Jump to content

ஐ.நாவில்....இன்று


Recommended Posts

தமிழ் அகதிகளுக்காக ஐ.நாவில் குரல் கொடுத்த பெண்

அவுஸ்திரேலியா ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் தொடர்பான இணக்கப்பாடுகளை மீறி செயற்பட்டு வருவதாக ஏ.பி.சி தமிழ் ஒலி சார்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றிய ரெபேக்க லிம் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்திருந்த பல இலங்கை தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

 

தமிழ் பெண்கள், ஆண்கள் உட்பட அவுஸ்திரேலியாவில் பிறந்த பிள்ளைகளுக்கு தஞ்சம் வழங்குவது நிராகரிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக இவர்கள் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் பாடசாலையில் பயின்று வந்த பிள்ளைகள் உட்பட 5 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் பிறக்காத, அவுஸ்திரேலியாவில் பிறந்த பிள்ளைகளும் இதில் அடங்குகின்றனர் என ரெபேக்க லிம் குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/194220?ref=home-feed

Link to comment
Share on other sites

ஓமந்தையில் காணாமல் போன மகன் - ஐ.நாவில் தாய் விடுத்த கோரிக்கை

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான யோசனை நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நீதியும் இதுவரை வழங்கப்படவில்லை என காணாமல் போனோர் சம்பந்தமான அமைப்பின் செயலாளர் லீலா தேவி ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதிக்கட்ட போரின் போது ஓமந்தை இராணுவ சோதனை சாவடியில் வைத்து கையளிக்கப்பட்ட எனது மூத்த மகன் காணாமல் போனார்.

 

இலங்கை ஜனாதிபதி விசேட அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி, படை உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவோ, அவர்களை விளக்கமறியலில் வைக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.

11 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டு திருகோணமலையில் வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய படை அதிகாரி ரவிந்திர விஜேகுணரத்னவை கைதுசெய்ய வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையின் நீதித்துறை இலங்கை ஆட்சியாளர்களின் கைகளில் உள்ளது. இதனால், இலங்கையின் உள்நாட்டு நீதி கட்டமைப்பு எமக்கு தேவையில்லை. சர்வதேச நீதி கட்டமைப்பையே நாங்கள் கோருகிறோம்.

ஐக்கிய நாடுகள் அமைப்பு, இலங்கை இராணுவம் செய்த போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் தலையிட்டு சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கட்டமைப்பை ஏற்படுத்தி, குற்றம் செய்தவர்களுக்கு சர்வதேச சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்க வேண்டும் எனவும் லீலா தேவி ஆனந்தராஜா குறிப்பிட்டுள்ளார்.

https://www.tamilwin.com/politics/01/194227?ref=home-feed

 

 
Link to comment
Share on other sites

விடுதலைப் புலிகளை தோற்கடித்த படையினர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்! ஐ.நாவில் சரத் வீரசேகர

 

இலங்கையில் விடுதலைப்புலி பயங்கரவாதிகளை தோற்கடித்த இராணுவத்தினர் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் முக்கிய இராணுவ அதிகாரிகளும் அடங்குவதாகவும் ரியர் அத்மிரல் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மேற்குலக நாடுகளுக்கு விஜயம் செய்வதற்கான வீசா அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன.

வர்களுக்கு எதிராக போர் குற்றங்களோ ஏனைய குற்றச்சாட்டுக்களோ சுமத்தப்படவில்லை. இவர்கள் தமது தாய் நாட்டை காக்க போராடியவர்கள்.

ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இணைந்து கொள்ள உள்ள இராணுவத்தினருக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இன்னும் நற்சான்றிதழை வழங்கவில்லை.

இவர்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த நற்சான்றிதழை பெற காத்திருக்கின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிட்டதே இவர்கள் செய்த ஒரே குற்றம்.

அமெரிக்கா மற்றும் பிரித்தானிய படையினர் பயங்கரவாதத்திற்கு எதிராக போரிட்ட போதிலும் இலங்கையர்களான எம்மை போல் நடத்தப்படவில்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

 

https://www.tamilwin.com/politics/01/194218?ref=home-feed

Link to comment
Share on other sites

இலங்கை தனது பிரஜைகளின் மனித உரிமைகளை பாதுகாத்துள்ளது! ஐ.நாவில் வலியுறுத்து

 

இலங்கை அரசாங்கம் 2009ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் தனது அனைத்து பிரஜைகளின் மனித உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆபிரிக்க பசுமை நிதியம் சர்வதேச அமைப்பின் சார்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று உரையாற்றிய சேனக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சர்வதேச கட்டமைப்பின் உதவியின்றி இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

 

போரின் முடிவில் சரணடைந்த 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வு பயிற்சியளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 594 சிறார்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் பல்வேறு தேசிய மட்டத்திலான செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர். அரசாங்கம் 2017ம் ஆண்டு இராணுவம் கையகப்படுத்தியிருந்த 24 ஏக்கர் தனியார் காணிகளை விடுவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் சிறார் போராளிகளாக இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றியுள்ளனர்.

சர்வதேச முகவர்களின் தலையீடு இன்றி இலங்கை தனது மனித உரிமை நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும் எனவும் சேனக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

https://www.tamilwin.com/politics/01/194213?ref=home-feed

 

 

புலிகளின் ஆதரவாளர்களுக்கு ஜெனிவாவில் விருந்தளித்த இலங்கை தூதுவர்

 

இலங்கை படையினர் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் புலிகளின் அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு ஜெனிவாவுக்கான இலங்கை தூதுவர் எல்.ஏ. அசீஸ் இராபோசன விருந்தளித்துள்ளார்.

இதனை தாம் கடுமையாக எதிர்த்ததாக உலக தேசப்பற்றுள்ள இலங்கை பேரவை தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வரும் வேளையில் ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் அமைதிக் காத்து வருவதாகவும் அந்த அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கம் முன்னெடுத்து்ள வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக நல்லிணக்க செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பில் இருந்து தமக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இலங்கை தூதுவரின் இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பாவில் வாழும் சிங்களவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எது எப்படி இருந்த போதிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சிங்கள இனவாத அமைப்புகள் புலம்பெயர் புலிகளின் அமைப்புகள் என்றே கூறி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.tamilwin.com/politics/01/194228?ref=home-top-trending

Link to comment
Share on other sites

புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு மஹிந்தவாதிகளின் சவால்!

 

 

இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக குரல்கொடுத்துவரும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் நடவடிக்கைகளை இலங்கையின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பினர் ஜெனீவாவில் ஆரம்பித்திருக்கின்றனர்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு சிறிலங்கா தொடர்பான ஜெனீவாத் தீர்மானத்திற்கு எதிராகவும், சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்கள் உட்பட மோசமான மனித உரிமைகளுக்கு எதிராகவும் குரல்கொடுத்துவரும் சிங்கள அமைப்புக்களில் ஒன்றான உலக சிறிலங்கா பேரவை என்ற அமைப்பினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி கட்டமைப்பின் நிதியைக் பயன்படுத்தியே ஜெனீவா உட்பட சர்வதேச அரங்கில் சிறிலங்காவிற்கு எதிராக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அழுத்தங்களை பிரயோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியுள்ள இந்த அமைப்பினர், உடனடியாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விடுதலைப் புலிகளுக்கு நிதியூட்டம் வழங்கும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு எதிராக தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

உலக சிறிலங்கா பேரவையினர் நேற்றைய தினம் ஜெனீவாவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது உயர் அரச பதவிகளை வகித்தஅவரது விசுவாசிகளான கலாநிதி நாலக்க கொடஹேவா மற்றும் கலாநிதி பிரதீபா மஹானாமாஹேவா ஆகியோர் கலந்துகொண்டு இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொண்டு இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரித்துவரும் சிங்கள அமைப்பான உலக சிறிலங்கா பேரவையினர், 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்றைய தினம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட உலக சிறிலங்கா பேரவையின் தலைவரான கலாநிதி நாலக்க கொடஹேவா, பயங்கரவாத அமைப்பிற்கு நிதியூட்டம் வழங்குவது பாரதூரமான குற்றம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அந்த நிதியைக் கொண்டு செயற்படும், புலம்பெயர்தமிழ் அமைப்புக்களுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்றை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உலகம் முழுவதும் பரந்துபட்ட நிதி வலையமைப்பொன்று இருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரும் அவர்கள் வருடாந்தம் 400 மில்லியன் டொலர் நிதியை திரட்டி வருகின்றனர். அவற்றை பயன்படுத்தி ஆயுதங்களை கொள்வனவு செய்தனர்.

ஆனால் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதிலும் இந்த நிதி வலையமைப்பு பாதிக்கப்படவில்லை. இவற்றில் சில சட்டபூர்வமானவை. சில சட்டத்திற்கு விரோதமானைவை. இவற்றில் புலம்பெயர் தமிழ் சமூகத்திடம் கப்பம் பெறும் நடவடிக்கைகளும் அடங்கும். அதேபோல் விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பின் முக்கிய நபர்கள் உயிருடனேயே இருக்கின்றனர்.

உள்நாட்டிற்குள் இருந்தவர்களே கொல்லப்பட்டனர். இந்த நிதியைக் கொண்டு தமது கருத்துக்களை சர்வதேச சமூகத்திற்கு கொண்டுசெல்லும் பிரசாரத்திற்கு பயன்படுத்துகின்றனர். மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளுக்கும் அழுத்தங்களை பிரயோகித்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக பேச வைப்பதற்காகவும் இந்த நிதியை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 17 நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு தீர்மானமொன்றை கொண்டுவந்தனர். எங்களது பிரச்சனை எமது நாட்டில் 30 ஆண்டுகளாக யுத்தம் நீடித்தது. ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளே தற்கொலை குண்டுதாரிகளை அறிமுகப்படுத்தினர். விடுதலைப் புலிகளே உலக தலைவர்கள் இருவரை கொன்றனர். உள்நாட்டுத் தலைவர்கள் இருவரையும் கொன்றனர். ஆனால்அப்போது எவரும் கதைக்க வரவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மனித உரிமை மீறல் விவகாரத்தை கையிலெடுத்து சிறிலங்காவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் மிக நெருங்கிய விசுவாசிகளில் ஒருவரான கலாநிதி நாலக்க கொடஹேவா, அவரது ஆட்சிக் காலத்தில் கொழும்பு பங்குச் சந்தையின் தலைவராக கடமையாற்றியுள்ளார்.

இதற்கமைய அவர் மஹிந்தவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்சவின் தாருண்ய ஹெட” என்ற செயற்திட்டத்திற்கு 2013 ஆம் ஆண்டு ஐம்பது இலட்சம் ரூபா நிதியை வழங்கியதற்கான தெளிவான காரணத்தை கூறாத குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே தற்போது ஜெனீவா சென்றிருக்கின்றார்.

இதேவேளை உலக சிறிலங்கா பேரவையின் மற்றுமொரு முக்கியஸ்தரான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட தலைமை விரிவுரையாளரான கலாநிதி பிரதீபா மஹானாமாஹேவா புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்களாக அடையாளப்படுத்தியதுடன், அவற்றை முடக்கவும் நடவடிக்கை எடுக்க சர்வதுச சமூகம் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பது குறித்த விடையங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்திட்டத்திலும் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதனால் 30 இன் கீழ் ஒன்று தீர்மானம் தயாரிக்கப்பட்டபோது இந்த விவகாரம் உள்வாங்கப்பட்டிருவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது என்பது முழுமையாக நீக்கப்பட்டிருக்கின்றது.

இதனை திருத்திக் கொள்ள சிறிலங்காவிற்கு இன்னமும் சந்தர்ப்பம் இருக்கின்றது. அதனால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இந்தத் தவறை திருத்திக் கொள்ளவதில் உடனடியாக தலையிட வேண்டும். அதேவேளை இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இணை அணுசரணை வழங்கிய அமெரிக்காவும் வெளியேறியுள்ள நிலையில், 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்திற்கு எதிராக மற்றுமொரு தீர்மானத்தை நிறைவேற்றுவது அவசியம். 30 இன் கீழ் ஒன்று தீர்மானம் இன்னமும் நடைமுறையில் உள்ளதால், பயங்கரவாதத்திற்கு நிதியூட்டம் வழங்கிய பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டியது இன்றியமையாதது.

இது சிறிலங்காவிற்கு உரிய பிரச்சனை மாத்திரம் அல்ல. இது ஒட்டுமொத்த உலகத்துடனும் தொடர்புடைய பிரச்சனை. அதனால் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குரிய தீர்மானத்தை முன்வைக்க வேண்டும். 2002 ஆம் ஆண்டுக்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு நிதியூட்டம் வழங்கிய பலர் இன்னமும் உயிருடன் இருக்கின்றனர்.

அவர்கள் தொடர்ந்தும் பயங்கரவாதத்திற்கு துணை போகின்றனர். அவர்களுக்கு எதிராக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

https://www.ibctamil.com/world/80/106632

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.  
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.