Jump to content

கொள்கையில் உறுதி! பேரவையை பலமாக்கி அடுத்த கட்டம் பற்றி சிந்திப்போம்!! - முத­ல­மைச்சர்


Recommended Posts

முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க மக்­களை ஒன்­றி­ணைத்து எமது மக்­களின் தேவை­களை உல­கிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்­த­வற்றை செய்வேன் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.
தற்­போ­தைய தலை­மைகள் போய் கூட்­ட­மைப்பு பதிவு பெற்று மாற்­றுத்­த­லைமை உதித்தால் மீண்டும் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு சாத்­தியம் உள்­ளது என்று குறிப்­பிட்­டவர் வட­மா­காண சபையின் ஒரு­சில பின்­ன­டை­வு­க­ளுக்கு அர­சியல் ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினர் சிலரே காரணம். அவ்­வாறு இருந்தும் எமது செயற்­பா­டுகள் செவ்­வனே இருந்­தன என்றும் சுட்­டிக்­காட்­டினார்.
images%2B%252849%2529-706778

ஏதிர்­வரும் மாதம் 25ஆம் திக­தி­யுடன் வட­மா­காண சபையின் முத­லா­வது ஆயுட்­காலம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்­த­கட்ட செயற்­பா­டுகள் குறித்து முத­ல­மைச்சர் சி.வி;.விக்­கி­னேஸ்­வரன் வீர­கே­சரி வார இத­ழுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக கருத்துப் பரி­மாற்­றத்தின் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அதன் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி – ஒக்­டோபர் 23ஆம் திகதி உங்­களின் பிறந்த தினத்­தன்று வட­மா­காண சபையின் முதலாம் அத்­தி­யாயம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன செய்யப் போகி­றீர்கள்?

பதில் - 24ஆம் திகதி பௌர்­ணமி தின­மா­கை­யாலும் 25ஆம்; திக­தியே கடைசித் தின­மாகக் கூறப்­பட்­டுள்­ள­தாலும் வட மாகா­ண­சபை ஒக்­டோபர் 23ஆம் திகதி கூட இருக்­கின்­றது. அன்­றைய தினம் பிறந்த தின­மாக அமைந்­தது எதேச்­சை­யாக ஏற்­பட்ட ஓர் ஒற்­றுமை.
நான் முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனஞ் செலுத்த உள்ளேன். கட்­சி­க­ளிலும் பார்க்க மக்­களை ஒன்­றி­ணைத்து, எமது மக்­களின் தேவை­களை, அபி­லா­ஷை­களை, விருப்பு வெறுப்­புக்­களை, கரி­ச­னை­களைத் தெரிந்து வைத்து உல­கிற்கு எடுத்துக் கூறவும் அர­சாங்­கத்­திற்கு எடுத்துக் கூறவும் வேண்­டி­யுள்­ளது. என்னால் முடிந்­ததை இது சம்­பந்­த­மாகச் செய்ய முன்­வ­ருவேன்.

கேள்வி – அடுத்த கட்டம் தொடர்பில் 4 தெரி­வு­களைக் கொண்­டி­ருக்கும் நீங்கள் இறுதி முடிவை எப்­போது எடுக்­க­வுள்­ளீர்கள்?

பதில் - வட­மா­கா­ண­சபைத் தேர்­தல்கள் உடனே நடை­பெ­றக்­கூ­டிய சாத்­தியக் கூறுகள் மிகவும் குறைவு. முதலில் நான்­கா­வது தெரிவில் ஈடு­பட்டுக் கொண்டு மேற்­கொண்டு நடக்க வேண்­டி­யவை பற்றி பின்னர் ஆராய்வோம்.

கேள்வி – உங்­களை முத­ல­மைச்­ச­ராக தெரிவு செய்ய வேண்டும் என்­பதில் ஆரம்பம் முதல் இறு­தி­வரை இறுக்­க­மாக இருந்த கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனை சந்­திப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் உண்டா?

பதில் - நான் எப்­பொ­ழுதும் ஆயத்தம். அவ­ருடன் எனக்­கென்ன பிணக்கு? அவரின் வலது கரம் இட­ம­ளித்தால் அவரும் என்னைச் சந்­திப்­பதில் அவ­ருக்கு எந்தத் தடங்­கலும் இருக்­காது என்று நம்­பு­கின்றேன்;.

கேள்வி – உங்­க­ளி­டத்தில் காணப்­படும் 4 தெரி­வு­களில் நான்­கா­வது தெரிவை மேற்­கொள்ளும் பட்­சத்தில் கூட்­ட­மைப்பு வர­வேற்­புடன் ஆத­ரவை நல்கும் என அதன் பேச்­சாளர் தெரி­வித்­தி­ருக்­கின்­றதைக் கருத்தில் எடுப்­பீர்­களா?

பதில் - கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே ஆத­ரவு நல்­கியே வரு­கின்­றது. பேச்­சா­ள­ருக்கு இது தெரி­யாது போலும்!

கேள்வி – கொள்கை ரீதி­யாக புதிய கூட்­ட­ணியை உரு­வாக்கி அடுத்த தேர்­தலில் கள­மி­றங்­கு­வீர்­களா?

பதில் - இன்­னமும் முடி­வெ­டுக்­க­வில்லை. ஆனால் கொள்கை ரீதி­யா­கவே எனது நிலை இருக்கும் என்­பதில் சந்­தேகம் இருக்கத் தேவை­யில்லை.

கேள்வி – எதிர்­கா­லத்தில் கூட்­ட­மைப்­புடன் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று அதன் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு சாத்­தி­யப்­பாடு உள்­ளதா?

பதில் - தற்­போ­தைய தலை­மைகள் போய் கூட்­ட­மைப்பு பதிவு பெற்று மாற்­றுத்­த­லைமை உதித்தால் சாத்­தி­யப்­பாடு உண்டு.

கேள்வி – வட­மா­காண சபையின் வினைத்­தி­ற­னான செயற்­பாட்டில் பின்­ன­டை­வுகள் உள்­ளன என்­பதை ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா?

பதில் - இன்­றைய மத்­திய அர­சாங்கம் பற்­றியும் அவர்­களின் வினைத்­திறன் சம்­பந்­த­மா­கவும் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. ஆகவே யாரும் இவ்­வா­றான கேள்­வி­களை யாரைப்­பற்­றியும் அடுக்­கலாம். எம்மைப் பொறுத்த வரையில் பின்­ன­டை­வு­க­ளுக்குக் காரணம் நாமல்ல. எம்முள் இருந்து கொண்டே எமக்குக் குழி­ப­றித்துக் கொண்­டி­ருப்­போரே அதற்குப் பதில் கூற வேண்டும். அர­சியல் ரொட்டித் துண்­டு­களைக் காட்டி அற நிலை மறந்த அவை­யினர் சிலரை வைத்து அரங்­கேற்­றிய நாட­கங்கள் பின்­ன­டைவைத் தராமல் எதனைத் தரு­வன? அப்­படி இருந்தும் எமது செயற்­பா­டுகள் பற்றி நல்­லதே கூறப்­பட்­டுள்­ளன. நாடு பூரா­கவும் உள்ள 800க்கும் அதி­க­மான அரச அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்கள் போன்­ற­வற்றுள் 2015ஆம் ஆண்டில் எமது மாகாண முத­ல­மைச்சர் அமைச்சே சில விட­யங்கள் சம்­பந்­த­மாக முத­லிடம் பெற்­றது. 2016இலும் நாம் முதன்மை நிலை­யில்த்தான் அடை­யாளம் காட்­டப்­பட்­டுள்ளோம். சதிகள் பல நடந்­தாலும் எமது செயற்­பா­டுகள் வினைத்­தி­ற­னு­டன்தான் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. முட்­டை­களை இட்­டு­விட்டு கொக்­க­ரித்து எமது வினைத்­திறன் பற்றி பறை­சாற்ற வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை.

கேள்வி – இது­வரை காலத்தில் வட மாகாண சபை சாதித்­தது என்ன?
பதில் - எமது சாத­னைகள் பற்­றிய கைநூல் விரைவில் வெளி­வரும். அதை வாசித்துத் தெரிந்து கொள்­ளலாம்.
கேள்வி – கஜேந்­தி­ர­குமார் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஆகியோர் இரு துரு­வ­மா­கி­யுள்ள நிலையில் புதிய கூட்­டணி ஒன்று அமை­வ­திலும் சிக்­கல்கள் இருப்­பது போல் உள்­ளதே?

பதில் - கொள்­கைகள் ஒன்றாக இருந்தால், மக்களின் நலனே முக்கியமென்ற எண்ணம் வேரூன்றி விட்டால் துருவங்கள் கூட இணையலாம்.

கேள்வி – மஹிந்த ராஜபக்ஷ உட்பட இலங்கையின் அரசியல் தலைமைகள் இந்தியாவின் கரிசனையை கவனத்தில் கொண்டு செயற்படுகின்ற சூழல் காணப்படுகின்ற நிலையில் தொடர்ந்தும் அரசியல் களத்தில் பயணிப்பதை உறுதிசெய்துள்ள நீங்கள் இந்தியாவுடன் உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்துவீர்களா?

பதில் - இந்தியாவுடனான எனது உறவுகள் என்றுமே நன்றாகவே இருந்து வருகிறது. அதில் கட்டி எழுப்ப எதுவும் இல்லை.

https://www.tamilnaatham.org/2018/09/vigneswaran3.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.