Jump to content

மைத்திரி, மகிந்த, சிராந்தியைக் கொல்ல சதி – கைது செய்யப்பட்ட இந்தியர் தகவல்


Recommended Posts

மைத்திரி, மகிந்த, சிராந்தியைக் கொல்ல சதி – கைது செய்யப்பட்ட இந்தியர் தகவல்

 

mahinda-maithri-300x200.jpgசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்தது என்பது தனக்குத் தெரியும் என, கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயற்பாட்டு பணிப்பாளர் நாமல் குமாரவின்  மாவனல்ல இல்லத்துக்கு அடிக்கடி வந்து சென்றார் என்ற சந்தேகத்தில் இந்தியர் ஒருவர் அண்மையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த சதித்திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுபற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினர்,  நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

“நாமல் குமாரவின் வீட்டுக்கு அடிக்கடி சென்று தொந்தரவு கொடுத்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, மசூரி தோமஸ் என்ற இந்தியர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

பாதுகாப்புச் செயலரின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பயங்கரவாத தடைச்சட்ட விதிகளின் கீழ், குறித்த இந்தியர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.

சந்தேகநபர்  கடந்த பெப்ரவரி மாதம் கொழும்புக்கு வந்துள்ளார். தற்போது அவர் செல்லுபடியான எந்த நுழைவிசைவும் இன்றி ராகமவில் 2500 ரூபா வாடகைக்கு அறை ஒன்றை எடுத்து தங்கியிருக்கிறார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி சிராந்தி ராஜபக்ச ஆகியோரின் உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக, அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எந்த அமைப்பு அல்லது நபர்களால் அச்சுறுத்தல் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் அவரது வாக்குமூலத்தின் உண்மைத்தன்மை மற்றும் அவரது வருகையின் நோக்கம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/09/26/news/33089

Link to comment
Share on other sites

மைத்­திரி,கோத்தா கொலைச் சதி – கைதா­ன­வர் வாக்குமூலம்!!

 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோ­ரைக் கொல்­வ­தற்­குத் திட்­ட­மி­டும் வகை­யில் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் நாலக சில்வா தொலை­பே­சி­யில் உரை­யா­டி­னார் என்று கூறப்­ப­டும் விட­யம் தொடர்­பில் முன்­னெ­டுக்­கும் விசா­ர­ணை­க­ளில் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் கைது செய்­யப்­பட்­டுள்ள இந்­தி­ய­ரின் வாக்கு மூலத்­தில் பல அதிர்ச்சி தரும் விட­யங்­கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச அவ­ரது மனைவி ஷிரந்தி ராஜ­பக்ச தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உள்­ளிட்­டோ­ரைக் கொலை செய்­யச் சதித் திட்­டம் தீட்­டப்­பட்­டுள்­ளது என்று அந்த இந்­தி­யர் சி.ஐ.டி.க்குத் தெரி­வித்­துள்­ளார்.

அவர் அது தொடர்­பில் மேல­திக விட­யங்­களை வெளிப்­ப­டுத்­தாத நிலை­யில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் கீழ் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்­ப­டு­கின்­றார் என்­றும் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­சர் இந்­திக லொக்கு ஹெட்டி மற்­றும் பிர­தான பொலிஸ் பரி­சோ­த­கர் ரஞ்­ஜித் முன­சிங்க ஆகி­யோர் கோட்டை நீதி­வான் லங்கா ஜய­ரத்­ன­வுக்கு நேற்று அறி­வித்­த­னர்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­னாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பய ராஜ­பக்ச ஆகி­யோ­ரைக் கொலை செய்­யச் சதி செய்­யும் வித­மாக பிர­திப் பொலிஸ் மா அதி­பர் நாலக சில்­வா­வின் கலந்­து­ரை­யா­டல் பதிவு செய்­யப்­பட்ட தொலை­பேசி அரச இர­சா­ய­னப் பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளது. அதில் உள்ள குரல்­களை உறுதி செய்­வ­தற்­காக முறைப்­பாட்­டா­ளர் நாமல் குமா­ரவை குரல் சோத­னைக்கு உட்­ப­டுத்­த­வும் சி.ஐ.டி. நீதி­மன்ற அனு­ம­தியை நேற்­றுப் பெற்­றுக்­கொண்­டது.

இன்று காலை 10 மணிக்கு குரல் சோத­னைக்­காக அரச இர­சா­ய­னப் பகுப்­பாய்­வா­ளர் முன்­னி­லை­யில் முன்­னி­லை­யா­கு­மாறு முறைப்­பாட்­டா­ளர் நாமல் குமா­ர­வுக்கு நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

கோட்டை நீதி­வான் லங்கா ஜய­ரத்ன, இந்த விவ­கா­ரத்­தில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணை­கள் தொடர்­பில் சி.ஐ.டியி­டம் கேள்வி எழுப்­பி­னார். அதற்கு சி.ஐ.டி. உதவி பொலிஸ் அத்­தி­யட்­சர் இந்­தி­க­வும் பிர­தான பொலிஸ் பரி­சோ­த­கர் ரஞ்­ஜித் முன­சிங்­க­வும் பதி­ல­ளித்­த­னர்.

“இந்த விவ­கா­ரத்­தில் சந்­தே­கத்­தின் பேரில் இந்­தி­யர் ஒரு­வரை நாம் கைது செய்­துள்­ளோம். முறைப்­பாட்­டா­ள­ரின் வீட்­டுக்கு அவ­ரைத் தேடிச் சென்று சந்­தே­கத்­துக்கு உரிய முறை­யில் நடந்­து­கொண்­ட­மை­யால் அவ­ரைக் கடந்த வாரம் கைது செய்­தோம். இந்த இந்­தி­யர் கடந்த பெப்­ர­வரி மாதமே இலங்­கைக்கு வந்­துள்­ளார். அவர் தற்­போது இங்கு தங்­கி­யி­ருக்க சட்ட ரீதி­யி­லான அனு­மதி பெற்ற நுழை­வி­சைவு அவ­ரி­டம் இல்லை. அவர் இங்கு வந்து ராகம பகு­தி­யில் 2 ஆயி­ரத்து 500 ரூபா மாத வாட­கைக்கு அறை­யெ­டுத்து தங்­கி­யி­ருந்­துள்­ளார்.

அவ­ரால் சிங்­கள மொழி ஓர­ளவு பேச முடி­கின்­றது. ஆங்­கி­லத்­தில் சர­ள­மா­கப் பேசு­கி­றார். அவ­ரி­டம் நாம் வாக்­கு­மூ­லம் பெற்­றோம். அதில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச அவ­ரது மனைவி மற்­றும் தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால ஆகி­யோ­ரைக் கொலை செய்­யத் திட்­டம் தீட்­டப்­பட்­டுள்­ளது என்று கூறு­கின்­றார். அது தொடர்­பான மேல­திக தக­வல்­களை அவர் வெளிப்­ப­டுத்­த­வில்லை. மேல­திக விசா­ர­ணை­களை நாம் பயங்­க­ர­வா­தத் தடை சட்ட விதி விதா­னங்­க­ளின்­படி முன்­னெ­டுத்து வரு­கின்­றோம்” என்று அவர்­கள் தெரி­வித்­த­னர்.

விசா­ர­ணை­களை தொடர்ந்­தும் முன்­னெ­டுத்து அறிக்கை சமர்ப்­பிக்க உத்­த­ர­விட்ட நீதி­வான் லங்கா ஜய­ரத்ன, அது­வரை அது குறித்த வழக்கை ஒத்தி வைத்­தார்.

https://newuthayan.com/story/08/மைத்­திரிகோத்தா-கொலைச்-சதி-கைதா­ன­வர்-வாக்குமூலம்.html

 

 

 

மைத்­திரி கொலை முயற்சி- சி.ஐ.டி விசா­ர­ணை­க­ளில் திடுக்­கி­டும் தக­வல்­கள்!!

 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோ­ரைக் கொலை செய்­யத் திட்­ட­மி­டப்­பட்­டது என்று கூறப்­ப­டும் விவ­கா­ரத்­தில் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் கைது செய்­யப்­பட்­டுள்ள இந்­திய நாட்­ட­வ­ரான மேச­ரிஸ் தோமஸ்,  நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்­ச­வைச் சந்­தித்­துள்­ளார். குற்­றப் புல­னாய்­வுத் துறை­யி­னர் மேற்­கொண்ட விசா­ர­ணை­யில் இந்த விட­யம் வெளி­வந்­தது என்று கூறப்­ப­டு­கின்­றது.

தோமஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விமல் வீர­வ­ன்ச­வை­யும் சந்­திக்­கச் சென்­றுள்ள போதும் அவ­ரைச் சந்­திக்க முடி­ய­வில்லை என­வும் அவ­ரது அலு­வ­ல­கத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ரையே சந்­திக்க முடிந்­துள்­ளது என்­றும் விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது.

இது தொடர்­பில் விசா­ர­ணைக்­குப் பொறுப்­பான உயர் அதி­காரி தெரி­வித்­தா­வது-,

தோமஸ் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வைச் சந்­திக்க அவ­ரது விஜே­ய­ராம இல்­லத்­துக்­கும் சென்­றுள்­ளார். ஆனால் மகிந்த ராஜ­பக்­ச­வைச் சந்­திக்க முடி­ய­வில்லை.

சந்­தேக நப­ரி­டம் சி.ஐ.டி. மிக ஆழ­மாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது. பயங்­க­ர­வா­தத் தடைச் சட்ட விதி­க­ளுக்கு அமை­வாக விசா­ர­ணை­கள் தொடர்­கின்­றன.- என்­றார்.

இது­வரை இந்த கொலைச் சதி விவ­கா­ரம் தொடர்­பாக 20க்கும் அதி­க­மா­னோ­ரி­டம் வாக்­கு­மூ­லங்­களை சி.ஐ.டி. பதிவு செய்­துள்­ளது.

குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் பணிப்­பா­ளர் மூத்த பொலிஸ் அத்­தி­யட்­சர் ஷானி அபே­சே­க­ர­வின் ஆலோ­ச­னைக்கு அமைய மனி­தப் படு­கொலை தொடர்­பான விசா­ர­ணைப் பிரி­வின் உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­சர் இந்­திக லொக்­கு­ஹெட்டி தலை­மை­யில் முதன்­மைப் பொலிஸ் பரி­சோ­த­கர் ரஞ்­ஜித் முன­சிங்க மற்­றும் உப பொலிஸ் பரி­சோ­த­கர் கே.எம்.எம்.குமா­ர­சிங்க உள்­ளிட்­டோர் இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கின்­ற­னர்.

பயங்­க­ர­வா­தப் புல­னாய்­வுப் பிரி­வி­லி­ருந்து காணா­மல் போனது என்று கூறப்­ப­டும் ஸ்னைப்­பர் ரகத் துப்­பாக்கி குறித்­தும் சி.ஐ.டி. சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

சில மாதங்­க­ளுக்கு முன்­னர் ஒட்­டு­சுட்­டான் காட்­டுப் பகு­தி­யில் கிளே­மோர் குண்­டு­டன் முன்­னாள் புலி­கள் இயக்­கத்­தின் உறுப்­பி­னர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்ட நிலை­யில் அது தொடர்­பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட மேல­திக விசா­ர­ணை­க­ளின் போது, இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வின் உறுப்­பி­னர் எனக் கூறப்­ப­டும் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து இந்த ஸ்னைப்­பர் துப்­பாக்­கியை பயங்­க­ர­வா­தப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் கைப்­பற்­றி­யி­ருந்­த­னர்.

அந்த ஸ்னைப்­பர் துப்­பாக்­கியே காணா­மல் போயி­ருந்­தது என்று கூறப்­ப­டும் நிலை­யில் தற்­போது அது தொடர்­பா­கச் சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் ரஞ்­சித் மத்­து­ம­பண்­டா­ர­வின் உத்­த­ர­வுக்கு அமைய மேல­திக விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

https://newuthayan.com/story/08/மைத்­திரி-கொலை-முயற்சி-சி-ஐ-டி-விசா­ர­ணை­க­ளில்-திடுக்­கி­டும்-தக­வல்­கள்.html

Link to comment
Share on other sites

ஜனாதிபதி கொலைச் சதி;- கைதுசெய்யப்பட்ட இந்தியர் குறித்து தூதரகம் தகவல்

 

 
 

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர் 2000 ஆண்டு முதல் மனோநிலை பாதிக்கப்பட்டவர் என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முக்கிய தலைவர்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என்ற சந்கேத்தின் பேரில் இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என ஊடகங்களில் வெளியான தகவல்களை பார்த்துள்ளதாக இந்திய தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து முக்கிய கவனம் செலுத்திய நாங்கள் இலங்கை அதிகாரிகள் வழங்கிய சிறிய தகவல்களை வைத்துக்கொண்டு  குறிப்பிட்ட நபரின் பின்னணி குறித்து  ஆராயுமாறு இந்திய அதிகாரிகளை கேட்டோம் எனவும் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பகட்ட தகவல்கள் குறிப்பிட்ட நபர் 2000 ஆண்டு முதல் மனோநிலை பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார் என்பதை உறுதி செய்துள்ளன எனவும் தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த தகவல்களை இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ள தூதரக அதிகாரி முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என தெரிவித்துள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

high_cooo_ind.jpg

http://www.virakesari.lk/article/41222

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொண்டால் பழியை யார் மேல் போடுவார்கள் ?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

கொண்டால் பழியை யார் மேல் போடுவார்கள் ?
 

முன்பு விடுதலைப் புலிகளின்  மீது  பழிபோட்டு  விடுவார்கள். இனி முன்னால் விடுதலைப்புலிகள் என்று அப்பாவிகளின் மீது பழிபோடுவார்கள். 

Link to comment
Share on other sites

14 hours ago, ரதி said:

கொண்டால் பழியை யார் மேல் போடுவார்கள் ?
 

 

14 minutes ago, கந்தப்பு said:

முன்பு விடுதலைப் புலிகளின்  மீது  பழிபோட்டு  விடுவார்கள். இனி முன்னால் விடுதலைப்புலிகள் என்று அப்பாவிகளின் மீது பழிபோடுவார்கள். 

முன்னாள் இந்நாள் விடுதலைப்புலிகளிடம் இப்போது ஆயுதங்கள் இல்லை என்பது வெளிப்படை. தற்போது ஆயுதங்களை வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படும் புல்லா, உல்லாக்களை விட்டுவிட்டீர்களே...☹️

Link to comment
Share on other sites

On 9/26/2018 at 11:23 AM, ரதி said:

கொண்டால் பழியை யார் மேல் போடுவார்கள் ?
 

மீண்டும் விடுதலை புலிகள் போன்ற அமைப்பு ஒன்றை இருப்பதாக காட்டி மகிந்த இராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவர ரோ செய்த சதியாகவே இது எனக்கு தெரிகிறது. கோத்தபாய இல்லாமல் இருப்பதே றோவுக்கு பயனுள்ளது. கோத்தா சீனாவின் ஆள். கோத்தா இல்லாத மகிந்தா இந்தியாவின் காலடியில் கிடப்பார். அண்மையில் இந்தியா மஹிந்தவை அழைத்து பேசியதை இங்கே நாங்கள் கவனிக்க வேண்டும். சுப்ரமணிசுவாமி இந்த விடயங்களில் பின்னணியில் இருப்பவர்.  றோவுக்கு கிடைக்கும்  மைத்திரியின் பயன் அவரை இவ்வாறான ஒரு சதிக்கு பலியாக்குவதுடன் முடிந்துவிடும்.

அபிவிருத்தி மூலமே சீனா மற்ற நாடுகளுக்குள் ஊடுருவுகிறது. படுகொலைகள் மற்றும் போர் நடக்கும் இடங்களில் இருந்து சீனா விலகிவிடும். அங்கே ஆயுதம் விற்பது தவிர வேறு பயன் சீனாவுக்கு இல்லை.  ஆகவே இது சீனாவை இலங்கையில் இருந்து வெளியேற்ற ரோ செய்த சதியாகவே தெரிகிறது. கோத்தா முடிந்தால் போர்க்குற்ற விசாரணை பற்றிய தேவைகளும் இருக்காது. அமெரிக்க - மேற்குலகு ஈடுபாடும் குறைந்து விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் கவனத்தை வேறுபக்கம் திருப்ப  மீண்டும் சிங்களம் இந்தியருடன் சேர்ந்து கூட்டு சதிசெய்ய முயல்கிறது. கொலைத் திட்டம் என்று ஒன்று இருந்தால் அது சிங்களத்தலைவர்களுக்கு அல்ல. குறிப்பிட்ட அத்தனை தலைவர்களையும் ஒரேமுறையில் போட்டுதள்ளுவதும் சுலபம் அல்ல. இந்த செய்தியின். பின்னணியில் வேறு ஏதோ அரசுக்கு இசைவான ஒரு திட்டம் உண்டு என நம்பலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.