Jump to content

``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும்


Recommended Posts

``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும் #VikatanExclusive

303_thumb.jpg
 

``22 வருஷம் ஓடிடுச்சு. ஒருவேளை அன்னிக்கு இரவு சில்க்கை சந்திக்க நான் போயிருந்தால், அவளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லியிருப்பேன். அதனால சில்க் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கலாம். அப்படி நடக்கலை. அதனால, சில்க்கின் மரணத்துக்கு நானும் ஒரு காரணம்னு குற்ற உணர்வு இன்னைக்கு வரை எனக்கிருக்கு."

``அனு என் வீட்டுக்கு வர்றியாடி?!'' - சில்க் ஸ்மிதாவின் இறுதி போன்காலும் நடிகை அனுராதாவின் கலக்கமும் #VikatanExclusive
 

சில்க் ஸ்மிதா... சினிமாவில் இவர் ஏற்படுத்திய தாக்கம் பெரியது. 1980, 90-களில், இவர் பெயரை உச்சரிக்காத சினிமா ரசிகர்களே இருக்க முடியாது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை தன் வசீகர நடிப்பாலும், நடனத்தாலும், உடலமைப்பாலும் கவர்ந்த கவர்ச்சிக் கன்னி. ஹீரோ, ஹீரோயின்களைவிட, இவரின் கால்ஷீட்டுக்குப் பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் காத்திருந்த காலம் உண்டு. இந்தக் கவர்ச்சி காந்தம் சினிமா உலகில் வலுப்பெற்றிருந்த காலத்திலேயே, 1996-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி திடீரென மரணத்தைத் தழுவிக்கொண்டது. அவரின் நினைவு தினம் வருவதையொட்டி அவரின் தோழியும், நடிகையுமான அனுராதா, சில்க் ஸ்மிதாவுடன் நெருங்கிப் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார். 

சில்க் ஸ்மிதா

``சில்க் ஸ்மிதா, என் நெருங்கின தோழி. நிறைய படங்கள்ல சேர்ந்து வேலை பண்ணியிருக்கிறோம். ஆனா, அவங்க வயதிலும் சினிமாவிலும் எனக்கு சில ஆண்டுகள் சீனியர். ஆரம்பத்தில் நான் ஹீரோயினா நடிச்சுகிட்டு இருந்தேன். அப்போ கிளாமர் டான்ஸ்ல சில்க் பெரிய புகழுடன் இருந்தாங்க. 32 படங்கள்ல ஹீரோயினா நடிச்ச நிலையில, ஒரு படத்தில் கிளாமர் டான்ஸ் ஆடினேன். அந்தப் படம் பெரிய ஹிட். பிறகு, அப்படியான வாய்ப்புகளே எனக்கு நிறைய வர ஆரம்பிச்சுது. அவை ஹிட்டாச்சு. அதனால சில்க்கின் மார்கெட் சரிய தொடங்கினதாவும், சில்குக்கு என் மேல கோபம் இருந்ததாகவும் பேசப்பட்டுச்சு. நான் அதைப் பெரிசா எடுத்துக்கலை. அப்போகூட நாங்க இருவரும் பல படங்கள்ல ஒண்ணா வேலை பார்த்தோம். ஆனா, நாங்க பேசிகிட்டதில்லை. அதேநேரம், எங்களுக்குள் போட்டியோ, கோபமோ இருந்ததில்லை.

 

 

அனுராதா

இந்நிலையில சில்க் ஒரு தெலுங்குப் படத்தைத் தயாரிச்சு நடிச்சாங்க. `நீங்க இப்போ பீக்ல இருக்கீங்க. என் படத்தில் ஒரு டான்ஸ் ஆடுங்க'னு என்கிட்ட கேட்டாங்க. நானும் நடிச்சேன். அப்போதிலிருந்துதான் எங்க நட்பு படிப்படியா வளர ஆரம்பிச்சுது. `சில்க் ரொம்ப தலைக்கனம் உள்ளவங்க; திமிரு பிடிச்சவங்க; பெரிசா யாரையும் மதிக்க மாட்டாங்க'னு அப்போ பலரும் சொல்லுவாங்க. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்கிட்ட சில்க் ரொம்ப தைரியமா, திமிரா பேசுவாங்க. அதை, அவங்களோடு வொர்க் பண்ணின போது நானும் உணர்ந்தேன். அந்தக் கெத்தான குணம் எனக்குக்கூட இதுவரை வந்ததில்லை. ஆனா, எங்க நட்பு ஆழமான பிறகுதான், மத்தவங்க சொன்னதுல ஒண்ணுகூட உண்மையில்லை என்பதை உணர்ந்தேன்" என்கிற அனுராதா, சில்க் ஸ்மிதா உடனான நட்புத் தருணங்களைப் பகிர்கிறார்.

 

 

``சினிமாவில் பல ஹீரோ, ஹீரோயினுக்கும் மீறிய புகழை, தன் கிளாமர் டான்ஸால் சில்க் பெற்றாங்க. ஆனா, அந்தப் புகழ் அவருக்கு அவ்வளவு எளிதா கிடைச்சுடலை. சினிமா துறையினர் உட்பட பலராலும் பல விதத்துலயும் அவங்க நிறைய மனவேதனைகளை சந்திச்சிருக்காங்க. அந்தப் படிப்பினைகளிலிருந்துதான், தன்னைக் கோபக்காரி மாதிரி வெளிப்படுத்திகிட்டாங்க. வெளியே கோபமான ரூபத்தில் பேசினாலும், `இப்படிப் பேசிட்டோமே'னு பயமும் கவலையும் அவர் மனசுல இருக்கும். இப்படித் தனக்குத் தானே ஒரு வேலி போட்டுக்கிட்டாங்க. அதனால சில்க்கைப் பலரும் தப்பா பேசினாலும், அவரைக் கெட்ட எண்ணத்துடன் எளிதா நெருங்க முடியாம இருந்துச்சு. தன் மனசுல நிறைய வலிகள் இருந்தாலும் அவற்றை எப்போதும் பிறர்கிட்ட பகிர்ந்துக்க மாட்டாங்க. 

சில்க் ஸ்மிதா

சில்க்குக்கு டான்ஸ் வராது. அவரோட வசீகர முகமும், உடலமைப்பும் பெரிய ப்ளஸ். அதை கேரக்டர் மற்றும் டான்ஸ் தன்மைக்கு ஏற்ப சிறப்பா நளினத்துடன் வெளிப்படுத்துவாங்க. அந்த உடலமைப்பு வேறு எந்த நடிகைக்கும் வராது; இதுவரைக்கும் வரலை. அதனால் நானும் பலமுறை ஆச்சர்யப்பட்டிருக்கேன். அதைச் சில்க் கிட்டயே சொல்லியிருக்கேன். இருவருக்கும் ஓய்வுநேரம் கிடைச்சா, மீட் பண்ணுவோம். நிறைய பேசுவோம். காமெடியா பேசுவாங்க. சந்தோஷமான விஷயங்களைப் பத்திச் சொல்லுவாங்க. தன் மனசுல இருக்கிற எதார்த்தமான விஷயங்களைப் பத்தியும் சொல்லுவாங்க. ஆனால், தன் பர்சனல் விஷயங்களை யார்கிட்டயும் பகிர்ந்துக்க மாட்டாங்க. நானும் கேட்டதில்லை. ஒரு லிமிட்டுக்கு உண்டான வகையில் எங்கிட்ட பல விஷயங்களைச் சொல்லியிருக்காங்க" என்கிறார், அனுராதா.

 
 

 

சில்க் ஸ்மிதாவின் இறப்புப் பற்றிப் பேசுகையில், அனுராதாவின் குரல் உடைகிறது. ``அவளின் மரணம் இப்போ வரை மர்மமாகவே இருக்குது. அதற்கு இப்போவரை பல காரணங்கள் சொல்லப்படுது. நிறைய விஷயங்களை வெளிப்படையா சொல்ல முடியாதுங்க. அவங்க எப்படியான சூழல்ல இருந்து தவிச்சுட்டு இருந்தாங்கனு எனக்கு ஓரளவுக்குத் தெரியும். அதையெல்லாம் இப்போ பேசுறது சரிவராது. ஆனா, அவங்க ஒருத்தரைக் காதலிச்சாங்க. அந்தக் காதல் தோல்வியடைந்ததால், மனதளவில் வலிகளுடன் இருந்தாங்க. இந்த விஷயத்தைப் பத்தி ஓரளவுக்கு எங்கிட்ட பகிர்ந்துகிட்டாங்க. முழு விவரங்களும் எனக்குத் தெரியாது. அப்போ என் வீடு கே.கே.நகர்லயும், சில்க் வீடு சாலிகிராமத்துலயும் இருந்துச்சு. அவ திடீர்னு போன் பண்ணி வீட்டுக்கு வரச்சொல்லுவாள். நான் ஃப்ரீயா இருந்தா, உடனே போவேன். மனம்விட்டுப் பேசுவோம். 

சில்க் ஸ்மிதா

செப்டம்பர் 23, 1996-ம் ஆண்டு. அப்போ, ஒரு கன்னடப் படத்தைத் தயாரிச்ச சில்க், அதில் நடிச்சுட்டும் இருந்தாங்க. அந்தப் படத்தில் என் கணவர் சதீஷ்தான் நடன இயக்குநர். சில்க்கின் டான்ஸ் போர்ஷனை முடிச்சு அவளை அனுப்பிட்டு, பிற நடிகர்களின் டான்ஸ் போர்ஷனையும் முடிச்சுட்டு கணவர் எங்க வீட்டுக்கு வந்துட்டு இருக்கார். இரவு 9 மணி இருக்கும். சில்க்கிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு. `அனு, பிஸியா இருக்கியாடீ? என் வீடு வரைக்கும் வர்றியா? கொஞ்சம் பேசணும்'னு சொன்னாங்க. `இப்போதான் நானும் ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு வந்தேன். பிள்ளைக்குச் சாப்பாடு கொடுத்து தூங்க வைக்கணும். சதீஷூம் வீட்டுக்கு வந்துட்டு இருக்கார். அவர் வருவதற்குள் சாப்பாடு ரெடி பண்ணணும். நாளைக்குப் பிள்ளையை ஸ்கூல்ல ட்ராப் பண்ணிட்டு, நேரா உன் வீட்டுக்கு வரேன். ஏதாச்சும் பிரச்னையா? போன்ல சொல்லு. ரொம்ப அவசர விஷயம்னா உடனே வரேன்'னு சொன்னேன். `பரவாயில்லை. நாளைக்கு வா. நேர்ல பேசுவோம்'னு சொல்லிட்டாங்க. அதனால நானும் வீட்டு வேலைகளை முடிச்சுட்டு தூங்கிட்டேன். காலையில சமையல் முடிச்சுட்டு, என் மகளை ஸ்கூலுக்கு அழைச்சுட்டுப் போகும் பரபரப்புல இருந்தேன். என் கணவர் சதீஷ் டிவியில நியூஸ் போட்டார். உடனே, `நடிகை சில்க் ஸ்மிதா மரணம்'னு ஃப்ளாஷ் நியூஸ் ஒளிபரப்பாச்சு. எனக்குப் பேரதிர்ச்சி. கதறி அழுதேன். உடனே சில்க் உடலைப் பார்க்க அவங்க வீட்டுக்குப் போனேன். நடிகை வித்யாவும் அப்போ அங்க வந்தாங்க. சில்க்கின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்ய விஜயா ஹாஸ்பிட்டல் கொண்டுபோயிருப்பதாகச் சொன்னாங்க. உடனே நாங்க இருவரும் ஹாஸ்பிட்டல் போனோம். சொந்தங்கள் இருந்தும், சில்க் தனிமை வாழ்க்கையைத்தான் வாழ்ந்தாங்க. ஹாஸ்பிட்டல்லதான் சில்க்கின் அம்மாவை முதன் முதலா பார்த்தேன். சில்க்கை கடைசியா பார்த்த அந்தத் தருணம் மறக்க முடியாதது.

22 வருஷம் ஓடிடுச்சு. ஒருவேளை அன்னிக்கு இரவு சில்க்கை சந்திக்க நான் போயிருந்தால், அவளின் பிரச்னைக்குத் தீர்வு சொல்லியிருப்பேன். அதனால சில்க் தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டிருக்கலாம். அப்படி நடக்கலை. அதனால, சில்க்கின் மரணத்துக்கு நானும் ஒரு காரணம்னு குற்ற உணர்வு இன்னைக்கு வரை எனக்கிருக்கு. மத்தவங்க பர்சனல் விஷயத்துல தலையிடமாட்டாள்; தன் பர்சனலையும் பிறர்கிட்ட பகிர்ந்துக்க மாட்டாள். ரொம்ப நல்ல மனுஷி. போல்டான பெண். ஆனா, இப்படி ஒரு தவறான முடிவைத் தேர்ந்தெடுத்துக்கிட்டு, தன் 35 வயசுலயே இறந்துட்டாள். சினிமா துறை அழகான, சிறந்த நடிகையை இழந்துடுச்சு. அவளோட இடத்தை இப்போவரை எந்த நடிகையாலும் ஈடுசெய்ய முடியலை" எனக் கண்ணீருடன் முடித்தார் அனுராதா.

 

https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/137590-actress-anuradha-talks-about-her-friend-silk-smitha-memories.html

Link to comment
Share on other sites

சில்க் ஸ்மிதா... மரணமில்லா நாயகி! 


 

 

silk-smitha

சில்க் ஸ்மிதா

 

எந்தப் புண்ணியவான் பேரு வைத்தானோ... மிகச்சரியாகதான் பெயர் வைத்திருக்கிறார்கள், விஜயலட்சுமி என்று. ஆந்திராவில் இருந்து கோடம்பாக்கத்துக்கு விஜயமானாரோ... அப்போதிருந்தே, ஜெயம்தான்.

ஒவ்வொரு படங்களும் வரிசை கட்டி வாசற்கதவைத் தட்டின.  அது அதிர்ஷ்டலட்சுமி என்பதை விஜயலட்சுமி புரிந்து உணர்ந்துகொண்டார். பிறகென்ன... லட்சுமி கடாட்சத்துக்கு குறைவே இல்லை. 

 

1537711808.jpg

1960ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 2ம் தேதி, ஆந்திராவின் ஏலூருவில் பிறந்தார். பிறந்தது ஆந்திரம் என்றாலும் பூர்வீகம் என்னவோ கரூர்தான். இவர்களிடம் சொல்லாமலேயே வீட்டுக்குள் புகுந்து உட்கார்ந்து கொண்டு ஆட்சி செய்தது வறுமை. பசியோடு இருக்கும் சூழலில், படிக்கவும் வழியில்லை. படிக்கவும் புத்தி செல்லவில்லை. 

1537711761.jpg


இவரின் அழகில் எல்லோரும் மயங்கினார்கள். அந்த மயக்கம்தான்  இவரை பயமுறுத்தியது. உடலையும் மானத்தையும் காக்க, தனக்குத் தெரிந்த ஒப்பனைக்கலைக்குள் நுழைய முடிவு செய்து, சென்னைக்கு வந்தார். ஒப்பனையே இல்லாமல், இத்தனை அழகா என்று மொத்த கோடம்பாக்கமே மூக்கில் விரல் வைத்தது. ‘இந்தப் பொண்ணுக்கிட்ட ஏதோ இருக்கு. முக்கியமா, அவ கண்ணுல ஒளி தெரியுது’ என்று அந்தப் பெண்ணிடம் எப்படியோ பேசி சம்மதம் வாங்கினார் வினுசக்ரவர்த்தி. 


விஜயலட்சுமியின் வாழ்க்கைச் சக்கரம் அன்று முதல் வேகமாகச் சுழலத் தொடங்கியது. அதுதான் வண்டிச்சக்கரம். விஜயலட்சுமி. ஸ்மிதாவானார். படத்தில் நடித்த சிலுக்கு... பேருடன் ஒட்டிக்கொண்டது. தமிழ் ரசிக நெஞ்சங்களிலும் பச்சை குத்தப்பட்டது போல பச்சக்கென ஒட்டிக்கொண்டது.


கேமிரா இல்லாமல் கூட படமெடுப்பார்கள். பிலிம் ரோல் இல்லாமல் கூட படமெடுப்பார்கள்.ஹீரோவோ ஹீரோயினோ இல்லாமல் கூட படமெடுப்பார்கள். அப்போது சில்க் இன்றி அமையாது சினிமா உலகு என்பது எழுதப்படாத வெற்றி ஃபார்முலாவானது. படத்தில் ஒரு சின் வந்தாலும், ஒரு பாட்டுக்கு வந்தாலும்... போஸ்டர்களிலும் பேனர்களிலும் சில்க்கின் முகம், முக்கியத்துவத்துடன் பளிச்சிட்டது. 


முதலில் மலையாளப் படத்தில் அறிமுகம் கிடைத்தாலும் வண்டிச்சக்கரம் இவரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. 81ம் ஆண்டு, பாரதிராஜா தன்னுடைய அலைகள் ஓய்வதில்லை படத்தில், அற்புதமான கேரக்டரைத் தந்திருந்தார். இவரும் மிகச்சிறப்பானதொரு நடிப்பை வழங்கியிருந்தார். 


இதன் பிறகு, கங்கைஅமரன் இயக்கிய கோழி கூவுது படத்தில், அருமையான கேரக்டர் ரோல் கிடைத்தது. இந்த முறை கிளாமரும் கேரக்டருமாக சேர்ந்து கலக்கினார். இதே வருடத்தில்தான் இன்னொரு வெளிச்சம்... சில்க்கின் மீது விழுந்தது. 


இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலுமகேந்திராவின் இயக்கத்தில், கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்றாம் பிறையில் ஒரு கேரக்டர். முக்கியமாக ஒரு பாட்டு. பொன்மேனி உருகுதே...பாடலை எப்படி மறக்கமுடியும். கமலும் சில்க்கும் நடனமாடுகிற அசைவுகள், அந்தக் காலத்தில் பிரபலம். பாடலின் உடைகள் கூட பேசப்பட்டன. 


அதன் பிறகு...  உழைப்பு, உழைப்பு, உழைப்பு. கடுமையாக உழைத்தார்.  அடுத்து வந்ததுதான் சகலகலாவல்லவன். மீண்டும் கமலுடன். ஏவிஎம், கமல், இளையராஜா என்கிற கூட்டணியுடன் நேத்து ராத்திரி யம்மா பாடல் பட்டிதொட்டியெங்கும் சில்க்கைக் கொண்டுபோய் சேர்த்தது. 
ஒரு கவர்ச்சிக்கன்னியை, செக்ஸ் நடிகையை, டான்ஸ்க்கு வருகிற நடிகையை, தமிழ் கூறும் நல்லுலகம் தங்கள் வீட்டுப் பெண்ணாகவே பாவித்தது, அநேகமாக சில்க் ஸ்மிதாவைத்தான்! முன்பும் பின்பும் அப்படியொரு பந்தப் பிணைப்பு எவருக்கும் அமையவில்லை. 

 


மூன்று முகம், தங்கமகன், சூரக்கோட்டை சிங்கக்குட்டி, சில்க் சில்க் சில்க், நீங்கள் கேட்டவை, அன்று பெய்த மழையில்... என்று பல படங்கள். காலையில் தமிழில் நடிப்பார். மதியத்தில் தெலுங்குக்கு வாயசைப்பார். மாலையில் மலையாளப் பெண்குட்டியாவார். இரவில் விமானமேறி, ஹிந்திப்படத்தில் மறுநாள் நடிப்பார். காலுக்குச் சக்கரமும் தோளுக்கு றெக்கையும் கொண்டு பறந்தார். 


இப்படித்தான்... சூரியன் கொஞ்சம் மந்தமாகவும் சோகமாகவும் உதித்த ஓர் நாளில், இடியென செய்தி, தமிழகம் முழுவதும் இறங்கியது. இந்தியா முழுவதும் பரவியது. ’சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துகொண்டார். சேதி கேட்ட காற்றே கண்ணீர்விட்டது. திரையுலகமே முடங்கிப்போனது.


மொத்த தமிழகமும் தங்கள் வீட்டில் ஏதோ ஒரு மரணம் சம்பவித்துவிட்டதாக கலங்கியது. பரிதவித்ததது. பதைபதைத்தது. ‘என்னாச்சு... ஏன்... எதனால...’ என்று கூடிக்கூடி பேசி ஆற்றிக்கொண்டது.


‘என்னாச்சு... ஏன்... எதனால...’ என்கிற கேள்விகள், இன்னும் கேள்விகளாகவே! பதில் கிடைத்தபாடில்லை. 


விஜயலட்சுமி என்கிற சில்க் ஸ்மிதாவுக்கு, எல்லாமே ஜெயமானது. வாழ்க்கையைத் தவிர! 


வாழவேண்டுமே என்று ஆசைப்பட்டு ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்து, தமிழகத்தில் இருந்து மொத்த இந்திய மொழிகளிலும் வலம் வந்து, தடக்கென்று ஒரு நாள்... விண்ணுக்குச் சென்றுவிட்டார். 


கண்களாலும் பேச்சாலும் உடல் மொழியாலும் உடற்கட்டாலும் ஆட்டத்தாலும் மக்களைக் கட்டிப் போட்ட சில்க் ஸ்மிதாவுக்கு, மனதில் கொடுத்த அந்த உயர்ந்த இடத்தை இன்று வரை எவருக்கும் தரவில்லை. 


சில்க்கின் இடத்தை சில்க்கால் மட்டுமே நிரப்பமுடியும். 


இன்று... செப்டம்பர் 23ம் தேதி, சில்க் ஸ்மிதா இறந்தநாள்! 


நூற்றாண்டு கொண்டாடிய தமிழ் சினிமா, அடுத்த நூற்றாண்டு கொண்டாடும் போதும் மக்களின் மனங்களில் மாறாப் புகழுடனும் இடத்துடனும் வீற்றிருப்பார் சிலுக்கு! 

https://www.kamadenu.in/news/cinema/6474-silk-smitha.html

Link to comment
Share on other sites

நேர்வே ரடம்மன் என்னுமிடத்தில் சில்க் தன் பெண்டாட்டி என்று சொல்லிக் கொண்டு ஒருவர் திரிகிறார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, lusu said:

நேர்வே ரடம்மன் என்னுமிடத்தில் சில்க் தன் பெண்டாட்டி என்று சொல்லிக் கொண்டு ஒருவர் திரிகிறார்

ரடம்மனிலை  சிலுக்கின்ரை கலை நிகழ்ச்சி ஏதும் நடந்ததோ? :27_sunglasses:

பà¯à®©à¯à®®à¯à®©à®¿ à®à®°à¯à®à¯à®¤à¯ à®à¯à®à®¾à®© ப஠மà¯à®à®¿à®µà¯

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, lusu said:

நேர்வே ரடம்மன் என்னுமிடத்தில் சில்க் தன் பெண்டாட்டி என்று சொல்லிக் கொண்டு ஒருவர் திரிகிறார்

 

உண்மையா இருக்கும்.

இலண்டணில் அரவிந்தன் என்று  ஒருவர் முன்னால் கவர்ச்சி நடிகை மாதிரியை கட்டினார். விசா கிடைக்கல்ல... இவர் இங்க இருந்து ஏஜன்சி அலுவல் பார்க்க , போடாங் ......கொய்யால எண்டு, பட்சி பறந்து விட்டது.

முதல் மரியாதை படத்தில் நடித்த ரஞ்சனியை, கேதீஸ்வரன் என்று ஒருவர் கட்டிக்கொண்டு வந்து, இரண்டு பேருமா டிராவல் ஏஜன்சி நடத்தினார்கள்.

சரிவரல்ல...... ஆள் கிளம்ப.... நம்மாளு... நெடுந்தீவில பிரதேச சபை எலக்சனில நின்றார்.

Link to comment
Share on other sites

என்ன பொருத்தம் இவரும் ட்ராவல் ஏஜென்சி தான் வைத்திருக்கிறாராம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.