Jump to content

வழக்குச் செலவைப் பெற்றார் சுமந்திரன்….


Recommended Posts

வழக்குச் செலவைப் பெற்றார் சுமந்திரன்….

 

 

Sumanthiran-2.jpg?resize=666%2C470

தமிழரசு கட்சிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனிடம் இருந்து வழக்கு செலவை பெற்றுக்கொண்டு உள்ளார். வலி,தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ. பிரகாஸ்சை உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கி. துரைசிங்கம் மற்றும் பொருளாளர் பொ. கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு விசாரணைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி சுமந்திரனும் , வழக்காளி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் முன்னிலையானர்கள். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குறித்த வழக்கை வழக்காளி மீள பெற விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

குறித்த வழக்கு தொடர்பில் சட்டத்தரணி , எம்.ஏ. சுமந்திரனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட போது , இலங்கை தமிழரசு கட்சிக்கு எதிராக முன்னாள் பிரதேச சபை தவிசாளர் தாக்கல் செய்த வழக்கில் கட்சியில் இருந்து அவரை நீக்குவதற்கும் , சபையின் உறுப்புரிமையை நீக்குவதற்கும் நீதிமன்றினால் கட்டானை வழங்கப்பட்டு இருந்தது.

அந்நிலையில் இன்றைய தினம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் , செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் சார்பில் முன்னிளையானேன். இந்த வழக்கு நீதிமன்றுக்கு வெளியே தீர்க்கப்பட்டு விட்டது என எனக்கு அறிவித்தல் வழங்கப்பட்டு இருந்தது.

அதனை நான் நீதிமன்றுக்கு ஆரம்பத்தில் தெரிவித்த போது பிரகாஸ் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அவ்வாறு தனக்கு எதுவம் தெரியபடுத்த வில்லை என தெரிவித்து வழக்கினை மேற்கொண்டு நடத்த கேட்டுக்கொண்டார்.

அதன் போது நான் பூர்வாங்க ஆட்சேபனை ஒன்றினை தெரிவித்திருந்தேன். இந்த வழக்கு சரியான முறையில் தாக்கல் செய்யப்பட வில்லை கூட்டினைக்க படாத நிறுவனத்திற்கு எதிராக மூவரின் பெயரை குறிப்பிட்டு வழக்கு தாக்கல் செய்வதாயின் சிவில் நடவடிக்கை கோவை பிரிவின் 16 கீழ் நீதிமன்ற அனுமதி பெற்று ஊடகங்களில் அதனை தெரியப்படுத்த வேண்டும். அவற்றை நான் மேற்கோள் காட்டி வழக்கினை முதல் நிலையிலையே தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்து சமர்ப்பணம் செய்தேன்.

அதன் பின்னர் வழக்காளியின் சட்டத்தரணி குறித்த வழக்கு சமரசமாக தீர்க்கப்பட்டு உள்ளது தன்னுடைய கட்சி காரர் தனது வழக்கை மீள பெற உள்ளதாக தெரிவித்தார். அதன் போது நீதிபதி வழக்காளியிடம் நேரடியாக கேட்ட போது ஆம் நான் வழக்கினை மீள பெற விரும்புகிறேன் என தெரிவித்தார்.

வழக்கின் ஆரம்பித்தில் நான் சமரசம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த போதே வழக்கினை மீள பெற்று இருந்தால் வழக்கு செலவு கேட்டு இருக்க மாட்டேன். அப்படியில்லை என தர்க்கித்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட வுள்ளது என தெரிய வந்ததும் வழக்கினை மீள பெற விரும்புவதாக தெரிவித்தமையால் வழக்கு செலவினை கேட்டு இருந்தேன். அதனால் எனக்கு வழக்கு செலவு தந்தே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. என தெரிவித்தார்.

அதன் போது ஊடகவியலாளர்கள் வழக்கு செலவாக எவ்வளவு தொகை பெற்றுக் கொண்டீர்கள் என சட்டத்தரணி சுமந்திரனிடம் கேட்ட போது . அதற்கு பதிலளிக்காமல் சிரித்துகொண்டு சென்றார். என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/97106/

Link to comment
Share on other sites

“வழக்கு செலவை செலுத்த மாட்டேன்” – மணிவண்ணன்….

manivannan.jpg?resize=554%2C467

தன்னுடைய கட்சி காரர் தன்னிடம் எந்த சந்தர்ப்பத்திலும் வழக்கு வழக்கினை மீள பெற போவதாக கூறவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். வலி,தெற்கு பிரதேச சபை உறுப்பினர் ஜீ. பிரகாஸ்சை உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக யாழ்.மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, செயலாளர் கி. துரைசிங்கம் மற்றும் பொருளாளர் பொ. கனகசபாபதி ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு விசாரணைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் சட்டத்தரணி சுமந்திரனும், வழக்காளி சார்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனும் முன்னிலையானர்கள். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து குறித்த வழக்கை வழக்காளி மீள பெற விரும்புவதாக தெரிவித்ததை அடுத்து குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அந்நிலையில் தான் வழக்காளியின் சட்டத்தரணியிடம் இருந்து வழக்கு செலவினை பெற்றுக்கொண்டதாக சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் சட்டத்தரணி வி.மணிவண்ணனிடம் கேட்ட போது ,

வழக்கு விசாரணை நடக்கும் போது கூட எனது கட்சி காரர் வழக்கினை வாபஸ் பெற வுள்ளதாக என்னிடம் கூறவில்லை. அதனாலயே வழக்கினை வாபஸ் பெற முடியாது என மன்றில் தெரிவித்தேன்.

நீதிபதி நேரடியாக வழக்காளியான எனது சட்டத்தரணியிடம் கேட்ட போது, தான் வழக்கினை வாபஸ் பெற விரும்புவதாக தெரிவித்தார். ஆனால் என்னிடம் தான் வழக்கினை வாபஸ் பெற விரும்புவதாக எந்த சந்தர்பத்திலும் கூறவில்லை.

இதேவேளை சட்டத்தரணி சுமந்திரன் மன்றில் செய்த விண்ணப்பம் கராணமாக வழக்கு தள்ளுபடி செய்யும் நிலைக்கு சென்ற போதே தான் வாபஸ் பெற விரும்புவதாக கூறிய கருத்தை முற்றாக தான் நிராகரிப்பதாகவும் , வழக்காளி வழக்கினை வாபஸ் பெற விரும்பியதால் தான் வழக்கு தள்ளுபடி செய்யபட்டது என தெரிவித்தார்.

வழக்கு செலவு செலுத்தியமை தொடர்பில் கேட்ட போது, எனக்கு எந்த அறிவித்தலும் வழங்காமல் மன்றில் திடீரென வழக்கினை வாபஸ் பெற விரும்புவதாக தெரிவித்தமையால் வழக்கு செலவினை வழக்காளியே செலுத்த வேண்டும் எனுவும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/2018/97100/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.