Jump to content

கூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார்....சி.வி.


Recommended Posts

கூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார்

01MAIN22092018Page1Image0008-6893f4b4184e97c11771916748b1e8422974c967.jpg

 

ஆர்.ராம்

அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.

சம்­பந்­த­னுடன் எனக்­கென்ன பிணக்கு?

கூட்­ட­மைப்பபை பதிவு செய்ய வேண்டும்

இந்­தி­யா­வுடன் நல்­லு­றவு உள்­ளது

முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க மக்­களை ஒன்­றி­ணைத்து எமது மக்­களின் தேவை­களை உல­கிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்­த­வற்றை செய்வேன் என்று வட­மா­காண முத­ல­மைச்சர்

சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.

தற்­போ­தைய தலை­மைகள் போய் கூட்­ட­மைப்பு பதிவு பெற்று மாற்­றுத்­த­லைமை உதித்தால் மீண்டும் கூட்­ட­மைப்பின் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு சாத்­தியம் உள்­ளது என்று குறிப்­பிட்­டவர் வட­மா­காண சபையின் ஒரு­சில பின்­ன­டை­வு­க­ளுக்கு அர­சியல் ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினர் சிலரே காரணம். அவ்­வாறு இருந்தும் எமது செயற்­பா­டுகள் செவ்­வனே இருந்­தன என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

ஏதிர்­வரும் மாதம் 25ஆம் திக­தி­யுடன் வட­மா­காண சபையின் முத­லா­வது ஆயுட்­காலம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்­த­கட்ட செயற்­பா­டுகள் குறித்து முத­ல­மைச்சர் சி.வி;.விக்­கி­னேஸ்­வரன் வீர­கே­சரி வார இத­ழுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக கருத்துப் பரி­மாற்­றத்தின் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அதன் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி – ஒக்­டோபர் 23ஆம் திகதி உங்­களின் பிறந்த தினத்­தன்று வட­மா­காண சபையின் முதலாம் அத்­தி­யாயம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்த கட்டம் என்ன செய்யப் போகி­றீர்கள்?

பதில் - 24ஆம் திகதி பௌர்­ணமி தின­மா­கை­யாலும் 25ஆம்; திக­தியே கடைசித் தின­மாகக் கூறப்­பட்­டுள்­ள­தாலும் வட மாகா­ண­சபை ஒக்­டோபர் 23ஆம் திகதி கூட இருக்­கின்­றது. அன்­றைய தினம் பிறந்த தின­மாக அமைந்­தது எதேச்­சை­யாக ஏற்­பட்ட ஓர் ஒற்­றுமை.

நான் முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனஞ் செலுத்த உள்ளேன். கட்­சி­க­ளிலும் பார்க்க மக்­களை ஒன்­றி­ணைத்து, எமது மக்­களின் தேவை­களை, அபி­லா­ஷை­களை, விருப்பு வெறுப்­புக்­களை, கரி­ச­னை­களைத் தெரிந்து வைத்து உல­கிற்கு எடுத்துக் கூறவும் அர­சாங்­கத்­திற்கு எடுத்துக் கூறவும் வேண்­டி­யுள்­ளது. என்னால் முடிந்­ததை இது சம்­பந்­த­மாகச் செய்ய முன்­வ­ருவேன்.

கேள்வி – அடுத்த கட்டம் தொடர்பில் 4 தெரி­வு­களைக் கொண்­டி­ருக்கும் நீங்கள் இறுதி முடிவை எப்­போது எடுக்­க­வுள்­ளீர்கள்?

பதில் - வட­மா­கா­ண­சபைத் தேர்­தல்கள் உடனே நடை­பெ­றக்­கூ­டிய சாத்­தியக் கூறுகள் மிகவும் குறைவு. முதலில் நான்­கா­வது தெரிவில் ஈடு­பட்டுக் கொண்டு மேற்­கொண்டு நடக்க வேண்­டி­யவை பற்றி பின்னர் ஆராய்வோம்.

கேள்வி – உங்­களை முத­ல­மைச்­ச­ராக தெரிவு செய்ய வேண்டும் என்­பதில் ஆரம்பம் முதல் இறு­தி­வரை இறுக்­க­மாக இருந்த கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­தனை சந்­திப்­ப­தற்­கான வாய்ப்­புக்கள் உண்டா?

பதில் - நான் எப்­பொ­ழுதும் ஆயத்தம். அவ­ருடன் எனக்­கென்ன பிணக்கு? அவரின் வலது கரம் இட­ம­ளித்தால் அவரும் என்னைச் சந்­திப்­பதில் அவ­ருக்கு எந்தத் தடங்­கலும் இருக்­காது என்று நம்­பு­கின்றேன்;.

கேள்வி – உங்­க­ளி­டத்தில் காணப்­படும் 4 தெரி­வு­களில் நான்­கா­வது தெரிவை மேற்­கொள்ளும் பட்­சத்தில் கூட்­ட­மைப்பு வர­வேற்­புடன் ஆத­ரவை நல்கும் என அதன் பேச்­சாளர் தெரி­வித்­தி­ருக்­கின்­றதைக் கருத்தில் எடுப்­பீர்­களா?

பதில் - கூட்­ட­மைப்பு ஏற்­க­னவே ஆத­ரவு நல்­கியே வரு­கின்­றது. பேச்­சா­ள­ருக்கு இது தெரி­யாது போலும்!

கேள்வி – கொள்கை ரீதி­யாக புதிய கூட்­ட­ணியை உரு­வாக்கி அடுத்த தேர்­தலில் கள­மி­றங்­கு­வீர்­களா?

பதில் - இன்­னமும் முடி­வெ­டுக்­க­வில்லை. ஆனால் கொள்கை ரீதி­யா­கவே எனது நிலை இருக்கும் என்­பதில் சந்­தேகம் இருக்கத் தேவை­யில்லை.

கேள்வி – எதிர்­கா­லத்தில் கூட்­ட­மைப்­புடன் கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று அதன் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக கள­மி­றங்­கு­வ­தற்கு சாத்­தி­யப்­பாடு உள்­ளதா?

பதில் - தற்­போ­தைய தலை­மைகள் போய் கூட்­ட­மைப்பு பதிவு பெற்று மாற்­றுத்­த­லைமை உதித்தால் சாத்­தி­யப்­பாடு உண்டு.

கேள்வி – வட­மா­காண சபையின் வினைத்­தி­ற­னான செயற்­பாட்டில் பின்­ன­டை­வுகள் உள்­ளன என்­பதை ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா?

பதில் - இன்­றைய மத்­திய அர­சாங்கம் பற்­றியும் அவர்­களின் வினைத்­திறன் சம்­பந்­த­மா­கவும் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. ஆகவே யாரும் இவ்­வா­றான கேள்­வி­களை யாரைப்­பற்­றியும் அடுக்­கலாம். எம்மைப் பொறுத்த வரையில் பின்­ன­டை­வு­க­ளுக்குக் காரணம் நாமல்ல. எம்முள் இருந்து கொண்டே எமக்குக் குழி­ப­றித்துக் கொண்­டி­ருப்­போரே அதற்குப் பதில் கூற வேண்டும். அர­சியல் ரொட்டித் துண்­டு­களைக் காட்டி அற நிலை மறந்த அவை­யினர் சிலரை வைத்து அரங்­கேற்­றிய நாட­கங்கள் பின்­ன­டைவைத் தராமல் எதனைத் தரு­வன? அப்­படி இருந்தும் எமது செயற்­பா­டுகள் பற்றி நல்­லதே கூறப்­பட்­டுள்­ளன. நாடு பூரா­கவும் உள்ள 800க்கும் அதி­க­மான அரச அமைச்­சுக்கள், திணைக்­க­ளங்கள் போன்­ற­வற்றுள் 2015ஆம் ஆண்டில் எமது மாகாண முத­ல­மைச்சர் அமைச்சே சில விட­யங்கள் சம்­பந்­த­மாக முத­லிடம் பெற்­றது. 2016இலும் நாம் முதன்மை நிலை­யில்த்தான் அடை­யாளம் காட்­டப்­பட்­டுள்ளோம். சதிகள் பல நடந்­தாலும் எமது செயற்­பா­டுகள் வினைத்­தி­ற­னு­டன்தான் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. முட்­டை­களை இட்­டு­விட்டு கொக்­க­ரித்து எமது வினைத்­திறன் பற்றி பறை­சாற்ற வேண்­டிய அவ­சியம் எமக்­கில்லை.

கேள்வி – இது­வரை காலத்தில் வட மாகாண சபை சாதித்­தது என்ன?

பதில் - எமது சாத­னைகள் பற்­றிய கைநூல் விரைவில் வெளி­வரும். அதை வாசித்துத் தெரிந்து கொள்­ளலாம்.

கேள்வி – கஜேந்­தி­ர­குமார் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் ஆகியோர் இரு துரு­வ­மா­கி­யுள்ள நிலையில் புதிய கூட்­டணி ஒன்று அமை­வ­திலும் சிக்­கல்கள் இருப்­பது போல் உள்­ளதே?

பதில் - கொள்­கைகள் ஒன்றாக இருந்தால், மக்களின் நலனே முக்கியமென்ற எண்ணம் வேரூன்றி விட்டால் துருவங்கள் கூட இணையலாம்.

கேள்வி – மஹிந்த ராஜபக்ஷ உட்பட இலங்கையின் அரசியல் தலைமைகள் இந்தியாவின் கரிசனையை கவனத்தில் கொண்டு செயற்படுகின்ற சூழல் காணப்படுகின்ற நிலையில் தொடர்ந்தும் அரசியல் களத்தில் பயணிப்பதை உறுதிசெய்துள்ள நீங்கள் இந்தியாவுடன் உறவுகளை கட்டியெழுப்புவது தொடர்பில் கவனம் செலுத்துவீர்களா?

பதில் - இந்தியாவுடனான எனது உறவுகள் என்றுமே நன்றாகவே இருந்து வருகிறது. அதில் கட்டி எழுப்ப எதுவும் இல்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-09-23#page-1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைமை மாறினால் களமிறங்கத் தயார் ; விக்னேஸ்வரன்

மாயவன்
49D96564-4089-4CA4-844A-03AD0AC6DE43

தற்போதைய தலைமைகள் போய், மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிங்குவதற்கு சாத்தியும் உள்ளது எனத் தெரிவித்த வட மாகாண  முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வட­மா­காண சபையின் ஒரு­சில பின்­ன­டை­வு­க­ளுக்கு அர­சியல் ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினர் சிலரே காரணம். அவ்­வாறு இருந்தும் எமது செயற்­பா­டுகள் செவ்­வனே இருந்­தன என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

எதிர்­வரும் மாதம் 25 ஆம் திக­தி­யுடன் வட­மா­காண சபையின் முத­லா­வது ஆயுட்­காலம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்­த­கட்ட செயற்­பா­டுகள் குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க  மக்­களை ஒன்­றி­ணைத்து எமது மக்­களின் தேவை­களை உல­கிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்­த­வற்றை செய்வேன் என்று விக்­கி­னேஸ்­வரன் இதன்போது தெரி­வித்தார்.

2018-09-23

http://tamilleader.org/2018/09/23/தலைமை-மாறினால்-களமிறங்கத/

Link to comment
Share on other sites

விக்னேஸ்வரனின் சுயரூபம் தெளிவாகி விட்டது…!!

 

வடக்கு மாகா­ணத்­தின் தற்­போ­தைய முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அடுத்த முறை­யும் முத­ல­மைச்­சர் பதவி தொடர்­பா­கச் சிந்­திப்­பது தெரி­கின்­றது. அவ்­வா­றில்­லா­விட்­டால் கூட்­ட­மைப்­பின் தலைமை பதவி வில­கி­னால் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரா­கக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் கள­மி­றங்­கு­வேன் என அவர் கூறி­யி­ருக்­க­மாட்­டார்.

கூட்­ட­மைப்­பை­யும் கூட்­ட­மைப்­பின் தலை­மை­யை­யும் தாக்­கிப்­பேசி வரு­வதை அவர் வழக்­க­மா­கக் கொண்­டுள்ள நிலை­யில் தற்­போது இத்­த­கைய கருத்தை அவர் வெளி­யிட்­டுள்­ளமை கவ­னத்­துக்­கு­ரி­யது. கூட்­ட­மைப்­பின் தலை­மை­யைப் பதவி வில­கி­வி­டு­மாறு அந்த அமைப்­பைச் சேர்ந்த எவ­ருமே கோரிக்கை விடுத்­த­தில்லை. முன்­னர் கூட்­ட­மைப்­பில் இணைந்­தி­ருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்­சி­யின் தலை­வ­ரும், சிவ­சக்தி ஆனந்­தன் போன்­ற­ வர்­க­ளும் கூட்­ட­ மைப்­பின் தலைமை தொடர்­பாக எதிர்க் கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­துள்­ள­னர். அவர்­கள் இப்­போது கூட்­ட­மைப்­பில் இல்லை. ஆனால் கூட்­ட­மைப்­பில் இருந்­து­கொண்டே அதை மோச­மாக விமர்­சித்து வரு­கி­றார் விக்­னேஸ்­வ­ரன்.

கூட்­ட­மைப்­பில் இருந்து
அவர் முத­லில் வில­க­லாமே?
மக்­கள் பலம் தம்­மு­டன் இருக்­கும்­வ­ரை­யில் தம்மை எவ­ரா­லும் அசைத்­து­விட முடி­யா­தென அவர் அடிக்­கடி கூறி வரு­கின்­றார். அவ­ருக்கு எதி­ரா­கத் தமி­ழ் அரசுக் கட்சியினர் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வந்­த­போது அவ­ருக்கு ஆத­ர­வாக மக்­கள் கூட்­டம் திரண்­டி­ருந்­தது உண்­மை­தான். ஆனால் அந்­தக் கூட்­டம் அவ­ருக்கு உரி­ய­தல்ல. தமி­ழ் அரசுக் கட்­சிக்­கும், கூட்­ட­ மைப்­புக்­கும் எதி­ரான கூட்­டம்­தான் அது. இதை அவர் தவ­றா­கப் புரிந்­து­ கொண்­டமை அவ­ரது அர­சி­யல் அனு­ப­வ­மின்­மையை எடுத்­துக் காட்­டு­கின்­றது. கூட்­ட­மைப்­பும், அதன் தலை­மை­யும் சரி­யில்­லை­யென்­றால் அங்­கி­ருந்து வெளி­யே­றி­வி­டு­வ­தற்கு அவர் ஏன் தயங்­கு­கி­றார்? அவர் இன்­ன­மும் கூட்­ட­மைப்­பில் ஒட்­டிக்­கொண்­டி­ருப்­பது எவ­ருக்­குமே புரி­யாத மர்­ம­மாக நீடிக்­கின்­றது.

தனது செல்­வாக்­கா­கக் கரு­த­மு­டி­யுமா?
2013ஆம் ஆண்­டுத் தேர்­த­லில் வட பகுதி மக்­கள் விக்­னேஸ்­வ­ரன்­தான் முத­ல­மைச்­சர் பத­வி­யில் அம­ர­வேண்­டு­மென ஒரு­போ­துமே கேட்­ட­தில்லை. பெரும்­பா­லா­ன­வர்­கள் அவரை அறிந்­தி­ருக்­க­வு­மில்லை. கூட்­ட­மைப்­பின் தலைவர்­தான் அவரை அர­சி­ய­லுக்­குள் கொண்டு வந்தவர் என்­பது பல­ருக்­கும் தெரிந்த விட­யம். அவ­ரொரு ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர் என்ற வகை­யில் அவர்­மீது வட­ப­குதி மக்­கள் நம்­பிக்­கை­வைத்­துத் தமது வாக்­கு­களை அமோ­க­மாக அள்ளி வழங்­கி­னார்­கள். இதை விக்­னேஸ்­வ­ரன் தனது சொந்­தச் செல்­வாக்­கா­கக் கருத முடி­யுமா?

தம்­மி­டம் நான்கு தெரி­வு­கள் இருப்­ப­தா­க­வும் அவற்­றில் ஒன்றை விரை­வில் தெரிவு செய்­யப் போவ­தா­க­வும் அவர் முன்­பொரு தடவை தெரி­வித்­தி­ருந்­தார். அர­சி­ய­லில் இருந்து ஒதுங்கி வீட்­டில் ஓய்­வெ­டுப்­பது, தனிக்­கட்சி தொடர்­வது, வேறொரு கட்­சி­யு­டன் இணைந்து செயற்­ப­டு­வது, தமிழ்­மக்­கள் பேர­வை­யின் வளர்ச்­சிக்­கா­கத் தொடர்ந்து உழைப்­பது ஆகிய நான்­குமே அந்­தத் தெரி­வு­க­ளா­கும். தற்­போது கூட்­ட­மைப்­பின் சார்­பில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ளரா­கக் கள­மி­றங்­கப் போவ­தா­கக் கூறு­கி­றார். அவரை இனி­யா­வது கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் போன்­ற­வர்­கள் புரிந்­து­ கொள்ள வேண்­டும். கூட்­ட­மைப்­பில் இருந்து விலகி விக்­னேஸ்­வ­ரன் தம்­மு­டன் இணைந்து செயற்­ப­டு­வா­ரென அவர் கனவு காண்­கி­றார். ஆனால் விக்­னேஸ்­வ­ரன் அவ­ருக்கு அல்வா கொடுக்­கும் வகை­யில் நடந்து கொள்­கின்­றார்.

பங்­கா­ளிக் கட்­சி­கள்
கவ­ன­மெ­டுப்­பது நல்­லது
கூட்­ட­மைப்­பின் ஏனைய பங்­கா­ளிக் கட்­சி­யி­ன­ரும் தற்­போ­தைய முதல்­வரை நன்கு எடை­போட்டு வைத்­தி­ருக்க வேண்­டும். அண்­மை­யில் புளொட்­டின் தலை­வர் சித்­தார்த்­தன் கருத்து ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தார். நாமே விக்­கி­ னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­சர் பத­வி­யில் அமர்த்­தி­விட்டு அவ­ருக்­குத் தொல்லை கொடுப்­பது சரி­யல்­ல­வென அவர் கூறி­யி­ருந்­தார். ஆனால், பிரச்­சி­ னை­கள் ஏற்­ப­டு­வ­தற்கு மூல­கா­ர­ண­மாக இருந்­த­வர் விக்­னேஸ்­வ­ரனே என்­பதை அவர் முத­லில் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.

கூட்­ட­மைப்­பின் தலை­மையை மாற்ற வேண்­டு­மெ­னக் கூறு­வ­தற்கு விக்­னேஸ்­வ­ர­னுக்­குள்ள தகு­திப்­பாட்­டைப் பரி­சீ­லிப்­ப­தும் சிறந்­தது. அந்­தத் தலை­மைப் பொறுப்பை ஏற்­ப­தற்கு இவர் விரும்­பு­கின்­றாரோ என்­றும் கருத வேண்­டி­யுள்­ளது. கூட்­ட­மைப்­பைத் தாங்­கிப்­பி­டித்­துள்ள மக்­கள்­இ­வ­ரைத் தமது தலை­வ­ராக ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள். ஆக, விக்­னேஸ்­வ­ர­னின் சுய­ரூ­பம் தற்­போது தெளி­வா­கத் தெரிந்து விட்­டது. அவ­ரைத் தலை­யில்­தூக்கி வைத்­துக் கொண்­டா­டு­கின்ற சிறு­ப­கு­தி­யி­ன­ருக்­கும் இது புரிந்­தி ­ருக்­கு­மென நம்­ப­லாம்.

 

https://newuthayan.com/story/09/124441.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நவீனன்,

இங்கே இணைக்கப்பட்டுள்ள நியு உதயன் கட்டுரை யாரால் எழுதப்பட்டது? ஆல்லது யாரது கருத்து இது?

வெறுமனே நியு உதயன் என்று மூலத்தினை இடுவதால், இது அவர்களுடைய நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ளலாமா ? 

வீரகேசரியில் திரு விக்கினேஸ்வரனின் பேட்டிக்கு எதிர்வினையாக இதை இணைத்திருக்கிறீர்களா?

முழுவதுமாக கூட்டமைப்பை நியாயப்படுத்தியும், திரு விக்கினேஸ்வரன் அவர்களை வசைபாடியும் எழுதப்படும் இக்கட்டுரையின் நோக்கம் நன்றாகவே தெரியும் நிலையில், இதனை யார் சொல்கிறார் என்று வெளிப்படையாக ஒரு புதிய தலைப்பில் தொடங்கியிருக்கலாம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

விக்னேஸ்வரனின் சுயரூபம் தெளிவாகி விட்டது…!!

 

வடக்கு மாகா­ணத்­தின் தற்­போ­தைய முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அடுத்த முறை­யும் முத­ல­மைச்­சர் பதவி தொடர்­பா­கச் சிந்­திப்­பது தெரி­கின்­றது. அவ்­வா­றில்­லா­விட்­டால் கூட்­ட­மைப்­பின் தலைமை பதவி வில­கி­னால் முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரா­கக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் கள­மி­றங்­கு­வேன் என அவர் கூறி­யி­ருக்­க­மாட்­டார்.

கூட்­ட­மைப்­பை­யும் கூட்­ட­மைப்­பின் தலை­மை­யை­யும் தாக்­கிப்­பேசி வரு­வதை அவர் வழக்­க­மா­கக் கொண்­டுள்ள நிலை­யில் தற்­போது இத்­த­கைய கருத்தை அவர் வெளி­யிட்­டுள்­ளமை கவ­னத்­துக்­கு­ரி­யது. கூட்­ட­மைப்­பின் தலை­மை­யைப் பதவி வில­கி­வி­டு­மாறு அந்த அமைப்­பைச் சேர்ந்த எவ­ருமே கோரிக்கை விடுத்­த­தில்லை. முன்­னர் கூட்­ட­மைப்­பில் இணைந்­தி­ருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்­சி­யின் தலை­வ­ரும், சிவ­சக்தி ஆனந்­தன் போன்­ற­ வர்­க­ளும் கூட்­ட­ மைப்­பின் தலைமை தொடர்­பாக எதிர்க் கருத்­துக்­களை வெளி­யிட்டு வந்­துள்­ள­னர். அவர்­கள் இப்­போது கூட்­ட­மைப்­பில் இல்லை. ஆனால் கூட்­ட­மைப்­பில் இருந்­து­கொண்டே அதை மோச­மாக விமர்­சித்து வரு­கி­றார் விக்­னேஸ்­வ­ரன்.

கூட்­ட­மைப்­பில் இருந்து
அவர் முத­லில் வில­க­லாமே?
மக்­கள் பலம் தம்­மு­டன் இருக்­கும்­வ­ரை­யில் தம்மை எவ­ரா­லும் அசைத்­து­விட முடி­யா­தென அவர் அடிக்­கடி கூறி வரு­கின்­றார். அவ­ருக்கு எதி­ரா­கத் தமி­ழ் அரசுக் கட்சியினர் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கொண்­டு­வந்­த­போது அவ­ருக்கு ஆத­ர­வாக மக்­கள் கூட்­டம் திரண்­டி­ருந்­தது உண்­மை­தான். ஆனால் அந்­தக் கூட்­டம் அவ­ருக்கு உரி­ய­தல்ல. தமி­ழ் அரசுக் கட்­சிக்­கும், கூட்­ட­ மைப்­புக்­கும் எதி­ரான கூட்­டம்­தான் அது. இதை அவர் தவ­றா­கப் புரிந்­து­ கொண்­டமை அவ­ரது அர­சி­யல் அனு­ப­வ­மின்­மையை எடுத்­துக் காட்­டு­கின்­றது. கூட்­ட­மைப்­பும், அதன் தலை­மை­யும் சரி­யில்­லை­யென்­றால் அங்­கி­ருந்து வெளி­யே­றி­வி­டு­வ­தற்கு அவர் ஏன் தயங்­கு­கி­றார்? அவர் இன்­ன­மும் கூட்­ட­மைப்­பில் ஒட்­டிக்­கொண்­டி­ருப்­பது எவ­ருக்­குமே புரி­யாத மர்­ம­மாக நீடிக்­கின்­றது.

தனது செல்­வாக்­கா­கக் கரு­த­மு­டி­யுமா?
2013ஆம் ஆண்­டுத் தேர்­த­லில் வட பகுதி மக்­கள் விக்­னேஸ்­வ­ரன்­தான் முத­ல­மைச்­சர் பத­வி­யில் அம­ர­வேண்­டு­மென ஒரு­போ­துமே கேட்­ட­தில்லை. பெரும்­பா­லா­ன­வர்­கள் அவரை அறிந்­தி­ருக்­க­வு­மில்லை. கூட்­ட­மைப்­பின் தலைவர்­தான் அவரை அர­சி­ய­லுக்­குள் கொண்டு வந்தவர் என்­பது பல­ருக்­கும் தெரிந்த விட­யம். அவ­ரொரு ஓய்­வு­பெற்ற உயர் நீதி­மன்ற நீதி­ய­ர­சர் என்ற வகை­யில் அவர்­மீது வட­ப­குதி மக்­கள் நம்­பிக்­கை­வைத்­துத் தமது வாக்­கு­களை அமோ­க­மாக அள்ளி வழங்­கி­னார்­கள். இதை விக்­னேஸ்­வ­ரன் தனது சொந்­தச் செல்­வாக்­கா­கக் கருத முடி­யுமா?

தம்­மி­டம் நான்கு தெரி­வு­கள் இருப்­ப­தா­க­வும் அவற்­றில் ஒன்றை விரை­வில் தெரிவு செய்­யப் போவ­தா­க­வும் அவர் முன்­பொரு தடவை தெரி­வித்­தி­ருந்­தார். அர­சி­ய­லில் இருந்து ஒதுங்கி வீட்­டில் ஓய்­வெ­டுப்­பது, தனிக்­கட்சி தொடர்­வது, வேறொரு கட்­சி­யு­டன் இணைந்து செயற்­ப­டு­வது, தமிழ்­மக்­கள் பேர­வை­யின் வளர்ச்­சிக்­கா­கத் தொடர்ந்து உழைப்­பது ஆகிய நான்­குமே அந்­தத் தெரி­வு­க­ளா­கும். தற்­போது கூட்­ட­மைப்­பின் சார்­பில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ளரா­கக் கள­மி­றங்­கப் போவ­தா­கக் கூறு­கி­றார். அவரை இனி­யா­வது கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் போன்­ற­வர்­கள் புரிந்­து­ கொள்ள வேண்­டும். கூட்­ட­மைப்­பில் இருந்து விலகி விக்­னேஸ்­வ­ரன் தம்­மு­டன் இணைந்து செயற்­ப­டு­வா­ரென அவர் கனவு காண்­கி­றார். ஆனால் விக்­னேஸ்­வ­ரன் அவ­ருக்கு அல்வா கொடுக்­கும் வகை­யில் நடந்து கொள்­கின்­றார்.

பங்­கா­ளிக் கட்­சி­கள்
கவ­ன­மெ­டுப்­பது நல்­லது
கூட்­ட­மைப்­பின் ஏனைய பங்­கா­ளிக் கட்­சி­யி­ன­ரும் தற்­போ­தைய முதல்­வரை நன்கு எடை­போட்டு வைத்­தி­ருக்க வேண்­டும். அண்­மை­யில் புளொட்­டின் தலை­வர் சித்­தார்த்­தன் கருத்து ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தார். நாமே விக்­கி­ னேஸ்­வ­ரனை முத­ல­மைச்­சர் பத­வி­யில் அமர்த்­தி­விட்டு அவ­ருக்­குத் தொல்லை கொடுப்­பது சரி­யல்­ல­வென அவர் கூறி­யி­ருந்­தார். ஆனால், பிரச்­சி­ னை­கள் ஏற்­ப­டு­வ­தற்கு மூல­கா­ர­ண­மாக இருந்­த­வர் விக்­னேஸ்­வ­ரனே என்­பதை அவர் முத­லில் தெரிந்­து­கொள்ள வேண்­டும்.

கூட்­ட­மைப்­பின் தலை­மையை மாற்ற வேண்­டு­மெ­னக் கூறு­வ­தற்கு விக்­னேஸ்­வ­ர­னுக்­குள்ள தகு­திப்­பாட்­டைப் பரி­சீ­லிப்­ப­தும் சிறந்­தது. அந்­தத் தலை­மைப் பொறுப்பை ஏற்­ப­தற்கு இவர் விரும்­பு­கின்­றாரோ என்­றும் கருத வேண்­டி­யுள்­ளது. கூட்­ட­மைப்­பைத் தாங்­கிப்­பி­டித்­துள்ள மக்­கள்­இ­வ­ரைத் தமது தலை­வ­ராக ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள். ஆக, விக்­னேஸ்­வ­ர­னின் சுய­ரூ­பம் தற்­போது தெளி­வா­கத் தெரிந்து விட்­டது. அவ­ரைத் தலை­யில்­தூக்கி வைத்­துக் கொண்­டா­டு­கின்ற சிறு­ப­கு­தி­யி­ன­ருக்­கும் இது புரிந்­தி ­ருக்­கு­மென நம்­ப­லாம்.

 

https://newuthayan.com/story/09/124441.html

சமரச அரசியல் மூலம் நாம் இதுவரை சாதித்தவை எதுவென்று பார்த்தால் எதுவுமில்லை. இந்நிலையில் தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டிருப்பது எமக்கு எவ்வித பயனையும் தரப்போவதில்லை.

30 வருடகால ஆயுதப் போராட்டமும், அதற்குமேலான சமரச அரசியல் கலந்த சாத்வீகப் போராட்டங்களும் எமக்கு இதுவரையிலும் எதனையும் தராத நிலையில், மாற்றுவழி பற்றிச் சிந்திப்பதில் தவறில்லை.

மக்கள் எழுச்சியின் மூலம் தமிழர்களது இன்றைய நிலை சர்வதேச அரங்கில் சரியாக வெளிக்கொணரப்பட வேண்டும். அதற்கு அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்துக்கொண்டோ அல்லது எதிர்கட்சித் தலைவராக இருந்துகொண்டோ எதையும் செய்ய முடியாது.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியும், அவர்களது சுதந்திரமான வாழ்விற்கான தீர்வும் வேண்டுமென்றே தாமதிக்கப்படுவது அவர்களை இன்னும் பலவீனமாக்கும் என்பது இப்போதுள்ள தலைமைகளுக்குத் தெரியாததல்ல. 

வெறுமனே உள்நாட்டில் பேசித் தீர்க்கிறோம் என்று அரசாங்கம் சொல்ல, சரி, நாங்கள் காத்திருக்கிறோம் என்று கூட்டமைப்பு சொல்வது வேதனை. 
அவர்கள் எதையுமே தரப்போவதில்லை என்று தெரிகிறதல்லவா? பின் இன்னும் ஏன் அங்கே தொங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்? வெளியில் வந்து மக்களுடன் போராடுங்கள், அவர்களின் வேதனைகளையும் வேண்டுகோளையும் உங்களுடைய குரல்களில் தக்க வைய்யுங்கள், வெளியுலகிற்குக் கொண்டு செல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ragunathan said:

நவீனன்,

இங்கே இணைக்கப்பட்டுள்ள நியு உதயன் கட்டுரை யாரால் எழுதப்பட்டது? ஆல்லது யாரது கருத்து இது?

வெறுமனே நியு உதயன் என்று மூலத்தினை இடுவதால், இது அவர்களுடைய நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ளலாமா ? 

வீரகேசரியில் திரு விக்கினேஸ்வரனின் பேட்டிக்கு எதிர்வினையாக இதை இணைத்திருக்கிறீர்களா?

முழுவதுமாக கூட்டமைப்பை நியாயப்படுத்தியும், திரு விக்கினேஸ்வரன் அவர்களை வசைபாடியும் எழுதப்படும் இக்கட்டுரையின் நோக்கம் நன்றாகவே தெரியும் நிலையில், இதனை யார் சொல்கிறார் என்று வெளிப்படையாக ஒரு புதிய தலைப்பில் தொடங்கியிருக்கலாம் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

இப்படி அனாமத்தா சேறு பூசும் நியு உதயன்  அதன் தகுதியை இழந்துகொண்டு இருக்கின்றது .சம்பந்தன் சுமத்திரன் களுக்கு எதிராக எல்லாப்பக்கமும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நேரம் உதயன் புனுகு பூசுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைவர்களில் அரசியல் என்றால் என்ன என்பதை சரியாக விளங்கிக்கொண்டவர்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு மிகமிக சொற்பம். சிலருக்கு அது வியாபாரம் இன்னும் சிலருக்கு வாழ்க்கையை சிரமமின்றி கொண்டு நடத்த ஒரு தொழில். மேலும் சிலருக்கு அதிகாரத்தை கையகப்படுத்தவும் அதில்  ஏகபோக வாழ்க்கையை அனுபவிக்கவும் வாழ்நாளில் கிடைத்த அதிஸ்ட்டம்.

ஆரம்பத்தில் தமிழினத்துக்காக சாத்வீக போராட்டத்தில் குதித்தவர்கள் சின்னாபின்னமாகிப்போக இன்னுமொருசாரார் அரசியலில் சாதிப்போம் என்று அதிலிறங்க எதிரியின் வெட்டியோடும் தந்திரத்தால் அவர்களும் இலவுகாத்த கிளியாகி  மெளனமாகிவிட்டனர். இன்னும் சிலர் இந்தச் சிரமம் நமக்கெதற்கு என்று சிங்கள மேலாதிக்கம் விட்டெறியும் எலும்புத்துண்டை பாய்ந்து கெளவி இன்பமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

அரசியல் என்பது எவருக்கும் காலவரையறையின்றி ஒப்பந்தம் செய்து வழங்கப்பட்ட பணியல்ல. மக்கள் விரும்பவில்லை என்றாலோ இன்னுமொருவர் தன்னிலும்பார்க்க அதிகமாக மக்களுக்காக உழைக்க  வல்லமையுள்ளவர் என்றாலோ மக்கள் வாக்கு மகேசன் வாக்கு என்று விலகி புதியவருக்கு வழிவிடுதல் வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.