Jump to content

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்க ஆலோசனை செய்யப்பட்டதா?


Recommended Posts

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவியிலிருந்து நீக்க ஆலோசனை செய்யப்பட்டதா?

அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய வழிவகுக்கும் அரசியலமைப்புப் பிரிவு குறித்து விவாதிக்க தூண்டியதாக வந்த அறிக்கையை அமெரிக்க துணை அட்டார்ணி ஜெனரல் ராட் ரோசன்ஸ்டைன் மறுத்துள்ளார்.

டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்காவின் இரண்டாவது மூத்த சட்ட அதிகாரியான ராட் ரோசன்ஸ்டைன் இந்த குற்றச்சாட்டுகள் "தவறானது என்றும் அடிப்படை ஆதாரங்கள் அற்றவை" என்றும் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடப்பதை ரகசியமாக பதிவு செய்யலாம் என ராட் பரிந்துரைத்ததாக நியூ யார்க் டைம்ஸில் செய்திகள் வெளியானது.

ஆனால் அது கேலியாக கூறப்பட்டது என செய்தி வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் பிபிசிக்கு தெரிவித்தார்.

கடந்த வருடம் எஃப்பிஐயின் இயக்குநரை பணியிலிருந்து டிரம்ப் நீக்கிய பிறகு ராட் இந்த கருத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஜேம்ஸ் கோமி சட்ட அமலாக்க முகமையின் விசாரணையின் மேற்பார்வையாளராக இருந்தார். அவரின் பணி நீக்கம் குறித்து கேட்டபோது அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீட்டை டிரம்ப் காரணமாக தெரிவித்தார்.

 

 

அமெரிக்க நீதித்துறையில் வெளியானவை, "ஒரு நீண்ட நாள் துர்நாற்றம்" என்று வெள்ளியன்று மிசோரியில் நடந்த பேரணியில் பேசிய டிரம்ப் கூறினார்.

எஃப் பி ஐ-யில் உள்ள தீயவர்களை பணி நீக்கம் செய்த மாதிரி, தனது நிர்வாகத்தில் உள்ளவர்களையும் பணி நீக்கம் செய்யப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

குற்றங்கள் என்னென்ன?

அமெரிக்க அதிபர் நிர்வாகத்துக்கு தகுதியற்றவராக இருந்தால், அவரை பதவி நீக்கம் செய்யும் வகையில் அமெரிக்க அரசியல் அமைப்பின் 25ஆவது சட்டப் பிரிவுக்கு ஆதரவளிக்க புதிய நபர்களை நியமனம் செய்வது குறித்து ரோசன்ஸ்டைன் விவாதித்ததாக நியூ யார்க் டைம்ஸில் வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் டிரம்பின் கொந்தளிப்பு மற்றும் செயல்பாட்டின்மையை வெளிப்படுத்தும் விதமாக டிரம்பின் நடவடிக்கையை ரகசியமாக பதிவு செய்யலாம் என அவர் தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிந்துரை 2017ஆம் ஆண்டு மே மாதம் நீதித்துறைக்கும் எஃப்பிஐ அதிகாரிகளுக்கும் நடந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்டதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

அந்த சந்திப்பின் போது இதுகுறித்து விளக்கப்பட்ட பலரையும் அந்த செய்தி ஆதாரங்களாக குறிப்பிட்டுள்ளது.

ராட் ரோசன்ஸ்டைனின் கருத்து என்ன?

நியூ யார்க் டைம்ஸின் அந்த அறிக்கை உண்மையற்றது என்றும், அடிப்படை ஆதாரங்கள் அற்றவை என்றும் ராட் தெரிவித்துள்ளார்.

"பெயர் வெளியிடாமல் கூறப்படும் நபர்களின் கூற்றுக்களின் அடிப்படையில் வந்த செய்திக்கு நான் கருத்துக்களை தெரிவிக்க போவதில்லை" என்றும் அவர் கூறியுள்ளார்.

"நான் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அதிபருக்கும் எனக்குமான உறவை வைத்து கூறுகிறேன். 25ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்துவதற்கான எந்த தேவையும் எனக்கில்லை" என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்கபடத்தின் காப்புரிமைAFP

எது உண்மை?

நீதித்துறையை சேர்ந்த ஒருவர் பிபிசியிடம் தெரிவிக்கையில், ரோசைஸ்டைனின் கருத்துக்கள் ஒரு நகைச்சுவை என தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த சந்திப்பில் இருந்த பெயர் வெளியிடாத நபர் ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், ராட்டின் கருத்துக்கள் கேலியாக சொல்லப்பட்டது என்றும் டிரம்பின் பேச்சுக்களை பதிவு செய்ய வேண்டும் என அவர் தீவிரமாக கருதவில்லை எனவும் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து அமெரிக்க ஊடகங்களும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன.

25 சட்டப் பிரிவை பயன்படுத்தி அதிபரை பதிவி நீக்கம் செய்ய வேண்டுமானால், பெரும்பாலான அவை உறுப்பினர்கள், துணை அதிபர் மற்றும் காங்கிரஸின் பெரும் உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

நீதித்துறை அதிபரை விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஆண்ட்ரூ மெக்கேப் தெரிவிக்கும் போது, "என்ன செய்ய வேண்டும். அதிபரின் நடவடிக்கையை பதிவு செய்ய வேண்டுமா" என ராட் கேட்டுள்ளார் என வாஷிங்டன் போஸ்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/global-45611088

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.