Jump to content

மட்டு. படுகொலை செய்யப்பட்ட 33பேரின் நினைவேந்தல் நிகழ்வு


Recommended Posts

மட்டு. படுகொலை செய்யப்பட்ட 33பேரின் நினைவேந்தல் நிகழ்வு

 

1-10-720x450.jpg

மட்டக்களப்பு சவுக்கடி பகுதியில் படையினரினால் படுகொலை செய்யப்பட்ட 33பேரின் நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

கடந்த 1990ஆம் ஆண்டு  செப்டெம்பர் 20 ஆம் திகதி படையினரின் உதவியுடன் ஊர்காவல் படையினரால் படுகொலைசெய்யப்பட்ட 33பேரின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த படுகொலை சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 33பேர் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலையினை நினைவுகூரும் வகையில் சவுக்கடியிலுள்ள உயிர்நீர்த்தவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது

இதன்போது படுகொலைசெய்யப்பட்ட மக்களுக்கு இதுவரையில் நீதி வழங்கப்படாததை வெளிப்படுத்தும் வகையிலும் உயிரிழந்தவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்காக அமைதியான முறையில் ஊர்வலமொன்று நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து விசேட திருப்பலி பூஜை ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து நினைவுத் தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

நினைவேந்தல் நிகழ்வினை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், மததலைவர்கள், உயிர்நீத்த உறவுகளின் உறவினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

2-7.jpg3-5.jpg4-3.jpg5-4.jpg6-1.jpg

http://athavannews.com/மட்டு-படுகொலை-செய்யப்பட/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.