Jump to content

சத்ரு’ – பவா செல்லதுரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘சத்ரு’ – பவா செல்லதுரை

அவன் காசிரிக்கா நாரினால் கயிற்றுக் கட்டிலோடு இழுத்துக் கட்டப்பட்டிருந்தான். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்களில் மரணமேறி இருந்தது. சிலர் ஆர்வத்தின் நுனியிலிருந்தார்கள். அவன் பிடிவாதமாய் கண் திறக்காமல் கிடந்தான். ரங்கநாயகி கிழவி தனி பொம்பளையாகப் பதட்டமின்றி, அவன் தலைமாட்டில் குந்தி இருந்தாள். அவள் நிதானத்தில் அனுபவம் குழைந்திருந்தது. மௌனம் எல்லோருக்கும் பொதுவாய் பரவி இருந்தது. அந்தச் சின்னக் குடிசை,தன் உள்புறம் இதற்குமேல் ஒரு ஆளையும் அனுமதிக்காத பிடிவாதத்தில் இருந்தது.

வீட்டின் வெளி, புதுசாய் பார்க்கிற எவரையும் பயமுறுத்தும். நீண்டு, அகன்று பரவியிருந்த பாறைகளின் நடுவில் ஒதுங்கியிருந்த மண்திட்டில், கட்டியிருந்த கூரையின் வெளியில் நின்று பார்த்தால்,கருங்கோடுகளாய் நீண்டு கொண்டே போகும் பனைமரக்கறுப்பும், பீவேலி மரங்களும்,கோடையின் உக்கிரத்தை அநாவசியமாக்கும் எட்டிமர இலைகளும்,இந்த அத்துவான வெளியில் வீடு கட்டின பாண்டு ஒட்டனின் தைர்யத்திற்குத் துணைநின்றன.

அவன் உளியின் நுனிகளால் பாறைகளைத் தின்று குழிகளாக்கினான். விழுந்த குழிகளில் கறுப்பு மருந்தேற்றி, திரி பற்ற வைக்கும் லாவகம் வேறெங்கும் காணமுடியாதது. வெடித்துச் சிதறிய கற்பாறைகளின் கங்குகளுக்கும், எழும் கரும்புகைக்கும் நடுவில் ஒவ்வொரு முறையும் வெற்றியோடு வெளிப்படுவான். பெரும் சத்தங்களையும், கலவரத்தையும், குழப்பத்தையும், ஆபத்துகளையும் சதா சந்தித்த அவன் விநாடிகள், நேர் எதிராக நிரந்தர அமைதி தேங்கி நின்ற இந்தப் பாறையின் நடுவில் நிலைத்திருந்தது கூரையாய்.

கண்டாச்சிபுரம், மேவாலைப்பக்கம் என கல் உடைக்கப் போனவன் இன்னமும் திரும்பவில்லை. காலம் அவனை மீட்டுத்தரும் நம்பிக்கையை இழந்து, அவன் பாறைகளுக்கு நடுவில் மறைந்தது குறித்து அவ்வப்போது எழுந்த கதைகளையும் ஈவிரக்கமின்றி அழித்து, அவன் பாறை வீட்டை ஊராருக்குப் பொதுவாக்கி தந்திருந்தது.
தேங்கிநின்ற மௌனத்தின் மீது, சிறு கல்லெறிந்து பார்க்கவும், அவர்களுக்குள் தயக்கம் இருந்தது. அவனுக்கு எதிரான உரையாடல் மொழி இழந்து, நடுக்கத்திலிருந்தது. இத்தனைக்கும் அவன் கண் திறக்காமலேதான் கிடந்தான். பின்கதவு சத்தமின்றித் திறக்கப்பட்டு, அவர்களைப் பின்புறப் பாறையில் உட்கார்த்தி வைத்தது.
சைகை மூலம் ரெங்கநாயகி கிழவி அழைக்கப்பட்டாள்.

அவர்களின் பேச்சு அவர்களுக்கே கேட்காதவாறு இரகசியமாக்கப்பட்டது. அவன் பிடிபட்டதின் அதிகபட்ச கஷ்டங்களும், அவன் மரணத்தின் அவசியமும் ஓரிரு வார்த்தைகளால் ரெங்கநாயகிக்கு சுருக்கப்பட்டது. விடிகிற பொழுதின் முதல் நாழிகை, அவன் பிணம் எரியூண்டப்பட வசதியாக அவன் மரணம் சௌகரியப்படுத்தப்பட்டது.

பதட்டமற்று இருந்த கிழவியின் முகம் இருளத் துவங்கியது. புள்ளதாச்சி பொம்பளைகளுக்கு குச்சி வைத்து, ரத்தப் பெருக்கில் புரளும் சதைப் பிண்டங்களை வாரி வீசிய கைகள்தான் எனினும் ஒரு முழுமனிதனின் மரணத்தின் எதிர்கொள்ளல் அவளுக்கு நடுக்க மேற்படுத்தியது. சமாளித்துப் பேசினாள்.

“ஊராருக்கு நான் கட்டுப்படுறேன். ஆனா அவனை நேருக்கு நேரா மொகமெடுக்க முடியலை. வண்டி கட்டி என் வூட்டுக்கு ஆளனுப்பின நம்பிக்கையை நான் கெடுக்கலை சாமிகளா. இந்த பகலுக்கும்,மலைகாட்டுல சுத்தி வெஷத் தழ பறிச்சாறேன். என்கூட ஒரு ஆளு இருந்து, இருட்டனப்புறம் பாறையில கொட்டி, ஒட்ட, ஒட்ட அரைக்கணும், ரெண்டு வெண்கலச் சருவச் சட்டி வேணும். சீரா தண்ணி ஊத்தி, தழையை அரைச்சுட்டா போதும். விடியற நேரம் அவன் திமிராம கொள்ளாம நாலு பேரு புடிச்சிக்குங்க, ரெண்டு கையையும் ரெண்டுபக்க சருவ சட்டில தொவைச்சி புடிச்சிக்குங்க. ஒரே ஒரு மணி நேரம் தான். ஆளு வெரைச்சிடுவான்.
நான் ஒத்தை வீட்டு பொம்பளை. அவன் கை கால ஒதைச்சிகிறத பாக்க முடியாது, தழை அரைச்சி கொடுத்ததும் எனக்கு வெடை குடுங்க சாமிங்களா.

யோசனையின் கச்சிதம் எல்லோருக்குமே பிடித்திருந்தது. தலையில் முடி பொசுங்கும் அந்த மத்தியான அனலில், அவளும் சின்னாப்புவும் அனுக்குமலை காட்டுக்குள் நுழைந்து மலை ஏறினார்கள்.
கண் திறக்காமல் கட்டிலில் கிடக்கும் பொட்டு இருளனின் திருட்டுச் சாகசங்கள், அந்த மலைக்காட்டு மத்தியானத்தில் ரங்கநாயகி கிழவிக்குக் கதையாக்கப்பட்டு, பகல் நகர்ந்தது.

அந்தப் பஞ்சத்தின் உக்கிரத்தை சொல்லவாவது சில குழந்தைகளை நெட்டித்தள்ளி ஒதுக்க மிச்சமின்றி, பொசுக்கியது காலம். அந்த ஈரமற்ற நாட்களில் மனிதர்கள் உலர்ந்து, காய்ந்து கருகினார்கள். பிள்ளைப்பெற்ற பொம்பளைகளின் முலைக்காம்புகள், பச்சை குழந்தைகளுக்குச் சொரிவதற்கு ஒரு சொட்டுப் பாலின்றி வெடித்திருந்தன. வளர்ந்த குழந்தைகள், ஈரம் தேடி மலைக் காடுகளின் பாறை நிழலுக்குள் சதா அலைந்து திரிந்தன. வற்றி வெடித்த பூமியின் முகம் கோரமேறி மனிதர்களை விழுங்கிவிடத் தயாராய் இருந்தன. வைத்த ஒவ்வொரு அடியும், பூமியின் வெடிப்பில் விழுந்துவிடாதவாறு எச்சரிக்கை அடைய வேண்டியிருந்தது.
எட்டி மரங்களின் பச்சையும், காய்களின் சிவப்பும் பார்க்கிற எவரையும் ஏமாற்றி, சிரித்து ஏளனப்படுத்தியது. தண்ணி முட்லான் செடிகளின் காய்ந்து போகாத பசுமை, பள்ளிக்கூடம் விட்டகன்ற பிள்ளைகளுக்கு நம்பிக்கையின் மரணத்தைத் தள்ளிப்போட்டு வேடிக்கை காட்டியது.

அவர்கள் காய்ந்த பூமியில் கால் பதித்து, வெறி கொண்டு கிழங்கு தோண்டினார்கள். பூமி தன் இரகசிய மார்பில், தான் தேக்கி வைத்திருந்த தண்ணி முட்லான் கிழங்குகளின் ஈரத்தைத் தன் குழந்தைகளின் நாக்கில் நனைத்து, தன் ஈகையில் நிலைத்தது.

அந்தப் பஞ்சத்தை வகைப்படுத்த முடியாது. தலைமுறைகளில் தப்பிப் பிழைத்திருந்த கிழவன்களும், கிழவிகளுமே பார்த்திருந்திராத பஞ்சமது. அரசாங்கப் புள்ளி விவரங்களுக்குள் வர மறுத்து, ஊர் பொதுத்திட்டில் வைத்து, அளக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு அடங்க மறுத்த பசித்த மனிதர்களைப் போல.

தானியக் குதிர்களில் ரத்தம் சுண்டிய பெருச்சாளிகள் வலைதோண்டி ஏமாந்தன. ஒத்தையான பாதைகளிலும், கள்ளிகளடர்ந்த ரெட்டை மாட்டு வண்டிப் பாதைகளிலும் பாம்புகளின் எலும்புக்கூடுகள் குறுக்காலும் நெடுக்காலும் கிடந்தன. வெளுத்துத் தெரிந்த, ஊர்ந்த அதன் முள்ளெலும்புகள் யாரையும் அச்சப்படுத்தின.
பிறக்கும் குழந்தைகள் இரத்த பிசுபிசுப்பின்றி உலர்ந்து செத்துப் பிறந்தன. தண்ணீரற்றுக் காய்ந்து கிடந்த கிணறுகளில், எப்போதோ வாழ்ந்த அடையாளத்தில், நண்டுகள் செத்து, ஓடுகள் மட்டும் உடையாமல் ஒட்டிஇருந்தன. ஒரு சிறு குச்சியின் உராய்வில், ஒரு சிறு கல்லின் விழுதலில்,உடைந்து சிதறும் அதன் மக்கிய ஓட்டின் சத்தமே, நண்டுகளின் வாழ்ந்த காலத்தின் ஞாபகத்தில் மீந்தது.

மலைக்காட்டுப் பாறை பொந்துகள் வெப்பத்தால் வெளியேற்றிய, காட்டுப் பன்னிகளும்,குள்ளநரிகளும், பெரும் கூச்சல்போட்டு பஞ்சம் நெருக்கியிருந்த குரல்வலைகளைத் தங்கள் அகோர சப்தத்தால் நிறுத்தின.
ஆடுகளும், மாடுகளும் வந்த விலைக்கு, கிடைத்த சோளத்திற்கு, கம்பந்தட்டைகளுக்கென்று கைமாறின. பூர்சமரக்கிளைகளில் உரிக்கப்பட்ட ஆடுகளின் வரிசை தெரிந்தது. மக்கள் உப்பு போட்டு அவித்து இறைச்சி தின்றார்கள். ஊராகாலி மாடுகள் யாருமற்ற அனாதைகளாயின. யாரும் யாரையும் தின்றுவிடக்கூடிய கொலை வெறியைப் பஞ்சம் மனித மனங்களில் ஏற்றியிருந்தது. மனிதர்கள் அவர்கள் வீட்டு ஆடுகள், மாடுகள் போல், அவர்கள் மலைகளின் பெருநரிகள் போல் சிரிப்பற்றுப் போன முகத்தோடு திரிந்தார்கள். அவர்களின் ஒட்டுமொத்தத் தேடலும், ஒருசொட்டு ஈரத்தை நோக்கியதாய் மட்டுமே இருந்தது.

அந்தத் துளியூண்டு ஈரம் மாரியம்மனின் கண்களுக்குள் இருப்பதாக உறுதியாய் நம்பினார்கள். அதைத் தொட்டு உணர்ந்துவிடக் குதிர்களைத்துடைத்து, பானைகளை அலசி, கதிர் அறுத்து நாள் கடந்த வயல்களைப் பெருக்கிச் சேர்த்த எட்டு மரக்கா கேவுறும், அஞ்சி படி கம்பும் தான் மாரியம்மனின் கருணை நிறைந்த கண்களுக்குப் படைக்கப்படப் போகும் கூழ் ஊற்றல். நம்பிக்கையின் கடைசிப்படியில் ஒட்டியிருந்த இரவில்தான் பொட்டு இருளன் அதில் கை வைத்து,கையும் களவுமாய்ப் பிடிபட்டது.

அந்த ஊரே விசித்திரங்களால் அடுக்கப்பட்டிருந்தது. கல் மலைகளும், தரையில் படர்ந்திருந்த பாறைகளும், பாறைகளுக்குள் அடங்கி இருந்த குகைகளும், அங்கங்கே தெரிந்த மண் திட்டுகளில் கட்டியிருந்த வீடுகள், தெருக்கள் என்ற ஒழுங்குக்குள் வர மறுத்தன. பாறைகளுக்குள் மறைந்து கொண்ட வெப்பால மரத்து வேர்கள் இக்காய்ச்சலுக்கும் தாக்கு பிடித்தன.

துவரம் மிளாறுகளிலான பட்டிகளில், ஒலித்த ஆடுகளின் குரல்கள், இரவுகளில் படிந்து, அந்த ஊரின் விசித்திரத்திற்கு சப்தமேற்படுத்தி தந்திருந்தது.

பாறையைத் துளைத்து உரல் குடையப்பட்டிருந்தது. எட்டு பங்காளிகளின் வீடேறி, கொண்டு வந்த கம்பு அடிபட்டு மாவாகிக் கொண்டிருந்தது. இடிப்பவளின் முகமே இருண்டிருந்தது. உலக்கையின் நிழலோடு இன்னொரு நிழல் விழுவதைக் கவனித்தாள். கை தானாக நின்று முகம் திருப்பினாள்.
மூன்று பொம்பளை புள்ளையோடு ஒருத்தி. முகம் வேற்றுமுகம். சாயல் அவளூர் சாயல் இல்லை. கெழக்கத்தி கூட்டமா? நிதானிக்க முடியவில்லை.

பார்வையால் அவர்கள் நால்வரும் பாறையில் திரண்ட, பச்சை மாவைத் தின்று கொண்டிருந்தார்கள். அந்தப் பார்வைகள் மீறி, மாவிடித்தலுக்குக் கைகள் வலுவற்று இருந்தன.

‘என்ன தாயீ பாக்கற?’ பதிலற்ற கேள்விகள் தொடர்ந்தன.

கெழக்கத்தி பொம்மனாட்டியா நீ?

‘கழுத்துல ஒண்ணேயும் காணோம். புருஷன் செத்துட்டானா? இந்தப் பஞ்சத்துல எவன் பொழைச்சான்?’
அவளின் தொடர்ந்த கேள்விகள் எதிர் நிற்பவளின் கறுத்த முகத்தில் மோதி, பாறைகளில் விழுந்தன.பசியின் பார்வைகள் பச்சை மாவைக் கேட்பது போல் அவள் உணர்ந்து,

“மாவு வேணுமா?”

“ஆமா என் புள்ளைங்களுக்கு, கூழுக்கு, மாவுகரைக்க மாவு தர்றீயா? நாளைக்கே திருப்பி தர்றேன்.’’

“அதெப்படி நாளைக்கே திருப்பி தருவெ? இங்க என்ன மழை ஊத்தி, வெள்ளம் பொத்து,வெள்ளாமையை அறுக்க முடியாம அருவா ஒடிஞ்சி ஒலக்கடத்துக்கா நடக்கறோம்.’’

“நாளைக்கு திருப்பி தந்துடுவேன்.’’

அவள் குரலில் தெறித்த உறுதி இவளை நிலை குலைய வைத்தது.

“அதான் எப்படி?”

“நாளைக்கு சத்திமா திருப்பி தந்துடுவேன். என் புள்ளைங்க வயிறு குளிரணும் தாயி..’’

அவள் குரலில் குழைந்திருந்த கனிவும் அதுவரை அவள் கேட்டிராதது.

நிமிடத்துக்கு நிமிடம் வேறுபட்ட அவள் வார்த்தைகளுக்கு இவள் ஆச்சரியப்பட்டாள்.

அந்த வார்த்தையில், காய்ந்து வெடித்திருந்த அவள் முலைக் காம்புகள் பால் சொரிந்தது மாதிரி உணர்ந்தாள்.

“சட்டி வச்சிருக்கியா தாயி?”

அவள் மூத்த மகள் கருஞ்சட்டியை நீட்டினாள். கம்பம்மாவு சட்டியில் நிரம்பியது.. போட.. போட.. நிரம்புகிறது.. இன்னும்.. இன்னும்.. பாறையின் குழி அவள் மார்மாதிரி சுரந்து, நிரம்பிக் கொண்டே இருக்கிறது.. அவள் இடக்கண் முந்திக் கொண்டு ஒரு சொட்டை உதிர்க்கிறது.
காலம் கருணையில் நிரம்பி வழிந்தது.

உச்சி மத்தியானத்தில், மாரியம்மன் சிலையின் இடக் கண்ணிலிருந்து ஒரு சொட்டு விழுந்ததை கூட்டாத்தான் பார்த்ததைத் திருப்பி, திருப்பி சொல்லிக் கொண்டிருக்க, தலைமுடி பொசுங்க, மலைக் காட்டில் விஷத்தழைபறிக்க அலைந்த ரங்கநாயகியின் நெற்றிப் பொட்டில் அத்துளி விழுந்தது.

பூமியை இருளின் நாக்கு ஒரே நொடியில் கவ்விக் கொண்டது. வானம் கிழித்து ஊற்றுகிறது. எதன் பொருட்டும் அதன் உக்கிரம் குறைய வழி இல்லை. மரங்கள் முறிய, பாறைகள் கரைய, நீரின் வன்மம், விநாடிக்கு விநாடி அதிகரித்துக் கொண்டே போகிறது. மலர்தலுக்குப் பதிலாக மனித முகங்களில் பீதி பற்றிக் கொண்டது.
இனி விடிதலுக்கான, சாத்தியமற்ற இருள் அது. மழையினால் பூமியைத் தின்ன, வெறி பிடித்து வானம் வாய்பிளந்து நிற்கிறது.

மடியில் பறித்த விஷத்தழைகளோடு, பாறைச்சுனையில் ரெங்கநாயகி கிழவி மல்லாந்திருந்தாள். விஷத்தழை ஊறின உடல், யானையளவிற்குப் பெருத்து மிதந்தது.

சின்னாப்பூ அனுக்குமலைக் காட்டில் ஏதாவதொரு பாறையிடுக்கில் குரல்வலை அறுபட்டுக் கிடக்கக் கூடும்.
நீரின் வன்மம் பெருகிக் கொண்டே போகிறது. இத்தனை வருடத்து பூமியின் வெடிப்பை, ஒரே நொடியில் இட்டு நிரப்பிச் செல்கிற காலத்தின் விசித்திரத்தில் ஊர் கிடந்தது.

கதவிடுக்குகளின் இடைவெளிகளில் பார்த்த கண்களுக்கு நீரின் மட்டம் பாறைகளில் தெரிந்தது.
ஒரு நீண்ட ராத்திரியின் மிச்சத்தில் மாட்டி, ஒரு பகல் முழுக்க கண் திறக்காத பிடிவாதத்தில் கிடந்த பொட்டு இருளனை, மழை தான் எழுப்பியது. சுற்றிலும் ஆட்களற்ற பாண்டு ஒட்டனின் வீடு,அவனை பெரிதும் பயமுறுத்தியது. மரணவெறி கொண்ட சில மனிதர்கள் கூடப் பக்கத்தில் இருந்தால் தேவலாம் போல் உணர்ந்தான். இந்தப் பிரளயத்தை மூழ்கடிக்கும் வல்லமையோடு மல்லுக்கட்டும் மழை கொடுத்த தனிமை அவனால் தாங்கிக் கொள்ள முடியாததாய் இருந்தது. விசித்திரமான ஒலிகளை மாற்றி மாற்றி எழுப்பித் தன் தனிமையை வென்றுவிட முயன்றான்.

தலை விரித்தாடிய தாண்டவம் முடிய ஒரு முழு இரவு தேவைப்பட்டது. வானத்திலிருந்து சொட்ட இனி ஒரு துளியும் மீதியில்லை என்ற உறுதியில் அது தன் கோர ஆட்டத்தை நிறுத்தினபோது,விடிந்தது. இரவில் நீடித்த வன்முறையில் நிலவும், நட்சத்திரங்களும் எங்காவது தெரித்து விழுந்திருக்கலாம்.
அவர்கள் பத்திருபது பேர், ஈரப் பாறைகளில் கால் மாற்றி, கால் மாற்றி வைத்து, பாண்டு ஒட்டனின் வீட்டை அடைவதற்குப் பல மணி நேரம் தேவைப்பட்டிருந்தது.

ராக்கண் விழித்து, பெரும் கலக்கத்திலிருந்த அவனுக்கு அவர்களைப் பார்த்த விநாடி, மீண்டும் தான் மரணத்தின் பற்களில் நசுங்கப்போகும் கனம் நினைவு வந்துவிட்டது. ஆனால் தெப்பலாக நனைந்திருந்த அவர்களின் முகங்களில் தெரிந்த கருணை, ஒரே கணத்தில் அந்த நினைப்பைப் புரட்டிப் போட்டது.
ஒரு குழந்தை மாதிரி மலங்க மலங்க அவன் அவர்களைப் பார்த்தான்.

காசிரிக்கா நாரின் இறுக்கம் தளர்த்தப்பட்டு, கட்டு அவிழ்க்கப்பட்டது. புஜத்தில் கசிந்த ரத்தம் கண்டு அவர்களில் பலர் “இச்’’ கொட்டினார்கள். நடப்பது குறித்த பிரக்ஞையற்று இருந்தான்.

அவர்கள் முகங்கள் வன்மமற்று, குழந்தை முகங்களாகி, புன்னகை புனைந்திருந்தது.
“இனி ஜென்மத்துக்கும் திருடாத. மாரியாத்தா கண் தொறந்து மழை கொடுத்திருக்கா. போ போய் பொழைச்சிக்க’ எல்லோர் குரலும் நனைந்திருந்தது.

அலைகள் மாதிரி, நீர் தளும்பிய சத்தம் கேட்டுக் கொண்டே ஏரிக்கரையின் முடிவிலிருந்த தேவதானப்பேட்டை மலை மீது கால் வைத்து நிமிர்ந்தான்.

வெள்ளம் மலை முழுக்க, சிறு அருவிகளாகி இறங்கிக் கொண்டிருக்கும் பேரழகை எதிர்கொண்டு ஏறுகிறான். நீர்த்துளிகள் முகத்தில் மோதி, சிதறி மலையில் தெறிக்க, தெறிக்க… ஏறித் திரும்பினான்.
ஊர் ஈரத்தில் நனைந்திருந்தது.

[16-5-2014 முதல் 18-5-2014 வரை ஊட்டியில் நிகழ்ந்த குரு நித்யா நினைவு இலக்கியச்சந்திப்பில் விவாதிக்கப்பட்ட கதை]

   https://www.jeyamohan.in/55388#.W6VXbqTTVR4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி கிருபன்.கதையில் வர்ணனைகள் தூக்கலாக இருக்கு....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சித்தரிப்பு இல்லாமல் வாசகரை கதையின் களத்திற்கு அழைத்துச்செல்ல முடியாதுதானே. அது சுவியருக்கு நன்றாகத் தெரியும்!

இந்தக் கதையில் மரணதண்டனை கொடுக்கவிரும்பிய ஊர்மக்கள் மழைக்குப் பின்னர் மனம் மாறியதற்கு என்ன காரணம் என்பதுதான் வாசகரிடம் நிற்கும்.  வர்ணனைகள் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.