக்கு உரிய முறை­யில் நடந்­து­கொண்­ட­மை­யால் அவ­ரைக் கடந்த வாரம் கைது செய்­தோம். இந்த இந்­தி­யர் கடந்த பெப்­ர­வரி மாதமே இலங்­கைக்கு வந்­துள்­ளார். அவர் தற்­போது இங்கு தங்­கி­யி­ருக்க சட்ட ரீதி­யி­லான அனு­மதி பெற்ற நுழை­வி­சைவு அவ­ரி­டம் இல்லை. அவர் இங்கு வந்து ராகம பகு­தி­யில் 2 ஆயி­ரத்து 500 ரூபா மாத வாட­கைக்கு அறை­யெ­டுத்து தங்­கி­யி­ருந்­துள்­ளார்.

அவ­ரால் சிங்­கள மொழி ஓர­ளவு பேச முடி­கின்­றது. ஆங்­கி­லத்­தில் சர­ள­மா­கப் பேசு­கி­றார். அவ­ரி­டம் நாம் வாக்­கு­மூ­லம் பெற்­றோம். அதில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச அவ­ரது மனைவி மற்­றும் தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால ஆகி­யோ­ரைக் கொலை செய்­யத் திட்­டம் தீட்­டப்­பட்­டுள்­ளது என்று கூறு­கின்­றார். அது தொடர்­பான மேல­திக தக­வல்­களை அவர் வெளிப்­ப­டுத்­த­வில்லை. மேல­திக விசா­ர­ணை­களை நாம் பயங்­க­ர­வா­தத் தடை சட்ட விதி விதா­னங்­க­ளின்­படி முன்­னெ­டுத்து வரு­கின்­றோம்” என்று அவர்­கள் தெரி­வித்­த­னர்.

விசா­ர­ணை­களை தொடர்ந்­தும் முன்­னெ­டுத்து அறிக்கை சமர்ப்­பிக்க உத்­த­ர­விட்ட நீதி­வான் லங்கா ஜய­ரத்ன, அது­வரை அது குறித்த வழக்கை ஒத்தி வைத்­தார்.

https://newuthayan.com/story/08/மைத்­திரிகோத்தா-கொலைச்-சதி-கைதா­ன­வர்-வாக்குமூலம்.html

 

 

 

மைத்­திரி கொலை முயற்சி- சி.ஐ.டி விசா­ர­ணை­க­ளில் திடுக்­கி­டும் தக­வல்­கள்!!

 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோ­ரைக் கொலை செய்­யத் திட்­ட­மி­டப்­பட்­டது என்று கூறப்­ப­டும் விவ­கா­ரத்­தில் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் கைது செய்­யப்­பட்­டுள்ள இந்­திய நாட்­ட­வ­ரான மேச­ரிஸ் தோமஸ்,  நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்­ச­வைச் சந்­தித்­துள்­ளார். குற்­றப் புல­னாய்­வுத் துறை­யி­னர் மேற்­கொண்ட விசா­ர­ணை­யில் இந்த விட­யம் வெளி­வந்­தது என்று கூறப்­ப­டு­கின்­றது.

தோமஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வ­ன்ச­வை­யும் சந்­திக்­கச் சென்­றுள்ள போதும் அவ­ரைச் சந்­திக்க முடி­ய­வில்லை என­வும் அவ­ரது அலு­வ­ல­கத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ரையே சந்­திக்க முடிந்­துள்­ளது என்­றும் விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது.

இது தொடர்­பில் விசா­ர­ணைக்­குப் பொறுப்­பான உயர் அதி­காரி தெரி­வித்­தா­வது-,

தோமஸ் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வைச் சந்­திக்க அவ­ரது விஜே­ய­ராம இல்­லத்­துக்­கும் சென்­றுள்­ளார். ஆனால் மகிந்த ராஜ­பக்­ச­வைச் சந்­திக்க முடி­ய­வில்லை.

சந்­தேக நப­ரி­டம் சி.ஐ.டி. மிக ஆழ­மாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. பயங்­க­ர­வா­தத் தடைச் சட்ட விதி­க­ளுக்கு அமை­வாக விசா­ர­ணை­கள் தொடர்­கின்­றன.- என்­றார்.

இது­வரை இந்த கொலைச் சதி விவ­கா­ரம் தொடர்­பாக 20க்கும் அதி­க­மா­னோ­ரி­டம் வாக்­கு­மூ­லங்­களை சி.ஐ.டி. பதிவு செய்­துள்­ளது.

குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் பணிப்­பா­ளர் மூத்த பொலிஸ் அத்­தி­யட்­சர் ஷானி அபே­சே­க­ர­வின் ஆலோ­ச­னைக்கு அமைய மனி­தப் படு­கொலை தொடர்­பான விசா­ர­ணைப் பிரி­வின் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­சர் இந்­திக லொக்­கு­ஹெட்டி தலை­மை­யில் முதன்­மைப் பொலிஸ் பரி­சோ­த­கர் ரஞ்­ஜித் முன­சிங்க மற்­றும் உப பொலிஸ் பரி­சோ­த­கர் கே.எம்.எம்.குமா­ர­சிங்க உள்­ளிட்­டோர் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கின்­ற­னர்.

பயங்­க­ர­வா­தப் புல­னாய்­வுப் பிரி­வி­லி­ருந்து காணா­மல் போனது என்று கூறப்­ப­டும் ஸ்னைப்­பர் ரகத் துப்­பாக்கி குறித்­தும் சி.ஐ.டி. சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

சில மாதங்­க­ளுக்கு முன்­னர் ஒட்­டு­சுட்­டான் காட்­டுப் பகு­தி­யில் கிளே­மோர் குண்­டு­டன் முன்­னாள் புலி­கள் இயக்­கத்­தின் உறுப்­பி­னர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்ட நிலை­யில் அது தொடர்­பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­க­ளின் போது, இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வின் உறுப்­பி­னர் எனக் கூறப்­ப­டும் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து இந்த ஸ்னைப்­பர் துப்­பாக்­கியை பயங்­க­ர­வா­தப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் கைப்­பற்­றி­யி­ருந்­த­னர்.

அந்த ஸ்னைப்­பர் துப்­பாக்­கியே காணா­மல் போயி­ருந்­தது என்று கூறப்­ப­டும் நிலை­யில் தற்­போது அது தொடர்­பா­கச் சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் ரஞ்­சித் மத்­து­ம­பண்­டா­ர­வின் உத்­த­ர­வுக்கு அமைய மேல­திக விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

https://newuthayan.com/story/08/மைத்­திரி-கொலை-முயற்சி-சி-ஐ-டி-விசா­ர­ணை­க­ளில்-திடுக்­கி­டும்-தக­வல்­கள்.html

Link to comment
Share on other sites

ஜனாதிபதி கொலைச் சதி;- கைதுசெய்யப்பட்ட இந்தியர் குறித்து தூதரகம் தகவல்

 

 
 

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர் 2000 ஆண்டு முதல் மனோநிலை பாதிக்கப்பட்டவர் என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முக்கிய தலைவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற சந்கேத்தின் பேரில் இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஊடகங்களில் வெளியான தகவல்களை பார்த்துள்ளதாக இந்திய தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து முக்கிய கவனம் செலுத்திய நாங்கள் இலங்கை அதிகாரிகள் வழங்கிய சிறிய தகவல்களை வைத்துக்கொண்டு  குறிப்பிட்ட நபரின் பின்னணி குறித்து  ஆராயுமாறு இந்திய அதிகாரிகளை கேட்டோம் எனவும் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட தகவல்கள் குறிப்பிட்ட நபர் 2000 ஆண்டு முதல் மனோநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார் என்பதை உறுதி செய்துள்ளன எனவும் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த தகவல்களை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ள தூதரக அதிகாரி முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

high_cooo_ind.jpg

http://www.virakesari.lk/article/41222

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டால் பழியை யார் மேல் போடுவார்கள் ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

கொண்டால் பழியை யார் மேல் போடுவார்கள் ?
 

முன்பு விடுதலைப் புலிகளின்  மீது  பழிபோட்டு  விடுவார்கள். இனி முன்னால் விடுதலைப்புலிகள் என்று அப்பாவிகளின் மீது பழிபோடுவார்கள். 

Link to comment
Share on other sites

14 hours ago, ரதி said:

கொண்டால் பழியை யார் மேல் போடுவார்கள் ?
 

 

14 minutes ago, கந்தப்பு said:

முன்பு விடுதலைப் புலிகளின்  மீது  பழிபோட்டு  விடுவார்கள். இனி முன்னால் விடுதலைப்புலிகள் என்று அப்பாவிகளின் மீது பழிபோடுவார்கள். 

முன்னாள் இந்நாள் விடுதலைப்புலிகளிடம் இப்போது ஆயுதங்கள் இல்லை என்பது வெளிப்படை. தற்போது ஆயுதங்களை வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் புல்லா, உல்லாக்களை விட்டுவிட்டீர்களே...☹️

Link to comment
Share on other sites

On 9/26/2018 at 11:23 AM, ரதி said:

கொண்டால் பழியை யார் மேல் போடுவார்கள் ?
 

மீண்டும் விடுதலை புலிகள் போன்ற அமைப்பு ஒன்றை இருப்பதாக காட்டி மகிந்த இராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவர ரோ செய்த சதியாகவே இது எனக்கு தெரிகிறது. கோத்தபாய இல்லாமல் இருப்பதே றோவுக்கு பயனுள்ளது. கோத்தா சீனாவின் ஆள். கோத்தா இல்லாத மகிந்தா இந்தியாவின் காலடியில் கிடப்பார். அண்மையில் இந்தியா மஹிந்தவை அழைத்து பேசியதை இங்கே நாங்கள் கவனிக்க வேண்டும். சுப்ரமணிசுவாமி இந்த விடயங்களில் பின்னணியில் இருப்பவர்.  றோவுக்கு கிடைக்கும்  மைத்திரியின் பயன் அவரை இவ்வாறான ஒரு சதிக்கு பலியாக்குவதுடன் முடிந்துவிடும்.

அபிவிருத்தி மூலமே சீனா மற்ற நாடுகளுக்குள் ஊடுருவுகிறது. படுகொலைகள் மற்றும் போர் நடக்கும் இடங்களில் இருந்து சீனா விலகிவிடும். அங்கே ஆயுதம் விற்பது தவிர வேறு பயன் சீனாவுக்கு இல்லை.  ஆகவே இது சீனாவை இலங்கையில் இருந்து வெளியேற்ற ரோ செய்த சதியாகவே தெரிகிறது. கோத்தா முடிந்தால் போர்க்குற்ற விசாரணை பற்றிய தேவைகளும் இருக்காது. அமெரிக்க - மேற்குலகு ஈடுபாடும் குறைந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் கவனத்தை வேறுபக்கம் திருப்ப  மீண்டும் சிங்களம் இந்தியருடன் சேர்ந்து கூட்டு சதிசெய்ய முயல்கிறது. கொலைத் திட்டம் என்று ஒன்று இருந்தால் அது சிங்களத்தலைவர்களுக்கு அல்ல. குறிப்பிட்ட அத்தனை தலைவர்களையும் ஒரேமுறையில் போட்டுதள்ளுவதும் சுலபம் அல்ல. இந்த செய்தியின். பின்னணியில் வேறு ஏதோ அரசுக்கு இசைவான ஒரு திட்டம் உண்டு என நம்பலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.