Jump to content

சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது - கோத்தபாய


Recommended Posts

சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது - கோத்தபாய 

 

 

(எம்.மனோசித்ரா)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று வெளிப்படையாகவும் நேர்மையாகவும் தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைமைத்துவத்திலான அரசாங்கமொன்றை உருவாக்க அனைவரும் ஒன்றினைய வேண்டும் எனத் தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது எனவும் சுட்டிக்காட்டினார். 

பொலன்னறுவையில் இடம்பெற்ற எலிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

gota1.jpg

gota2.jpg

நாட்டின் இறையான்மை ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டதாகவே மஹிந்த ராஜபக்ஷவின் 9 ஆண்டு கால ஆட்சி காணப்பட்டது. பயங்கரவாதம், அடிப்படைவாதம் மற்றும் வன்முறைகள் அற்ற நாட்டில் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய சர்வ இன மக்களும் அச்சமின்றி வாழக் கூடிய ஒரு கொள்கை முன்னெடுக்கப்பட்டது.

மஹிந்த சிந்தனை ஊடாக நாட்டின் விவசாயிகளுக்கு சிற்நத சேவைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதே போன்று தேசிய வர்த்தகங்கள் பாதுகாக்கப்பட்டன. மேலும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் என பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தார். ஆனால் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்து அனைவரும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

மஹிந்தராஸ பக்ஷ ஆட்சி காலத்தில் பாரிய யுத்திற்கு முகங்கொடுத்தும் நாட்டின் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்படாது முன்னோக்கி கொண்டு சென்றோம். ஆனால் ஜனவரி 8 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் நிலையான கொள்ளையோ பொருளாதார இலக்குகளோ அற்ற நிலையில் நாடு படு பாதாளத்தில் விழுந்துள்ளது. முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் கைவிடப்பட்டது. நான்கு இலட்சம் பேருக்கு தொழில் வாய்ப்பு இல்லாமல் போனது.

பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் போன்ற அனைத்து துறைகளிலும் அரசாங்கம் வீழ்ச்சி நிலையிலேயே உள்ளது. இந்த நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் உருவாகக் கூடிய அரசாங்கத்தின் ஊடாக வெற்றி இலங்கை அடைவதற்கான கொள்கைகளை தயாரித்து வருகின்றோம். தொழில் சார் நிபுணர்கள், புத்தி ஜீவக்ள உள்ளிட்ட பல் துறைசார் நிபுணர்களிடமிருந்து கருத்துக்களை உள்வாங்கி திட்டமிடுகின்றோம். எதிர் தரப்பினரை பழிவாங்கும் நிலையிலேயே தற்போதைய ஆட்சியாளர்கள் உள்ளனர்.

இன்று நாட்டில் பல்வேறு வகையிலும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன. போதைப் பொருள் கடத்தல் , பாதாள குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. வடக்கில் இராணுவம் போரிடும் போது தெற்கில் நகரங்களைப் பாதுகாப்பதில் பொலிஸார் பாரிய பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். ஆனால் இன்று பல்வேறு வகையிலும் அவர்கள் பழிவாங்கள்களுக்கு உட்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு அதிகாரிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் பொலிஸ்மா அதிபர்கள் நேர்மையாகச் செயற்பட்டனர்.

கட்டுநாயக்கவில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை அடுத்து அப்போதைய பொலிஸ்மா அதிபர் 2 வருடங்களுக்கு முன்பதாகவே சேவையிலிருந்து ஓய்வு பெற்றனர். ஆனால் இன்று பொலிஸ் மா அதிபரின் செய்றபாடுகள் கோமாளித்தனமாக உள்ளதை ஊடகங்களில் காண முடிகிறது.

புதிய நீதி மன்றத்தை ஸ்தாபித்து அதில் முதலாவது வழக்காக டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு தூபி அமைத்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நினைவு தூபி அமைத்தமை தேசிய பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டதாக காண்பிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. 

2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி இவர்கள் கொண்டு வந்த அமைதி என்ன? பாரிய போரை நிறுத்தி மஹிந்தராஜ பக்ஷ நாட்டில் உருவாக்கிய ஜனநாயத்தையும் சமாதானத்தையும் யாரும் மறந்துவிட முடியாது. நாட்டைக் கையளிக்கும் போது யாருக்கும் அச்சுறுத்தல் இருந்ததில்லை.

சட்டம் இல்லாத நாட்டில் சுதந்திரம் இருக்காது. தேசிய பாதுகாப்புக்காக நிறுவப்பட்டிருந்த புலனாய்வு திட்டங்கள் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் அனைத்தும் சீரழிந்து விட்டது. புலனாய்வு பிரிவுகளில் எச்சரிக்கைகள் குறித்து அரசாங்கம் கவனத்தில் கொள்வதில்லை.

ஆகவே வெளிப்படையாக தீர்மானங்களை எடுக்கக் கூடிய தலைவர் ஒருவரினால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே மஹிந்த ராஜபக்ஷ போன்று வெளிப்படையாக தீர்மானங்கள் எடுக்கக் கூடிய தலைவருடன் ஆட்சி அமைக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/41141

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.