Jump to content

எமது நிலம், கலை, கலாசாரம், பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் – வியாழேந்திரன்


Recommended Posts

எமது நிலம், கலை, கலாசாரம், பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும் – வியாழேந்திரன்

 

‘எமது நிலம், கலை, கலாசாரம், பண்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே எமது உரிமை சார்ந்த செயற்பாடு என

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நரிப்புல்தோட்டத்தில் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் மீனவர்களுக்கான வலைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “எமக்கு இந்த உரிமை சார்ந்த செயற்பாடுகள் வேண்டாம், நூறு வீதம் அபிவிருத்திதான் வேண்டும் என சொன்னால் அனைத்தையும் இழந்து இன்னுமொரு சமூகத்திற்கு அடிமையாகும் சமூகமாக நாம் மாற்றமடைவோம்.

நாங்கள் அடுத்த தலைமுறை தொடர்பில் சிந்திக்கும்போது அதனை சிலர் கேலியாக எடுத்துக்கொள்கின்றனர். புல்லுமலையிலுள்ள பெருவட்டை குளம் இன்று காத்தான்குடியை சேர்ந்த தனிநபர் ஒருவரினால் அபரிக்கப்பட்டுள்ளது.

சங்குளகுளத்திற்கு தனிநபர் ஒருவர் சொந்தம் கொண்டாடி குளத்திற்குள் ஒருவர் வேலி அமைக்கின்றார். வாகரை ஆளம் குளத்தில் மேவான்டகுளத்தினை ஒரு அமைச்சர் கையில் வைத்துள்ளார்.

குளத்தின் மீன்பிடியை நம்பி 29 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. அந்த குளங்களை இன்று தனிநபர்கள் அரசியல் பின்புலத்துடன் உரிமை கொண்டாடுகின்றனர்.

குளங்கள் பறிபோகின்றது, வாவிகள் பறிபோகின்றது, நிலம் பறிபோகின்றது, கோயில்கள் உடைக்கப்படுகின்றன. இவை தொடர்பில் யாரும் பேசக்கூடாது. எங்களுக்கு கிறவல் வீதிகள்தான் வேண்டும் என்று சிலர் நினைக்கின்றனர்.

இதற்காகவா 40 வருடத்திற்கு மேலாக எமது தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடினார்கள். இதற்காகவா ஆயிரக்கணக்கான உயிர்கள் இந்த மண்ணில் புதைக்கப்பட்டன. இந்த மண்ணுக்காகவே இவ்வளவு இழப்புகளையும் இந்த சமூகம் சந்தித்தது.

இந்த மண்ணை பாதுகாக்கவேண்டும். இந்த நிலத்தில் இருந்து நாங்கள் அப்புறப்படுத்தப்படுவோமானால் இங்கு மேற்கொள்ளப்படும் எந்த அபிவிருத்தியையும் நாங்கள் அனுபவிக்கமுடியாது.

மட்டக்களப்பில் உள்ள சிலர் தமக்கு எந்தப்பிரச்சினையும் இல்லையென கருதுகின்றனர். ஆனால் எல்லைப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சினைகள் நாளை இங்கும் வரலாம். இன்று தாந்தாமலைக்கே இந்த பிரச்சினை வந்துவிட்டது.

எங்களுக்கு அபிவிருத்திகள் தேவை. அதனை நாங்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. இந்த மூன்று வருடத்தில் தமிழ் பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் செய்யாத அபிவிருத்தியை நாங்கள் செய்திருக்கின்றோம்.

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு இந்த அபிவிருத்தியை நாங்கள் செய்திருக்கின்றோம். நாங்கள் அபிவிருத்தியுடன் சேர்ந்த உரிமை என்ற விடயத்துடன் சமாந்தரமாக பயணிக்கவேண்டும்.

அதனை சிந்திக்கும் சமூகம் என்ற நிலையில் இருந்து நாங்கள் இறங்கிச் சென்றுகொண்டிருக்கின்றோம். சமூக பாரம்பரிய, கலைகலாசார பண்பாடுகளை மறந்து செல்லும் சமூகமாக தமிழ் சமூகம் மாற்றமடைந்து வருகின்றது.

பொங்கு தமிழ் என்பது தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டு விடயங்களை பிரதிபலிக்கும் விடயமாகும். அதுபோராட்ட காலத்தில் ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை இனரீதியான செயற்பாடாகவும் பயங்கரவாத செயற்பாடாகவும் பார்க்கும் நிகழ்வு அல்ல. அது தமிழர்களின் கலைகலாசார பண்பாட்டு விடயங்களை பேணுகின்ற, பாதுகாக்கின்ற ஒரு விடயமாகும்.

அந்த பொங்குதமிழ் நிகழ்வுகளின் அடையாளமாகவே பொங்கு தமிழ் தூபிகள் அமைக்கப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக பொங்குதமிழ் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

அதில் வடகிழக்கு மலையகம் என அனைத்து உறவுகளும் பங்குகொண்டனர். இந்த அமைதியான சூழலில் அந்த பொங்கதமிழ் தூபிகள் புனரமைக்கப்பட்டு அண்மையில் யாழில் அனுஸ்டிக்கப்பட்டது.

ஆனால் கிழக்கு பல்கலைகழகத்தில் அந்த தூபி புனரமைக்கப்பட்டு நிகழ்வு நடாத்தாமை கவலைக்குரிய விடயமாக இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில்தான் அகிம்சை போராட்டங்களும் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டன. ஆயுதப்போராட்டமும் முதலில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த விடயத்தில் கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கான அனுமதிகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தினை வேறுபடுத்தப்பட்ட கண்ணோட்டத்துடன் பார்க்காமல் தமிழர்களின் வாழ்விலுடன் தொடர்புபட்ட விடயம் என்பதை உணரவேண்டும்.

அன்று தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் தலைவர்கள் போராடினார்கள். அந்த போராட்டத்தினை அன்று இருந்த சில தமிழ் அரசியல் தலைவர்களும் விமர்சித்தனர். ஆனால் அன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டமே இன்று தமிழ் மொழிக்கு ஒரு அந்தஸ்த்தினை பெற்றுக்கொடுத்துள்ளது.

ஆயுதப்போராட்டத்தினையும் சிலர் பூச்சியத்தில் தொடங்கி பூச்சியத்தில் முடிந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் இன்று தமிழர்களின் போராட்டம் சர்வதேச ரீதியாக பேசப்படுவதற்கு இந்த ஆயுதப்போராட்டம் தான் காரணமாகும். தமிழர்களின் எந்த போராட்டமும் தோல்வியடையவில்லை என்பதே உண்மையானதாகும்.

http://athavannews.com/எமது-நிலம்-கலை-கலாசாரம்-ப/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.