Jump to content

சி.வி.க்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களை பலவீனமாக்கும்: சித்தார்த்தன்


Recommended Posts

சி.வி.க்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களை பலவீனமாக்கும்: சித்தார்த்தன்

 

 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களின் பலத்தினை பலவீனமாக்கும் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது நிறைவினையொட்டி முத்து விழா மட்டக்களப்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “எமது கட்சியின் செயலதிபர் உமா மகேஸ்வரனின் செயற்பாடுகள் என்றும் தூர நோக்குடனேயே இருந்து வந்தது. தமிழீழம் என்ற விடயத்தினை இந்தியா மற்றுமின்றி உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளாது.

ஆகவே நியாயமான தீர்வொன்றை நோக்கி சென்றால் தான்  வடக்கு, கிழக்கு பிரதேசத்தினை சுதந்திரமான பகுதியாக பெறமுடியும் என்ற நம்பிக்கையுடனேயே அவர் கூடுதலாக செயற்பட்டு வந்தார்.

எமது பின்னடைவுகளுக்கு முக்கிய காரணம் நாங்கள் தனியாக செயற்படவேண்டும், வேறு நாடுகளுடன் சார்ந்திருக்ககூடாது போன்ற அரசியல் நிலைப்பாடுகளே ஆகும்.

மேலும் இந்தியாவுடன் யுத்த நடைபெற்ற காலத்திலும் இராணுவத்துடன் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் எமது மக்களின் பாதுகாப்புக்காக எமது கட்சி உறுதியுடன் செயற்பட்டது.

1990க்கு பின்னர் வவுனியாவில் 27 கிராமங்களை நாங்கள் உருவாக்கி எமது இருப்பினை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். இவைகள் எல்லாம் நாங்கள் தேர்தலில் நிற்போம் என நினைக்காத காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கையாகும்.

அந்தவகையில் தமிழர் விடுதலைக்கூட்டணி என்பது தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து பேசி உருவாக்கிய ஒரு கூட்டமைப்பு. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது வலிந்துகொண்டுவரப்பட்ட அமைப்பாகும். அது உண்மையாக அனைவரையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்று கொண்டுவரப்படவில்லை.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல வேறுபாடுகள் பிரச்சினைகள் இருந்தாலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதில் எமது கட்சி மிகவும் தீவிரமாக இருக்கின்றது.

மேலும் வடமாகாண முதலமைச்சர் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தமிழர்களின் பலத்தினை பலவீனமாக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்தும்.

ஆகவே ஒற்றுமையினை வலியுறுத்தும் அதேவேளையில் ஒற்றுமையினை குழப்புபவர்களை நிராகரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையில் கட்சிகளை கொண்டுசெல்வதற்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உதவ வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/சி-வி-க்கு-எதிரான-நடவடிக்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.