Jump to content

இடமாற்றம் வழங்காமையால் அபிவிருத்தி உத்தியோகத்தர் நஞ்சருந்தி தற்கொலை


Recommended Posts

இடமாற்றம் வழங்காமையால் அபிவிருத்தி உத்தியோகத்தர் நஞ்சருந்தி தற்கொலை

 

 
 

மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் 5 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி சொந்த மாவட்டத்துக்கு இடமாற்றம் கிடைக்காத விரக்தியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நஞ்சருந்தி உயிரை மாய்த்த சம்பவம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

jaffna.jpg

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்குச் சென்று மேலதிக மாவட்டச் செயலரைச் சந்தித்து வெளியில் வந்து அவர் தனது உயிரை மாய்த்துள்ளார்.

புதிய உயர் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒன்றிய தலைவரான தில்லையம்பலம் கஜேந்திரகுமார் (வயது -32) என்ற அபிவிருத்தி உத்தியோகத்தரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவரது நண்பர்கள் தெரிவித்ததாவது:

கஜன் இடமாற்றம் கிடைக்காத காரணத்தால் யாழ் செயலகம் முன் நஞ்சருத்தி தற்கொலை செய்துள்ளார். மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் இவருடன் கடமையாற்றிய ஏனையவர்கள் செல்வாக்குகளைப் பயன்படுத்தி இடமாற்ற காலத்துக்கு முன்னரே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளனர்.

ஆனால் இவர் கடந்த 6 வருடங்களாக தொடர்ச்சியாக அந்தப் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய காரணத்தால் இடமாற்றம் பெற முயன்றுள்ளார். அதற்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தின் செயலாளரான பெண் தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வந்துள்ளார். இதன் காரணமாக கஜன் பெரும் விரக்தியில் இருந்ததுடன் கொழும்புவரை சென்றும் இடமாற்றத்துக்கு பலன் கிடைக்கவில்லை.

யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெறுவதற்காக யாழ்ப்பாண மேலதிக மாவட்டச் செயலாளரான சுகுனவதி தெய்வேந்திரத்தை கடந்த புதன்கிழமை கஜன் சந்தித்து தனது இடமாற்றம் தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார். ஆனால் கஜனது முறைப்பாட்டை பொருட்படுத்தாது, மிகக் கடுமையாக ஏசியதுடன் கஜனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அவர் மாந்தை கிழக்கு பிரதேசசெயலரான பெண் அதிகாரிக்கு கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த இடத்திலேயே கஜன் தான் கொண்டு வந்திருந்த நஞ்சை அருந்தி மயக்கமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

கஜனின் இழப்புக்கு முற்றுமுழுதாக அதிகாரிகளே காரணம் என கஜனின் பெற்றோர் கருதுகின்றனர்  என்றனர்.

இதுதொடர்பில் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபரின் பதிலைப் பெற்றுக்கொள்ள முயற்சித்த போதும், அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

இதேவேளை, தில்லையம்பலம் கஜேந்திரகுமார் போன்று மேலும் பல பட்டதாரிகள் வன்னியில் தொடர்ச்சியாக இடமாற்றம் இன்றி விரக்தியுடன் கடமையாற்றி வருகின்றனர். அவர்கள் தமக்கான இடமாற்றத்தை வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சுவரை கோரிக்கை முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/40938

Link to comment
Share on other sites

9 hours ago, நவீனன் said:

தில்லையம்பலம் கஜேந்திரகுமார் போன்று மேலும் பல பட்டதாரிகள் வன்னியில் தொடர்ச்சியாக இடமாற்றம் இன்றி விரக்தியுடன் கடமையாற்றி வருகின்றனர்.

காலத்துக்கு காலம் அரச வேலை வேண்டும் என்று பட்டதாரிப் பிச்சைக்காரர்கள் பலர் தெருக்கூத்தை ஆடி வந்துள்ளார்கள். 

கூத்தின் முடிவில் அவர்களுக்கு 15,000 - 20,000 வரை மாதச் சம்பளத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்ற பெயரில் பல்வேறு பகுதிகளில் அரச நியமனம் வழங்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு குறிப்பிட்ட கடமைகள் ஒதுக்கப்படவில்லை. பலர் வேலை செய்யாமலே மாதம் மாதம் சம்பளம் பெற்று வந்துள்ளனர். 

அரச வேலை கிடைத்தால் போதும் என்று நியமனத்தை அன்று பெற்றவர்கள் இன்று வீட்டுக்கு அருகில் வேலை வேண்டும் அடம் பிடிக்கிறார்கள். 

இது போன்ற கேவலமான ஜென்மங்கள் இருந்தால் என்ன செத்தால் என்ன? 

9 hours ago, நவீனன் said:

கஜனின் இழப்புக்கு முற்றுமுழுதாக அதிகாரிகளே காரணம் என கஜனின் பெற்றோர் கருதுகின்றனர்  என்றனர்.

முழுக்காரணம் பெற்றோர்கள் தான்! 

கோழையாக, கையாலாகாத பேர்வழியாக தற்கொலை செய்த தில்லையம்பலம் கஜேந்திரகுமாரின் பெற்றோர்களை சிறைகளில் அடைக்க வேண்டும், அவனை குறைந்த பட்சம் ஒரு மனிதனாக வளர்க்கத் தவறியமைக்காக.  

Link to comment
Share on other sites

அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பில் பெற்றோரின் கருத்து 

 

அரச உத்தியோகத்தர் கஜனின் மரணம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகள் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்கள், இணையத்தளங்கள், நாளேடுகள், போன்றவற்றில் தவறான செய்திகள் வெளியாகியுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

jaffna.jpg

கஜனின் மரணம் தொடர்பாக பெற்றோர் மேலும் தெரிவிக்கையில்,

கஜனின் மரணம் தொடர்பாக ஊடகங்களில் தவறாக வெளியான  செய்திகளால் பிள்ளையை இழந்து தவிக்கும் எமக்கு மேலும்  மன வேதனையை ஏற்படுத்துகின்றது. 

கஜன் 2012 ஆம் ஆண்டிலிருந்து முழு மனதோடு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக மக்கள் பணி புரிந்து வருகின்றார். 

ஒரு போதும் இடமாற்றத்தை எதிர்பார்த்து வேலை செய்பவர் அல்ல. 

பெற்றோராகிய நாங்கள் கேட்டும் கூட  இடமாற்றம் கோர மறுத்து வந்துள்ளார்.  அவரது பிரதேச பிரிவுக்குட்பட்ட மக்களே இதற்கு சாட்சியாக உள்ளனர். 

அவர் அம் மக்களின் பேரன்பையும் அபிமானத்தையும் பெற்ற பொறுப்புள்ள ஒரு அரச உத்தியோகத்தர் ஆவார்.  

இவ்வாறிருக்க இடமாற்றம் கோரி அது கிடைக்காத  காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி முற்றிலும் தவறானது.

மேலும் மாந்தை கிழக்கு பிரதேச செயலருடன் மிகுந்த புரிந்துணர்வுடன் இணக்கமாகவும் இருந்து செயற்பட்டு தமது  பிரதேச மக்களுக்கு  மேலான சேவையை கஜன் வழங்கி வந்துள்ளார். 

இந்த நிலையில் நடந்த சம்பவமானது அவரது தனிப்பட்ட முடிவினால் எடுக்கப்பட்ட ஒன்றாகும். இவரின் மரணத்தைப் பயன்படுத்தி சிலர் சுயலாபம்  தேட முனைவது மிகவும் வருந்தத்தக்கதாகும் என தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/40991

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.