Jump to content

மீண்டும் வீதிக்கிறங்கிய சுமனரத்தன தேரர்


Recommended Posts

மீண்டும் வீதிக்கிறங்கிய சுமனரத்தன தேரர்

 

 

இராஜாங்கஅமைச்சர் ஹஸ்புல்லா கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு எதிராகமட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தன தேரர்உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளார்.

இந்தப்போராட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கெவிலியாமடுவில்ஆரம்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்புபுல்லுமலையில் இராஜாங்க அமைச்சர் ஹஸ்புல்லாவினால் குடிநீரை போத்தலில் அடைக்கும் தொழிற்சாலைஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனால்புல்லுமலை பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என தெரிவித்து பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்விசேட செய்தியாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மங்களாராமயவிகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தன தேரர் வெகு விரைவில் கிழக்குமாகாணத்திலுள்ள தமிழ் - சிங்கள மக்களை ஒன்றிணைத்து வீதிப் போராட்டத்தைநடத்தவுள்ளதாக தெரிவித்தார்.

கரடியராறுபகுதியிலிருந்து குடிநீரை அரேபிய நாடுகளுக்கு அனுப்பும் திட்டமொன்றை இராஜாங்கஅமைச்சர் ஹிஸ்புல்லா ஆரம்பித்திருக்கின்றார். எமதுநாட்டு சொத்துக்களை மில்லியன்கணக்கிற்கு விற்பனை செய்து வெலிகந்த, பூனாணை பகுதியில் ஆசியாவிலேயே மிகப்பெரியஇஸ்லாம் பாடசாலை ஒன்றை அமைக்கின்றார். இதற்கு நான் எதிர்ப்பை வெளியிடுகிறேன்.

வடக்கு, கிழக்கிற்கு பிரவேசிக்கின்ற பிரதான வீதியில் எதிர்காலத்தில் தமிழ்மக்களுக்கு வீதியில் நடக்கமுடியாத அளவிற்கு வித்தியாசமான திட்டங்களைவகுக்கின்றனர். இருக்கின்ற அத்தனை காணிகளும் இழக்கப்படுகின்றன. அண்மையில் கோவில்ஒன்றை இடித்து அழித்திருப்பதாக கேள்விபட்டேன்.

இனப்பிரச்சினையாக ஏற்படுமாயின்அதற்கு தீர்வுகாண்பது யார்? ஆகவே அமீர் அலி, தமிழ் மற்றும் சிங்களஅரசியல்வாதிகளிடம் சுட்டிக்காட்ட விரும்புகிறது என்னவென்றால் வாகரை தொடக்கம்கொக்கட்டிச்சோலை, புல்லுமலை பகுதிகளிலுள்ள அப்பாவி மக்களின் பிரச்சினைகளை பேசுவதுயார்? அவர்களுடைய சொத்துக்களை பாதுகாப்பது யார்? 30 வருட போரில் பாதிப்பைஎதிர்கொண்ட மக்கள் இப்போது எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பது குறித்து கவனம்செலுத்த வேண்டும்.

அரசியல் தலைவர்களுக்கு இயலாவிட்டால் தமிழ், சிங்கள மக்களைஒன்றிணைத்து, சர்வதேசத்திற்குத் தெரியப்படுத்த நேரிடும். வீதியில் எங்களைஇறங்கவிடாமல் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இணைந்து கிழக்கு மாகாண தமிழ், சிங்களமக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறிப்பாக ஹிஸ்புல்லா முன்னெடுக்கும் குடிநீர்வியாபாரம் குறித்து கவனம் செலுத்துமாறு கோருகிறேன்.

அதேபோல இஸ்லாம் பல்கலைக்கழகம் குறித்தும்,அதனால் நாட்டிற்கு ஏற்படும் ஆபத்து, அரோபியர்களை அழைத்துவந்து அங்கேகற்றுக்கொடுப்பதற்கான வழிகள், இதற்கான ஒப்பந்தங்கள் உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.தமிழ் மக்களை கீழே தள்ளிவிடுகின்ற இப்படியான செயற்பாடுகளுக்கு கடும் எதிர்ப்பைவெளியிடுகிறேன்.

இனவாத, மதவாதம் எனக்கில்லை. ஆனால் அரசியல் மற்றும்நிர்வாகத்திலுள்ள சில பலவீனத்தினால் அப்பாவி மக்கள் நடுத்தெருவிற்கு வருவதுகுறித்தஆபத்தை நான் சுட்டிக்காட்டுகிறேன். வெகுவிரைவில் தமிழ், சிங்கள மக்களை இணைத்துவீதியில் களமிறங்குவோம். மங்களாராமயவிலிருந்து ஆரம்பிப்போம். விரைவில் பதிலைஎதிர்பார்க்கின்றோம்.

இந்தத் திட்டத்தை ஹிஸ்புல்லா நிறுத்துவாரா? அதற்கு உத்தரவுபிறப்பிப்பார்களா? தமிழ் மக்களின் காணிகள் குறித்த பிரச்சினைகள் அடங்கிய ஆவணம்என்னிடம் இருக்கிறது. தமிழ் அரசியல் வாதிகளிடம் ஒன்றைக் கூறுகிறேன். ஓரிடத்திற்குஅணிதிரண்டு எம்மோடு இணைந்து அதற்கெதிராக வருமாறு அழைக்கின்றேன்.

குடிநீர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் கெவிலியாமடு பகுதியில் தான் நிர்மாணித்தகுளத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த சுமணரத்தின தேரர் குளத்தின்மீது உணவு தவிர்ப்பு போராட்டத்தை 25 ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாகவும்குறிப்பிட்டார்.

ஹிஸ்புல்லாகுடிநீரை பலகோடி ரூபாய்களுக்கு அரேபியர்களுக்கு விற்பனை செய்கின்றார். அதனால்தமிழ் மக்களின் வளர்ப்பு கால்நடைகளுக்கு நீரில்லாததினால் கால்நடைகளுக்கு நீர்வழங்குவதற்காக நான் கெவிலியாமடு பகுதியிலுள்ள விகாரைக்கு அருகில் குளமொன்றைஅமைத்து வருகின்றேன். ஆனால் வனஇலாகா அதிகாரி ஒருவர் அதனை நிறுத்தும்படிகூறியுள்ளார்.

அதேபோல மங்களகம பொலிஸார் பல்வேறு காரணங்களைக் கூறி இலட்சரூபாய்களில் கப்பம் கோருகின்றனர். அதனால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் பல வாரங்களாகநிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பானபொலிஸ் அதிகாரி மற்றும் ஜனாதிபதி வரை அறியப்படுத்தியுள்ளேன். இதுவரை எமக்குஅர்த்தபுஷ்டியான தீர்வு கிடைக்கவில்லை.

அதனால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைகெவிலியாமடுவில் குளத்தின் மீது உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளேன்.இனவாத, மதவாதமற்ற இந்த போராட்டத்தை ஊடகங்கள் மக்களிடம் கொண்டுசேர்க்கும்படிகோருகிறேன்.

https://www.ibctamil.com/srilanka/80/106506

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

மீண்டும் வீதிக்கிறங்கிய சுமனரத்தன தேரர்

போறபோக்கில கிழக்கு தமிழர்களின் தனிபெரும் தலைவராக அம்பிட்டியே சுமனரத்தன தேரர் மாறினாலும் ஆச்சரியமில்லை.

அதேபோல வடக்கில்  கிளிநொச்சி பகுதியில் தேர்தலில் நின்றால்  தமிழ் அரசியல்வாதிகளைவிட  அதிக பெரும்பான்மை வாக்குகளை பெற்று அவர்களை கட்டுபணம் இழக்க வைப்பார் இராணுவ உயர் அதிகாரி கேணல் ரத்னப்பிரிய பந்து...

பிரச்சனைகளுக்கு தீர்வு காண தலைமை தாங்குபவர்களே தலைவர்கள்...பிரச்சனைகளை உருவாக்கி  அதில் தம் வசதியையும் வயிறையும் வளர்ப்பவர்களல்ல தலைவர்கள்...

நேற்றைய எதிரிகளாய் இருந்தாலும்,கையறு நிலையில் இருக்கும் இன்றைய  தமிழர்களுக்கு ஏதாவது ஒருவகையில்  கைகொடுக்கும் சிங்களவர்கள்....  இன்றைய தமிழ்கட்சிகளைவிட ஆக்கபூர்வமானவர்கள்தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா... சிங்கம் கிளம்பிரிச்சையா.... கிளம்பிருச்சு...

தமிழ் மக்களை சிங்கள இனவாத பிக்கரிடம் அனுப்பி வைத்ததே இந்த ஹிஸ்புல்லா குறூப் தான்.

இவர் எடுக்கும் தார்மீக நிலைப்பாட்டால்...இப்ப இணக்க அரசியல் பேசும் சம்பந்தர் குழம்பப் போறார்... :grin:

Link to comment
Share on other sites

நீதி கிடைக்கும் வரை போராடுவேன் – அம்பிட்டியே சுமணரத்ன தேரர்

 

IMG_8057-720x450.jpg

மட்டக்களப்பு எல்லை கிராமமான கௌலியாமடு பன்சல்கல விகாரை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு வனபரிபாலன திணைக்களம் அறிவித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குளக்கட்டில் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

விகாரையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

‘குறித்த குளத்தின் புனரமைப்பு பணிகள் 75 வீதம் முடிவடைந்த நிலையில் புனரமைப்பு ஒப்பந்தகாரரிடம் பொலிஸார் இலஞ்சமாக இலட்சக்கணக்கில் பணம் கேட்டனர்.

இதனால் மாதக்கணக்கில் புனரமைப்பு பணிகளை இடைநிறுத்தியிருந்தேன்.

எனினும், மீண்டும் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், வனவரிபாலன திணைக்களத்தினர் அதனை நிறுத்துமாறு அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.

எனினும், இதற்கு இன்றுவரை நியாயமான பதில் கிடைக்கவில்லை.

எனவே நியாயம் கிடைக்கும் வரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் குளக்கட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/நீதி-கிடைக்கும்-வரை-போரா/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.