Jump to content

இலங்கையின் பொருளாதாரமும் நமது செலவீனங்களும்


Recommended Posts

இலங்கையின் பொருளாதாரமும் நமது செலவீனங்களும்
அனுதினன் சுதந்திரநாதன் /
 

நாள்தோறும் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையில் ஏற்படும் மாற்றங்கள், மக்களை குழப்பத்துக்குள் தள்ளியிருப்பதுடன், அரசின் மீதான விமர்சனத்தையும் அதிகரித்துள்ளது.

பெற்றோலியப் பொருட்கள், வாழ்வாதார அத்தியாவசிய பொருட்கள், ஆடம்பர பொருட்கள் என, பாரபட்சமில்லாமல், அனைத்துப் பொருட்களின் விலை அதிகரிப்பும், தனிநபரை மட்டுமல்லாது, இலங்கையின் வணிகர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் என, ஒருவரையும் விட்டுவைக்காமல் பாதித்துக்கொண்டிருக்கின்றது.

image_ecf3d427b0.jpg

இந்த நிலையில், என்னதான் போதுமான வருமானத்தை பெற்றாலும், நம்மில் பலருக்கும், அது போதுமானதாகவே இருப்பதில்லை. தங்களது அவசரத் தேவைகளுக்குக் கூட, அடுத்தவரையோ, வங்கிக்கடன்களையோ நம்பியிருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை, எதனால் நம்மில் பலருக்கு ஏற்படுகின்றது என, நாம் சிந்தித்துள்ளோமா?   

உண்மையில், வேகமாக நகரும் இன்றைய உலகில், நின்று, நிதானித்து, எம்முடைய தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாதவர்களாகவே நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.

எமது வளங்களை, எத்தகைய வழிகளில் வினைத்திறனாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை மறந்துவிட்டு, அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவீனங்கள் மீதும், இதர விடயங்கள் மீதும் பழி சுமத்திக் கொண்டே, நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.

உண்மையில், நிதி ரீதியான முகாமைத்துவமும் அது தொடர்பிலான நன்மைகளும், வாய்ப்புகளும், நமது பழக்கவழக்கங்களை மாற்றியமைப்பதன் மூலமாகவே நமக்குக் கிடைக்கப்பெறும்.  
வருமானத்துக்கு மேலாக செலவு என்பதே, இன்றைய தினத்தில், பலரது குறையாகவுள்ளது.

வருமானம் இதுதான் என, முற்கூட்டியே கணக்கிட்டுப் பார்க்கும் நாம், நமது சேமிப்புகள், முதலீடுகள், செலவுகள் என்பவற்றை, முறையாக முகாமைத்துவம் செய்யாமல், தனியே எனக்கான வருமானம் போதாது என்று குறை கூறிக்கொண்டிருப்பது, அர்த்தமற்ற செயற்பாடாகும்.

அப்படியாயின், தனிநபரின் அல்லது குடும்பத்தின் சுயநிதியை, எவ்வாறு முகாமைத்துவம் செய்யவேண்டும் என்பது தொடர்பிலும், அவை தொடர்பிலான அடிப்படைகளையும் அறிந்திருத்தல் அவசியமாகும்.  
உண்மையில், இதுவொன்றும் நிதி முகாமையாளர்களின் வேலையைப்போல, புரிந்துகொள்ளக் கடினமானதொன்றல்ல. ஆனால், இன்றைய வணிக உலகில், நிதி முகாமைத்துவம் கடினமானதொன்றாக மாற்றப்பட்டு வணிகமாக்கப்பட்டுள்ளது.

உண்மையில், நம்மில் ஒவ்வொருவருமே, நமது வருமானத்தை முகாமைத்துவம் செய்யும் தேர்ச்சியைப் பெறுகின்றபோது, அடிப்படையான நிதி முகாமைத்துவத் தேர்ச்சியைப் பெறுகிறார்கள் என்பதே உண்மை.  

அப்படியாயின், எவ்வாறான சிறுவகை நிதி முகாமைத்துவங்கள் மூலமாக, நாம், நமது செலவீனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுவதுடன், சேமிப்புகளினூடாக வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதை அறிந்து கொள்வோம்.  

உங்கள் ஊதியமும் சேமிப்பும் ஒன்றல்ல

சுயநிதி முகாமைத்துவத்தின் மிகப்பெரும் அடிப்படையே இதுதான். நீங்கள் உழைக்கும் பணத்தை விட, உங்களிடமுள்ள நிகரப்பெறுமதியான (Net Worth) தொகையே, உங்களது சேமிப்பாக அமையும்.

ஒருவர், அதிகமாக வருமானம் உழைப்பதால், அவரை, செல்வந்தராகவும் குறைவாக வருமானம் பெறுபவரை ஏழ்மையானவர் என்றும் நினைப்பது தவறாகும்.

அவர்களது வருமானத்தில், செலவீனங்கள் எப்படியுள்ளது என்பதைப் பொறுத்தே, ஒவ்வொருவரதும் நிலை தீர்மானிக்க கூடியதாக அமையும்.  

முதலீட்டைப் பார்க்கிலும் சேமிப்பு முக்கியமானதாகும்

முதலீட்டு எண்ணத்தை வளர்த்துக்கொள்ள முதல், அந்த முதலீட்டை உருவாக்கக்கூடிய சேமிப்புப் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. இந்தச் சேமிப்புத் தன்மையில்லாமல், எந்த முதலீட்டையும் உருவாக்கிகொள்ள முடியாது.  

கடனட்டை கடன்களை மாதம்தோறும் காவிச் செல்லாதீர்கள்

இன்றைய காலகட்டத்தில், மக்களால் வங்கிகளில் பெறப்படுகின்ற கடன்களுக்குச் சமனாக, கடனட்டை மூலமான கடன்களின் அளவும் உள்ளது.

சாதாரணமாக, கடனட்டைப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையான பின்பு, இயல்பாகவே, மாதாந்த குறைந்த கட்டணத்தை மாத்திரம் செலுத்தி, கடனை பிற்போடுகின்ற நிலையே காணப்படுகிறது. இது, சாதாரண ஒருவர், கடனை மீளச்செலுத்தாமல் காவிச் செல்லும் நிலையையும் பணத்தைச் சேமிக்க முடியாத நிலையையும் ஏற்படுத்தும்.

எனவே, கடனட்டைப் பயன்பாட்டைத் தவிர்த்தல் மிகநன்று. வருமானத்துக்கு ஏற்ப, மாதச்செலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு கடனட்டையைப் பயன்படுத்துவது உசிதமானது.  

மாதச்செலவுகளை முறையாக கண்காணித்தல் அவசியம்

பணத்தைச் சேமிக்க வேண்டும் எனும் எண்ணம் மாத்திரமே போதுமானதல்ல. மாறாக, செலவீனக் கோலத்தைக் கட்டுப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஊதாரித்தனமாகச் செலவு செய்வதைக் கட்டுப்படுத்திக் கொண்டாலே, மாத இறுதியில் ஏற்படும் இறுக்கநிலையும் குறையும். கூடவே, சேமிப்பும் உருவாகும்.   

முறைமையைக் கையாளுதல்

கடந்த காலத்தில், நீங்கள் மாதம்தோறும் செலுத்திய கட்டணங்களையும் செலவுகளையும் குறித்துவைத்துக் கொண்டு, அடுத்து வரும் மாதங்களில், அந்த நிலையானக் கட்டணங்களையும் செலவுகளையும் செலுத்துவதற்குப் பரபரத்துக் கொண்டிருக்கும் நிலையுள்ளது.

தற்போதைய நிலையில், மாதம்தோறும் செலுத்தவேண்டிய நிலையான  தொகையை, வங்கிகளின் மூலமாக முன்னதாகவே முறைமைப்படுத்திக் கொள்ளமுடிகிறது. இது, வருமானத்தில், எவ்வளவு பணத்தைச் செலவிடவேண்டும் என்பதை முன்கூட்டியே, திட்டமிட்டக் கூடியதாவும் இருக்கும்.  

மிகப்பெரிய செலவுகளை அவதானமாக செய்தல்

ஆடம்பரத்துக்கும் அத்தியாவசியத்துக்குமான வேறுபாடு, சொல்லித் தெரியவேண்டியதில்லை. 

ஆனால், வீடு வாங்குவதிலும் போக்குவரத்துச் சாதனங்கள் வாங்குவதிலும், நம்மவர்கள் ஆடம்பரத்துக்கும் அத்தியாவசியத்துக்குமான இடைவெளியை மறந்து விடுவார்கள்.

இதன் காரணமாக, மிகப்பெரிய கடனை, வாழ்நாள் முழுவதும் சுமந்து கொண்டு செல்பவர்களாகவே இருக்கிறார்கள்.  

அதாவது, மிகப்பெரிய செலவீனங்களைச் செய்யத் தயாராகும்போது, ஆடம்பரத்துக்கு, அதிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்க்கிலும், அதன் அத்தியாவசியத் தன்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அதன்போதுதான், நாம் அதற்குத் தகுந்த  செலவுகளை மேற்கொண்டு, எதிர்காலத்தில் தேவையான பயனைப் பெற்றுக்கொள்ள முடியும்.  

உடனடிச் செலவீனங்களைக் கையாளுதல்

ஒவ்வொரு மனிதருக்குமே, திட்டமிடாதச் செலவீனங்கள் நிச்சயமாக இருக்கும். அவற்றைக் கையாளக்கூடிய வகையில், திரவப் பணத்தைக் கொண்டிருத்தல் அவசியமாகும்.

திட்டமிட்ட செலவுகள் போக, எஞ்சிய அனைத்தையுமே சேமிப்பது என்பது, முட்டாள்தனமே ஆகும். காரணம், எதிர்பாராத செலவுகளுக்கு எப்போதுமே நாம் தயாராக இருத்தல் அவசியமாகிறது.

எனவே, எப்போது, எவ்வளவு, சேமிப்பது என்பது தொடர்பில் அவதானமாக இருத்தல் அவசியமாகிறது.  
வருடம்தோறும் பழக்கத்தை மாற்றல்

எப்படி ஒரு கெட்ட பழக்கத்தை உடனடியாகக் கைவிட முடியாமல், சிறிது சிறிதாகக் கைவிடுவதாக முடிவு செய்கின்றோமோ, அதுபோல, எந்தவொரு சேமிப்பு, முதலீட்டையும் உடனடியாகவே மிகப்பெரிய அளவில் செய்வதென்பதும் கடினமானதாகும்.

எனவே, சிறிது சிறிதாக அதிலும் மாற்றத்தைக் கொண்டு வருதல் அவசியம். இந்த வருடத்தில் இந்தளவு தொகையைச் சேமிப்பதாகவோ அல்லது முதலிடுவதாகவோ முடிவு செய்திருப்பின், அடுத்துவரும் காலங்களில், அதைவிட அதிகமாக முதலீடு செய்யப் பழகிக்கொள்ள வேண்டும்.  

அருகிலிருப்பவர்களுக்கும் கற்றுக்கொடுத்தல்

தனியாக நீங்கள் மட்டும் சுய முகாமைத்துவத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமாக, உங்கள் நிதியை வளமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. மாறாக, உங்கள் அருகிலிருக்கும் குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்கள் மத்தியிலும், இந்தப் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்க முயற்சியுங்கள். அப்போதுதான், மிகச்சிறந்த முறையில் நிதியைக் கையாளக் கூடியதாக அமையும்.  

பொருத்தமானவர்களிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை

நம் சமூகத்தைப் பொறுத்தவரை, நமது சொத்துகள் தொடர்பிலோ, வருமானம் தொடர்பிலோ அடுத்தவருக்கு தெரிந்துவிடக் கூடாது எனும் எண்ணத்தைக் கொண்டவர்களாகவே இருக்கிறோம்.

இதனால்தான், பல சந்தர்ப்பங்களில் பொருத்தமான ஆலோசனைகளைப் பெறத்தவறிவிட்டு, வருமானம் உழைக்கும் வழிகளையும் மூலதனங்களையும் இழந்து நிற்போம்.

எனவே, பொருத்தமானவர்களிடம் தேவையான தகவல்களைப் பெற்று, அந்த ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பதில் தவறில்லை. இது, உங்கள் செல்வத்தை மேலும் பெருக்குவதாகவே அமையுமே தவிர, பாதிப்படையச் செய்யாது.  

தற்போதைய நிலை என்ன என்பதனை உணர்தல்

சுயநிதி முகாமைத்துவச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்னரோ, அதை நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும் முன்னரோ, நாம் என்ன நிலையில் இருக்கிறோம் என்பதை அறிந்துகொள்ளுவது அவசியமாகிறது.

காரணம், நமது தற்போதைய நிலை என்ன என்பதை அறியாமல், எதிர்காலத்தைத் திட்டமிடுவதுபோல, முட்டாள்தனம் வேறேதுவுமில்லை.

எனவே, நமது தற்போதைய நிலை என்ன, நமது சேமிப்பு மற்றும் செலவீனச் சக்தி என்ன, பலம், பலவீனம் என்ன என்பது தொடர்பில் ஆராய்வது அவசியமாகிறது.  

வரிகள் தொடர்பில் அறிந்து வைத்திருத்தல்

கடந்த காலங்களில், இலங்கையில் தனிநபர் வருமானம் சார்ந்த வரிகளில் இறுக்கமான நடைமுறைகள் இருந்ததில்லை. ஆனால், தற்போது அரசாங்கம் தனிநபர்களிடமிருந்து எவ்வாறு வருமானத்துக்கேற்ற வரிகளை அறவிடலாம் என்பது தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது.

இது, எதிர்காலத்தில் நிச்சயம் வருமான வரிகளில் இறுக்கமான நடைமுறை கடைப்பிடிக்கப்படப் போவதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

எனவே, ஒவ்வொரு தனிநபரும், தனது வருமான மூலங்களை முதலீட்டு நடைமுறைகளுக்குப் பயன்படுத்தும்போது, எவ்வாறு வரி வினைத்திறன் தன்மையைக் கையாள முடியும் என்பதை அறிந்திருத்தல் அவசியமாகிறது.

இல்லாவிடின், தேவையற்ற வகையில் வீணாக, நிறைய வரியைச் செலுத்தும் நிலை உருவாகக்கூடும். இது, சாதாரணமாகப் புரிந்துகொள்ளக் கடினமான ஒரு பகுதியாகவுள்ள காரணத்தால், வரி முகாமையாளர் ஒருவரை நாடுவதில் தவறில்லை.  

மேலேகூறிய வழிமுறைகள் அனைத்துமே, தற்சமயம், உழைக்கும் வருமானத்தை மிகச்சிறப்பாகப் பயன்படுத்தி, மேலதிகமாக எதிர்க்காலத்தில் எத்தகைய நலன்களைப் பெறலாம் என்பதையே தெளிவுபடுத்துகின்றன.

இதன் மூலமாக, உழைக்கும் வருமானத்தை, வினைதிறனாகப் பயன்படுத்தி, மேலதிகப் பணத்தை உழைக்கக் கூடியதாக இருக்கும். உண்மையில், ஒவ்வொரு தனிநபருக்குமே இயலுமை காலம் என்கிறவொன்று, கட்டாயமாக இருக்கும். அதற்குள், முடிந்தவரை உழைத்துவிட வேண்டும் எனவும், தனக்கும் எதிர்காலச் சந்ததிக்கும் தேவையானவற்றைச் சேர்த்துவிட வேண்டும் எனும் சுமையும், நிச்சயமாக இருக்கும்.

ஆனால், ஒவ்வொருவருமே தமக்கான சுயநிதி முகாமைத்துவத்தைச் சரியாக பின்பற்றும் போதுதான், மனதில் ஓய்வுகாலத்துக்கான பயம் என்பதைத் தாண்டி, நிதிச் சுதந்திரம் கண்டிப்பாக இருக்கும்.  

http://www.tamilmirror.lk/business-analysis/இலங்கையின்-பொருளாதாரமும்-நமது-செலவீனங்களும்/145-222475

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.