Jump to content

சத்ரு’ – பவா செல்லதுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘சத்ரு’ – பவா செல்லதுரை

அவன் காசிரிக்கா நாரினால் கயிற்றுக் கட்டிலோடு இழுத்துக் கட்டப்பட்டிருந்தான். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்களில் மரணமேறி இருந்தது. சிலர் ஆர்வத்தின் நுனியிலிருந்தார்கள். அவன் பிடிவாதமாய் கண் திறக்காமல் கிடந்தான். ரங்கநாயகி கிழவி தனி பொம்பளையாகப் பதட்டமின்றி, அவன் தலைமாட்டில் குந்தி இருந்தாள். அவள் நிதானத்தில் அனுபவம் குழைந்திருந்தது. மௌனம் எல்லோருக்கும் பொதுவாய் பரவி இருந்தது. அந்தச் சின்னக் குடிசை,தன் உள்புறம் இதற்குமேல் ஒரு ஆளையும் அனுமதிக்காத பிடிவாதத்தில் இருந்தது.

வீட்டின் வெளி, புதுசாய் பார்க்கிற எவரையும் பயமுறுத்தும். நீண்டு, அகன்று பரவியிருந்த பாறைகளின் நடுவில் ஒதுங்கியிருந்த மண்திட்டில், கட்டியிருந்த கூரையின் வெளியில் நின்று பார்த்தால்,கருங்கோடுகளாய் நீண்டு கொண்டே போகும் பனைமரக்கறுப்பும், பீவேலி மரங்களும்,கோடையின் உக்கிரத்தை அநாவசியமாக்கும் எட்டிமர இலைகளும்,இந்த அத்துவான வெளியில் வீடு கட்டின பாண்டு ஒட்டனின் தைர்யத்திற்குத் துணைநின்றன.

அவன் உளியின் நுனிகளால் பாறைகளைத் தின்று குழிகளாக்கினான். விழுந்த குழிகளில் கறுப்பு மருந்தேற்றி, திரி பற்ற வைக்கும் லாவகம் வேறெங்கும் காணமுடியாதது. வெடித்துச் சிதறிய கற்பாறைகளின் கங்குகளுக்கும், எழும் கரும்புகைக்கும் நடுவில் ஒவ்வொரு முறையும் வெற்றியோடு வெளிப்படுவான். பெரும் சத்தங்களையும், கலவரத்தையும், குழப்பத்தையும், ஆபத்துகளையும் சதா சந்தித்த அவன் விநாடிகள், நேர் எதிராக நிரந்தர அமைதி தேங்கி நின்ற இந்தப் பாறையின் நடுவில் நிலைத்திருந்தது கூரையாய்.

கண்டாச்சிபுரம், மேவாலைப்பக்கம் என கல் உடைக்கப் போனவன் இன்னமும் திரும்பவில்லை. காலம் அவனை மீட்டுத்தரும் நம்பிக்கையை இழந்து, அவன் பாறைகளுக்கு நடுவில் மறைந்தது குறித்து அவ்வப்போது எழுந்த கதைகளையும் ஈவிரக்கமின்றி அழித்து, அவன் பாறை வீட்டை ஊராருக்குப் பொதுவாக்கி தந்திருந்தது.
தேங்கிநின்ற மௌனத்தின் மீது, சிறு கல்லெறிந்து பார்க்கவும், அவர்களுக்குள் தயக்கம் இருந்தது. அவனுக்கு எதிரான உரையாடல் மொழி இழந்து, நடுக்கத்திலிருந்தது. இத்தனைக்கும் அவன் கண் திறக்காமலேதான் கிடந்தான். பின்கதவு சத்தமின்றித் திறக்கப்பட்டு, அவர்களைப் பின்புறப் பாறையில் உட்கார்த்தி வைத்தது.
சைகை மூலம் ரெங்கநாயகி கிழவி அழைக்கப்பட்டாள்.

அவர்களின் பேச்சு அவர்களுக்கே கேட்காதவாறு இரகசியமாக்கப்பட்டது. அவன் பிடிபட்டதின் அதிகபட்ச கஷ்டங்களும், அவன் மரணத்தின் அவசியமும் ஓரிரு வார்த்தைகளால் ரெங்கநாயகிக்கு சுருக்கப்பட்டது. விடிகிற பொழுதின் முதல் நாழிகை, அவன் பிணம் எரியூண்டப்பட வசதியாக அவன் மரணம் சௌகரியப்படுத்தப்பட்டது.

பதட்டமற்று இருந்த கிழவியின் முகம் இருளத் துவங்கியது. புள்ளதாச்சி பொம்பளைகளுக்கு குச்சி வைத்து, ரத்தப் பெருக்கில் புரளும் சதைப் பிண்டங்களை வாரி வீசிய கைகள்தான் எனினும் ஒரு முழுமனிதனின் மரணத்தின் எதிர்கொள்ளல் அவளுக்கு நடுக்க மேற்படுத்தியது. சமாளித்துப் பேசினாள்.

“ஊராருக்கு நான் கட்டுப்படுறேன். ஆனா அவனை நேருக்கு நேரா மொகமெடுக்க முடியலை. வண்டி கட்டி என் வூட்டுக்கு ஆளனுப்பின நம்பிக்கையை நான் கெடுக்கலை சாமிகளா. இந்த பகலுக்கும்,மலைகாட்டுல சுத்தி வெஷத் தழ பறிச்சாறேன். என்கூட ஒரு ஆளு இருந்து, இருட்டனப்புறம் பாறையில கொட்டி, ஒட்ட, ஒட்ட அரைக்கணும், ரெண்டு வெண்கலச் சருவச் சட்டி வேணும். சீரா தண்ணி ஊத்தி, தழையை அரைச்சுட்டா போதும். விடியற நேரம் அவன் திமிராம கொள்ளாம நாலு பேரு புடிச்சிக்குங்க, ரெண்டு கையையும் ரெண்டுபக்க சருவ சட்டில தொவைச்சி புடிச்சிக்குங்க. ஒரே ஒரு மணி நேரம் தான். ஆளு வெரைச்சிடுவான்.
நான் ஒத்தை வீட்டு பொம்பளை. அவன் கை கால ஒதைச்சிகிறத பாக்க முடியாது, தழை அரைச்சி கொடுத்ததும் எனக்கு வெடை குடுங்க சாமிங்களா.

யோசனையின் கச்சிதம் எல்லோருக்குமே பிடித்திருந்தது. தலையில் முடி பொசுங்கும் அந்த மத்தியான அனலில், அவளும் சின்னாப்புவும் அனுக்குமலை காட்டுக்குள் நுழைந்து மலை ஏறினார்கள்.
கண் திறக்காமல் கட்டிலில் கிடக்கும் பொட்டு இருளனின் திருட்டுச் சாகசங்கள், அந்த மலைக்காட்டு மத்தியானத்தில் ரங்கநாயகி கிழவிக்குக் கதையாக்கப்பட்டு, பகல் நகர்ந்தது.

அந்தப் பஞ்சத்தின் உக்கிரத்தை சொல்லவாவது சில குழந்தைகளை நெட்டித்தள்ளி ஒதுக்க மிச்சமின்றி, பொசுக்கியது காலம். அந்த ஈரமற்ற நாட்களில் மனிதர்கள் உலர்ந்து, காய்ந்து கருகினார்கள். பிள்ளைப்பெற்ற பொம்பளைகளின் முலைக்காம்புகள், பச்சை குழந்தைகளுக்குச் சொரிவதற்கு ஒரு சொட்டுப் பாலின்றி வெடித்திருந்தன. வளர்ந்த குழந்தைகள், ஈரம் தேடி மலைக் காடுகளின் பாறை நிழலுக்குள் சதா அலைந்து திரிந்தன. வற்றி வெடித்த பூமியின் முகம் கோரமேறி மனிதர்களை விழுங்கிவிடத் தயாராய் இருந்தன. வைத்த ஒவ்வொரு அடியும், பூமியின் வெடிப்பில் விழுந்துவிடாதவாறு எச்சரிக்கை அடைய வேண்டியிருந்தது.
எட்டி மரங்களின் பச்சையும், காய்களின் சிவப்பும் பார்க்கிற எவரையும் ஏமாற்றி, சிரித்து ஏளனப்படுத்தியது. தண்ணி முட்லான் செடிகளின் காய்ந்து போகாத பசுமை, பள்ளிக்கூடம் விட்டகன்ற பிள்ளைகளுக்கு நம்பிக்கையின் மரணத்தைத் தள்ளிப்போட்டு வேடிக்கை காட்டியது.

அவர்கள் காய்ந்த பூமியில் கால் பதித்து, வெறி கொண்டு கிழங்கு தோண்டினார்கள். பூமி தன் இரகசிய மார்பில், தான் தேக்கி வைத்திருந்த தண்ணி முட்லான் கிழங்குகளின் ஈரத்தைத் தன் குழந்தைகளின் நாக்கில் நனைத்து, தன் ஈகையில் நிலைத்தது.

அந்தப் பஞ்சத்தை வகைப்படுத்த முடியாது. தலைமுறைகளில் தப்பிப் பிழைத்திருந்த கிழவன்களும், கிழவிகளுமே பார்த்திருந்திராத பஞ்சமது. அரசாங்கப் புள்ளி விவரங்களுக்குள் வர மறுத்து, ஊர் பொதுத்திட்டில் வைத்து, அளக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு அடங்க மறுத்த பசித்த மனிதர்களைப் போல.

தானியக் குதிர்களில் ரத்தம் சுண்டிய பெருச்சாளிகள் வலைதோண்டி ஏமாந்தன. ஒத்தையான பாதைகளிலும், கள்ளிகளடர்ந்த ரெட்டை மாட்டு வண்டிப் பாதைகளிலும் பாம்புகளின் எலும்புக்கூடுகள் குறுக்காலும் நெடுக்காலும் கிடந்தன. வெளுத்துத் தெரிந்த, ஊர்ந்த அதன் முள்ளெலும்புகள் யாரையும் அச்சப்படுத்தின.
பிறக்கும் குழந்தைகள் இரத்த பிசுபிசுப்பின்றி உலர்ந்து செத்துப் பிறந்தன. தண்ணீரற்றுக் காய்ந்து கிடந்த கிணறுகளில், எப்போதோ வாழ்ந்த அடையாளத்தில், நண்டுகள் செத்து, ஓடுகள் மட்டும் உடையாமல் ஒட்டிஇருந்தன. ஒரு சிறு குச்சியின் உராய்வில், ஒரு சிறு கல்லின் விழுதலில்,உடைந்து சிதறும் அதன் மக்கிய ஓட்டின் சத்தமே, நண்டுகளின் வாழ்ந்த காலத்தின் ஞாபகத்தில் மீந்தது.

மலைக்காட்டுப் பாறை பொந்துகள் வெப்பத்தால் வெளியேற்றிய, காட்டுப் பன்னிகளும்,குள்ளநரிகளும், பெரும் கூச்சல்போட்டு பஞ்சம் நெருக்கியிருந்த குரல்வலைகளைத் தங்கள் அகோர சப்தத்தால் நிறுத்தின.
ஆடுகளும், மாடுகளும் வந்த விலைக்கு, கிடைத்த சோளத்திற்கு, கம்பந்தட்டைகளுக்கென்று கைமாறின. பூர்சமரக்கிளைகளில் உரிக்கப்பட்ட ஆடுகளின் வரிசை தெரிந்தது. மக்கள் உப்பு போட்டு அவித்து இறைச்சி தின்றார்கள். ஊராகாலி மாடுகள் யாருமற்ற அனாதைகளாயின. யாரும் யாரையும் தின்றுவிடக்கூடிய கொலை வெறியைப் பஞ்சம் மனித மனங்களில் ஏற்றியிருந்தது. மனிதர்கள் அவர்கள் வீட்டு ஆடுகள், மாடுகள் போல், அவர்கள் மலைகளின் பெருநரிகள் போல் சிரிப்பற்றுப் போன முகத்தோடு திரிந்தார்கள். அவர்களின் ஒட்டுமொத்தத் தேடலும், ஒருசொட்டு ஈரத்தை நோக்கியதாய் மட்டுமே இருந்தது.

அந்தத் துளியூண்டு ஈரம் மாரியம்மனின் கண்களுக்குள் இருப்பதாக உறுதியாய் நம்பினார்கள். அதைத் தொட்டு உணர்ந்துவிடக் குதிர்களைத்துடைத்து, பானைகளை அலசி, கதிர் அறுத்து நாள் கடந்த வயல்களைப் பெருக்கிச் சேர்த்த எட்டு மரக்கா கேவுறும், அஞ்சி படி கம்பும் தான் மாரியம்மனின் கருணை நிறைந்த கண்களுக்குப் படைக்கப்படப் போகும் கூழ் ஊற்றல். நம்பிக்கையின் கடைசிப்படியில் ஒட்டியிருந்த இரவில்தான் பொட்டு இருளன் அதில் கை வைத்து,கையும் களவுமாய்ப் பிடிபட்டது.

அந்த ஊரே விசித்திரங்களால் அடுக்கப்பட்டிருந்தது. கல் மலைகளும், தரையில் படர்ந்திருந்த பாறைகளும், பாறைகளுக்குள் அடங்கி இருந்த குகைகளும், அங்கங்கே தெரிந்த மண் திட்டுகளில் கட்டியிருந்த வீடுகள், தெருக்கள் என்ற ஒழுங்குக்குள் வர மறுத்தன. பாறைகளுக்குள் மறைந்து கொண்ட வெப்பால மரத்து வேர்கள் இக்காய்ச்சலுக்கும் தாக்கு பிடித்தன.

துவரம் மிளாறுகளிலான பட்டிகளில், ஒலித்த ஆடுகளின் குரல்கள், இரவுகளில் படிந்து, அந்த ஊரின் விசித்திரத்திற்கு சப்தமேற்படுத்தி தந்திருந்தது.

பாறையைத் துளைத்து உரல் குடையப்பட்டிருந்தது. எட்டு பங்காளிகளின் வீடேறி, கொண்டு வந்த கம்பு அடிபட்டு மாவாகிக் கொண்டிருந்தது. இடிப்பவளின் முகமே இருண்டிருந்தது. உலக்கையின் நிழலோடு இன்னொரு நிழல் விழுவதைக் கவனித்தாள். கை தானாக நின்று முகம் திருப்பினாள்.
மூன்று பொம்பளை புள்ளையோடு ஒருத்தி. முகம் வேற்றுமுகம். சாயல் அவளூர் சாயல் இல்லை. கெழக்கத்தி கூட்டமா? நிதானிக்க முடியவில்லை.

பார்வையால் அவர்கள் நால்வரும் பாறையில் திரண்ட, பச்சை மாவைத் தின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பார்வைகள் மீறி, மாவிடித்தலுக்குக் கைகள் வலுவற்று இருந்தன.

‘என்ன தாயீ பாக்கற?’ பதிலற்ற கேள்விகள் தொடர்ந்தன.

கெழக்கத்தி பொம்மனாட்டியா நீ?

‘கழுத்துல ஒண்ணேயும் காணோம். புருஷன் செத்துட்டானா? இந்தப் பஞ்சத்துல எவன் பொழைச்சான்?’
அவளின் தொடர்ந்த கேள்விகள் எதிர் நிற்பவளின் கறுத்த முகத்தில் மோதி, பாறைகளில் விழுந்தன.பசியின் பார்வைகள் பச்சை மாவைக் கேட்பது போல் அவள் உணர்ந்து,

“மாவு வேணுமா?”

“ஆமா என் புள்ளைங்களுக்கு, கூழுக்கு, மாவுகரைக்க மாவு தர்றீயா? நாளைக்கே திருப்பி தர்றேன்.’’

“அதெப்படி நாளைக்கே திருப்பி தருவெ? இங்க என்ன மழை ஊத்தி, வெள்ளம் பொத்து,வெள்ளாமையை அறுக்க முடியாம அருவா ஒடிஞ்சி ஒலக்கடத்துக்கா நடக்கறோம்.’’

“நாளைக்கு திருப்பி தந்துடுவேன்.’’

அவள் குரலில் தெறித்த உறுதி இவளை நிலை குலைய வைத்தது.

“அதான் எப்படி?”

“நாளைக்கு சத்திமா திருப்பி தந்துடுவேன். என் புள்ளைங்க வயிறு குளிரணும் தாயி..’’

அவள் குரலில் குழைந்திருந்த கனிவும் அதுவரை அவள் கேட்டிராதது.

நிமிடத்துக்கு நிமிடம் வேறுபட்ட அவள் வார்த்தைகளுக்கு இவள் ஆச்சரியப்பட்டாள்.

அந்த வார்த்தையில், காய்ந்து வெடித்திருந்த அவள் முலைக் காம்புகள் பால் சொரிந்தது மாதிரி உணர்ந்தாள்.

“சட்டி வச்சிருக்கியா தாயி?”

அவள் மூத்த மகள் கருஞ்சட்டியை நீட்டினாள். கம்பம்மாவு சட்டியில் நிரம்பியது.. போட.. போட.. நிரம்புகிறது.. இன்னும்.. இன்னும்.. பாறையின் குழி அவள் மார்மாதிரி சுரந்து, நிரம்பிக் கொண்டே இருக்கிறது.. அவள் இடக்கண் முந்திக் கொண்டு ஒரு சொட்டை உதிர்க்கிறது.
காலம் கருணையில் நிரம்பி வழிந்தது.

உச்சி மத்தியானத்தில், மாரியம்மன் சிலையின் இடக் கண்ணிலிருந்து ஒரு சொட்டு விழுந்ததை கூட்டாத்தான் பார்த்ததைத் திருப்பி, திருப்பி சொல்லிக் கொண்டிருக்க, தலைமுடி பொசுங்க, மலைக் காட்டில் விஷத்தழைபறிக்க அலைந்த ரங்கநாயகியின் நெற்றிப் பொட்டில் அத்துளி விழுந்தது.

பூமியை இருளின் நாக்கு ஒரே நொடியில் கவ்விக் கொண்டது. வானம் கிழித்து ஊற்றுகிறது. எதன் பொருட்டும் அதன் உக்கிரம் குறைய வழி இல்லை. மரங்கள் முறிய, பாறைகள் கரைய, நீரின் வன்மம், விநாடிக்கு விநாடி அதிகரித்துக் கொண்டே போகிறது. மலர்தலுக்குப் பதிலாக மனித முகங்களில் பீதி பற்றிக் கொண்டது.
இனி விடிதலுக்கான, சாத்தியமற்ற இருள் அது. மழையினால் பூமியைத் தின்ன, வெறி பிடித்து வானம் வாய்பிளந்து நிற்கிறது.

மடியில் பறித்த விஷத்தழைகளோடு, பாறைச்சுனையில் ரெங்கநாயகி கிழவி மல்லாந்திருந்தாள். விஷத்தழை ஊறின உடல், யானையளவிற்குப் பெருத்து மிதந்தது.

சின்னாப்பூ அனுக்குமலைக் காட்டில் ஏதாவதொரு பாறையிடுக்கில் குரல்வலை அறுபட்டுக் கிடக்கக் கூடும்.
நீரின் வன்மம் பெருகிக் கொண்டே போகிறது. இத்தனை வருடத்து பூமியின் வெடிப்பை, ஒரே நொடியில் இட்டு நிரப்பிச் செல்கிற காலத்தின் விசித்திரத்தில் ஊர் கிடந்தது.

கதவிடுக்குகளின் இடைவெளிகளில் பார்த்த கண்களுக்கு நீரின் மட்டம் பாறைகளில் தெரிந்தது.
ஒரு நீண்ட ராத்திரியின் மிச்சத்தில் மாட்டி, ஒரு பகல் முழுக்க கண் திறக்காத பிடிவாதத்தில் கிடந்த பொட்டு இருளனை, மழை தான் எழுப்பியது. சுற்றிலும் ஆட்களற்ற பாண்டு ஒட்டனின் வீடு,அவனை பெரிதும் பயமுறுத்தியது. மரணவெறி கொண்ட சில மனிதர்கள் கூடப் பக்கத்தில் இருந்தால் தேவலாம் போல் உணர்ந்தான். இந்தப் பிரளயத்தை மூழ்கடிக்கும் வல்லமையோடு மல்லுக்கட்டும் மழை கொடுத்த தனிமை அவனால் தாங்கிக் கொள்ள முடியாததாய் இருந்தது. விசித்திரமான ஒலிகளை மாற்றி மாற்றி எழுப்பித் தன் தனிமையை வென்றுவிட முயன்றான்.

தலை விரித்தாடிய தாண்டவம் முடிய ஒரு முழு இரவு தேவைப்பட்டது. வானத்திலிருந்து சொட்ட இனி ஒரு துளியும் மீதியில்லை என்ற உறுதியில் அது தன் கோர ஆட்டத்தை நிறுத்தினபோது,விடிந்தது. இரவில் நீடித்த வன்முறையில் நிலவும், நட்சத்திரங்களும் எங்காவது தெரித்து விழுந்திருக்கலாம்.
அவர்கள் பத்திருபது பேர், ஈரப் பாறைகளில் கால் மாற்றி, கால் மாற்றி வைத்து, பாண்டு ஒட்டனின் வீட்டை அடைவதற்குப் பல மணி நேரம் தேவைப்பட்டிருந்தது.

ராக்கண் விழித்து, பெரும் கலக்கத்திலிருந்த அவனுக்கு அவர்களைப் பார்த்த விநாடி, மீண்டும் தான் மரணத்தின் பற்களில் நசுங்கப்போகும் கனம் நினைவு வந்துவிட்டது. ஆனால் தெப்பலாக நனைந்திருந்த அவர்களின் முகங்களில் தெரிந்த கருணை, ஒரே கணத்தில் அந்த நினைப்பைப் புரட்டிப் போட்டது.
ஒரு குழந்தை மாதிரி மலங்க மலங்க அவன் அவர்களைப் பார்த்தான்.

காசிரிக்கா நாரின் இறுக்கம் தளர்த்தப்பட்டு, கட்டு அவிழ்க்கப்பட்டது. புஜத்தில் கசிந்த ரத்தம் கண்டு அவர்களில் பலர் “இச்’’ கொட்டினார்கள். நடப்பது குறித்த பிரக்ஞையற்று இருந்தான்.

அவர்கள் முகங்கள் வன்மமற்று, குழந்தை முகங்களாகி, புன்னகை புனைந்திருந்தது.
“இனி ஜென்மத்துக்கும் திருடாத. மாரியாத்தா கண் தொறந்து மழை கொடுத்திருக்கா. போ போய் பொழைச்சிக்க’ எல்லோர் குரலும் நனைந்திருந்தது.

அலைகள் மாதிரி, நீர் தளும்பிய சத்தம் கேட்டுக் கொண்டே ஏரிக்கரையின் முடிவிலிருந்த தேவதானப்பேட்டை மலை மீது கால் வைத்து நிமிர்ந்தான்.

வெள்ளம் மலை முழுக்க, சிறு அருவிகளாகி இறங்கிக் கொண்டிருக்கும் பேரழகை எதிர்கொண்டு ஏறுகிறான். நீர்த்துளிகள் முகத்தில் மோதி, சிதறி மலையில் தெறிக்க, தெறிக்க… ஏறித் திரும்பினான்.
ஊர் ஈரத்தில் நனைந்திருந்தது.

[16-5-2014 முதல் 18-5-2014 வரை ஊட்டியில் நிகழ்ந்த குரு நித்யா நினைவு இலக்கியச்சந்திப்பில் விவாதிக்கப்பட்ட கதை]

   https://www.jeyamohan.in/55388#.W6VXbqTTVR4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்.கதையில் வர்ணனைகள் தூக்கலாக இருக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தரிப்பு இல்லாமல் வாசகரை கதையின் களத்திற்கு அழைத்துச்செல்ல முடியாதுதானே. அது சுவியருக்கு நன்றாகத் தெரியும்!

இந்தக் கதையில் மரணதண்டனை கொடுக்கவிரும்பிய ஊர்மக்கள் மழைக்குப் பின்னர் மனம் மாறியதற்கு என்ன காரணம் என்பதுதான் வாசகரிடம் நிற்கும்.  வர்ணனைகள் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.