Jump to content

சர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்


Recommended Posts

சர்வதேச ரீதியாக சர்ச்சையை கிளப்பிய எஸ்.பி.யின் கருத்து : இன்று பல்டி அடித்தார்

 

 
 

இராணுவத்திடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகள் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதாக கடந்தவாரம் அம்பலப்படுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று, நான் அவ்வாறு கூறவில்லை எனவும் ஊடகவியலாளர்களே தவறாக பிரசுரித்து விட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

sp.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி கேர்ணல் ரமேஷ் சரணடைந்தார். அவரை கொன்றுவிட்டனர் என்று கடந்தவாரம் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

இராணுவத்தினரை யுத்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்குமாறு ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுக்கவுள்ளார்.

இவ்வாறான நிலையில் எஸ்.பி. திஸாநாயக்கவின் மேற்படி கருத்து தெற்கு அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

போர்க் குற்றங்களை உறுதிப்படுத்திய எஸ்.பி. திஸாநாயக்கவின் கூற்றுக்கள் தொடர்பில் விசாரணையொன்றுக்கு உட்படுத்தப்போவதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான அமைச்சர் மஹிந்த சமரசிங்க எச்சரித்திருந்தார்.

இந்நிலையிலேயே எஸ்.பி. திஸாநாயக்க மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் செப்டெம்பர் 20 ஆம் திகதியான வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று மீண்டும் தெரிவித்திருக்கின்றார்.

”கடந்த 20 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நான் வெளியிட்ட கருத்தை சில ஊடகங்கள் சரியாகவெளியிட்டிருந்தன.

 இருந்த போதிலும் சில ஊடகங்கள் பிழையாக வெளியிட்டிருந்தன. கேர்ணல் ரமேஷ் சரணடைந்தது குறித்த விடயம்தான் அது. நான் மிகவும் தெளிவாக கூறியது என்னவென்றால் ரமேஷ், கருணாவிடமிருந்து விலகி விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்ததை அடுத்து விடுதலைப் புலிகளின் தலைவர் அவரை சிறைவைத்தார். ஏனென்றால் ரமேஷ் மீதான நம்பிக்கை இல்லாமையே அதற்குக் காரணம்.

யுத்தத்தில் தோல்வியடைந்துவரும் நேரத்தில்தான் ரமேஷ் விடுதலை செய்யப்பட்டார். அப்போதுதான் ரமேஷ் என்னை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு தாம் சரணடையப்போவதைத் தெரிவித்தார். 

அப்போது விடுதலைப் புலிகளில் சிலர் சரணடைய வருவோர் மீது தாக்குதல் நடத்துவதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.

 உண்மையிலேயே ரமேஷ் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் படையினரால் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது விடுதலைப் புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டாரா என்பதை என்னால் நூற்றுக்கு நூறுவீதம் உறுதியாகக் கூறமுடியாது. 

எனினும் கடந்த காலங்களில் அவர் படையினரால் படுகொலை செய்யப்பட்டதாக பேசப்பட்டது. 

மீண்டும் ஒன்றைக் கூறுகிறேன். ரமேஷ் படையினரிடம் சரணடைந்த பின்னர் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார் என்று நான் கூறவில்லை. அப்படிஎன்னால் கூறமுடியாது. அதுகுறித்து எனக்குத் தெரியாது. 

அவர் சரணடைய வந்தார். சரணடைய வந்தவர்களில் 90 வீதமானவர்களை படுகொலை செய்தது விடுதலைப் புலிகளே என்றே கூறினேன். 

தாய்மார்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த ரமேசும் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டாரா அல்லது படையினரால் படுகொலைசெய்யப்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது என்றே கூறினேன். 

மாறாக ரமேஷ் ஸ்ரீலங்காபாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்தார், சரணடைந்த பின்னர் இராணுவத்தினரால் அவர் படுகொலைசெய்யப்பட்டார் என்று ஒருபோதும் நான் கூறவில்லை.

ரமேஷ் சரணடைய வந்தார். இன்னும் 10 நியமிடங்களில் சரணடையப்போவதாக எனக்கு தொலைபேசி ஊடாகக் கூறினார் என்றுதான் தெரிவித்திருந்தேன். 

அப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் ரமேஷ் மீது கடும் கோபமாகவே இருந்தார். சரணடைவதாக கூறிய ரமேஷை யார் படுகொலை செய்தது என்று தெரியாது. ரமேஷை படையினர்தான் கொன்றார்கள் என்று நான் கூறவேயில்லை. 

எனினும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் அப்படிப்பட்ட செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தேன்” என்றார்.

எவ்வாறாயினும் கேர்ணல் ரமேஷ் சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் அவர் இராணுவ காவலரனொறில் இருப்பது போன்ற காட்சிகளும், பின்னர்அவர் கொலைசெய்யப்பட்டு கிடப்பது போன்ற காட்சிகளும் அடங்கிய காணொளியொன்றை பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது.

ஆனால் இராணுவத்திடம் சரணடைந்த கேர்ணல் ரமேஷை சிறிலங்கா இராணுவத்தினரால் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளால் எவ்வாறு கொலைசெய்யப்பட்டார் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெளிவுபடுத்த தவறிவிட்டார்.

”சரணடையும்படி நான் அவரிடம்கூறினேன். பெப்ரவரி 22 ஆம் திகதி ரணில் - பிரபாகரன் ஒப்பந்தத்தின் பின்னர் ரமேஷ் எங்களுடன் இணைந்துசெயற்பட்டார். நான் அப்போது மட்டக்களப்பிற்குச் சென்றபோது இடையே பொலிஸார் அனைவரையும் நீங்கும்படி கூறினார்கள். பின்னர் எனது வாகனத்தில் முன்னைய ஆசனத்தில் ரமேஷ்தான் அமர்ந்தார். மட்டக்களப்பிலுள்ள அனைத்து விவசாய பண்ணைகளுக்கும் அவர் எங்களை அழைத்துச் சென்றிருந்தார். அப்போது நான் விவசாய அமைச்சராக கடமையாற்றியதினால் அவற்றை அபிவிருத்தி செய்வதற்காக அவர்களுக்கு பெருந்திரளான நிதியை வழங்கியிருந்தோம். 

அது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியாக இருந்ததோடு அப்போது நான் விவசாய மற்றும் கால்நடை அமைச்சராக இருந்தேன். அந்தப் பண்ணைகளை அபிவிருத்தி செய்வதற்கு பெரும் தொகையான நிதியை வழங்கியிருந்தோம். 

இறுதியாக மட்டக்களப்பிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகத்திற்கு ரமேஷ் என்னை அழைத்துச்சென்றார்.

அந்தப் படைத் தலைமையகத்தை அலரி மாளிகையைப் போலவே செய்திருந்தார்கள். எனினும் அந்தக் கட்டிடத் தொகுதியை முழுமையாக தீயிட்டுக் கொளுத்திய பின்னரே கருணா இந்தப் பக்கமாகத் தாவினார். 

அங்கு கருணாதான் இருந்தார். ரமே{டன் அங்கு சென்று மதியபோசன உணவை அங்குதான் எடுத்திருந்தோம். அதன் பின்னர் அவர் எமது பொலிஸாரிடம் என்னை அழைத்துச் சென்று ஒப்படைத்திருந்தார். 

அந்தக் காலத்தில் இருந்து அவரை எனக்குத் தெரியும். அவர் என்னுடன் உரையாடுவார். அவர் கொழும்பிற்கும் வந்திருந்தார். 

ஒரு சந்தர்ப்பத்தில் தமிழ் -சிங்கள சித்திரை புத்தாண்டில் எனது இல்லத்திற்கு அவர் வந்து கொண்டாடியிருந்தார். அவருடன் சகோதரத்துவம், நட்புறவை ஏற்படுத்துவதே எமது நோக்கமாக இருந்தது. அவர் சரணடைவதாக என்னிடம் தெரிவித்திருந்தார். அதனால் விடுதலைப் புலிகளே சரணடைந்த மக்களை அதிகமாக படுகொலை செய்தார்கள்” என்றார் அவர்.

http://www.virakesari.lk/article/40894

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.