Jump to content

குருதிக் கொடைக்கு- துப்பாக்கியுடன் வந்த நபர்!!


Recommended Posts

குருதிக் கொடைக்கு- துப்பாக்கியுடன் வந்த நபர்!!

 

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தியாகி  திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு  குருதிக் கொடை நிகழ்வு இன்று நடைபெற்றது.

அதில்  துப்பாக்கியுடன் ஒருவர் சற்றுமுன்னர் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளது.

https://newuthayan.com/story/11/யாழ்ப்பாணம்-போதனா-மருத்துவமனையில்-பதற்றம்.html

Link to comment
Share on other sites

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!

 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு குருதிக் கொடை நிகழ்வு இன்று இடம்பெற்றது.

அதன்போது துப்பாக்கியுடன் ஒருவர் சற்றுமுன்னர் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்களுக்காக பட்டினித் தீயில் தன்னை உருக்கி ஆகுதியாக்கிய தியாக தீபம் திலீபனின் நினைவாக யாழ்.இந்துக் கல்லூரியில் குருதிக்கொடை முகாம் இன்றைய தினம் காலை 9.00 மணி தொடக்கம் இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

2012 க.பொ.த உயர்தரப் பிரிவு மாணவர்களின் ஒழுங்குபடுத்தலில் இந்த இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வருடா வருடம் திலீபனின் நினைவேந்தல் காலத்தில் இவ் இரத்தான முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. இந்துக் கல்லூரி பழைய மாணவர்கள் அனைவரையும் இதில் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி இன்று நடைபெற்ற குருதிக்கொடை நிகழ்வின்போது துப்பாக்கியுடன் ஒருவர் நுழைந்ததால் அங்கு பதற்றமான நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சிவில் உடையில் வந்த நபர் ஒருவர் தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியினை எடுத்து தன்னுடன் வந்த மற்றொரு நபரிடம் கொடுத்துள்ளார்.

இதனால் இரத்ததானம் வழங்கும் இடத்தில் குழப்பம் உருவானது. பின்னர் ஆயுதத்துடன் வந்த நபர் இரத்தானம் வழங்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதேவேளை துப்பாக்கியுன் வந்திருந்தவர் இராணுவ புலனாய்வாளரா? என கேள்வி எழுந்துள்ளது.

தியாகி திலீபன் யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவர். அங்கு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, சிறந்த பெறுபேறு பெற்று யாழ்.மருத்துவபீடத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/106586?ref=imp-news

Link to comment
Share on other sites

தியாக தீபம் திலீபனின் நினைத்து இரத்ததானம் வழங்கினார் இராணுவ புலனாய்வாளர்…

 

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்த தான முகாமில் இராணுவ புலனாய்வு துறையை சார்ந்த ஒருவர் இரத்த தானம் வழங்கியுள்ளார். யாழ்.இந்துக் கல்லூரியில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த இரத்த தான முகாம் நடைபெற்றது.

 

அதன் போது இரத்த தான முகாம் நடைபெறும் மண்டபத்திற்கு சென்றிருந்த இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவர் அங்கு எதற்காக இரத்த தான முகாம் நடைபெறுவதாக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் போது அங்கிருந்தவர்கள் தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு இரத்த தானம் நடத்தப்படுவதாக கூறியுள்ளனர். அதனை அடுத்து இருவரில் ஒருவர் தனது இடுப்பு பகுதியில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து தன்னுடன் வந்தவரிடம் கையளித்து விட்டு தானும் இரத்த தானம் வழங்க முன் வந்தார்.

அதனை அடுத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் போது அவர் இரத்த தானம் வழங்க தகுதியுடையவர் என மருத்துவர் பரிந்துரைத்ததன் பின்னர் அவர் இரத்த தானம் வழங்கினார்.

குறித்த இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்த நபரின் செயற்பாடு அங்கிருந்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் , குறித்த புலனாய்வு பிரிவு உத்தியோகஸ்தருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர் என தெரிவிக்கப்படுகின்றது

http://globaltamilnews.net/2018/96900/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.