Jump to content

அரசியல் கைதிகள் விடுதலை: சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பற்ற கால தாமதமே காரணம் – சுமந்திரன்


Recommended Posts

அரசியல் கைதிகள் விடுதலை: சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பற்ற கால தாமதமே காரணம் – சுமந்திரன்

 

sumanthiran.jpg

சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பற்ற கால தாமதம் காரணமாகவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை செய்யப்படாதுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆதவனின் நேருக்கு நேர் நிகழ்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

“மேலும் குற்றவாளிகளாக அவர்கள் காணப்பட்டாலும் கூட அவர்கள் தொடர்ந்தும் இவ்வளவு வருடங்கள் சிறையில் இருப்பது பற்றி சட்டமா அதிபருக்கு தெளிவுபடுத்தி, அவர்கள் கேட்டும் புனர்வாழ்வினை எடுத்துக்கொடுக்க முடியும்.

அவ்வாறு அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆட்சி வந்த பின்னர் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அனுராதபுரத்தில் உண்ணாவிரதம் இருப்பவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டவர்கள்.

இவ்வாறு தொடர்ந்து 9 வருடங்கள் ஆகியும் அவர்கள் குற்றவாளிகளாக இனம்காணப்படாமல் தண்டனை அனுபவித்து வருகின்ற நிலையில் அவற்றி கூறியே அவர்கள் விடுதலைக்கு வலியுறுத்த வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

http://athavannews.com/அரசியல்-கைதிகள்-விடுதலை/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.