Jump to content

வெளிநாட்டு தலையீடு வேண்டாம் – எமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள்! – ஜனாதிபதி மைத்திரி


Recommended Posts

வெளிநாட்டு தலையீடு வேண்டாம் – எமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள்! – ஜனாதிபதி மைத்திரி

 

Maithri-720x450.jpg

இலங்கை பிரச்சினைகளில் வெளிநாடுகளின் தலையீடு அவசியமில்லையென்றும், நாட்டிற்குள்ளேயே பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் சுயாதீனத் தன்மையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தான் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது அமர்வு நியுயோர்க்கில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில் இலங்கை நேரப்படி இன்று (புதன்கிழமை) அதிகாலை உரையாற்றிய ஜனாதிபதி மேற்குறித்த வேண்டுகோளை முன்வைத்தார்.

ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”நான் பதவிக்கு வரும்போது காணப்பட்ட ஜனாதிபதிக்கு காணப்பட்ட அதிகூடிய அதிகாரங்களை குறைத்து அதனை நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளேன். அதனை சந்தோசமாகவே செய்தேன். கடந்த மூன்றரை வருட காலத்தில் பாரிய அபிவிருத்திகளை எட்டியுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் சுதந்திரம், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அப்போது காணப்பட்ட இலங்கை இப்போது இல்லையென்றும், பல முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கைக்கு இன்று உலகில் எந்தவொரு எதிரி நாடுகளும் இல்லை. சகல நாடுகளுக்கும் ஒரு மத்தியஸ்த நாடாக எமது நாட்டை நோக்கும் அளவிற்கு மாற்றியமைத்துள்ளோம்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த பின்னர், எமது ஆட்சிக்காலத்திலேயே பல செயற்பாடுகளை முன்னெடுத்தோம். தேசிய சமாதானம், நல்லிணக்கம், மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். அந்தவகையில், மனித உரிமைகளை நிலைநாட்ட நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். நாடு பிளவுபடாமல் இருப்பதற்கு இராணுவம் ஆற்றிய பணி மகத்தானது.

மனித உரிமை விடயத்தில் புதிய நோக்கத்தில் எம்மை நோக்குங்கள். சமாதானம், நல்லிணக்கம், பொருளாதாரம், அபிவிருத்தி போன்ற சகல விடயங்களிலும் எமது நாடு முன்னோக்கிச் செல்கின்றது.

எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள். நாட்டின் சுயாதீனம் மிக முக்கியமானது. அந்தவகையில், எமது அர்ப்பணிப்புகள் மற்றும் புதிய செயற்பாடுகளுக்கு ஆதரவளியுங்கள்.

சர்வதேச தலையீடுகள், அழுத்தங்கள் மற்றும் சர்வதேச அச்சுறுத்தல்கள் எவையும் எமக்கு அவசியமில்லை. எமது நாட்டை சக்திமிக்கதாக மாற்ற இடமளியுங்கள். எமது நாட்டின் உரிமையை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல இது மிகவும் முக்கியமானது” என்றார்.

president-maithri-in-UNGA-5.jpg

president-maithri-in-UNGA-6.jpg

president-maithri-in-UNGA-1.jpg

president-maithri-in-UNGA-2.jpg

president-maithri-in-UNGA-4.jpg

http://athavannews.com/பிரச்சினையை-தீர்த்துக்க/

Link to comment
Share on other sites

ஐ.நாவில் தமிழ் அமைச்சரின் தோளில் கைகளை போட்டு ஜனாதிபதி கேட்ட கேள்வி!

 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் 73ஆவது பொதுச்சபை கூட்டத் தொடரில் உரையாற்றிய பின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சர் மனோ கணேசனை சந்தித்துள்ளார்.

“அமைச்சர் மனோ கணேசன் அவர்களே, என் உரையில் சர்ச்சை எதுவும் இல்லை தானே! இப்போது திருப்திதானே?” என அமைச்சர் மனோ கணேசனிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுள்ளதாக அமைச்சர் தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அமைச்சர் மனோ கணேசன் அவர்களே, என்ன, என் உரையில் சர்ச்சை எதுவும் இல்லை தானே! இப்போது திருப்திதானே?”

ஐ.நா சபையில் உரை நிகழ்த்தி இறங்கி வந்ததும் அமைச்சர்கள் குழு ஜனாதிபதியை சூழ்ந்த போது, என்னை அழைத்த ஜனாதிபதி, என் தோளில் கைகளை போட்டவாறு இப்படி கேட்டார்.

ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்து பேசி அதிலே திருத்தம் செய்ய வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரி, ஐ.நா சபையில் தனது உரையின் போது கோரிக்கை முன் வைக்க போகிறார் என இலங்கையில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில், அப்படி சர்ச்சைக்குரிய கருத்துகள் எதுவும் ஜனாதிபதியின் உரையில் இடம்பெறவில்லை.

வழமையாக இலங்கையிலே பேசுகின்ற கருத்துகளையே ஜனாதிபதி தனது உரையிலே குறிப்பிட்டார்.

ஆக, “போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இனிமேல் சர்வதேசம் எனது நாட்டை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்” என்று மேலதிகமாக குறிப்பிட்டார்.

“அந்த புதிய கண்ணோட்டம் என்னவென்று நீங்கள் இங்கே கூறவில்லை. நல்லது. அது என்னவென்று ஊருக்கு போய் விளக்கமாக சொல்லுங்கள் ஜனாதிபதி அவர்களே” என்று நான் கிண்டலாக சொல்ல, அனைவரும் சிரித்தார்கள்.” என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.tamilwin.com/politics/01/194336?ref=home-latest

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் மீது ஒரு இனக்கொலையினை நடத்தி முடிப்பதற்கு மட்டும் சர்வதேச நாடுகளின் உதவியும், அனுசரணையும் வேண்டும். ஆனால் அவர்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்கவோ அல்லது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியை வழங்கவோ சர்வதேச தலையீடுகள் தேவையில்லை.

மனோ கணேசன் அவர்கள் நல்லிணக்க அரசுக்கு சார்பாகப் பேசி வருபவர். தமிழருக்கு நடந்த அநீதிகள் பற்றி இவர் ஆறியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், மைத்திரி அவர்கள் உள்நாட்டில் தீர்த்துக்கொள்கிறோம் என்று கூறும்போது இவரால் வெறுமனே கைதட்டி ஆர்ப்பரிக்கத்தான் முடிகிறது.

யுத்தம் முடிந்து இன்றுடன் ஒன்பது வருடங்கள் நான்கு மாதங்கள் 8 நாட்கள் ஆகிவிட்டன. இதுவரை தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியோ, ஆக்கிரமிப்பில்லாத  அவர்களின் சுதந்திரமான வாழ்விற்கான உரிமைகளோ வழங்கப்படவில்லை.

தமிழ்க் கூட்டமைப்பு தொடர்ந்தும் இந்த அரசுக்கு முண்டுகொடுப்பது நலிவடைந்து போயிருக்கும் தமிழினத்தின் நிலையை இன்னும் இன்னும் பலவீனமாக்குமேயன்றி, வெறு எதுவும் செய்யப்போவதில்லை.

உள்நாட்டில் தீர்வு, உள்நாட்டில் தீர்வு என்று சொல்கிறீர்களே, அப்படி என்னதான் தீர்வு தரப்போகிறீர்கள் என்று கேட்கும் தைரியம் கூட இல்லாமல்த்தான் சம்பந்தனும், சுமந்திரனும் ஆதரவு வழங்கிவருகிறார்கள்.

இப்போது ஐநாவில் பேசுபொருளாக இருக்கும் எமது அவலம், இன்னும் ஒரு சில வருடங்களில் முற்றாகக் காணாமல்ப் போய்விடும். ஆப்போதும்கூட, எமக்கான நீதியும், உரிமையும் நிச்சயம் கிடைக்கப்போவதில்லை. ஆனால், அப்படியொன்றைத் தரப்போவதாக சிங்களம் தொடர்ந்தும் ஏமாற்றும், நாமும் தொடர்ந்து முண்டு கொடுத்துக்கொண்டுதான் இருப்போம்.

எமது தலைவிதி அதுதான் என்றால், யாரால்த்தான் என்ன செய்யமுடியும் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

ஆக, “போர் முடிந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இனிமேல் சர்வதேசம் எனது நாட்டை புதிய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்” என்று மேலதிகமாக குறிப்பிட்டார்.

போரெ நடைபெறவில்லை அப்புறம் என்ன புதிய கண்ணோட்டம் ??

11 hours ago, நவீனன் said:

வெளிநாட்டு தலையீடு வேண்டாம் – எமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள்! – ஜனாதிபதி மைத்திரி 

பொரியல் குழு, புரோட்டா குழு ,புரியாணி குழு வழியாக பேசி தீர்க்கப்படுமா ? எல்லாம் இவையள் உட்காரும் ரேபில் மேல் வைக்கப்படும் மினரல் தண்ணி போத்தல் , தேத்தண்ணி , கோப்பித்தண்ணி , போண்டா , பஜ்ஜி க்கு கேடு ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.