Jump to content

இலங்கை உலக கிண்ணத்தை வெல்வது கடினம் ; ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் அர்ஜுன


Recommended Posts

இலங்கை உலக கிண்ணத்தை வெல்வது கடினம் ; ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் அர்ஜுன

 

 
 

2019 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை நாம் வெல்வது கடினமே. காரணம் கிரிக்கெட் அந்தளவு தூரம் இன்று கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு புக்கி கரர்களளே பிரதான காரணம் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

arjuna.jpg

கடந்த அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அவர் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைபடுத்தி புக்கிகரர்களையும் சூதாட்டக்காரர்களையும் கிரிக்கெட் நிர்வாகத்தில் சேர்க்கவில்லை. 

ஆனால் தயாசிறி விளையாட்டுத்துறை அமைச்சரானதும் என்ன நடந்தது? அவர் ஒரு சட்டத்தரணி எனினும் கிரிக்கெட் சட்டத்தை சரியாக தெரியாமல் கிரிக்கெட் நிர்வாகத்தில் புக்கிகாரர்களையும் சூதாட்டக்காரர்களையும் வரவழைத்தார். 

இன்று புக்கிகாரர்களினாலேயே நாட்டின் கிரிக்கெட் விளையாட்டு சிதைந்துபோய் உள்ளது. ஆகவே கிரிக்கெட் கீழ்நிலைக்கு சென்றதற்கு அவர் பொறுப்புக்கூற வேண்டும்.

அத்துடன் தயாசிறி நினைப்பது அவர் ஒரு சிறந்த வீரர் என்று. தனது உடல் கட்டமைப்பை காட்டி ஒருவர் வீரராக முடியாது.  தயாசிறி கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க நிதிகொடுத்தார் என சொல்லப்படுகிறதே, எவ்வளவு நிதி போயுள்ளது என்பதை தேடிப்பாருங்கள். 

அந்ந நிதி உண்மையில் விளையாட்டு மைதானம் அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ளதா? நான் நினைக்கின்றேன் தயாசிறியை பற்றி என்னிடம் கேட்பதை விட ஜீ.எல் பீரிஸ் அல்லது மஹிந்த ராஜபக்ஷவிடம் கேளுங்கள்.  அவர்கள் சொல்வார்கள் தயாசிறி யார் என்று. 

மேலும் நான் ஆறு மாதங்களுக்கு முன்பாகவே எதிர்வு கூறினேன் இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடனும் ஆப்கானிஸ்தான் அணியுடனும் தோல்வியை தழுவிக் கொள்ளும் என்று அவ்வாற‍ே இன்று நடந்துள்ளது. ஏனெனில் இன்று அந்தளவுக்கு எமது கிரிக்கெட் கீழ்நிலைக்கு சென்றுள்ளது. 

ஆனால் எமது வீரர்களை எம்மால் முன்னேற்ற முடியும். நான் எப்பாதும் சொல்வது யாப்பினை மாற்றுங்கள். அதன் பின் தேர்தலை நடத்துங்கள். அது வரை தற்காலிக குழுவொன்றை நியமியுங்கள். அப்படி அமைக்க முடியவில்லை என்றால் முன்னாள் வீரர்களை பயன்படுத்தி, கிரிக்கெட்டை முன்னேற்றுங்கள். தற்போதைய அமைச்சருக்கும் இது தொடர்பான பொறுப்புள்ளது.

அத்துடன் ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி அடைந்த தோல்விக்கு அணித்தலைவரை குறைசொல்ல முடியாது. தெரிவுக்குழு முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

http://www.virakesari.lk/article/41074

Link to comment
Share on other sites

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து சனத் கவலை

 

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர் சனத்ஜெயசூரிய  கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அணியின் தற்போதைய நிலை அதிர்ச்சியளிக்கின்றது என ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

எங்கள் கிரிக்கெட் குறித்து தற்போது பெருமைப்பட எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் தோல்வியடைந்தால் உங்கள் மீது அழுத்தங்கள் உருவாகலாம் ஆனால் அந்த அழுத்தங்களை உள்வாங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்;கெட் அணிக்கு என்ன நடக்கின்றது என்பது தற்போது எனக்கு தெரியவில்லை,ஆனால் இதற்கு மேல் நிலைமை மோசமாக முடியாது என்பதால் இதிலிருந்து மீள்வதற்கான சிறந்த தருணம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி வீரர்கள் அடிப்படை விடயங்களில் கூட எவ்வாறு தவறிழைக்கின்றார்கள் என்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன் விக்கெட்களிற்கு இடையில் ஓடும் விடயத்தில் கூட அவர்கள் தடுமாறுகின்றனர், ஒரு வீரரை மற்றைய வீரர்நம்பாதது வெளிப்படுகின்றது எனவும் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

அரவிந்த டி சில்வாவும் நானும் கண்ணால் ஒருவரையொருவர் பார்த்துவிட்டே ஒடத்தொடங்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துடுப்பெடுத்தாடும் போது சிறப்பாக ஆடத்தொடங்குபவர்கள் நீண்ட நேரம் நின்று விளையாடாததும் ஏமாற்றமளிக்கின்றது,ரோகித்சர்மா சொகைப் மலிக் போன்றவர்கள் ஆசிய கிண்ணப்போட்டிகளில் அதனை எப்படி செய்யவேண்டும் என்பதை செய்து காட்டியுள்ளனர் எனவும் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

sanath.jpg

நாங்கள் இவற்றிற்கு தீர்வை காணாவிட்டால் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளப்போகின்றோம் சில இளம் அணிகள் எப்படி தொழி;ல்சார் தன்மையுடன் விளையாடுவது என்பதை வெளிப்படுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிய அணிகளை நாங்கள் சாதாரணமாக எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அனைத்து துறைகளிலும் நாங்கள் தரம் தாழ்ந்த நிலையில் உள்ளோம் என தெரிவித்துள்ள சனத்ஜெயசூரிய உடற்தகுதியே என்னை பொறுத்தவரை பாரிய கரிசனைக்குரிய விடயமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/41174

Link to comment
Share on other sites

“அழுக்குகளை மக்கள் முன் சலவை செய்யாதீர்கள்” - ஆத்திரத்தில் மஹேல

 

''உங்களது அழுக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் சலவை செய்ய வேண்டாம்” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். 

mahela.jpg

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் சமீபகாலமாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பில் ஆத்திரமடைந்துள்ள மஹேல, தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் டுவிட்டரில் குறிப்பிடுகையில், 

mahela.PNG

கடந்த சில நாட்களாக இலங்கை கிரிக்கெட்டில் நடந்துள்ள விடயங்களும் அதற்கான தீர்வுகளும் கடினமானவை. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், உங்களது அழுக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் சலவை செய்ய வேண்டாம்.

உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் தீர்மானங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சரியானதாக அமையாது. எது சிறந்தது என்பது தொடர்பில் சிந்திப்பதே இலங்கை கிரிக்கட்டுக்கு சிறந்த தீர்மானம்.  உணர்ச்சிவசப்பட்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் மஹேல தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/41209

Link to comment
Share on other sites

இலங்கையின் ஆசிய கிண்ண தோல்வி குறித்து முன்னாள் வீரர்களின் நிலைப்பாடு

2018-09-27-696x464.jpg
 

ஐந்து தடவைகள் ஆசிய கிண்ணத்தை சுவீகரித்த இலங்கை கிரிக்கெட் அணிக்கு, இவ்வருட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றுடன் வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது.

கடந்த 15ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகிய 14ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 124 ஓட்டங்களால் பங்களாதேஷ் அணியிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற தீர்மானமிக்க லீக் போட்டியிலும் 91 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவி முதல் சுற்றுடன் வெளியேறியது.

 

இந்த நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்குள் நடைபெற்ற ஒரு நாள் போட்டிளில் இலங்கை அணி ஜிம்பாப்வே, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளிடன் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய, அரவிந்த டி சில்வா, மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, ரஸல் ஆர்னோல்ட், ரொஷான் மஹனாம உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் இலங்கை அணியின் தோல்வி குறித்து அதிருப்தியையும், ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தனர்.

சனத், அரவிந்த கவலை

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் படுதோல்வியுடன் வெளியேறிய இலங்கை அணியின் எதிர்காலம் குறித்து முன்னாள் ஜாம்பவான்களான அரவிந்த டி சில்வா, சனத் ஜயசூரிய ஆகியோர் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆசிய கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் அதிக ஓட்டங்களைக் குவித்த (1200) வீரர்களில் முன்னிலையில் உள்ள இலங்கை அணியின் முன்னாள் அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தேர்வுக் குழுத் தலைவருமான சனத் ஜயசூரிய, இம்முறை ஆசிய கிண்ணத்தில் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினராக உள்ளார். அவர் இலங்கை அணியின் பின்னடைவு குறித்து இந்தியாவின் ஹிந்துஸ்தான் நாளிதழுக்கு கருத்து வெளியிடுகையில்,

”இம்முறை ஆசிய கிண்ணத்தில் இலங்கை அணி முதல் சுற்றுடனே வெளியேறியது மிகவும் வேதனை அளிக்கிறது. தற்போது இலங்கையின் கிரிக்கெட் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இதைவிட மோசமான சூழ்நிலையை இலங்கை அணி இதற்கு முன் சந்தித்தது இல்லை. எனவே, எம்மால் இலங்கை அணி தொடர்பில் பெருமைப்பட முடியாது. விக்கெட்டுக்கள் இடையே ஓடி ஓட்டங்களைக் குவிக்க முடியாத நிலைக்கு எமது வீரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

உதாரணமாக, விக்கெட்டுக்கள் இடையே ஓடும்போது நானும், அரவிந்த டி சில்வாவும் எப்போதும் கண்களால் சைகை செய்து கொள்வோம். ஆனால், தற்போது உள்ள வீரர்களுக்கு இடையில் அவ்வாறானதொரு புரிந்துணர்வு இல்லாததை காண முடிகின்றது. அதேபோல, இலங்கை வீரர்கள் சின்னச் சின்ன தவறுகளையும் தொடர்ந்து செய்தமை இந்த தோல்விக்கு காரணமாகவும் இருந்தது.

இந்த தொடரில் ரோஹித் சர்மா, சொயிப் மலிக் போன்ற வீரர்கள் தமது அனுபவத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதேபோல ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் போன்ற அணிகளும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே, பிரச்சினைகளை சரிசெய்யாத வரை இலங்கை அணி முன்னோக்கிச் செல்வதில் மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் எட்டு அணிகளும், உலகக் கிண்ணத்தில் 10 அணிகள் மாத்திரமே விளையாடி வருகின்றன. எமது குறைபாடுகளை நிவர்த்தி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் இந்தத் தொடர்களில் இருந்தும் வெளியேற நேரிடும். தற்போதுள்ள கத்துக்குட்டி நாடுகளும் தமது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இந்த நாட்களில் எந்த அணியையும் எளிதில் எடுத்துக்கொள்ள முடியாது” என்று அவர் கூறினார்.

இதேவேளை, இந்தியாவின் ஹிந்துஸ்தான் நாளிதழுக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா கருத்து தெரிவிக்கையில், ”இந்த நேரத்தில் துடுப்பாட்டம், களத்தடுப்பு, பந்துவீச்சு என அனைத்து பிரிவிலும் நாம் மோசமாக செயற்பட்டு வருகின்றோம். அதேபோல உடற்தகுதியிலும் எமது வீரர்கள் மிக மோசமாக செயற்பட்டு வருவது கவலையளிக்கிறது.

நான்காவது இலக்கத்தில் விளையாடுகின்ற குசல் மெண்டிஸை ஏன் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறக்குகின்றனர்?  அவர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அல்ல. மத்திய வரிசையில் விளையாடுவதற்கான நுட்பங்கள் அவரிடம் உண்டு. இவைகளைத்தான் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.

 

அத்துடன், இலங்கை அணி வகுத்த உத்திகள் தவறாக முடிந்துவிட்டன. போட்டியில் தோல்வி என்பது ஒரு பகுதி தான். சரியான வழிமுறை இல்லாமல் விளையாடியுள்ளனர். பந்துவீச்சில் மாலிங்க சிறப்பாக செயற்பட்டார். உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், இலங்கை அணியின் இந்த தோல்வியானது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். எனவே, சரியான உத்திகளைக் கையாண்டு அணியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும்” என தெரிவித்தார்.

மஹேலவின் வேண்டுகோள்

இம்முறை ஆசிய கிண்ணத்தில் இலங்கை அணி விளையாடிய விதம் குறித்து ரசிகர்களைப் போல தானும் வெட்கப்படுவதாகத் தெரிவித்த இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, தொடர்ந்து இலங்கை அணிக்கு ஒத்துழைப்பு வழங்கி, அவர்களை அடுத்தடுத்த தொடர்களின் சிறப்பாக விளையாட வைப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

சமூக வலைத்தளங்கள் வாயிலாக இலங்கை வீரர்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற கேலிகள் மற்றும் விமர்சனங்களைப் பார்க்கும் போது அவர்கள் தவறு செய்ததை நானும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இதை தனிப்பட்ட விடயமாக பார்க்க வேண்டாம். கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு. நிச்சயமாக இலங்கை அணியின் தோல்விகளுக்கு விரைவில் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். இதுதான் வெற்றிக்கு சிறந்த வழி என்றார

 

 

இதேநேரம், அழுக்குப் படிந்த ஆடைகளை ஒருபோதும் மக்கள் முன்னிலையில் கழுவ வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்தும் மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் சமூகவலைத்தளத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

அதில், அவசரப்பட்டு எடுக்கப்படும் முடிவுகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி அளிக்காது எனவும், இலங்கை கிரிக்கெட்டுக்கு தற்போது என்ன தேவை என்பதை நன்கு புரிந்துகொண்டு தீர்மானங்களை மேற்கொள்ளும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சங்கக்காரவின் நம்பிக்கை

சந்திக்க ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பில் இலங்கை அணி வீரர்கள் மீண்டும் வழமையான போர்முக்கு திரும்புவார்கள் என இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

 

இம்முறை ஆசிய கிண்ணப் போட்டிகளில் வர்ணனையாளராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் சங்கக்கார, இலங்கை ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அணி வீரர்கள் மீண்டும் தமது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால், தமது பெறுமதி என்ன என்பதை ஒவ்வொரு வீரரும் புரிந்துகொண்டு விளையாட வேண்டும். இதற்கு பயிற்சியாளர், தலைவர், அணியில் உள்ள அனைத்து வீரர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அணியில் ஒருசில மாற்றங்கள் இடம்பெற வேண்டும். அகில தனன்ஜயவுக்கு பக்கபலமாக இருப்பதற்கு மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர் ஒருவரை அணியில் இணைத்துக் கொள்ள வேண்டும். அதேபோல, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் சகலதுறை வீரர்கள் இருவர் விளையாடடுவதற்கான அவசியம் இல்லை என்பதுதான் எனது நிலைப்பாடாகும்.

தற்போது இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுடன் ஒப்பிடும் போது எம்மிடம் குறைந்தளவு வளங்களே உள்ளன. எனவே, எம்மிடம் உள்ள வளங்களைக் கொண்டு அதியுச்ச பயனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் நிச்சயம் எம்மால் முன்னேற்றம் காண முடியும். வீரர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். எவ்வாறியினும், ஓர் அணியாக மிக விரைவில் நாம் புத்துயிர் பெறுவோம் என சங்கக்கார தெரிவித்தார்.

அதேபோல, முன்னாள் வீரர்கள், பயிற்சியாளர்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

 

ரஸல் ஆர்னோல்ட்டின் யோசனை

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டு இவ்வாறு பின்னடைவை நோக்கிச் செல்வதை பார்த்துக் கொண்டிருப்பது மிகவும் கவலையாக இருப்பதாக முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ரஸல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைத்தளத்தில் இவ்வாறு கருத்து வெளியட்டிருந்த ரஸல் ஆர்னோல்ட், அண்மைக்காலத்தில் இலங்கை அணிக்கு சந்திக்க நேரிட்ட மிகப் பெரிய பின்னடைவு இதுவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இலங்கை ஒரு நாள் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக திமுத் கருணாரத்ன விளையாட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார

 

 

அதேபோல, விளையாட்டில் பின்னடைவுகள், தோல்விகள் என்பது ஏற்படுவது வழக்கமான விடயம் என குறிப்பிட்ட அவர், கடந்த சில தினங்களுக்கு முன் உலக றக்பி சம்பியன் நியூசிலாந்து அணியை, அதன் சொந்த மண்ணில் வைத்து முதற்தடவையாக தென்னாபிரிக்க அணி வீழ்த்தியிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ரொஷான் மஹானாம ஆதங்கம்

இலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன்று கவலை அளிக்கிறது அல்லது வெட்கமளிக்கிறது என முன்னாள் வீரர் ரொஷான் மஹனாம தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அடைந்த தோல்வி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தப் போட்டிகளைப் பார்க்கும் சகல சந்தர்ப்பங்களிலும் ஒன்று நாம் கவலைப்படுகிறோம் அல்லது வெட்கப்படுகிறோம். ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தோம் என்பதை என்னால் சிந்தித்துப் பார்க்கக்கூட முடியாமல் உள்ளது. வெற்றி தோல்வியை நாம் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இவர்கள் தோல்வி அடைந்த விதத்தை பத்திரிகைகளில் காணும் விதம், என்னால் தாங்கிக்கொள்ள முடியாதளவு வேதனையளிக்கிறது. நமது வீரர்களுக்கும் இந்த நிலைமை புரிய வேண்டும்.

அதனைவிட நிர்வாகிகளுக்கு புரிய வேண்டும். எமது இந்த விளையாட்டை இந்த நிலைமைக்கு கொண்டுசென்றமைக்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும். இது தொடர்பில் சகலரும் சிந்தித்து, தாம் இதனைவிட சிறந்த பலனை கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும். மிகுந்த கவலையுடனும் வருத்தத்துடனும் நான் பேசுகின்றேன். ஏனென்றால், எமது குழுவில் 3 அணிகள் இடம்பெற்றன. இலங்கை அணி நாடு திரும்புகின்றமை வருத்தமளிக்கிறது என ரொஷான் மஹனாம மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணியில் விளையாடும் வீரர்களை விட முன்னால் வீரர்கள் தான் அதிக கவலைப்படினம்..நியாயமான கவலை தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனி 1996 இல் அடித்த அதே லக் அடிக்கவே முடியாது. போய் உங்க அரசியல் சித்து விளையாட்டை பாருங்க அர்சுனா சார். சும்மா கனவு காணாமல். ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.