Jump to content

மெத்தியூஸை விலகுமாறு வேண்டுகோள் : சந்திமாலை தலைவராக்க தீர்மானம்


Recommended Posts

மெத்தியூஸை விலகுமாறு வேண்டுகோள் : சந்திமாலை தலைவராக்க தீர்மானம்

இலங்கை அணியின் தலைவராக தினேஸ் சந்திமாலை நியமிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

angel.jpg

இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஒரு நாள் போட்டித் தொடரில் இலங்கையை தலைமை தாங்குவதற்காகவே சந்திமல் நியமிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில் அணித்தலைவராக செயற்பட்டுவரும் அஞ்சலோ மெத்தியூஸை ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/41042

Link to comment
Share on other sites

“ஆசியக்கிண்ணத் தோல்விகளுக்கு நான் பலிக்கடா”- அஞ்சலோ மத்தியூஸ் ஆதங்கம்

 

Dn1A-fOXUAALg5j.jpg

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை, தினேஷ் சந்திமால் வழிநடத்தவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தேசிய கிரிக்கெட் குழு இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒருநாள் மற்றும் 20 க்கு 20 அணிகளின் தலைவராக செயற்பட்ட அஞ்சலோ மெத்தியூஸை பதவி விலகுமாறு தெரிவுக்குழு அறிவித்துள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மெத்தியூஸை அணித்தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான காரணம் கிரிக்கெட் நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

 

எனினும் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள அஞ்சலோ மத்தியூஸ் ஆசியக்கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடைந்ததோல்விகளுக்காக தாம் பலிக்கடா ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐந்து வருடங்கள் அணிக்கு தொடர்ச்சியாக அனைத்துவிதமான போட்டிகளிலும் தலைமைதாங்கியதை அடுத்து 2017ல் தாமாகவே முன்வந்து அணித்தலைமையை துறந்திருந்தாக சுட்டிக்காட்டியுள்ள மத்தியூஸ் புதிய தலைமைப்பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்ற சந்திக்க ஹத்துருசிங்க கேட்டுக்கொண்டதற்கமைவாகவே தான் மீண்டும் தலைமைப்பொறுப்பை ஏற்றதாக கூறியுள்ளார்.

கடைசியாக இலங்கையில் இடம்பெற்ற தென் ஆபிரிக்காவிற்கு எதிரான தொடரில் இலங்கை அணியின் சார்பில் அதிக ஓட்டங்ளை தாம் பெற்றதாகவும் மத்தியூஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசியக்கிண்ணப்போட்டிகளின் மோசமான பெறுபேறுகளுக்கு தேர்வாளர்களும் தலைமைப்பயிற்றுவிப்பாளரும் தன்னைப் பலிக்கடா ஆக்கிவிட்டதாக ஆதங்கப்பட்டுள்ள மத்தியூஸ்  தாம் போதிய உடற்தகுதியைக் கொண்டிருக்கவில்லை என தேர்வாளர்கள் கருதும் இடத்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இருந்து ஓய்வுபெறவும் தயாராகவுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 18 மாதங்களில் இலங்கை அணியின் தலைவர்களாக பலர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், உபுல் தரங்க, லசித் மாலிங், சாமர கபுகெதர மற்றும் திசர பெரேரா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை அணி பங்கேற்ற 40 ஒருநாள் போட்டிகளில் 30 போட்டிகளில் தோல்வியையே தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Dn0d8bwXUAATqFV.jpg

Dn0d8b4XsAA4ILT.jpg

 

 

http://athavannews.com/ஆசியக்கிண்ணத்-தோல்விகள/

Link to comment
Share on other sites

பதவியிலிருந்து விலகுமாறு பணித்தனர் - விலகுகிறேன் ! தகுதியற்றவன் என்றால் ஓய்வை அறிவிக்கவும் தயார் - மெத்தியூஸின் உருக்கமான கடிதம்

 

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு மற்றும் தலைமைப் பயிற்றுவிப்பாளர் என்னை அணித் தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்தனர். அதனால் தலைமைப் பதவியில் இருந்து விலகுகிறேன். அவர்கள் என்னை அணியிலிருக்க தகுதியற்றவன் என்றால் ஓய்வை அறிவிக்கவும் தயாராகவுள்ளேன் என இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

angalo.jpg

 

இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது அணிகளின் தலைமை பொறுப்பில் இருந்து நேற்று விலகியுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு உருக்கமான கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

அந்தக் கடித்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதம் வருமாறு,

 

கடந்த வௌ்ளிக்கிழமை 21 ஆம் திகதி இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையின் போது இலங்கை அணியின் தேர்வு குழுவின் தலைவர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ஹத்துரு சிங்க ஆகியோர் என்னை ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததனர். என்னை பதவியிலிருந்து விலகுமாறு தெரிவித்ததும் நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். 

மேலும் , ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை அணி சந்திந்த படுதோல்வியின் முழுப்பொறுப்பும் என் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் தோல்விக்கு தானே பலிக்கடாவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் , அணியின் தோல்விக்கு அணியின் தலைவரே முழுப்பொறுப்பும் என்று தெரிவிப்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த தோல்வியின் ஒரு பங்காளியே நான் என்றும் , அதன் முழுப்பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது எனவும் அஞ்சலோ குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தெரிவுக்குழு மற்றும் பயிறிசியாளரின் முடிவை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கின்றேன்.

நான் தலைமைப்பொறுப்பில் இருக்கும் போது இலங்கை அணி பல சவால்களை எதிர்கொண்டு சாதனைகளைப் படைத்தது. அதில் அவுஸ்திரேலிய அணியை 3-0 என வெள்ளையடிப்புச்செய்தது. இதைவிட இங்கிலாந்து அணியை வெற்றிபெற்று சாதனை படைத்தது.

எவ்வாறாயினும் இலங்கை அணிக்கு புதிய தலைமைத்துவம் வேண்டுமென உணரப்பட்டவேளையில் நான் அனைத்து வகை கிரிக்கெட்டிலுமிருந்து கடந்த 2017 ஜூலை மாதம் சுயவிருப்பின் அடிப்படையில் அணித் தலைமையில் இருந்து விலகியிருந்தேன்.

இவ்வாறு நான் விலகிய காலப்பகுதியில் உபுல் தரங்க, திஸர பெரேரா, சாமர கப்புகெதர, லசித் மாலிங்க மற்றும் டினேஸ் சந்திமல் ஆகியோர் 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளில் மாறிமாறி அணிக்கு தலைமை தாங்கினர்.

இந்நிலையில் அணி தொடர் தோல்விகளை சந்தித்தபேது இலங்கை அணிக்கு புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட சந்திக்க ஹத்துருசிங்க என்னை தனிப்பட்ட முறையில் சந்தித்து எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு உலக்கிண்ணம் வரை அணித் தலைமைப்பொறுப்பை ஏற்குமாறு கேட்டுக்கொண்டார்.

தலைமைப்பெறுப்பை மீண்டும் எடுப்பதற்கு எனது குடும்பத்தினரும் நண்பர்களும் எதிர்ப்பைத் தெரிவித்த நிலையிலும் ஹந்துருசிங்க மீதும் அவரது திட்டத்தின் மீதும் வைத்த நம்பிக்கையினால் நான் அந்தப்பொறுப்பை மீண்டும் எடுத்து அணியை பலப்படுத்தி உயர்ந்த நிலைக்கு  இட்டுச்செல்ல இணங்கினேன்.

இந்தப் பிரச்சினையில் இருந்து விலகிவிடுவது எனது நோக்கமல்ல. விளையாட்டு வீரன் என்ற ரீதியில் நான் முழு மனதுடன் எவ்வேளையிலும் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படுவேன்.

இதேவேளை, நான் எந்தவேளையிலும் அணிக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. தேர்வுக்குழுவோ தலைமைப் பயிற்சியாளரோ நான் அணிக்கு தகுதியற்றவன் என்று தெரிவிக்கும் பட்சத்தில் நான் ஓய்வுபெறவும் தயாராகவுள்ளேன் என அவரது கடிதத்தில் மெத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

 

http://www.virakesari.lk/article/41063

Link to comment
Share on other sites

இங்கிலாந்துக்கெதிரான தொடரில் மத்தியூஸ் இல்லை?
 

image_627a155b96.jpg

இங்கிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி தொடர்களுக்கான இலங்கைக் குழாமில் முன்னாள் தலைவரான அஞ்சலோ மத்தியூஸை சேர்த்துக் கொள்ளாமல் விடுவதற்கு தேர்வாளர்கள் தீர்மானித்துள்ளதாக அறியப்படுகிறது.

அந்தவகையில், உடற்றகுதிச் சோதனைக்கு முன்னரே உடற்றகுதி தொடர்பான கரிசனைகள் காரணமாக இங்கிலாந்துக்கெதிரான தொடர்களுக்கான இலங்கைக் குழாமில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டீர்கள் என அஞ்சலோ மத்தியூஸிடம் கூறப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வாளர்களிடமிருந்து உடற்றகுதிச் சோதனையொன்றை மத்தியூஸ் கோரியதாகக் கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டிலிருந்து மத்தியூஸ் அதிக எடையைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுவதுடன், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு விதமான காயங்களால் தொடர்களை தவறவிட்டபோதும், 2017ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து 22 இனிங்ஸ்களில், 100 பந்துகளுக்கு 76 ஓட்டங்கள் என்ற வகையிலென்றாலும் 59.2 என்ற சராசரியில் 888 ஓட்டங்களை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்றிருந்தார்.

இதேவேளை, ஆசியக் கிண்ணத்தின் இரண்டு போட்டிகளிலும் குறிப்பிடத்தக்கதாக ஓட்டங்களெதனையும் பெறாததோடு, இரண்டு ரன் அவுட்களில் பங்கெடுத்ததால் விமர்சனத்துக்கு மத்தியூஸ் உள்ளாகியிருந்தார்.

எவ்வாறெனினும், இதற்கு முன்னர் இலங்கை இறுதியாகப் பங்கெடுத்த இருதரப்பு ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரான தென்னாபிரிக்காவுக்கெதிரான தொடரின் ஐந்து போட்டிகளில், 100 பந்துகளுக்கு 83 ஓட்டங்கள் என்றவாறு, 78.33 என்ற சராசரியில் 235 ஓட்டங்களை மத்தியூஸ் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/இங்கிலாந்துக்கெதிரான-தொடரில்-மத்தியூஸ்-இல்லை/44-222614

Link to comment
Share on other sites

தேவையெனில் நிரூபித்துக் காட்டவும் தயார் 

 

 

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமிலிருந்து அஞ்சலோ மெத்தியூஸ் நீக்கப்பட்டுள்ளார்.

mahiws1.jpg

கடந்த மூன்று நாட்களுக்கு முன் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அஞ்சேலா மெத்தியூஸை தற்போது இங்கிலாந்துடனான தொடரில் நீக்கியுள்ளமை சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு சிம்பாவே இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இலங்கை அணி படுதோல்வியை சந்திக்க அஞ்சலோ மெத்தியூஸ் முதன்முறையாக பதவியிலிருந்து நீங்கினார்.

அதன்பிறகு மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்ற மெத்தியூஸ், நடைபெற்று வரும் ஆசியக் கிண்ணத் தொடரில் அடைந்த படுதோல்வியின் பின்னர் தேர்வுக்குழு அவரை தலைமைப் பதவியிலிருந்து நீக்கியது.

எனினும் தலைமைப் பதவி பறிபோனால் பரவாயில்லை அணியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பிலிருந்த அவருக்கு தேர்வுக்குழு மீண்டும் ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளது.

அதாவது தேர்வுக்குழுத் தலைவரான கிரஹம் லெப்ரோய், மெத்தியூஸின் உடற் தகுதியில்லாத காரணத்தினால் இங்கிலாந்துடனான தொடரிலிருந்து அவரை நீக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது குறித்து தெரிவித்த மெத்தியூஸ், உடற்தகுதி சோதனை நடத்தாமலே நான் உடற்தகுதியை இழந்து விட்டேன் என்று எவ்வாறு கூற முடியும். அவ்வாறு நான் உடற்தகுதியை இழந்து விட்டேன் என்று நீங்கள் கருதினால் நான் அதனை நிரூபித்துக் காட்டவும் தயார் என கிரஹம் லெப்ரோய்க்கு பதிலளித்துள்ளார். 

இதுவரை 106 போட்டிகளுக்கு தலைமைப் பதவி ஏற்று வழிநடத்தியுள்ள மெத்தியூஸ், 49 போட்டிகளில் வெற்றியையும் 51 போட்டிகளில் தோல்வியையும் தழுவிக் கொண்டுள்ளார். அத்துடன் இதில் ஒரு போட்டி வெற்றி, தேல்வியின்றி முடிவடைந்ததுடன், 5 போட்டிகள் மழையால் இரத்து செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/41182

Link to comment
Share on other sites

கலைக்கப்படுகின்றது தெரிவுக்குழு?

 

 

இலங்கை கிரிக்கெட்டின் தெரிவுக்குழு கலைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினை உடனடியாக கலைத்துவிடுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வாவிற்கு உத்தரவிட்டுள்ளார் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துடன் விளையாடவுள்ள அணியில் மத்தியுசை  இணைத்துக்கொள்ளுமாறு விளையாட்டமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சண்டிக ஹதுருசிங்கவின் பங்களிப்பு குறித்தும் ஆராய்ந்துள்ள அமைச்சர் ஆசிய கிண்ணப்போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகளிற்கு பயிற்றுவிப்பாளரே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

lbrooy.jpg

 

http://www.virakesari.lk/article/41177

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.