Jump to content

ஒரு நிமிடக் கதைகள்!


Recommended Posts

 

ஒரு நிமிடக் கதைகள்!

ராஜேஷ்குமார்

 

இரண்டாவது இன்னிங்ஸ்

நியூ ஜெர்ஸியில், ஃபைனல் சொல் யூஷன் சாஃப்ட்வேர் கம்பெனி. லன்ச் இடை வேளை. கேன்ட்டீனில் உட்கார்ந்து சிக்கன் சீஸையும், யோகார்டையும் கொறித்துக் கொண்டு இருந்தபோது, மெர்ஸி வந்தாள்.

‘‘என்ன ஷிவா… ரீட்டாவைக் காதலிக்கிறி யாமே, நிஜமா? உன்னோட பி.சி&யில் அவ போட்டோ, அவளோட பி.சி-யில் உன் போட்டோ..! டூயட் பாடாதது ஒண்ணுதான் குறையாம்! ஆபீஸே புகையுது!’’

‘‘பேத்தல்!’’

‘‘நம்ப மாட்டேன். இன்னிக்கில்லேன் னாலும் என்னிக்காவது ஒரு நாள் பூனைக்குட்டி வெளியே வந்துடும்…’’ என்றபடி மெர்ஸி எழுந்து போக, அந்த இடத்தில் வந்து உட்கார்ந்தாள் ரீட்டா.

‘‘மெர்ஸி பேசியதை நானும் கேட்டேன். எனக்குத் தெரிஞ்சு அதுல பாதி நிஜம்! நான் ஏற்கெனவே உங்களைக் காதலிக்கிற தாகச் சொல்லிட்டேன். உங்க முடிவு என்ன, எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும்!’’ என்றாள்.

‘‘ரீட்டா! நான் என்ன சொல்ல வரேன்னா…’’

‘‘தெரியும்! சென்னைல உங்களுக் கும் எனக்கும் கல்யாணம் நடந்தது. நமக்குள்ளே வேண்டாத ஒரு ‘மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்’ ஏற்பட்டு, டைவர்ஸ் வரைக்கும் போயிட்டோம். அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் நீங்களும் நானும் இந்த நியூஜெர்ஸியில் சந்திச்சது, மறுபடி ஒண்ணு சேர்றதுக்குதான்னு நான் நினைக்கிறேன். வாழ்க்கையின் முதல் இன்னிங்ஸைக் கோட்டை விட்டுட் டோம். ரெண்டாவது இன்னிங்ஸை கன்டினியூ பண்ணா என்ன? புதுசா காதலிப்போம்… கல்யாணம் பண்ணிக் குவோம். என்ன சொல்றீங்க?’’

‘‘ஐ லவ் யூ ரீட்டா!’’ என்றேன் காதலாகிக் கசிந்த அவள் கண்களைப் பார்த்தபடி!

நம்பிக்கை

‘‘டாக்டர்! என் மனைவிக்குப் பிறந்திருக்கிற பெண் குழந்தைக்கு வலது கால் சூம்பிப் போய், குச்சி மாதிரி இருக்கு. கண் கொண்டு பார்க்க முடியல. என் மனைவியும் குழந்தையைப் பார்க்கப் பிரியப்படாம திரும்பிப் படுத்து அழுதுட்டு இருக்கா. எங்க உறவுக் காரங்க வந்து குழந்தையைப் பார்க்கிறதுக்குள்ள…’’& முடிக்கத் தயங்கினான் ராகவன்.

‘‘கொன்னுடச் சொல்றீங்களா..?’’&சீறலாகக் கேட்டாள் டாக்டர் வாணி.

‘ஆமாம்’ என்பது போல் மெள்ளத் தலையசைத்த ராகவன், ‘‘ஊனமுள்ள குழந்தை எதிர்காலத்தில் ரொம்பக் கஷ்டப்படுமே டாக்டர்! வாழ்க்கையில் அது எப்படி முன்னேறும்? அதனாலதான் அழிச்சுடச் சொல்றேன்’’ என்றான்.

‘‘அப்படீன்னு என் அப்பா&அம்மா நினைச்சிருந்தா, இன்னிக்கு நான் ஒரு டாக்டராக வந்திருக்க முடியுமா?’’ என்று கேட்ட வாணி, தன் ஜாக்கெட்டின் வலது கை மறைவில் இருந்த ஸ்க்ரூ போன்ற அமைப்பைத் திருகி, உடம்பின் நிறத்தோடு ஒத்துப்போயிருந்த வலது செயற்கைக் கையைத் தனியே எடுத்து மேஜையில் வைத்தாள்!

வலி

அதிகாலை. அறையினின்றும் வெளியே வந்தான் டேனியல். மனசு வலித்தது.

செய்யாத குற்றத்துக்கு 10 வருட கடுங்காவல்! மனைவியையும் குழந்தைகளையும் தவிக்கவிட்டு வந்தவனுக்கு இன்று விடுதலை. போலீஸ், கோர்ட், சட்டம், வக்கீல், நீதிபதி என்ற இந்த வார்த்தைகள் காதில் விழுந்தாலே குமட்டியது டேனியலுக்கு.

மெயின் ரோட்டுக்கு வந்து, காத்திருந்த டவுன் பஸ்ஸில் ஏறி, வீடு வந்து சேர்ந்தபோது, மனைவி ஸ்டெல்லா வாசலைக் கூட்டிக்கொண்டு இருந்தாள். டேனியலைப் பார்த்ததும் வேகமாக வந்து, அவன் கையைப் பற்றினாள்.

‘‘ஸ்டெல்லா! நான் எடுக்கப்போற முடிவு உனக்கு அதிர்ச்சியா இருக்க லாம். ஆனா, எனக்கு வேற வழி யில்லே! செய்யாத குற்றத்துக்காக ஒருத்தன் பத்து வருட கடுங் காவல் தண்டனையை அனுப விச்சுட்டு, வெளியே போனான்னா சமூ கத்தில் அவனுக்கு என்ன மரியாதை இருக்கும்? அவன் பெண்டாட்டி, பிள் ளைங்கள்லாம் என்ன கதி ஆகியிருப் பாங்க? அப்படி ஒருத்தன் இன் னிக்கு விடுதலை யாகிப் போகும் போது கதறி அழுதான். என்னால தாங்க முடியலை. ஒரு வேலையைச் செய்யும் போது மனசுக்குச் சந்தோஷம் கிடைக்கணும். இந்த வேலையில் அதுக்கு வாய்ப்பே இல்லே. அதனால, இந்த சிறை வார்டன் வேலையை ராஜினாமா பண்றதா தீர்மானிச்சுட்டேன். உனக்கு ஆட்சேபணை இல்லியே?’’

http://www.sirukathaigal.com/சிறப்பு-கதை/ஒரு-நிமிடக்-கதைகள்-20/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.