Jump to content

விருந்து!


Recommended Posts

 
விருந்து!
 
 
 
E_1536917073.jpeg
 
 
 

குத்து விளக்கு வடிவில் சீரியல் செட், மஞ்சள், பச்சை வண்ணத்தை சிதறிக் கொண்டிருக்க, அதன் பக்கத்தில் வணக்கம் சொல்லும் வளையல் அணிந்த பெண் கைகள் இரண்டு அழகாய் ஜொலித்துக் கொண்டு இருந்தன.
இரண்டு புறமும் அழகாய், அடர்த்தியான வாழை மரங்கள் கட்டப்பட்டு இருக்க, அதன் உச்சியில் தென்னை குருத்து கட்டப்பட்டு இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன் நடப்பட்ட பந்தக்காலின் உச்சியில், மஞ்சள் துணியில் நவதானிய மூட்டை புஷ்டியாக காட்சி தந்தது. வாசல் முழுக்க தென்னை தடுக்கு வேயப்பட்டு இருக்க, அந்த விசாலமான இடத்தில், 'இன்ஸ்டென்ட்' நட்பு கிடைத்த சின்ன குழந்தைகள் ஓடிப்பிடித்தும், ஒளிந்தும் விளையாடிக் கொண்டு இருந்தன.
வாசலில் மடக்கு நாற்காலியில் அமர்ந்து இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த கதிர், வாசலில் வந்து நின்ற கால் டாக்சியை பார்த்து மிகவும் உற்சாகமானான்.


''டேய் மச்சான்...'' கத்தியபடி ரவி, பாலு, சிவா, அனு மற்றும் சவிதா என்று ஒரு பட்டாளமே என்ட்ரி ஆனது. முன் சென்று அவர்களை அழைத்து வந்தான், கதிர்.
''என்னடா மாப்பிள்ளை... இப்படி சர்க்கஸ் குரங்கு மாதிரி உட்கார்ந்து இருக்க... விடிஞ்சா உனக்கு கல்யாணம்டா,'' - அவன் விலாவில் இடித்தான், பாலு.
''தோடா... இதைச் சொல்லத் தான் சென்னையில இருந்து இந்த பட்டிக்காட்டுக்கு இவரு டிராவல் பண்ணி வந்திருக்காரு...'' - தப்பாய் சொல்லி விட்டதாய் எண்ணி உதடு கடித்தாள், அனு.
''ஹலோ... அனு... இதொண்ணும் பட்டிக்காடு கிடையாது. என்ன, நம்ம சென்னை மாதிரி மெட்ரோ பாலிடன் சிட்டி இல்லாட்டியும், இது தாலுகா தான். நீ கேள்விபட்டதில்ல, ஏ சென்ட்டர், பி சென்ட்டர், சி சென்ட்டர்ன்னு. சென்னை, ஏ சென்ட்டர்னா, இந்த ஊரு, பி சென்ட்டர் அவ்வளவு தான்...'' கதிர் பேசப்பேச மற்றவர்கள் கோரசாய் கத்தினர்.
''பாருடா... இப்பயே மாமனார் ஊரை விட்டு கொடுக்காம பேசுறதை... சப்பை கட்டு கட்டறான் மாப்பிள்ளை...''
''ஏய், சும்மா வம்பு பண்ணாதீங்கடா... இங்க எங்க சொந்தக்காரங்க எல்லாரும் இருக்காங்க... நீங்க சீக்கிரம் வந்திருந்தா நாம ஊரை சுத்தி பார்த்து இருக்கலாம்.''
அதற்குள், அனு கண்களை விரித்து, அந்த இடத்தைப் பார்த்தாள்.
''கதிர்... இது, கல்யாண மண்டபமா... இல்ல வீடாடா... இவ்வளவு பெரிசா இருக்கு?''
வாய்விட்டு சிரித்தான் கதிர்.


''அனு... இது பொண்ணோட வீடு... இங்கயெல்லாம் மண்டபத்துல வச்சு கல்யாணம் பண்ணா மரியாதை இல்லை தெரியுமா... ஏன்னா, எல்லார் வீடும் மண்டபத்திற்கு நிகராத்தான் இருக்கும். வீடில்லாதவங்க தான் சத்திரத்துல வச்சு கல்யாணம் பண்ணுவாங்கன்னு சொல்லுவாங்க இங்க.''
''சத்திரம்னா?''
''மேரேஜ் ஹால்... நீ ரொம்பவே பந்தா பண்ற சவிதா... என்னவோ, அமெரிக்கா - சவுத் ஆப்பிரிக்கா கொலாபிரேஷன்ல பிறந்தவ மாதிரி,'' அனு சொல்ல, சிரித்தனர்.
''டேய் ஜொள்ளு மன்னா... நாளைக்குத்தானேடா கல்யாணம்... இப்பயே இங்க வந்து உட்கார்ந்து எதுக்குடா வாட்ச்மேன் வேலை பாக்குற?''
''டேய் லுாசு... எங்க மாமனாருக்கு, ரெண்டு பையன், ஒரே பொண்ணு. அதனால, எங்க கல்யாணத்தை ரொம்ப தடபுடலா நடத்திட்டு இருக்காரு... உள்ளூர்ல இருக்கிற எங்க சொந்தக்காரங்களைக் கூட கூட்டிவந்து இங்க தங்க வச்சு விருந்து போட்டுட்டு இருக்கார்டா... மாடி முழுக்க நாம தங்கறதுக்குத் தான். சாப்பிட்டு சாப்பிட்டு அஜீரணமா போச்சு... வேளைக்கு நாலு சோடா குடிக்கறேன்னா பாருங்க.''
''டேய் மச்சான்... இதை, நீ நம்புற... பொண்ணை, 'சைட்' அடிக்கத்தான் இப்பயே, இவன் இங்க, 'டேரா' போட்டிருக்கான்... நீ என்னடா நினைக்கிற, பாலு.''
''நிஜத்துல நம்ம பார்ட்டி கொஞ்சம், 'ஜொள்' தான். ஆனாலும், 'இந்த வீட்டில் அதெல்லாம், 'ஒர்க்-அவுட்' ஆகும்ன்னு தோணல... ஏன்னா, இவன், பொண்ணை யாருக்கும் தெரியாம பாக்கறேன்னு போய் எங்கயாச்சும் மாட்டிட்டு வழி தெரியாம முழிச்சா, என்ன பண்றது சொல்லு. அப்புறம் காலையில தாலி கட்டற நேரம் வந்திருச்சு, மாப்பிள்ளை எங்கிருந்தாலும் வரவும்...' அப்படின்னு அறிவிப்பு செய்வாங்க,'' அவன் இப்படி சொல்ல... அங்கே, ஆனந்த தீ பற்றிக் கொண்டு சந்தோஷ பொறி பறந்தது.
''பீப்... பீ... பீப்... பீ...'' அசல் நாதஸ்வர சத்தம் சரியாய் ஒத்துழைக்காத சீவளி வழியாக பிரதேசம் முழுக்க கல்யாண சேதியை சொன்னது.
விடிகாலையிலே எழுந்து, குளித்து முடித்து, பட்டு வேட்டி - சட்டையுடன் தயாராகி இருந்தான் கதிர். நுனி நாக்கு ஆங்கிலமும், நாகரிகத்தின் வரம்பு நிலையைக் கடந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் இருந்தான். ஐந்து இலக்க உச்சத்தில் சம்பளம். ஆனாலும், பழைய பண்பும், இயல்பும் மாறாதவன்.
அப்பா, தாத்தா விருப்பப்படி, அவர்கள் ஊரின் பெரும்புள்ளி மகளான சீதாவை, முறைப்படி பார்த்து, அவளுடைய அழகில் மதிமயங்கி, திருமணம் முடிக்க காத்திருந்தான்.
காலையில், உறவினர் மற்றும் நண்பர்கள் என்று பெருங்கூட்டம் சாப்பிட்டு முடித்திருந்தது.


சீதாவின் அப்பா மாணிக்கம், தன்னுடைய பண பலத்தை, உணவு அயிட்டங்களின் எண்ணிக்கையில் காட்டி இருந்தார். இதெல்லாம் பார்க்க பார்க்க, ரொம்பவும் புதிதாக இருந்தது அனுவிற்கும், சவிதாவிற்கும். 'பபே சிஸ்டமும்' வாய்க்குள் நுழையாத பேருள்ள பண்டமும், சென்னையில் பார்த்தவர்களுக்கு, ஆறு வகை இட்லியும், நான்கு வகை இடியாப்பமும், எட்டு வகை தோசையும் ஆச்சரியத்தை தந்தது.
வாழைப்பழ அளவிற்கு மைசூர் பாகையும், அப்பளம் அளவில் ஜாங்கிரியையும் பார்த்து மிரண்டு போயினர்.
''ஐ கான்ட் ஈட்...'' இப்படியும் அப்படியும் நெளிந்தபடி, திருவிழா கூட்டத்தில் தலை மழித்த கதையாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தொட்டு வைத்து, அனுவும், சவிதாவும் இலையை மூட, தள்ளி அமர்ந்திருந்த கதிர், முகம் சுருங்கினான்.
பொதுவாகவே, உணவை வீணாக்குவோர் மீது அவனுக்கு பெரும் கோபம் வரும். அவன் கடிந்து கொள்ள வாய் திறக்கும் முன், பெண்ணின் பெரியப்பாவும், அப்பாவும் அங்கு வந்து நின்றனர்.
''என்ன தங்கச்சிமார்களா... சாப்பாட்டை சாப்பிடாம அப்படியே மூடி வச்சிட்டீங்க... அதுல எதுவும் குறையா?'' என்றனர் பதறிப்போய்.
''ஐயோ... அங்கிள், அயிட்டம் எல்லாம் சூப்பரா இருக்கு... சொல்லப் போனா, நாங்க இது மாதிரி பார்த்தது கூடயில்ல... ஆனா, இத்தனையும் சாப்பிட எங்ககிட்டத்தான் வயிறு இல்ல.''


அவர்கள் உதடு பிதுக்கி சிரிக்க, அப்போதுதான் பெரியப்பாவும், அப்பாவும் திருப்தி அடைந்தனர்.
''அதான பார்த்தேன்... ஒவ்வொரு அயிட்டத்திற்கும் ஒரு ஜாம்பவானை கூட்டியாந்துல பண்ணி இருக்கோம்... எப்படி பிடிக்காம போகும்கறேன்... நீங்க இவ்வளவு துாரம் வந்து ஒருவாய் சாப்பிட்டு போனாலே, எங்களுக்கு ரொம்ப திருப்தி தான். ஆனா, கோவிச்சுட்டோ, இல்லை வேறு எதனாலயோ சாப்பிடாம போனா, உண்மையில ரொம்பவும் வருத்தப்படுவோம்,'' என்று சொல்ல, அவர்கள் வாயெல்லாம் பல்லாக, சிரித்தனர்.
காலை சிற்றுண்டி முடிந்ததுமே, முகூர்த்த வேலை வந்துவிட, சொந்தங்கள் புடைசூழ, அட்சதை துாவி அனைவரும் ஆனந்தக் கண்ணீர் விட, சீதாவின் கழுத்தில் மங்கல நாண் பூட்டினான், கதிர்.
வாழ்த்துகள், பரிசுகள், அரட்டை, பேச்சு என்று அடுத்த இரண்டு மணி நேரம் ஓடிப்போக, வீடியோவுக்கும், போட்டோவுக்கும் போஸ் கொடுத்து அலுத்துப் போய், வாசலில் இருந்த மடக்கு நாற்காலியில் சரிந்திருந்தான், கதிர். உள்ளே, பந்தி போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன.
முன்பக்கம் வெறிச்சோடியும், ஆங்காங்கே குழுக்களாகவும் பிரிந்து, அரட்டை அடித்தபடி உறவினர்கள் இருக்க, தயக்கமாக உள்ளே நுழைந்தான், அவன்.
வெளிரிய கருப்பில் பேன்ட்டும், நீல நிறத்தில் சட்டையும் அணிந்திருந்தான். கல்யாணத்திற்கு அணிந்து வரும் உடை போல் இல்லை பார்ப்பதற்கு.
''யாருங்க வேணும்?'' என்றான் நிமிர்ந்து.
லேசாய் தடுமாறியவன், பின் தயங்கியபடி சொன்னான், ''நான் மாப்பிள்ளை கதிரோட ப்ரெண்ட்!''
''நாந்தான் அந்த கதிர்... நீங்க, யாருன்னு சரியா தெரியலயே.''
''நான் மாலி, இந்த ஊர் முத்தையா ஸ்கூல்ல ஏழாவது வரை ஒண்ணா படிச்சோம்... என்னை கூட நீங்க... மாலின்னு கூப்பிடாம, கோமாளின்னு கூப்பிடுவீங்க நியாபகம் இருக்கா?'' அவன் தயக்கமாய் வார்த்தைகளைக் கோர்த்தான்.
அவன் கண்களை உற்றுப் பார்த்தான் கதிர்.


''அப்படியா...''
''ஆமாம் கதிரு... இப்ப நான் இங்க இல்ல, பக்கத்து ஊருக்கு போயிட்டேன்... இந்த பக்கம் வரும்போது போர்டு பார்த்தேன். அது, நீயா இருக்குமோன்னு நினைச்சு வந்தேன். பார்த்துட்டேன்,'' அவன் பார்வை, பந்தி நடைபெற்ற இடத்திலேயே நிலைத்திருந்தது. அவன் தொண்டை குழியின் நரம்புகள் ஏறி இறங்கி, ஆசையை வெளிப்படுத்தியது.
பக்கத்தில் வந்து, அவன் முதுகில் தட்டினான், கதிர்.
''சாரி மாலி... நான் மறந்திட்டேன்... அதனாலயென்ன, இப்போ நியாபக படுத்திக்கறேன்... நீ வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம்... போய் முதல்ல சாப்பிடு,'' என்றான், அவனுடைய கைகளை குலுக்கி.
அவன் கண்களில் நிம்மதி பெருமூச்சு.
''முன்னமே தயாரா வந்திருந்தா, உனக்கு ஏதாவது கொண்டு வந்திருப்பேன்... எதுவும் குடுக்காம எப்படிடா சாப்பிடறது?'' என்றான் தயக்கமாக. ஆனாலும், அவன் கண்கள், இன்னும் கூட பந்தி கூடத்திலே நிலைத்து தான் இருந்தது.
''ஏய்... அதனால என்னடா... நீ என் ப்ரெண்ட்... அதுவும், இத்தனை ஆண்டுக்கு பின் நீ என்னை பார்க்க வந்ததே பெரிய, 'கிப்ட்!' முதல்ல சாப்பிடு... அப்பத்தான் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.''
அவனை அன்போடு தோளில் தட்டி அனுப்பி வைக்க, அதற்குள் முதல் பந்தி முடித்து வந்தவர்கள், இவனிடம் கை கொடுத்து வாழ்த்து சொல்ல வர, கொஞ்சம் பிசியானான்.
''யாருப்பா நீ?'' இலை போட்டவன், சந்தேகமாய் கேட்டான்.
''யாரா... நான் கதிரோட ப்ரெண்டு பா... நானும், அவனும் நம்மூர், முத்தையா ஸ்கூல்ல ஏழாவது வரைக்கும் ஒண்ணா படிச்சோம்... அப்பயே பய சூட்டிகையாத்தான் இருப்பான்... செவசெவன்னு, சேட் வீட்டு புள்ளை மாதிரி அத்தனை அழகா இருப்பான்... நட்பை மறக்காம இருக்கான் பாரு... அதான் பெரிய விஷயம்,'' மாலி சத்தமாய் சொல்லி சிரித்தான்.


இந்த சத்தமும், பேச்சும், அவனுக்கு கதிருடன் இருக்கும் நெருக்கத்தை மற்றவர்களுக்கு சொல்லட்டும் என்பது போல் இருந்தது.
இலை போட்டவன் நகர, மல்லிகைப் பூ சோறும், எட்டு வகை கறியும், ஆறு வகை இனிப்பும், ஊறுகாய் மற்றும் அப்பளம் என்று இலையே மறையும்படி பரிமாறப்பட்டது.
மாலி, கண்களை மூடி காத்திருந்தான், அத்தனை பதார்த்தங்களாலும் இலை நிறையட்டும் என்று. அவனுக்கு ரொம்ப நாளாய் இந்த ஆசை இருக்கிறது. இலை நிறைய சாப்பாட்டை போட்டு, அதற்கு முன் அமர்ந்து வயிறார சாப்பிட வேண்டும் என்று.
நிறைந்த இலையை கண்களை விரித்து பார்த்தான். சாப்பாட்டை பார்க்கும்போது, மனசு குதுாகலப்பட்டது. மல்லிகைப் பூ சோற்றில், தங்கத்தை வார்த்த மாதிரி சாம்பாரை ஊற்றியதும், ஆவலாய் பிசைந்து அள்ளி வாயில் வைக்கப் போனான்...
தாடை வரை உயர்ந்த கையை, சட்டென்று ஒரு கை பற்ற, அன்னத்திற்கு திறந்த வாயை மூட மறந்து அண்ணாந்து பார்த்தான்... பெண்ணுடைய அப்பா, பெரியப்பா, அண்ணன் என்று ஒரு கூட்டமே நின்றது.
''தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்க, சொந்தம் பந்தம்ன்னு ஒரு கூட்டமே காத்திருக்கு சாப்பிட... நீ யாரு, ரெண்டாம் பந்தியில,'' பெண்ணின் அப்பா சந்தேகமாய் கேட்டார்.
''நான் மாலி... மாப்பிள்ளையோட ப்ரெண்ட்...'' வார்த்தைகள் அடித் தொண்டையில் சிக்கிக் கொண்டன.
''எந்த ஊரு?''
''இந்த ஊர் தான்... முத்தையா ஸ்கூல்ல, ஏழாவது வரை ஒண்ணா படிச்சோம்,'' அவன் எச்சில் கூட்டி சொல்ல...
''பொய்யா சொல்ற?'' அவன் பொடறியில் கை வைத்து தள்ளி வந்தனர்.
''ஏன்டா... எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க இந்த மாதிரி... மாப்பிள்ளை இந்த ஊர்ன்னு தெரிஞ்சுகிட்டு கூடப் படிச்சேன், விளையாடினேன்னு சொல்லிட்டு வர்றீங்க...
''அவர் இந்த ஊர்னாலும், படிச்சதெல்லாம் இங்க இல்லைங்கற அடிப்படை விஷயம் கூடத் தெரியாமயா நாங்க பொண்ணு குடுக்கறோம்ன்னு நீ நினைச்சுட்ட... நித்தமும் இது மாதிரியான திருட்டு கும்பல் பத்தி நாம, 'டிவி'யிலயும் பேப்பர்லயும் எத்தனை பாக்குறோம்... அப்படி இருந்தும், இவன் எப்படி உள்ள வந்தான்... யார் இவனை உள்ளே விட்டது?'' பெண்ணின் அப்பா சத்தம் போட்டதில், அந்த இடமே பரபரப்பானது.
சத்தம் கேட்டு, கதிரும் அந்த இடத்திற்கு விரைந்தான். மாலியும், அவனுடைய குனிந்த தலையும், அவனை சுற்றி இருந்த கூட்டமும், நடந்ததை வார்த்தையின்றி விளக்க, அவனுடைய இதயத்தில் இரக்கம் சுரந்தது.


''என்னாச்சு மாமா...''
''மாப்பிள்ளை... உங்க ப்ரெண்டுன்னு சொல்லிட்டு, இவன் பந்தியில வந்து உட்கார்ந்துட்டு இருக்கான். காலம் கெட்டு கிடக்கு... இவனை மாதிரி ஆளுங்க தான் முழிச்சிருக்கும் போதே கழுத்தை அறுக்கறவங்க,'' பெண்ணின் பெரியப்பா சத்தமிட, மாலியின் கண்களில் அனிச்சையாக கண்ணீர்.
''ஐயா... அப்படியெல்லாம் சொல்லாதீங்க... எனக்கு பக்கத்து ஊரு... ரொம்ப வறுமை... உழைச்சாத்தான் சாப்பாடுன்னு எனக்கும் தெரியும்... ஆனா, உழைக்கணும்ன்னா கூட உடம்புல தெம்பு இல்ல... சாப்பிட்டு மூணு நாளாச்சு...
''இப்படி சொன்னதும், ஏதோ மூணு நாளாத்தான் நான் வறுமையில இருக்கிறதா நினைச்சிடாதீங்க... மூணு நாளைக்கு முன், யாரோ ஒருத்தர் புண்ணியத்துல வழியில அன்னதானம் சாப்பிட்டேன்... அதுக்கு பிறகு பருக்கை சோறு கூட வயித்துல விழல...
''என் நண்பர்கள் எல்லாம் இப்படி கல்யாண வீடுகள்ல ஏதாவது பொய்யை சொல்லிட்டு, உள்ள போய் நல்லா சாப்பிட்டதா சொல்வாங்க... எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை...


''இந்த பக்கம் வந்தேன், குப்பை தொட்டியில நிறைய வீணான சாப்பாடு, இனிப்புன்னு பார்த்ததும், கொஞ்சம் மனசு தடுமாறிட்டேன்... வயிறார சாப்பிட்டா, அந்த தெம்புல ரெண்டு நாள் அலையலாம்ன்னு நினைச்சுத் தான் பொய் சொல்லிட்டேன்... மன்னிச்சுடுங்க,'' அவன் தலையை உயர்த்தாமலே கையை மட்டும் உயர்த்தி மன்னிப்பு கோர, எல்லாரும் ஒரு கணம் குற்ற உணர்வில் தலை குனிந்து நின்றனர்.
''நாங்களும் மோசமானவங்க இல்ல... நல்லது, கெட்டது பேப்பர்ல படிக்கிறோம்... அதனால தான் யாரைப் பார்த்தாலும், எச்சரிக்கையா இருக்க வேண்டி இருக்கு... அது எங்க பக்க நியாயம்... சாப்பிட்டு போறப்ப, எதையும் துாக்கிட்டு போயிட்டா என்ன பண்றது... அது சரி, இன்னும் நிறைய பேர் வேண்டியவங்க சாப்பிட இருக்காங்க... நீ காத்திருந்து, கடைசி பந்தியில சாப்பிட வேண்டியது தானே,'' என்றார், பெண்ணின் அப்பா.
''எச்சரிக்கையா இருக்கிறதா சொல்லிட்டு, நாம நம்ம இதயத்தை இழந்துட்டே இருக்கோம் மாமா... அவர் மேல சந்தேகமாவே இருந்தாலும், அவர் சாப்பிடும் வரை காத்திருந்திருக்கலாமே... தேவை தீர்ந்ததும், மனுஷன் உட்காராத இடம் இந்த சாப்பாட்டு மேஜை ஒண்ணு தான்... அந்த இடத்தில ஒருத்தன் வந்து ஆவலா உட்கார்ந்து இருக்கான்னா, அவனுடைய பசி எத்தனை கொடியது...


''அவரை உள்ள அனுப்பினது நான் தான்... எனக்கு அப்பயே தெரியும், அவர் பொய் சொல்றார்ன்னு... அவர் கண்ணுல இருந்த பசி ஏக்கம், என்னை ரொம்ப கஷ்டப்படுத்துச்சு... அதான் உள்ள அனுப்பினேன்... காலையில, என்னோட பட்டணத்து நண்பர்கள், சாப்பிடாம வீணாக்குன உணவு, உங்க பெருமைன்னு சொன்னீங்க... இன்னைக்கு, இந்த மாலியோட இலையில சாப்பிடாம வீணான உணவு, உங்க பெருமை இல்ல சிறுமை.''
''மாப்பிள்ளை... கோவப்படாதீங்க...''
''கோபம் இல்ல மாமா... வருத்தப்படறேன்... பணக்காரன் தட்டுல நாம பரிமாறுற பதார்த்தம் நம்முடைய வசதிக்கான அங்கீகாரம்ன்னு நாம நினைக்கிறோம்... ஏழையோட அங்கீகாரம் நமக்கு தேவையில்லையே... ஆனா, நிஜத்துல விருந்து ஏழைக்குத்தான் வரம்... பணக்காரனுக்கு அது வெறும் அஜீரணம் தான்,'' சொல்லிவிட்டு திரும்பி பார்த்தான். மாலி இல்லை.


''மாலி... மாலி...'' வாசல் வரை எட்டிப் பார்த்து குரல் கொடுத்தான்.
''அவர் அப்பயே போயிட்டார்டா,'' பக்கத்தில் வந்து சொன்னான், பாலு.
விரித்திருந்த இலையும், பரிமாறிய உணவும் கேட்பாரற்றுக் கிடக்க, அதை ருசிக்க காத்திருந்த நாவும், வயிறும் அங்கே இல்லை.
இலையை கீழிருந்து மேலாக மாற்றி மூடினான். கண்கள் பனித்தது.
''இந்த இலையில இருக்கற உங்க பணப் பெருமையை வழக்கம் போல, குப்பையில போட்ருங்க,'' என்றபடி நடந்தான், கதிர்.
''யாருப்பா அது... பந்தி நடக்கட்டும்... என்ன, எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு நிக்கிறீங்க... சீதாவும் வந்திருச்சு... மாப்பிள்ளை, வந்து இப்படி உட்காருங்க... நானே உங்களுக்கு பரிமாறேன்,'' சூழலை இளக வைக்க, பேச்சை மாற்றி எல்லாரையும் உற்சாகப்படுத்த முற்பட்டார், பெண்ணின் அப்பா.


''இல்ல மாமா... இத்தனை பேர் சாப்பிடற என்னோட கல்யாண விருந்தை, நான் சாப்பிட மாட்டேன். அதுதான் உங்களுக்கு மட்டுமில்ல, இங்க இருக்கிற எல்லாருக்குமே பாடம். உண்மையான விருந்து, பசியோட இருக்கறவனுக்குத்தான்னு இவங்க எல்லாரும் புரிஞ்சுக்கணும்... அவங்கவங்க வீடுகள்ல விசேஷம் நடக்கும் போதாவது இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்காம, இந்த நிகழ்ச்சி பாடமா அமையணும்... இப்போ, நான் சாப்பிட்டாலும், இந்த சாப்பாடு எனக்கு இனிக்காது,'' என்றான், உறுதியாக.
''நான்னு சொல்லாதீங்க... நாங்க சாப்பிட மாட்டோம்ன்னு சொல்லுங்க,'' அப்பாவின் புறம் நின்ற சீதா, கதிரை நோக்கி அடியெடுத்து வைத்தாள்.
எல்லாரும் தவிப்பாய் பார்க்க, இருவரும் பந்தி நடக்கும் இடத்தை விட்டு வெளியேறினர்.
தெருக்கோடி வரை சென்று, மாலியை தேடி, தோற்று தளர்வாய் திரும்பியவன், குப்பை தொட்டியை திரும்பி பார்த்தான். வீணான பதார்த்தங்கள், வேதனையாய் இவனைப் பார்த்து சிரித்தன.

 

எஸ்.மானஸா

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44410&ncat=2

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சீதா உஷாராகி விட்டாள், கதிரை இப்படியே விட்டால்  இரவைக்கும் தான் பட்டினியாய் இருக்க வேண்டி வரும் என்று அவளுக்கு தெரியாதா என்ன.....!  ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.