Jump to content

இந்திய நாளிதழ்களில் இன்று ......'515' கணேசன் - நெகிழ வைக்கும் சாதனைக்காக கிடைத்த டாக்டர் பட்டம்


Recommended Posts

'515' கணேசன் - நெகிழ வைக்கும் சாதனைக்காக கிடைத்த டாக்டர் பட்டம்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ்: '515' கணேசன் - நெகிழ வைக்கும் சாதனைக்காக கிடைத்த டாக்டர் பட்டம்

'515' கணேசன் - நெகிழ் வைக்கும் சாதனைக்காக கிடைத்த டாக்டர் பட்டம்படத்தின் காப்புரிமைஇந்து தமிழ்

ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட சடலங்களை தனது வாகனத்தில் ஏற்றி உதவி புரிந்துள்ள 65 வயது முதியவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது பெங்களூருவில் உள்ள பாரத் விர்ச்சுவல் பல்கலைக்கழகம் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சேர்ந்தவர் எஸ்.கணேசன்(65). 8-ம் வகுப்பு வரை படித்த இவர், பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 47 ஆண்டுகளுக்கு முன்பு ஆலங்குடி பகுதியில் வாடகைக் கார்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும்படியாகவே இருந்தன. அவற்றிலும் இறந்தவர்களின் சடலங்களை ஏற்றிச் செல்வதில்லை.

இதனால், ரூ.17 ஆயிரத்துக்கு ஒரு காரை விலைக்கு வாங்கினார் கணேசன். அந்தக் காரின் பதிவு எண் 515. சடலங்களை ஏற்றிச் செல்ல முடியாமல் தவித்த ஏழை எளியோருக்காக தனது காரை கட்டணம் எதுவுமில்லாமல் பயன்படுத்த முன்வந்தார் கணேசன். மேலும், அநாதை சடலங்களை தானே தூக்கிச் சுமந்து காரில் ஏற்றி உதவியுள்ளார். இதையடுத்து '515' கணேசன் என்றே மக்களால் அழைக்கப்பட்டார் கணேசன்.

இதுவரை 5,100-க்கும் மேற் பட்ட சடலங்களை ஏற்றி உதவி புரிந்துள்ளார். அதுமட்டுமல்ல, அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண பொருட்களைச் சேகரித்த கணேசன், அவற்றை பாலக்காடு ஆட்சியரிடம் ஆக.29-ம் தேதி ஒப்படைத்தார்.

இவரது சேவையைப் பாராட்டி, பெங்களூருவில் உள்ள பாரத் விர்ச்சுவல் பல்கலைக்கழகம் செப்.22-ம் தேதி டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'ஸ்டெர்லைட் சமர்பித்த 45 ஆயிரம் அதரவு மனு'

'ஸ்டெர்லைட் சமர்பித்த 45 ஆயிரம் அதரவு மனு'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என தங்களுக்கு ஆதரவாக 45,000 தூத்துக்குடி மக்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்கிறது ஸ்டெர்லைட் நிர்வாகம். இந்த 45 ஆயிரம் மனுக்களை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த மூன்று நபர் விசாரணௌ குழுவிடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அளித்ததாக கூறுகிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

Presentational grey line ராமதாஸ்படத்தின் காப்புரிமைஇந்து தமிழ் Presentational grey line

தினத்தந்தி: 'குஜராத் தொழில் அதிபர் நைஜீரியாவுக்கு தப்பி ஓட்டமா?'

ரூ.5 ஆயிரம் வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்ட குஜராத் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா, நைஜீரியாவுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"குஜராத்தின் வதோதராவை மையமாக கொண்டு இயங்கி வரும் 'ஸ்டெர்லிங் பயோடெக்' நிறுவனத்தின் உரிமையாளரான நிதின் சந்தேசரா பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளார். இதற்காக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களையும், பினாமி பெயரில் நிறுவனங்களையும் பயன்படுத்தி உள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களான நிதின் சந்தேசரா, சகோதரர் சேத்தன், அண்ணி தீப்திபென் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. தற்போது வெளிநாடுகளுக்கு தப்பி ஓடியிருக்கும் இவர்களை கைது செய்யவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

Presentational grey linePresentational grey line

தினமணி: 'மனித உரிமை ஆணையம் விசாரணை மாணவி சோபியா'

திருநெல்வேலியில் மனித உரிமை ஆணையம் சார்பில் திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையில், பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட மாணவி சோபியா, அவரது தந்தை சாமி ஆகியோர் ஆஜராகினர் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

'மனித உரிமை ஆணையம் விசாரணை மாணவி சோபியா'படத்தின் காப்புரிமைFACEBOOK

"பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த மாதம் 3ஆம் தேதி தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்தபோது, மாணவி சோபியா பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்டார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் சோபியா கைது செய்யப்பட்டு, நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், சோபியா கைது செய்யப்பட்டபோது, மனித உரிமை மீறல் நடந்ததாகக் கூறி அவரது தந்தை சாமி, மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகார் மனு தொடர்பான விசாரணை திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்றது. மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார். நீதிபதி முன்பு சோபியா, அவரது தந்தை சாமி ஆகியோர் ஆஜராகி தங்களது தரப்பு விளக்கத்தை அளித்தனர்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

சோபியா கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டபோது விமான நிலையம் மற்றும் காவல் நிலையத்தில் அவருக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அளித்தோம். அந்தப் புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், சோபியா அவரது தந்தை ஆஜராகி விளக்கம் அளித்தனர். வழக்கு விசாரணை அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சோபியா வெளிநாட்டில் சென்று படிக்க எந்தவித இடைஞ்சலும் செய்ய மாட்டோம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியை கைது செய்து சிறையிலடைத்தது தவறு என நாங்கள் கூறி வருகிறோம். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீது அளித்த புகாரின் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, நாங்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்று சோபியாவின் வழக்கறிஞர் அதிசயகுமார் கூறியதாகவும் விவரிக்கிறது அந்த செய்தி.

https://www.bbc.com/tamil/india-45635703

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.