Jump to content

விஜய் நடித்துள்ள சர்கார்: ரஹ்மான் இசையமைப்பில் முதல் பாடல் வெளியீடு!


Recommended Posts

விஜய் நடித்துள்ள சர்கார்: ரஹ்மான் இசையமைப்பில் முதல் பாடல் வெளியீடு!

 

 
sarkar_song1

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்தடுத்த கட்டங்களாக இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சிம்டாங்காரன் என்கிற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சிம்டாங்காரன் என்றால் கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன்.  கண் சிமிட்டாமல் சிலரைப் பார்க்கத் தோன்றும். அந்த ஒருவன் தான் சிம்டாங்காரன் என்று பாடலாசிரியர் விவேக் விளக்கம் அளித்துள்ளார்.

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/sep/24/first-single-from-sarkar-3006957.html

 

 

 

 

Link to comment
Share on other sites

எல்லாப் புகழும் இறைவனுக்கே: ‘சிம்டாங்காரன்’ பாடலின் வீச்சு குறித்து ஏ.ஆர். ரஹ்மான்!

 

 
sarkar_sun_tv1

 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்தடுத்த கட்டங்களாக இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சிம்டாங்காரன் என்கிற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. சிம்டாங்காரன் என்றால் கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன்.  கண் சிமிட்டாமல் சிலரைப் பார்க்கத் தோன்றும். அந்த ஒருவன் தான் சிம்டாங்காரன் என்று பாடலாசிரியர் விவேக் விளக்கம் அளித்துள்ளார்.

பாடல் வெளியான நிமிடத்திலிருந்து பாடலுக்கு பல்வேறு வகையான விமரிசனங்கள் கிடைத்துவருகின்றன. பெரும்பாலான ரசிகர்கள் பாடலை விரும்பவில்லை என்பது அவர்களுடைய சமூகவலைத்தளப் பதிவிலிருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது. எனினும் வழக்கமான ரஹ்மான் பாடல் போல இந்தப் பாடலும் கேட்கக் கேட்கப் பிடிக்கும் என்றும் சிலர் ஆதரவாக எழுதியுள்ளார்கள்.

இந்நிலையில் இப்பாடல் யூடியூபில் 17 மணி நேரத்தில் 50 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. இத்தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இந்த வீச்சு குறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ட்வீட் செய்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

http://www.dinamani.com/cinema/cinema-news/2018/sep/25/simtaangaran-song-out-from-vijays-sarkar-3007635.html

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: சிம்டாங்காரன் - நல்லா இருக்கு ... நல்லாதான்யா இருக்கு

 

 
hnpng

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்துள்ள 'சர்கார்' படத்தின் ‘சிம்டாங்காரன்’ என்ற ஒரு பாடல்  திங்கட்கிழமை மாலை வெளியானது.

இதுகுறித்து  நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்.....

   
 

Mr.கெட்டவன்

‏சாங் நல்ல இருந்த ரிங் டோனா வைக்கலாம்னு இருந்தேன்...

ப்ச் ...

RAJU

‏பாட்டோட முதல் சொல்லோட பொருளுக்கு தமிழ்ல முனைவர் பட்டம் பெற்றவர் தேவைப்படுது, மத்த சொற்களுக்கு தொல்காப்பியர் வரணும்னு நினைக்கிறேன்

Srinivasan Rahul

‏இன்னைக்கு விஜய் என்பதாலேயே ரஹ்மான் இசை நல்லாயில்லை என்பவர்கள் நாளை தம் இஷ்ட நடிகருக்கு அவர் இசையமைக்கும்போது ஆஹா ஓஹோ என்று புகழ்வது இயல்புதான்

ᎢɦᎪLA ᎪռᎪռɖɦ 

‏நல்லா இருக்கு

நல்லாதான்யா இருக்கு

சுரேகா

‏இளையராஜாவுக்கு ராக்கம்மா கையைத் தட்டு, ரஹ்மானுக்கு  #Simtaangaran

youpng
 

Krish

‏இந்தப் பாட்டை எப்பிடிக் கேட்டாலும் ஒரு முடிவுக்கு வர முடியலையே    ...ஒரு தடவ மியூச்சலா கேட்டுப் பாப்போம்.

ramasamy mani

‏டண்டணக்கா, ஏ டணக்கு டக்கா வெல்லாம் எவ்வளவு கவித்துவமான பாட்டுகள் என்பது, 'சர்கார்' பாட்டு கேட்டதற்கப்புறம்தான் தெரியுது.

கார்த்திக்  

‏ஏன்டா இந்த சிம்டாங்காரன் பாட்டுக்கு நம்ம அனிருத் மியூஸிக் போட்டிருந்தா ஆலுமா டோலுமா பாட்டுக்கு டஃப் கொடுத்து இருக்கலாம் இல்ல டா.

rtyupng

https://tamil.thehindu.com/opinion/blogs/article25037957.ece

Link to comment
Share on other sites

ஒரு பாட்டுவந்தால் அது நன்றாக இருந்தால் கேட்கலாம்... ரொம்ப நல்லா இருந்தால் யாழில் ரசித்த பாட்டுகளுக்கென்று இருக்கிற திரிகளில் ஒன்றில் இணைக்கலாம் , படத்தில் ஒரு பாட்டு வெளிவந்தமைக்கு ஒரு திரி அந்த பாட்டுக்கு ஒரு விளக்கம், எல்லாவற்றிற்கும் மேலாகா  "நெட்டிசன் நோட்ஸ்`" வேறு.
 இந்திய பார்ப்பனிய பத்திரிகைகள் தான் மக்களை  வேறு எதையும் சிந்திக்க விடாமல் சினிமா , கிரிகெட்  , சின்னத்திரை நிகழ்ச்சிகள்  போன்றவற்றில் அமிழ்த்தி வைத்துள்ளார்கள் என்றால் ....., அழிவின் விளிம்பிற்குச் சென்ற ஒரு இனம் தனது உயிர்ப்பிற்காக போராடும் நிலையில் அம்மக்களின் கருத்துக்களை ஒன்றினைக்கும் ஒரு தளத்தில்  நாமும் அவற்றைக் காவ வேண்டுமா?  ஒரு அளவுடன் இவற்றை மட்டுப்படுத்தலாமே ? 
அப்படியானால்  இதற்கான அளவு கோல் எது? 
எமது மனம் தான் அளவுகோல்.  சில வேளை இந்த விடயத்தில் எனது மனதின் அளவு கோல் மிகச் சிறியதாக இருக்கிறதோ  என்னவோ , அதனால் இவை எனக்கு மட்டும்  பிரச்சனையாக  தெரிகின்றதோ தெரியவில்லை.  அப்படியாயின் மன்னிக்கவும்.

  " `நாகேஷுக்கு மிளகு ரசம்னா உயிர்'' - சச்சு! #HBDNagesh"  , " பப்பிம்மா... இன்னும் வாழ்ந்துகொண்டே இருப்பார்!"
"``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும்" 
போன்ற செய்திகளின் தலையங்கங்களை வாசிக்கவே பிடிக்கவில்லை

தல தோனி, தல அஜித், இளைய தளபதி .....  போன்ற சொற்களை கண்டாலே  வெறுப்பாகுது . இந்த பத்திரிகைகள் எல்லாம் எமது இளையோரை தவறாக வழி நடாத்துவதாக  கோபம் வருகிறது.

Link to comment
Share on other sites

3 hours ago, Athavan CH said:

ஒரு பாட்டுவந்தால் அது நன்றாக இருந்தால் கேட்கலாம்... ரொம்ப நல்லா இருந்தால் யாழில் ரசித்த பாட்டுகளுக்கென்று இருக்கிற திரிகளில் ஒன்றில் இணைக்கலாம் , படத்தில் ஒரு பாட்டு வெளிவந்தமைக்கு ஒரு திரி அந்த பாட்டுக்கு ஒரு விளக்கம், எல்லாவற்றிற்கும் மேலாகா  "நெட்டிசன் நோட்ஸ்`" வேறு.
 இந்திய பார்ப்பனிய பத்திரிகைகள் தான் மக்களை  வேறு எதையும் சிந்திக்க விடாமல் சினிமா , கிரிகெட்  , சின்னத்திரை நிகழ்ச்சிகள்  போன்றவற்றில் அமிழ்த்தி வைத்துள்ளார்கள் என்றால் ....., அழிவின் விளிம்பிற்குச் சென்ற ஒரு இனம் தனது உயிர்ப்பிற்காக போராடும் நிலையில் அம்மக்களின் கருத்துக்களை ஒன்றினைக்கும் ஒரு தளத்தில்  நாமும் அவற்றைக் காவ வேண்டுமா?  ஒரு அளவுடன் இவற்றை மட்டுப்படுத்தலாமே ? 
அப்படியானால்  இதற்கான அளவு கோல் எது? 
எமது மனம் தான் அளவுகோல்.  சில வேளை இந்த விடயத்தில் எனது மனதின் அளவு கோல் மிகச் சிறியதாக இருக்கிறதோ  என்னவோ , அதனால் இவை எனக்கு மட்டும்  பிரச்சனையாக  தெரிகின்றதோ தெரியவில்லை.  அப்படியாயின் மன்னிக்கவும்.

  " `நாகேஷுக்கு மிளகு ரசம்னா உயிர்'' - சச்சு! #HBDNagesh"  , " பப்பிம்மா... இன்னும் வாழ்ந்துகொண்டே இருப்பார்!"
"``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும்" 
போன்ற செய்திகளின் தலையங்கங்களை வாசிக்கவே பிடிக்கவில்லை

தல தோனி, தல அஜித், இளைய தளபதி .....  போன்ற சொற்களை கண்டாலே  வெறுப்பாகுது . இந்த பத்திரிகைகள் எல்லாம் எமது இளையோரை தவறாக வழி நடாத்துவதாக  கோபம் வருகிறது.

உங்கள் கருத்துக்கு நன்றி ஆதவன். இது போன்ற குப்பைகளை ஓரளவுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்று கருத்து இல்லை. 

விரைவில் இது தொடர்பாக காத்திரமான மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். அத்துடன் விளையாட்டு செய்திகளின் எண்ணிக்கையும் வெட்டி ஒட்டப்படும் சிறுகதைகளின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்படும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆதவன்,

இளைய தலைமுறைக்கும் எங்களுக்கும் இடைவெளி வந்துவிட்டது. இப்போது இணையம், முகநூல் என்று வளரும் தலைமுறைக்கு ஏற்ப பரபரப்பாக இருக்க நொடிக்கொரு பொழுதுபோக்குச் செய்திகள் வந்தால்தானே சிந்திக்கும் நேரத்தை மட்டுப்படுத்தலாம். ஆனால் இளையவர்களைத்தான் இத் தளத்தில் இப்போது காணவில்லை. 

பி.கு. நான் இப்போதும் இளையவர்தான்.?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.