Jump to content

ஒற்றுமையின்றி தமிழர்கள் மட்டும் தனியாக பாடுபட்டால் சாதிக்க முடியாது- கல்முனை விகாராதிபதி


Recommended Posts

ஒற்றுமையின்றி தமிழர்கள் மட்டும் தனியாக பாடுபட்டால் சாதிக்க முடியாது- கல்முனை விகாராதிபதி

 

 

DSC0022.jpg?resize=576%2C629

 

ஒற்றுமையின்றி தமிழர்கள் மட்டும் தனியாக பாடுபட்டால் சாதிக்க முடியாது என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதியும் கல்முனை சிவில் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும்இஅம்பாறை மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத் தலைவராகவும் அம்பாறை வித்தியானந்த பிரிவெனாவின் தமிழ்ப்பாட வளவாளராகவும் இருக்கும் வண.ரன்முதுகல சங்கரட்ணதேரர் குறிப்பிட்டுள்ளார்.

 

கனேடிய அரசின் நிதியுதவியுடன் கல்முனை மாநகரில் 3400 கோடி ரூபா நிதியில் மலசலகூடக் கழிவகற்றல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதி வாழ் தமிழர்கள் மத்தியில் கல்முனை -1 பல்தேவை கட்டடத்தில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அவர்

அம்பாறை மாவட்டத்தில் கல்முனையில் வாழும் தமிழர்களை திட்டமிட்டமுறையில் அழித்தொழிக்க வேண்டும் என்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் குறியாக இருந்து வருகின்றார்கள் என்பதை இங்குள்ள மக்களே எனக்கு தெரிவிக்கின்றனர்.இதற்காகவே தான் கல்முனை மாநகர சபைக்குட்ட 75 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மலசலகூடக் கழிவுகளை அகற்றி சுத்திகரிக்கும் வேலைத்திட்டத்தை மக்கள் செறிந்து வாழும் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிகின்றேன்.இத்திட்டம் நல்ல ஒரு திட்டம் தான்.காலத்தின் தேவையும் கூட.ஆனால் இவ்வாறான பாரிய திட்டங்கள் அமைக்கப்படும் போது மக்களிற்கான விழிப்பூட்டல்கள் அவசியமாகும்.ஆனால் அவை ஒன்றும் இதுவரை எவரும் முன்னெடுக்கவில்லை என்பதே எமது கவலையாகும்.

இப் பிரதேசத்தில் அதிகாரத் துஸ்பிரயோகத்தில் அரசியல் பொருளாதார ரீதியில் பலம் பெருந்தியவர்கள் ஈடுபட முயன்றால் நான் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க போவதில்லை. இன்னுமொரு இனத்தின் உரிமைகளைப் பறித்தெடுக்கின்ற நிலை இத்திட்டத்தில் காணப்பட்டால் இதற்கு நாம் அனைவரும் கட்சிபேதங்களை மறந்து செயற்பட வேண்டும் ஒரு இனம் பாதிக்கப்படாமல் அரச அதிகாரிகள் இன மத குல பேதங்கள் பார்க்காமல் பரந்த மனப்பாங்குடன் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும். அதிகாரங்களை துஸ்பிரயோகம் பண்ணக்கூடாது. மக்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசங்களுக்கும் அதிகமாக மக்கள் கூடிக்கலைகின்ற இடங்களுக்கும் இந்த கழிவு நீர் முகாமைத்துவ திட்டத்தை அமுல்படுத்த இந்த விடயம் தொடர்பில் மக்கள் பூரண விளக்கத்தினை அளிக்க வேண்டும்.அந்த விளக்கத்தினை ஊடகங்கள் ஊடாக மக்களுக்கு வழங்க முன்வர வேண்டும்.

இந்த திட்டத்திலுள்ள படித்த சிலருக்கே நன்மைகள் தீமைகள் தொடர்பில் விளக்கமில்லாமல் இருக்கிறது. அவர்களுக்கு இது தொடர்பில் போதிய அளவில் அறிவு இருக்கவில்லை. மலசலத்தை அகற்றி அதனை மீள் சுழற்சிக்குற்படுத்துகின்ற போது அதனால் சூழலில் துர்நாற்றம் எழும் என மக்கள் கருதுகிறார்கள்அவ்வாறே வீடுகளில் இருந்து குழாய்வழியாக பிரதான கழிவு நீர் முகாமைத்துவ சட்டகத்திக்கு அவற்றை நிலக்கீழ்வழியாக கொண்டுவரும் போது குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டு சூழல் மாசடையும் அந்த பிரதேசமே துர்நாற்றம் வீசும் என அவர்கள் கருதுகிறார்கள். இதனால் தான் இந்த திட்டத்தை ஆரம்பிக்கின்ற போது மக்கள் அத்திட்டத்தை நிறுத்தும் முயற்சியில் இறங்குகிறார்கள்.இதுவே உண்மை.

ஆனால் இந்த கருத்தை தற்போது மக்கள் கருத்தாக தான் முன்வைக்கும் போது போது பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸை வசைபாடுவதாகவும் இனவாதம் கதைப்பதாகவும் சிலர் குறிப்பிடுகின்றனர்.ஆனால் எனது நோக்கம் மக்களுக்கு நன்மையான விடயங்களை பெற்றுக்கொடுப்பதாகும்.இந்த தேசிய அரசாங்கத்தில் நாட்டில் நல்லிணக்க சக வாழ்வு ஏற்படுத்த முயற்சிகள் இடம்பெறுகிறது.எனவே எதிர்கால சந்ததிகளின் நலனை அடிப்படையாக கொண்டு எமது மக்களிற்கான அபிவிருத்தி திட்டங்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.நான் ஒரு பௌத்த குருவாக மாத்திரமன்றி தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் அயராது உழைத்து வருபவன்.நான் ஒரு இனவாதி அல்ல.பல்லின மக்கள் வாழுகின்ற இப்பிரதேசத்தின் அனைத்து மக்களின் மொழி மத கலாசாரத்திற்கு மதிப்பளிக்க பழகிக்கொள்ள வேண்டும்.இதனை ஏற்படுத்துவதில் நான் உறுதியாக உள்ளேன்.அதற்கு ஏற்ற வகையில் ஒவ்வொருவரது சிற்தனையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும்.இங்கு மக்களின் தேவைகளை அறிந்து கல்முனை மாநகர உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் எங்களையும் மக்களையும் அரவணைக்கின்றார்.நாமும் அவருக்கு பக்க பலமாக இருக்க வேண்டும்.இவருடைய நல்ல சிந்தனையை பாராட்டுகின்றேன்.கல்முனை மாநகரில் மக்களுக்காக செய்ய வேண்டிய பல அபிவிருத்திகள் எம் கண்முன்னே இருக்கின்றன. அதனை செய்யவேண்டும்.எமது பிரதேச மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. அதனையெல்லாம் தீர்த்து வைக்கவேண்டும். அதற்காகவேண்டித்தான் இக்கூட்டத்திற்கு அழைத்தவுடன் வந்தேன்.கல்முனையில் தமிழ் மக்களுக்கு பாதகமான முறையில் நகர அபிவிருத்தி மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அதனை நான் எதிர்ப்பேன் என்றும் தெரிவித்தார்.

கனேடிய அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் மக்களின் எந்தவித பாதிப்புகளையும் ஏற்படுத்த நாம் அனுமதிக்க முடியாது என’பதே எனது கருத்தாகும். எனவே அனைத்து தலைவர்களும் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் ஒத்துழைத்தால்தான் இந்த வேலைத்திட்டத்தை மக்களிற்கு சாதகமாக நிறைவேற்ற முடியும்.

இக்கூட்டமானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில் சிவில் அமைப்பு த.தே.கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினர்கள் கிராமப்பெரியார்கள் ஆலயங்களின் உறுப்பினர்கள் மற்றும் கிராம அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

DSC0021.jpg?resize=800%2C527  DSCF1359.jpg?resize=800%2C600

http://globaltamilnews.net/2018/97045/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தாளும் கெட்டித்தனம்.... 

இதுக்கு துணை போகும் முஸ்லீம் அரசியல்வாதிகள்.

இணக்க அரசியல் என்று கூட்டமைப்பு, வாய்பிளக்க.... அதை அனுகூலமாக எடுத்து, கிஸ்புல்லா கூட்டம் போட்ட, போடும் ஆட்டம்.... பாதிக்கப்பட்ட தமிழர்களை சிங்கள தரப்பிடம் போகவைத்துள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.