Jump to content

மஹிந்தவுக்கு முளைத்திருக்கும் சிக்கல்


Recommended Posts

மஹிந்தவுக்கு முளைத்திருக்கும் சிக்கல்

Untitled-9-a148e87806fec6ea7d5e29c1f3630632a0b31051.jpg

 

-சத்­ரியன்

ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜ பக்ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள். 

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு எதி­ரணி அல்­லது ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­ன­ணியின் வேட்­பாளர் யார் என்ற விவ­காரம் இப்­போது முன்­னை­யதை விடவும் சிக்­க­லா­ன­தாக மாறி­யி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷ தனது சகோ­தரர்­களில் ஒரு­வரை போட்­டியில் நிறுத்தக் கூடும் என்ற எதிர்­பார்ப்பு நீண்­ட­கா­ல­மா­கவே இருந்து வரு­கி­றது.

குறிப்­பாக, இரண்டு பேருமே அமெ­ரிக்க குடி­யு­ரி­மையைக் கொண்­ட­வர்­க­ளாக இருந்­தாலும், பசில் ராஜபக் ஷ மற்றும் கோத்­தா­பய ராஜபக் ஷ ஆகிய இரு­வரில் ஒரு­வரை, போட்­டியில் நிறுத்தும் வாய்ப்­புகள் அதிகம் என்றே பேசப்­பட்­டது.

ஆனாலும், இவர்கள் இரு­வ­ரையும் விட சமல் ராஜபக் ஷவே வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­பட வேண்டும் என்­பது மஹிந்த ராஜபக் ஷவின் இட­து­சாரித் தோழர்­களின் நிலைப்­பாடு.

ஆனாலும், அடுத்த வேட்­பாளர் யார் என்­பதை கூறாமல் மஹிந்த உயர் இர­க­சி­யத்தை பாது­காத்து வந்­துள்ளார்.

இதற்­குள்­ளா­கவே, 19 ஆவது திருத்தச் சட்டம், இதற்கு முன்னர் ஜனா­தி­ப­தி­யாக பதவி வகித்­த­வர்­க­ளுக்குப் பொருந்­தாது என்ற ஒரு “ஓட்டை” இருக்­கி­றது என்ற மிகவும் பல­வீ­ன­மான வழி­யொன்­றையும் கூட்டு எதி­ரணி கண்­டு­பி­டித்து வைத்­தி­ருக்­கி­றது. 

அந்த வழியின் ஊடாக மஹிந்­த­வினால் செல்ல முடியும் என்­ப­தற்கு உத்­த­ர­வாதம் இல்லை.

19 ஆவது திருத்­தத்தில் இருப்­ப­தாக கூறும் ஓட்­டையைப் பயன்­ப­டுத்தி, மீண்டும் போட்­டி­யி­டு­வது பற்றி முடிவு செய்­ய­வில்லை என்று மஹிந்த ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, இன்­னொரு பக்­கத்தில், “தி ஹிந்து” வுக்கு அண்­மையில் அளித்­தி­ருந்த செவ்­வியில், தமது சகோ­தரர் நிச்­சயம் போட்­டி­யா­ள­ராக இருப்பார் என்­ப­தையும் கூறி­யி­ருந்தார். அவ­ரது இந்தக் கருத்து அர­சி­யலில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. 

“நாமல் ராஜபக் ஷவினால் போட்­டி­யிட முடி­யாது. அவர் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்­கான குறைந்­த­பட்ச வய­தெல்­லையை அடை­ய­வில்லை. எனவே அவரைக் கவ­னத்தில் கொள்ள முடி­யாது.

எனது சகோ­தரர் நிச்­ச­ய­மாக போட்­டி­யா­ள­ராக இருப்பார். ஆனால் கட்சி மற்றும் பங்­காளிக் கட்­சி­களே யார் என்­பதைத் தீர்­மா­னிப்­ப­வர்­க­ளாக இருப்பர்.” இது தான் அவர் “தி ஹிந்­து”­வுக்கு அளித்­தி­ருந்த செவ்­வியில் கூறி­யி­ருந்த விடயம்.

அவர் இதனைக் கூறி­ய­துமே, கோத்­தா­பய ராஜபக் ஷவை அடுத்த ஜனா­தி­ப­தி­யாக்கத் துடிக்கும் தரப்­பி­னரும், ஊட­கங்­களும், கோத்­தா­பய ராஜபக் ஷ தான் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் என்று கொட்டை எழுத்­து­களில் செய்தி வெளி­யிட்­டன.

இங்கு தான் மஹிந்­த­வுக்கு பிரச்­சி­னையே வெடித்­தது. மஹிந்த ராஜபக் ஷ இதனைக் கூறி­யதும், அதற்கு எதி­ராகப் போர்க்­கொடி தூக்­கி­ய­வர்கள் இரண்டு பேர்.

ஒருவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம. இன்­னொ­ருவர், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வாசு­தேவ நாண­யக்­கார. இரு­வ­ருமே, மஹிந்த ராஜபக் ஷவுக்கு மிகவும் நெருக்­க­மா­ன­வர்கள். அவ­ரது நல்ல விசு­வா­சி­களும் கூட.

ஆனாலும், மஹிந்த ராஜபக் ஷவின் கருத்தை அவர்­களால் ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. இரண்டு பேரி­னது எதிர்க் கருத்­துக்­க­ளிலும் வேறு­பட்ட நோக்­கங்கள் இருந்­த­மையும் கவ­னிக்­கத்­தக்­கது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் மஹிந்­த­வுடன் ஒன்­றா­கவே, வெளியே வந்­தவர் குமார வெல்­கம. அவரைப் பொறுத்­த­வ­ரையில், மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ அதி­கா­ரத்­துக்கு வர வேண்டும் என்­பதில் உறு­தி­யாக இருந்­தாலும், அவ­ருக்குப் பதி­லாக, ராஜபக் ஷ குடும்­பத்தில் இருந்து மற்­றொ­ருவர் வரு­வதை ஏற்கத் தயா­ரில்லை.

நிச்­ச­ய­மாக, தனது சகோ­தரர் போட்­டி­யா­ள­ராக இருப்பார் என்று மஹிந்த ராஜபக் ஷ கூறி­யது தான், குமார வெல்­க­ம­வுக்கு கொதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அவர் கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ரான கருத்தைக் கொண்­டவர்.

கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தப்­ப­டக்­கூ­டாது என்று ஏற்­க­னவே கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­தவர்.

2015இல் மஹிந்த ராஜபக் ஷ, தமது குடும்­பத்­தி­னரை முன்­னி­றுத்­தி­யதால் தான் தோல்வி கண்டார், எனவே ராஜபக் ஷ குடும்­பத்தைச் சேர்ந்த ஒரு­வரை வேட்­பா­ள­ராக நிறுத்­து­வதை ஏற்­க­மு­டி­யாது என்று அவர் போர்க்­கொடி உயர்த்­தினார்.

அதே­வேளை, வாசு­தேவ நாண­யக்­கா­ர­வுக்கோ, ராஜபக் ஷவி­னரின் குடும்ப அர­சியல் பிரச்­சி­னை­யில்லை. அவரைப் பொறுத்­த­வ­ரையில் கோத்­தா­பய ராஜபக் ஷவையோ, பசில் ராஜபக் ஷவையோ வேட்­பா­ள­ராக நிறுத்­தக்­கூ­டாது.

சமல் ராஜபக் ஷவை நிறுத்த வேண்டும் என்­பதே அவ­ரது கருத்து. இவ­ரது இந்தக் கருத்­துடன் கூட்டு எதி­ர­ணியில் உள்ள திஸ்ஸ விதா­ரண போன்ற இட­து­சாரித் தலை­வர்­களும் இணங்­கு­கின்­றனர்.

கோத்­தா­பய ராஜ­பக்­ ஷவை நிறுத்­தினால் கூட்டு எதி­ர­ணிக்குள் பிளவு ஏற்­படும், கட்சி உடையும் என்­றெல்லாம் வாசு­தேவ நாண­யக்­கார எச்­ச­ரித்தார்.

மஹிந்த ராஜபக் ஷ நாடு திரும்­பிய போது, அவ­ரது கருத்­தினால் ஏற்­பட்ட கொந்­த­ளிப்பு அடங்­க­வில்லை.

அதனால் தான் அவர், கெபிற்­றி­கொல்­லா­வயில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய போது, கோத்­தா­பய ராஜபக் ஷவை வேட்­பா­ள­ராக நிறுத்தப் போவ­தாக நான் கூற­வே­யில்லை. அப்­படிக் கூறி­ய­தாக சொல்­லப்­ப­டு­வது முற்­றிலும் பொய். இது சில­ரது கற்­பனை. என்று கூறி­யி­ருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷவின் இந்தக் கருத்து உண்­மை­யா­னதே,

இந்­தி­யாவில் இருந்­த­போது, மஹிந்த ராஜபக் ஷ ‘தி ஹிந்து’ நாளிதழ், News X தொலைக்­காட்சி, Strategic News International தொலைக்­காட்சி மற்றும் தந்தி தொலைக்­காட்சி ஆகி­ய­வற்­றுக்குத் தான் செவ்­வி­களை அளித்­தி­ருந்தார்.

அதில், ‘தி ஹிந்து’ மற்றும் Strategic News International செவ்­வி­களில் தான், அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து பேசி­யி­ருந்தார்.

‘தி ஹிந்து’ செவ்­வியில் தான், ‘நிச்­ச­ய­மாக எனது சகோ­தரர் ஒரு போட்­டி­யா­ள­ராக இருக்­கிறார்’ என்று குறிப்­பிட்டார். ஆனால் அதில் எந்த சகோ­தரர் என்­பதை மஹிந்த கூற­வில்லை.

அந்த சகோ­தரர் கோத்­தா­பய ராஜபக் ஷவாகத் தான் இருக்க வேண்டும் என்­ப­தில்லை, அது பசில் ராஜபக் ஷவா­கவோ, சமல் ராஜபக் ஷவா­கவோ கூட இருக்­கலாம். அந்த மர்­மத்தை அவர் உடைக்­க­வில்லை. அது அவ­ரது தந்­தி­ர­மாகக் கூட இருக்­கலாம்.

Strategic News International தொலைக்­காட்­சியில் மஹிந்­தவைச் செவ்வி கண்ட நிதின் கோக்­ஹலே, “அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடும் வாய்ப்பு உங்­க­ளுக்கு கிடைக்­காமல் போனால், நீங்கள் ஒரு வேட்­பா­ளரை பெய­ரிட வேண்­டி­யி­ருக்கும், அது யார் என்று கேட்­டி­ருந்தார்.

அதற்கு மஹிந்த, நான் அந்த வேட்­பா­ளரை தேடிக் கொண்­டி­ருக்­கிறேன் என்று பதி­ல­ளித்­த­போது, நிதின் கோக்­ஹலே இன்­னொரு கேள்­வியைத் தொடுத்தார்.

அந்த வேட்­பாளர் உங்­களின் குடும்­பத்தைச் சேர்ந்­த­வ­ராக இருப்­பாரா? என்று, மஹிந்­த­விடம் கேட்க அவர், ‘அதற்கு அவ­சி­ய­மில்லை’ என்றே கூறினார்.

அதா­வது அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர், ராஜபக் ஷ குடும்­பத்தைச் சேர்ந்­த­வ­ராக இருக்க வேண்டும் என்ற அவ­சியம் இல்லை என்று கூறி­யி­ருந்தார்.

ஏற்­க­னவே, பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸை வேட்­பா­ள­ராக மஹிந்த நிறுத்தப் போவ­தாக செய்­திகள் வெளி­யா­னதும் நினை­வி­ருக்­கலாம்.

அம்­பா­றையில் நடந்த கூட்டம் ஒன்றில், தமது கட்சி விம­ல­வீர திச­நா­யக்­கவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக நிறுத்­தினால் கூட வெற்றி பெறும் என்று பசில் ராஜபக் ஷ கூறி­யி­ருந்தார்.

இதை­விட, அண்­மையில் தமது பெயரும் கூட, ஜனா­தி­பதி வேட்­பாளர் பட்­டி­யலில் இருக்­கி­றது என்று வாசு­தேவ நாண­யக்­கா­ரவும் கூட குறிப்­பிட்­டி­ருந்தார்.

தமது அணியில் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடத் தகுதி பெற்ற பலர் இருக்­கி­றார்கள் என்று, கூட்டு எதி­ர­ணி­யினர் நம்­ப­வைக்க முயன்­றாலும், ராஜபக் ஷவி­னரை விலக்­கிய ஒரு வேட்­பா­ளரைக் கண்­டு­பி­டிப்­பது அவர்­க­ளுக்கு இய­லு­மா­னதா என்­பது சந்­தேகம் தான்.

ஏனென்றால், மஹிந்த ராஜபக் ஷவை மையப்­ப­டுத்­தியே இந்தக் கூட்டு எதி­ரணி உரு­வா­னது. அவர் கையைக் காட்டும் ஒரு­வரை தாம் வேட்­பா­ள­ராக ஏற்றுக் கொள்வோம் என்றும் அவ­ரது சக­பா­டிகள் கூறி வந்­தனர்.

ஆனால் இப்­போது, மஹிந்த கைகாட்­டக்­கூ­டிய ஒரு­வரை ஏற்றுக் கொள்ளும் மனோ­நி­லையில் அவர்கள் இல்லை என்­பது வெளிப்­பட்­டி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்­த­வ­ரையில், தனது மகன் நாமல் ராஜபக் ஷவை அதி­கா­ரத்­துக்கு கொண்டு வரு­வதே அவ­ரது இலக்கு. இந்­தியப் பய­ணத்தில் அவ­ரையும் அழைத்துக் கொண்டு சென்று அங்­குள்ள தலை­வர்­க­ளிடம் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­தற்கு அதுவே காரணம்.

அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட அவ­ருக்கு வயது போதாது. இந்­த­நி­லையில் ராஜபக் ஷவி­னரில் ஒரு­வரை ஜனா­தி­பதித் தேர்­தலில் இறக்­கு­வதா- அல்­லது வெளியில் இருந்து ஒருவரை இறக்குவதா, தனது மகனின் அரசியல் எதிர்காலத்துக்கு துணையாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டே அவர் முடிவை எடுப்பார் என்று தெரிகிறது.

ஆனால் ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகிறது, கூட்டு எதிரணி மஹிந்த ராஜபக் ஷ என்ற ஒரே தலைமையின் கீழ் ஒன்றிணைந்திருந்தாலும், கோத்தா விசுவாசிகள், பசில் விசுவாசிகள், என்று மாத்திரமன்றி, ராஜபக் ஷ குடும்ப அரசியலுக்கு எதிரானவர்களும் கூட அதனுள் அடங்கியிருக்கிறார்கள்.

இதுதான் மஹிந்த ராஜபக் ஷ எதிர்கொள்ளப்போகும் சிக்கல். அவரது பலவீனமும் இதுதான். இந்தப் பலவீனத்தை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஐ.தே.க.வோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ முற்பட்டால், மஹிந்தவுக்கு பெரும் நெருக்கடி ஏற் படும்.

கிட்டத்தட்ட அவர் அத்தகையதொரு நிலையை நோக்கித் தான் நகர்ந்திருக் கிறார்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-23#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @goshan_che கேட்ட கேள்விக்கு... நான் பதில் சொல்லி விட்டேன்.  விசுகர், உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். 😂
    • "என் மரணத்துக்கு நானே எழுதும் அஞ்சலி" [பாடல் - 1 / உயிர் எழுத்து வரிசையில் எழுதப்பட்டது]     "அன்புக்கு அடிமையாக பண்பை மதிப்பவனாக அறிவிற்கு சுமாராக குடும்பத்தின் இளையவனாக அனைவருக்கும் நண்பனாக என்றும் தனிவழியில் அத்தியடியில் பிறந்து வளர்ந்த சாமானியனே!"   "ஆசாரம் மறந்து தன்போக்கில் வளர்ந்தவனே ஆத்திரம் கொண்டு நடைமுறையை அலசுபவனே ஆலாத்தி எடுத்து ஆண்டவனை வழிபடாதவனே ஆராய்ந்து அறிந்து எதையும் ஏற்பவனே!"   "இராவணன் வாழ்ந்த செழிப்பு இலங்கையில் இறுமாப்புடன் தலை நிமிர்ந்து வாழ்ந்தவனே இங்கிதம் தெரிந்தாலும் இடித்துரைக்கவும் மறக்காதவனே இயமன் வலையில் ஏன் விழுந்தாய்?"   "ஈடணம் விரும்பா சாதாரண மகனே ஈடிகை எடுத்து உன்மனதை வடிப்பவனே ஈமக்கிரியையை எதற்கு எமக்கு தந்தாய் ஈமத்தாடி குடி கொண்ட சுடலையில்?"   "உலகத்தில் பரந்து வாழும் பலரின் உண்மை இல்லா பற்றில் பாசத்தில் உடன்பாட்டிற்கு வர முடியாமல் உணக்கம் தரையில் விதை ஆனாயோ?"   "ஊரார் கதைகளை அப்படியே ஏற்காமல் ஊக்கம் கொண்டு சிந்தித்து செயல்படுவானே ஊறு விளைக்காது நல்லிணக்கம் காப்பவனே ஊனம் கொண்டு இளைத்து போனாயோ?"   "எய்யாமை அகற்றிட விளக்கங்கள் கொடுத்து எழுதுகோல் எடுத்து உலகை காட்டி எள்ளளவு வெறுப்போ ஏற்றத்தாழ்வோ இல்லாமல் என்றும் வாழ்ந்த உன்னை மறப்போமா?"   "ஏழைஎளியவர் என்று பிரித்து பார்க்காமல் ஏகாகாரமாய் எல்லோரையும் உற்று நோக்குபவனே ஏட்டுப் படிப்புடன் அனுபவத்தையும் சொன்னவனே ஏகாந்த உலகிற்கு எதைத்தேடி போனாய்?"   "ஐம்புலனை அறிவோடு தெரிந்து பயன்படுத்தி ஐங்கணைக்கிழவனின் அம்பில் அகப்படாமல் இருந்து ஐவகை ஒழுக்கத்தை இறுதிவரை கடைப்பிடித்தவனே ஐயகோ, எம்மை மறக்க மனம்வந்ததோ?"   "ஒழுக்கமாக பொறியியல் வேலை பார்த்து ஒழிக்காமல் வெளிப்படையாக நடவடிக்கை எடுத்து ஒள்ளியனாக பலரும் உன்னை போற்ற ஒற்றுமையாக என்றும் வாழ எண்ணியவனே!"   "ஓரமாய் ஒதுங்கி மற்றவர்களுக்கும் வழிவிட்டு ஓடும் உலகுடன் சேர்ந்து பயணித்தவனே ஓங்காரநாதம் போல் உன்ஓசை கேட்டவனை ஓதி உன்நினைவு கூற ஏன்வைத்தாய்?"   "ஔவியம் அற்றவனே சமரசம் பேசுபவனே ஔடதவாதி போல் ஏதாவதை பிதற்றாதவனே ஔரப்பிரகம் போல் பின்னல் செல்லாதவனே ஒளசரம் போல் உன்நடுகல் ஒளிரட்டுமே!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     ஈடணம் - புகழ் ஈடிகை - எழுதுகோல் ஈமத்தாடி - சிவன் உணக்கம் - உலர்ந்ததன்மை ஊறு - இடையூறு ஊனம் - உடல் குறை, இயலாமை எய்யாமை - அறியாமை ஏகாகாரம் - சீரான முறை ஏட்டுப் படிப்பு - புத்தாக படிப்பு ஏகாந்தம் - தனிமை ஐங்கணைக்கிழவன் - மன்மதன். ஐவகை ஒழுக்கம் - கொல்லாமை, களவு செய்யாமை, காமவெறியின்மை, பொய்யாமை, கள்ளுண்ணாமை ஒள்ளியன் - அறிவுடையோன், நல்லவன்; மேன்மையானவன் ஓகை - உவகை, மகிழ்ச்சி ஔவியம் - பொறாமை, அழுக்காறு ஔடதவாதி - ஒருமதக்காரன், மூலிகையிலிருந்து ஜீவன் உற்பத்தியாயிற்றென்று கூறுவோன் ஔரப்பிரகம் - ஆட்டுமந்தை. ஒளசரம் - கோடாங்கல் / உயரத்தில் இருக்கும் கூர்மையான கல் அல்லது உச்சக்கல்   [my own eulogy / A tribute written by myself to my death]        
    • ஏன் ராசா ஏன்??  ஆனால் கேள்விக்கு பதில் சொல்லாமல் போவது நன்றன்று. இல்லை இல்லை இல்லை 🤣
    • டுபாய் தன்னைப் பற்றி கட்டி வைத்திருந்த பிம்பம் உடைந்து போய்விட்டது இதனால். கடும் புயலும், மழையும் அதனால் வெள்ளமும் வரும் என்பதை ஏற்கனவே வானிலை எதிர்கூறல்கள் எச்சரித்து இருந்தும், அருகே இருக்கும் ஓமானில் இதே நிலை ஏற்பட்டதை கண்டும், எந்தவொரு முன்னேற்பாட்டையும் செய்து இருக்கவில்லை, முக்கியமாக டுபாய் விமான நிலைய நிர்வாகம். ஆயிரக்கணக்கானவர்கள் 30 மணித்தியாலங்களுக்கு மேல் விமான இன்றி தவித்து கிடந்த போதும், தண்ணீர் கூட அவர்களுக்கு விமான நிலைய ஊழியர்களால் வழங்கப்படவில்லை. குழந்தைகளுடன் பயணித்தவர்களுக்கு பால்மா, nappies கூட கொடுக்கப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன. சிலர் 24 மணி நேரத்தும் மேலாக சாப்பாடு இல்லாமல் இருந்துள்ளனர். விமான நிலையத்தில் இருந்த அனைத்து உணவு விடுதிகளும் பூட்டப்பட்டுள்ளதாம். அதே போன்று செக் இன் கவுண்டரிலும் (check in counters), விமான சேவை கவுண்டர்களிலும் ஒரு ஊழியரும் இல்லாமையால், அடுத்தது என்ன என்று தெரியாமல் பலர் பிள்ளைகளுடன், குழந்தைகளுடன் தவித்து போய் விட்டனர்.  பல Mall களில் புயல் வரும் முன் மக்களை உள்ளே அனுமதித்து விட்டு, புயல் தொடங்கிய பின் கடைகளை இழுத்து மூடி, வந்தவர்களை தவிக்க விட்டுள்ளனர். Mall களில் இருந்து தம் தங்குமிடத்திற்கு செல்ல முடியாமல் பல நூறு உல்லாசப் பயணிகள் அல்லாடியிருகின்றனர். இதற்கு எல்லாம் மேலாக, Cloud seeding இனால் தான் இந்த புயல் வந்தது என்று அங்குள்ள சமூக வலைத்தளங்களில் முட்டாள் தனமாக ஒரு கூட்டம் வதந்தியை பரப்பிக் கொண்டு இருக்கு. Cloud seeding இனால், சாதரணமாக சிறு தூறல்களையும், சிறு மழையையும் தான் தருவிக்க முடியும். ஆனால் புயலை அல்ல,
    • ரணில் "தனது  மினி"யை... வழமைபோல் வீட்டின்  பின்பக்கம் தான் பார்க் பண்ணுவார். 😂 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.