Jump to content

இன்­னமும் உங்­களை நம்­பு­கிறேன் அர­சியல் கைதி­களை விடு­வி­யுங்கள்.....ஜனா­தி­ப­திக்கு விக்­கினேஸ்­வரன் கடிதம்


Recommended Posts

இன்­னமும் உங்­களை நம்­பு­கிறேன் அர­சியல் கைதி­களை விடு­வி­யுங்கள்

01CITY20092018Page1Image0015-331f6739af3eaf990428cde34bb859bcb5cfb07e.jpg

 

(நமது நிருபர்)

ஜனா­தி­ப­திக்கு விக்­கினேஸ்­வரன் கடிதம்

 

சிறைச்­சா­லை­களில் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கினேஸ்­வரன் கடிதம் எழு­தி­யுள்ளார்.

நாட்டில் சமா­தா­னத்­தையும் நல்­லெண்­ணத்­தையும் உண்­டு­பண்ண நல்­லாட்சி அர­சாங்கம் மிகப்­பெ­ரிய நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது என்று கூறப்­படும் கூற்று, மேற்­படி அர­சியல் சிறைக்­கை­திகள் சம்­பந்­த­மாக நீங்கள் காட்டும் தாம­தத்தின் நிமித்தம் வெறும் கண்­து­டைப்போ என்று எண்­ண­வேண்­டி­யுள்­ளது என்றும் இந்தக் கடி­தத்தில் முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இந்தக் கடி­தத்தின் பிர­திகள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய, எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் ஆகி­யோ­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இது குறித்து ஜனா­தி­ப­திக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

சாகும் வரை உண்­ணா­வி­ரதம் இருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள்  சம்­பந்­த­மான முன்­னைய பல கடி­தங்­களின் தொடர்ச்­சி­யாக இந்த அவ­சர கடி­தத்தை உங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கின்றேன். அந்தக் கடி­தங்­களின் பிர­திகள் இத்­துடன் இணைக்­கப்­பட்­டுள்­ளன.  

வட­மா­கா­ணத்­திற்கு நீங்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்ட பல தரு­ணங்­களில் (தமிழ்) அர­சியல் கைதிகள் பற்றி உடனே நட­வ­டிக்கை எடுப்­ப­தாக வாக்­க­ளித்­தி­ருந்­தீர்கள். வழக்குப் பதி­யப்­ப­டாமல் சிறையில் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் இருப்­போர்க்கு எதி­ராக உடனே வழக்­குகள் தாக்கல் செய்­யப்­படும் என்றும் போது­மான சாட்­சி­யங்கள் இல்­லா­த­வரை உடனே விடு­விக்­கப்­போ­வ­தா­கவும் நீங்கள் வாக்­கு­று­திகள் அளித்தும் அவை இற்­றை­வரை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இது சம்­பந்­த­மாக முன்­னைய ஜனா­தி­பதி சந்­தி­ரிகா அம்­மை­யா­ருக்கும் அவரின் நேரடி உள்­ளீட்டை வேண்டிக் கடிதம் எழு­தி­யி­ருந்தேன். அவ­ருக்கு அனுப்­பிய கடி­தத்தின் பிரதி தங்­க­ளுக்கு இத்தால் அனுப்­பப்­ப­டு­கின்­றது.

தமிழ் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாலும் மற்­றை­யோ­ராலும் என்­னாலும் இது சம்­பந்­த­மாக இது­வரை எடுக்­கப்­பட்ட பிர­யத்­த­னங்கள் எவையும் பய­ன­ளிக்­க­வில்லை. இதன் கார­ணத்­தால்தான் அனு­ரா­த­புரம் அர­சியல் சிறைக்­கை­திகள் சாகும் வரை உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட வேண்டி வந்­துள்­ளது.

கொழும்பு, பூசா போன்ற சிறைச்­சா­லை­களில் அடைக்­கப்­பட்­டி­ருக்கும் இவ்­வா­றான கைதி­களும் மேற்­படி போராட்­டங்­களில் ஈடு­ப­டு­வது பற்றிக் கருத்­துக்கள் பரி­மா­றிக்­கொண்­டி­ருப்­ப­தாகத் தெரிய வரு­கின்­றது.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திக­திய கடி­தத்தின் மூலம் உங்­களின் செய­லாளர் சட்­டத்­துறைத் தலைமை அதி­ப­திக்கு ஒரு கடிதம் அனுப்­பி­யி­ருந்தார். அதில் உங்­க­ளுக்கு அனுப்­பப்­பட்ட எனது கடி­தத்தில் கண்­ட­வாறு சட்­டத்­த­ர­ணி­களைக் கொண்ட ஒரு குழு அமைக்­கப்­பட வேண்டும் என்றும் கைதிகள் சம்­பந்­த­மான நீதி­மன்ற நட­வ­டிக்­கைகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும் கூறப்­பட்­டி­ருந்­தது. வழக்­க­மாக நீதி­மன்ற வழக்­குகள் தாம­தப்­ப­டு­வது பற்­றியும் அதில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

இவை சம்­பந்­த­மான உரிய நட­வ­டிக்­கைகள் நேரத்­துக்கு எடுத்து சிறைக் கைதிகள் விடு­தலை செய்­யப்­ப­டா­மை­யா­லேயே சிறைக் கைதிகள் உங்கள் வாக்­கு­று­தி­களில் நம்­பிக்கை இழந்து மேற்­படி சாகும் வரை உண்­ணா­வி­ரத போராட்­டங்­களில் இறங்­கி­யுள்­ளார்கள் என்­பது உங்­க­ளுக்கு இப்­பொ­ழுது தெரிந்­தி­ருக்கும்.

நாட்டில் சமா­தா­னத்­தையும் நல்­லெண்­ணத்­தையும் உண்­டு­பண்ண நல்­லாட்சி அர­சாங்கம் மிகப்­பெ­ரிய நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது என்று கூறப்­படும் கூற்று, மேற்­படி அர­சியல் சிறைக்­கை­திகள் சம்­பந்­த­மாக நீங்கள் காட்டும் தாம­தத்தின் நிமித்தம் வெறும் கண்­து­டைப்போ என்று எண்­ண­வேண்­டி­யுள்­ளது.

இரா­ணுவப் போர்க்­குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக கட்­டா­ய­மாக நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்­டி­வரும் போது மேற்­படி தமிழ்ச் சிறைக் கைதி­களைப் பகடைக் காய்­க­ளாகப் பயன்­ப­டுத்­தவே அவர்கள் சம்­பந்­த­மாக நட­வ­டிக்­கைகள் எடுக்­காது தாம­திக்­கின்­றீர்­களோ என்று எண்ண வேண்­டி­யுள்­ளது. என்றாலும் உங்கள் மீதான நம்பிக்கையை இன்னமும் நான் இழக்கவில்லை. நீங்கள் உங்கள் வாக்குறுதிகளை நிலைநாட்டுவீர்கள் என்று இன்னமும் நம்புகின்றேன்.

மிக உயர்ந்த அரசியல் மட்டத்தில் சம்பந்தப்பட்ட பல தரப்பினரின் கருத்துக்களை அறிந்து உடனேயே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது. கருத்துக்களை அறிந்த பின் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உகந்த நிவாரணங்களை உடனேயே வழங்குவது உங்கள் தலையாய கடமை என்பதை உங்களுக்கு கூறி வைக்கின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-21#page-1

Link to comment
Share on other sites

4 hours ago, நவீனன் said:

இரா­ணுவப் போர்க்­குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக கட்­டா­ய­மாக நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்­டி­வரும் போது மேற்­படி தமிழ்ச் சிறைக் கைதி­களைப் பகடைக் காய்­க­ளாகப் பயன்­ப­டுத்­தவே அவர்கள் சம்­பந்­த­மாக நட­வ­டிக்­கைகள் எடுக்­காது தாம­திக்­கின்­றீர்­களோ என்று எண்ண வேண்­டி­யுள்­ளது. என்றாலும் உங்கள் மீதான நம்பிக்கையை இன்னமும் நான் இழக்கவில்லை. நீங்கள் உங்கள் வாக்குறுதிகளை நிலைநாட்டுவீர்கள் என்று இன்னமும் நம்புகின்றேன்.

இதைத் தான் (வேலைக்காகாத) இராஜதந்திரம் என்று சொல்வதோ?

4 hours ago, நவீனன் said:

இந்தக் கடி­தத்தின் பிர­திகள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய, எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் ஆகி­யோ­ருக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

அப்பிடியே ஒரு கொப்பியை ஐ.நா. செயலாளருக்கும் அனுப்பினால் என்ன?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.